ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்

Go down

குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள் Empty குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்

Post by Powenraj Sat Mar 02, 2013 12:22 pm

http://yarlcnn.com/epanel/uploads/news/thumbs/82400396Police-arrested%20(18).jpg
சவுகார்பேட்டை பெருமாள்முதலி தெருவை சேர்ந்தவர் மாணிக்சந்த் (38). இவரது மனைவி பிரமிளாகுமாரி (36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். மாணிக்சந்த் எந்தவேலைக்கும் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். மேலும், மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சண்டை போட்டு ள்ளார்.இதனால் வெறுப் படைந்த பிரமிளாகுமாரி, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கள்ள மார்கெட்டில் நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து பீரோவில் ஒளித்து வைத்துள்ளார். கடந்த 2006 அக்டோபர் 21ம் தேதி பிரமிளாகுமாரிக்கும் மாணிக்சந்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை மாணிக்சந்த் திட்டியுள்ளார். தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 22ம் தேதி காலை 8 மணிக்கு தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி கதவு ஓரத்தில் நிற்க சொன்ன பிரமிளாகுமாரி துப்பாக்கியை எடுத்து கணவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
தலை, தோள், மார்பு, வயிறு பகுதிகளில் துளைத்தது. அதேஇடத்தில் மாணிக்சந்த் இறந்தார்.இதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் சத்தம் போட்டால் உங்களையும் சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, தனது உறவினர் ஒருவருக்கு போன் மூலம் சம்பவத்தை அவர் தெரிவித்துவிட்டு தன் மீதும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள பிரமிளாகுமாரி முயன்றுள்ளார். இதில் அவரது வலது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி பிரமிளாகுமாரியைக் கைது செய்தனர். அவர் மீது கொலை, தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழும் ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். அரசு தரப்பில் பிரமிளாகுமாரியின் குழந்தைகள் சாட்சியம் அளித்தனர்.அவர்கள் சாட்சியளிக்கும்போது, தங்களின் தந்தையை தாய் சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்ததாக கூறினர்.
மேலும், பக்கத்து வீட்டில்வசிப்பவர்கள், உறவினர்கள் உட்பட 27 பேர் சாட்சியம் அளித்தனர். பிரமிளாகுமாரி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குழந்தைகள் போலீசார் சொல்லிக்கொடுத்தபடி சாட்சியளித்துள்ளனர். குழந்தைகளின் சாட்சியங்களை ஏற்கக் கூடாது’ என்று வாதிட்டார்.அதற்கு, அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ‘குழந்தைகளின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, அவர்களின் சாட்சியம்தான் இந்த வழக்கில் முக்கியம்’ என்றுவாதிட்டார்.இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கலியமூர்த்தி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகளின் சாட்சியங்கள் மற்றும் மருத்துவ சான்றுகள் ஆகியவை குற்றச்சாட்டை நிரூபித்துள்ளன. எனவே, பிரமிளாகுமாரிக்கு ஆயுள் தண்டனையும் ஸீ 7000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
சகஜமாக இருந்த பிரமிளாகுமாரி
தீர்ப்பை நீதிபதி தமிழில் வாசித்தார். அதன் பின்னர் பிரமிளாகுமாரிக்கு தீர்ப்பை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யுமாறுநீதிமன்ற பணியாளரிடம் நீதிபதி கூறினார். அந்த பணியாளர் இந்தியில் மொழிபெயர்க்க வந்தபோது தனக்கு தீர்ப்பு என்ன என்பது புரிந்துவிட்டது என்று பிரமிளாகுமாரி கூறினார். தீர்ப்பை கேட்டவுடன் அவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். தன்டன் வந்திருந்த உறவினர்களிடம்நகை மற்றும் கைப்பை ஆகியவற்றைக் கழற்றிக்கொடுத்தார். பின்னர் போலீசாரிடம் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.இதையடுத்து, அவரை போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். தீர்ப்பு அளிக்கும்போது குழந்தைகள்நீதிமன்றத்துக்கு வரவில்லை.
-
நன்றி-யாழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» சகவீரரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை வீரருக்கு ஆயுள் தண்டனை
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» டெல்லியில் விமான பணிப்பெண்ணை சுட்டுக்கொன்ற கணவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum