புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
2 Posts - 3%
jairam
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
13 Posts - 4%
prajai
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10நகைச்சுவை துணுக்குகள்  Poll_m10நகைச்சுவை துணுக்குகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை துணுக்குகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 25, 2013 1:21 pm

ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?

ஏன் .. என்னாச்சு..?

சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________

நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________

ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?

பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________

எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..

அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________

கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..

ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?

முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________


சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம்
வந்தது?"

சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு
மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________

மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும்
நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?

மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட்
புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

_________________

பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு
இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப்
பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

_________________

நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1912 லே பிறந்ததுதான்
_________________

ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை
பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால்
அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி
விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத்
துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில்
இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா.
இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா
காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று
படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி
குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே
ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு
எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல
எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில்
இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா
படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல
வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா
படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம்
நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

_________________


பரம்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த மாசி கேட்டார்.. " மணி என்ன ஐயா?"

பரம்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..

"ஆறாக 10 நிமிடம் இருக்கு".

"வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"

"நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் பரம்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த மாசி அசந்து போய் விட்டார்.

"நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"

"நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"

"இல்லை ஐயா"

"ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"

"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"

"சரி. ஒரே விலை 15000'

"சொன்னா கேளுங்க.."

"ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"

"இல்ல...."

"ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"

"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."

"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"

பரம்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் பரம்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய மாசி ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

"ஹலோ ஒரு நிமிசம்" என்று பரம்ஸ் கூப்பிட்டார் .

கடிகாரத்தை வாங்கிய மாசி, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப பரம்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....

"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"
_________________


1) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய்வருகிறது.

2) ஆனால் அதே நேரம், பிராஞ்சுக்காரர்கள் மிக அதிக கொழுப்பு உணவு உட்கொள்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

3) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் சிவப்பு வைன் அருந்துகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

4) ஆனால் அதே நேரம், இத்தாலியர்கள் மிக அதிகமாக சிவப்பு வைன் அருந்துகிறார்கள்.ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் முடிவு???

உணவோ அல்லது குடிப்பழக்கமோ அல்ல பிரச்சனை. ஆங்கிலம் பேசுவது தான்....

_____________________________________________-


ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதி ; பணிப் பெண்கள்..?

குர ; பெல்ட் போட உதவினார்கள்..

அதி ; விமானிகள்.. ?

குர ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; வேடிக்கை பார்த்தேன்..

அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________


உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

என்னய்யா சொல்றே??

ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க.. திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு...
_________________

அந்த வீட்டில இவ்வளவு சீக்கிரம் மாமியார்-மருமகள் சண்டை வரும்னு யாரும் எதிர்பார்க்கல...

அப்படியா, என்ன ஆச்சு?

வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மான்னு சொன்ன கையோட இடது காலை எடுத்து வச்சா வெட்டிடுவேன் சொல்றாங்க அந்த மாமியார்க்காரி....
_________________

என் பையன் பெரிய ஆளாகணும்.. அதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்??

ஒரு இருபது வருஷம் வெயிட் பண்ணுங்க...
_________________

அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...

ஏன்?

எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________

அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...

எதை வச்சு சொல்றீங்க??

ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________

இவர்தான் எங்க சுனாமி மாமா!''

""சுனாமி மாமாவா?''

""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

_________________


வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்ன கேளுங்க்.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி. மீண்டும் சொல்லிற்று...

." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..

இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே கடைக்கார கடன்காரன்..கட்டையில போக..

சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
_________________


ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக நிகழ்ச்சியை ஆரம்பித்தார்..

ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..
உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?
நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???
_________________


ஒரு இந்திய அரசியல்வாதி ( எம்.பி.) அமெரிக்கா சென்ற போது அங்குள்ள அரசியல்வாதியின் (செனட்டர்) வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்..செனட்டரின் மாளிகையில் ஒவ்வொரு இடத்திலும் பொருட்செலவு மிக்க ஆடம்பரப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைக்க் கண்டார்.. ஆச்சர்ய மிகுதியில் செனட்டரைக் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்..?

செனட்டர், எம்.பி.யை அழைத்து ஜன்னலுக்கு வெளியே ஒன்றைக் காட்டினார்..

அது ஒரு பிரம்மாண்டமான தொங்கு பாலம்.. செனட்டர் சொன்னார்..

" 10 சதவீதம்...!"

எம்.பி. புரிந்துகொண்டார்.

பின்னர் ஒரு ஆண்டு கழித்து அதே செனட்டர் இந்தியா வந்தார்.. எம்.பி. விருந்துக்கழைக்க அவரது அரண்மனைக்கும் வந்தார்.. ஏராளமான நகைகள்.. வாகனங்கள்.. செருப்புகள்.. பிரமித்துப் போன செனட்டர் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் செர்த்தீர்கள்..?"

எம்.பி. அவரை ஜன்னலுக்கு வெளியில் உள்ள பாலத்தைப் பார்க்க சொன்னார்..

" ஆனால்... அங்கு பாலம் எதுவும் இல்லையே..?"

எம்.பி. பெருமையுடன் சொன்னார்..

"100 சதவீதம்...!".

பின்னர் செனட்டருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியதாயிற்று...!
_________________


ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..

அய்யா சயனைட் இருக்கா..?

என்ன..? சயனைடா.. எதுக்கு..?

என் கணவனை கொல்லுவதற்கு..

அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..

இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)

ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!
_________________


மாசியும் சுசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

சுசி .. பில் புத்தகம் கொடு..

என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

இல்லே சுசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த மாசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் மிஸ்டர் மொக்கை..!

நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?

மொக்கை சொன்னார்..

ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!
_________________


ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்..

ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச் சிறுவனை அங்கு அழைத்து வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும், தூக்கி எறிவதுமாக இருந்தான்..

அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, தந்தையும் வேண்டாம் மொக்கை.. கூடாது மொக்கை.. அப்புறம் அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை.. என்று கூறியவாறே இருந்தார்.. இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..] ஏம்பா மொக்கை.. நீ இவர் பையனா..?

பையன் சொன்னான்..

நான் அவர் பையந்தான்.. ஆனா மொக்கைங்கறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!
_________________


மிஸ்டர் மொக்கை பூச்செடிகள் விற்கும் கடைக்கு வந்தார்..

மஞ்சள் ரோஜாச் செடி இருக்கா..?

இல்லையே சார்.. கருப்பு ரோஜா செடி இருக்கு .. பார்க்கறீங்களா..?

இல்லப்பா.. மஞ்சள் ரோஜாதான் வேணூம்..

காஷ்மீர் ரோஜா செடி இருக்கு பாருங்க சார்.. பளபளன்னு இருக்கும்..மஞ்சள் ரோஜா சோகை புடிச்ச மாதிரி இருக்கும் சார்..!

எனக்கு தெரியும்பா.. ஆனா .. " நான் ஊர்லேருந்து திரும்பற வரைக்கும் ஒழுங்கா இந்த மஞ்சள் ரோஜாவுக்கு தண்ணி ஊத்துங்க.. ஏதாச்சும் ஆச்சுது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டுப் போன என் மனைவிக்கு அது தெரியமாட்டுதே....!
_________________


மொக்கை ; அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக்கிட்டு ஆஃபீஸ் வந்திருக்கான் தெரியுமா?

நண்பன் ; தெரியலையே!

மொக்கை ; வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.



மொக்கை ; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் காசி போயிருந்தப்போ என்னோட வாட்ச் கங்கையிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

நண்பர் ; பரவாயில்லியே.. அதே வாட்சா..?

மொக்கை ; வாட்ச் இல்லே.. கங்கைதான் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு..!



மொக்கை ; நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

நண்பர் ; அதிசயமாயிருக்கே!

மொக்கை ; காரணம். அவன்தான் அவ புருஷன்...!



மொக்கை ; எனக்கு லேட் மேரேஜ்!

நண்பர் ; காலங்கடந்த வயசிலே கல்யாணமா?

மொக்கை ; அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!



காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

மொக்கை : லட்டு, ஜிலேபி.



நண்பர் : வாங்க, வாங்க!

மொக்கை : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

நண்பர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

மொக்கை : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!




மொக்கை ; சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

நண்பர் ; தெரியாது!

மொக்கை ; சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.



நண்பர் ; என் தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது...இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

மொக்கை ; இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.


நண்பர் ; பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?

மொக்கை ; மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை...!


முதலாளி ;பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?

மொக்கை ; நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே..!



.மொக்கை ; எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது தெரியுமா ?

நண்பர் ; தெரியாதே.. எது..?

மொக்கை ; எதிரொலி...!



நண்பர் ; நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?

மொக்கை ; எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.




நண்பர் ; உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

மொக்கை ; அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்...!



பஸ் பயணி ; சார் கொஞ்சம் காலை மடக்கி வச்சுக்கங்க...உங்களிடம் உதை வாங்குவதற்காக நான் இங்கே வரவில்லை.

மொக்கை ; அப்படியானால் நீங்கள் வழக்கமாக எங்கே போவீர்கள்?

__________________________________________


மொக்கையும் நண்பர்களும் தங்கள் இன்னொரு நண்பனின் திருமணத்துக்காக முன்பின் அறியாத ஒரு ஊருக்கு காரில் பயணமானார்கள்..வழி தெரியாமல் பல இடங்கள் சுற்றி அலைய பெட்ரோல் தீரும் நிலைக்கு வந்து விட்டது. சரியாக வழி விசாரிக்கத் தெரியவில்லை என்று மொக்கை தன் நண்பர்களை கடிந்து கொண்டார். எனவே வழி விசாரிக்கும் பொறுப்பை மொக்கையிடம் ஒப்படைத்து விட்டார்கள்..வழியில் ஒரு கிராமவாசியைப் பார்த்த மொக்கை தன் நண்பர்களை ஒரு லுக் விட்டபடியே விசாரித்தார்..

ஏம்பா.. கொஞ்சம் நில்லு.. வெட்டுவாங்கேணிக்கு சீக்கிரமா போற வழி எது..? சட்டுன்னு சொல்லு..

வெட்டுவாங்கேணியா..? எப்படிப் போகப் போறீங்க.. நடந்தா.. கார்லயா..?

கார்லதாம்பா..

கார்லயா.. அப்ப அதுலேயே போயிருங்க.. சீக்கிரமாப் போயிரலாம்..!
_________________

மொக்கையின் மகள் கல்லூரி மாணவி.. ஒருநாள் அவள் தன் தந்தையிடம் சொன்னாள்..

அப்பா.. இன்னிக்கு சுட்டி எனக்கு முத்தம் கொடுத்துட்டாம்பா..

கண்கள் சிவந்த மொக்கை கேட்டார்..

என்ன சொல்கிறாய்.. எப்படி இது நடந்தது..? உனக்குதான் கராத்தே தெரியுமே.. அவ்வளவு சுலபமாகவா அந்த சம்பவம் நடந்தது..?

மகள் சொன்னாள்..

இல்ல்லை அப்பா.. அவ்வளவு சுலபத்தில் அது நடக்கவில்லை.. அது நடந்தபோது என் தோழிகள் 3 பேர் சுட்டியை அசையாமல் அமுக்கிப் பிடிக்கவேண்டி இருந்தது..!
_________________

சிவாஜி ; பன்னிதான் கூட்டமா வரும்.. சிங்கம் ஒத்தையிலதாண்டா வரும்..

மொக்கை ; ஏன்.. அதுக்கு டபுள்ஸ் வைச்சு ஓட்டத் தெரியாதா..?
_________________

சிவாஜி ; சும்மா அதிருதில்ல...?

மொக்கை ; சும்மா அதிரல.. நீ பயந்து நடுங்கிகிட்டு நாற்காலியை ஆட்டிகிட்டு இருக்கே... அதில அதிருது..!
_________________


மொக்கைக்கு தூக்குத் தண்டனை.. கழுத்தில் சுருக்கை மாட்டும்போது சரமாரியாக விக்கல் வந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை.. அங்கு நின்ற மருத்துவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை.வேறு வழியில்லாமல் மொக்கையிடமே கேட்டார்கள்..

என்ன செய்தால் உன் விக்கல் நிற்கும்..?

கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டுவதற்காகக் காத்திருந்த ஊழியரைப் பார்த்து மொக்கை சொன்னார்..

சட்டுன்னு..க்..க்... யாராவது..க்க்...எதையாவது க்...க்..க்.. செஞ்சு..க் எனக்கு .க்க்.. பயம் காட்டுங்க..!
_________________


அமர் ஒருநாள் மலேசியாவில் வேகமாக கார் ஓட்டிக் கொண்டு போனார்.. போலீஸ் பிடித்து நிறுத்திவிட்டது..

ஏன் வேகமாகப் போனாய்..? எங்கே உன் உரிமம்..?

உரிமமா..? அப்படின்னா..?

உரிமம் தெரியாதா..? கார் ஆவணங்களை எடு..

ஆவணமா..? இது திருட்டுக் கார்.. என்னிடம் ஏது ஆவணம்..?

ஓ.. திருட்டுக் காரா..? திருடனா நீ..?

இல்லே.. அதுக்கும் மேலே.. கார் டிக்கியில் ஒரு பிணம் இருக்கு.. நான் போட்டுத் தள்ளியது..!

காரியம் கை மீறிப் போவதை உணர்ந்த போலீஸ் அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லி மேலதிகாரியை வரவழைத்தார்.. அவர் வந்து டிக்கியைத் திறக்க.. அங்கே பிணம் இல்லை.
கார் ஆவணத்தைக் கேட்க, டேஷ் போர்டிலிருந்து செல்லுபடியாகும் ஆவணங்களை அமர் எடுத்துக் காட்டினார்.. உரிமம் கேட்க, சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டினார்..

திகைத்துப் போன மேலதிகாரி, அமரை பிடித்து நிறுத்திய போலீசை கடிந்து கொண்டார்.. அப்போது அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அமர் சொன்னார்..

வேண்டாம் விட்டுடுங்க சார்.. அவருக்கு வீட்டுல என்ன டார்ச்சரோ.. ரொம்ப கொடைஞ்சீங்கன்னா, அப்புறம் நான் ஓவர் வேகம் போனேன்னு அபாண்டமா என் மேல் பழி சொல்லுவார்.. அதை என்னால் இல்லேன்னு நிரூபிக்க முடியாது..

குறிப்பு:இணைய தலத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 25, 2013 1:27 pm

இது உங்களின் சொந்த பதிவா , இல்லை என்றால் எடுத்த தளத்தின் பெயரை குறிப்பிடவும்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 25, 2013 1:30 pm

பெயர் ஞாபகம் இல்லை ஆனால டவுன்லோட் செய்து பல மதங்கள் கடந்து விட்டன நண்பரே தெரிந்தால் உங்களிடம் சொல்வதற்கென்ன

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 25, 2013 1:31 pm

mbalasaravanan wrote:பெயர் ஞாபகம் இல்லை ஆனால டவுன்லோட் செய்து பல மதங்கள் கடந்து விட்டன நண்பரே தெரிந்தால் உங்களிடம் சொல்வதற்கென்ன

ஒகே ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 1:33 pm

சரவணன் தெரியலேன்னாலும் பரவாயில்லை - கடைசி வரியில் இணையத்தில் கிடைத்தது அல்லது மெயிலில் வந்ததுன்னு போடுங்க.

இல்லையேல் மற்ற தளத்தில் இருந்து அப்ஜெக்ட் பண்ண வாய்ப்பிருக்கு.




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 25, 2013 1:57 pm

யினியவன் wrote:சரவணன் தெரியலேன்னாலும் பரவாயில்லை - கடைசி வரியில் இணையத்தில் கிடைத்தது அல்லது மெயிலில் வந்ததுன்னு போடுங்க.

இல்லையேல் மற்ற தளத்தில் இருந்து அப்ஜெக்ட் பண்ண வாய்ப்பிருக்கு.


நண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 1:59 pm

mbalasaravanan wrote:நண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் நன்றி
சூப்பருங்க




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 2:03 pm

பல மாதங்கள் கடந்ததுன்னு போடல சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 25, 2013 2:06 pm

ஜாஹீதாபானு wrote:பல மாதங்கள் கடந்ததுன்னு போடல சோகம்
இப்படி போன நான் அழுதுருவேன் அழுகை அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 2:11 pm

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:பல மாதங்கள் கடந்ததுன்னு போடல சோகம்
இப்படி போன நான் அழுதுருவேன் அழுகை அழுகை

அதுக்கு தானே இம்பூட்டு பாடுபடுறோம் சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக