ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)

2 posters

Go down

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Empty நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)

Post by kirikasan Fri Mar 01, 2013 11:58 pm


1.செத்தாற் சிரிப்பாயோ??

செத்தேனாம் என்றாற்
....சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே
....இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில்
....விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று
....கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே
....யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத்
....தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ
....பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடலும்
....நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில்
....சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே
....வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லும் பகற்கணைகள்
....அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம்
....தீயெண்ணங் கொள்ளெனச் செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே
....யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத்
....தீட்டிய நல்லோவியம் திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச
....ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித்
....தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின்
....அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது
....குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய்
....வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச்
....சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்
*******
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Empty Re: நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)

Post by kirikasan Sat Mar 02, 2013 12:01 am

2. சிரிப்பில் மலர்ந்தேனோ


துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் - அது
தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ - கவி
ஆற்றலும் ஈந்தபின்னெ
பிள்ளையெனை அணுகி - அன்பில்
பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் சுடரை - அன்று
ஓங்கிடச் செய்தவளோ
வெள்ளமெனத் அருள்வாள் - பின்னர்
வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
பாசத்தை ஏதுசொல்வேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Empty Re: நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)

Post by இளமாறன் Sat Mar 02, 2013 1:09 am

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Empty Re: நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum