Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமில அவலம்!
4 posters
Page 1 of 1
அமில அவலம்!
கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம்தேதி அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட, மூன்று மாதங்களாக மருத்துவமனையில்சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் பொறியியல் பட்டதாரிப்பெண் விநோதினி, நோய்த்தொற்று காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்துதற்போது இரண்டாவது சம்பவமாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண் வித்யா, அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் இறந்துள்ளார். விநோதினி ஒருஆணின் கைக்கிளையால் (ஒருதலைக் காதல்) அமிலவீச்சுக்கு ஆளானவர். வித்யாவோ, திருமணம் உடனே நடைபெறாமல் தள்ளிப்போவதற்காகத் தாக்கப்பட்டவர்.
காதலுக்கு சம்மதிக்கவில்லை; மணம்புரிய விரும்பவில்லை; மணமுறிவுக்கு உடன்படவில்லைஆகியவைதான் பெண்கள் மீதான அமில வீச்சுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாழ்நாள்முழுதும், சில தருணங்களில் பார்வை இழப்புடனும், சில தருணங்களில் முகம் சிதைந்தும் நடமாடுவது என்பது, அவரை ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு நாளிலும் நரக வேதனையில் வாழச்செய்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதைவிட மிகக் கொடிய செயல் அமில வீச்சு.
2008-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர், தனது இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று அமிலம் வீசித் தாக்கியதில், காதலிக்க மறுத்த பெண் மட்டுமின்றி, வாகனத்தில் உடன்சென்ற பெண்ணுக்கும் முகம் சிதைந்தது.
இந்த வழக்கில், போலீஸாரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத்தப்பிச்செல்ல முயன்ற அந்த மூவரும் அடுத்த நாளே"என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். அது "போலி என்கவுன்டர்' என்று குற்றவாளிகளின் பெற்றோரும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், வாரங்கல் காவல் கண்காணிப்பாளருக்கு கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மலர்க்கொத்துகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.
அமில வீச்சுக்குக் கடும் தண்டனைகள் இல்லாத அந்த நேரத்தில், இத்தகைய"என்கவுன்டர்', பெண்கள் அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டதை சற்று வேதனையுடன் புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த அவசரச் சட்டத்தில்,அமில வீச்சில் உடல்பாகங்கள் சேதமடைந்தால்10 ஆண்டுகள் சிறை; வெறும் அமிலவீச்சு முயற்சி, மோசமானபாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகள்வரை சிறைஎன்று பரிந்துரைந்திருக்கிறது வர்மா கமிஷன்.
அமில வீச்சு என்பது கொலைக் குற்றத்தைவிட மிகக்கொடியது.இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகக் கலந்து பேசி, அமில விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு காண வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கான முயற்சியில் எந்தவொரு மாநிலமும் முனைப்புடன் இறங்கியதாகத் தெரியவில்லை. வித்யாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலும்கூட, அமில விற்பனைக்குக் கட்டுப்பாடுஉண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
"ராஜதிராவகம்' பொதுவாக நகைக்கடைகளில் மட்டுமே இருக்கும். அதற்கு அடுத்தபடியாக கல்லூரி, மேனிலைப் பள்ளிகளில் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்காக நைட்ரிக் ஆசிட், சல்பூரிக் ஆசிட் வாங்கப்படும். நைட்ரிக் அமிலம் மிகஅதிகமாக நீர்த்த நிலையில், கழிவறைகள் கழுவும் திரவமாக விற்கப்படுகிறது. இவற்றின் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. யார் யார் வைத்திருக்கலாம் என்பதற்கும் நிபந்தனைகள் இல்லை. விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், புதிய ஆட்களுக்குத் தருவதில்லை என்றும் கூறினாலும், யார் யார் அமிலம் வைத்திருக்கலாம் என்று சட்டம் வரையறுக்கவில்லை. அதனால், அமில விற்பனைக்குக்கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது.
அமில வீச்சு இல்லாமல் வேறு வகையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாதா என்ற கேள்வி எழலாம். கத்தியால் குத்தியும், தீயினால் சுட்டும் ஏற்படுத்தும் காயங்களையும்விட மோசமானது அமில வீச்சு. இது தசை முழுவதையும் அழித்து எலும்புகளையும் அரித்துச்செல்லும் தன்மை உடையது. ஆகவேதான் அமில விற்பனை, பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
அமில வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "பிளாஸ்டிக் சர்ஜரி', மனநல ஆலோசனை, வேலைவாய்ப்பு ஆகியவை இன்றியமையாதவை. அமிலவீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் சில இருந்தாலும், இதில் அரசின் நிதியுதவி இல்லாமல், பாதிக்கப்பட்டவர் முழு சிகிச்சையைப் பெறுவது இயலாது. இதற்கான சிகிச்சைகள் மிகச் செலவு மிக்கவை. இந்த விஷயத்திலும்ஒரு பொதுவான விதியை அரசு உருவாக்கியே தீரவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதற்கு, மூன்று மாதங்கள்கழித்து இறந்த விநோதினி மற்றும் 30 நாள்கள் கழித்துஇறந்த வித்யா இருவரும் சாட்சி. இவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி அரசு திட்டத்தில் இப்போது இல்லை.
அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்.இது தெரிந்தும் செயல்படாமல் இருக்கிறார்களே, அவர்களும்தான் வினோதினி, வித்யா போன்றவர்களின் மரணத்திற்குக் காரணம்!
-
தினமணி
காதலுக்கு சம்மதிக்கவில்லை; மணம்புரிய விரும்பவில்லை; மணமுறிவுக்கு உடன்படவில்லைஆகியவைதான் பெண்கள் மீதான அமில வீச்சுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாழ்நாள்முழுதும், சில தருணங்களில் பார்வை இழப்புடனும், சில தருணங்களில் முகம் சிதைந்தும் நடமாடுவது என்பது, அவரை ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு நாளிலும் நரக வேதனையில் வாழச்செய்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதைவிட மிகக் கொடிய செயல் அமில வீச்சு.
2008-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர், தனது இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று அமிலம் வீசித் தாக்கியதில், காதலிக்க மறுத்த பெண் மட்டுமின்றி, வாகனத்தில் உடன்சென்ற பெண்ணுக்கும் முகம் சிதைந்தது.
இந்த வழக்கில், போலீஸாரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத்தப்பிச்செல்ல முயன்ற அந்த மூவரும் அடுத்த நாளே"என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். அது "போலி என்கவுன்டர்' என்று குற்றவாளிகளின் பெற்றோரும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், வாரங்கல் காவல் கண்காணிப்பாளருக்கு கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மலர்க்கொத்துகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.
அமில வீச்சுக்குக் கடும் தண்டனைகள் இல்லாத அந்த நேரத்தில், இத்தகைய"என்கவுன்டர்', பெண்கள் அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டதை சற்று வேதனையுடன் புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த அவசரச் சட்டத்தில்,அமில வீச்சில் உடல்பாகங்கள் சேதமடைந்தால்10 ஆண்டுகள் சிறை; வெறும் அமிலவீச்சு முயற்சி, மோசமானபாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகள்வரை சிறைஎன்று பரிந்துரைந்திருக்கிறது வர்மா கமிஷன்.
அமில வீச்சு என்பது கொலைக் குற்றத்தைவிட மிகக்கொடியது.இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகக் கலந்து பேசி, அமில விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு காண வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கான முயற்சியில் எந்தவொரு மாநிலமும் முனைப்புடன் இறங்கியதாகத் தெரியவில்லை. வித்யாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலும்கூட, அமில விற்பனைக்குக் கட்டுப்பாடுஉண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
"ராஜதிராவகம்' பொதுவாக நகைக்கடைகளில் மட்டுமே இருக்கும். அதற்கு அடுத்தபடியாக கல்லூரி, மேனிலைப் பள்ளிகளில் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்காக நைட்ரிக் ஆசிட், சல்பூரிக் ஆசிட் வாங்கப்படும். நைட்ரிக் அமிலம் மிகஅதிகமாக நீர்த்த நிலையில், கழிவறைகள் கழுவும் திரவமாக விற்கப்படுகிறது. இவற்றின் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. யார் யார் வைத்திருக்கலாம் என்பதற்கும் நிபந்தனைகள் இல்லை. விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், புதிய ஆட்களுக்குத் தருவதில்லை என்றும் கூறினாலும், யார் யார் அமிலம் வைத்திருக்கலாம் என்று சட்டம் வரையறுக்கவில்லை. அதனால், அமில விற்பனைக்குக்கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது.
அமில வீச்சு இல்லாமல் வேறு வகையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாதா என்ற கேள்வி எழலாம். கத்தியால் குத்தியும், தீயினால் சுட்டும் ஏற்படுத்தும் காயங்களையும்விட மோசமானது அமில வீச்சு. இது தசை முழுவதையும் அழித்து எலும்புகளையும் அரித்துச்செல்லும் தன்மை உடையது. ஆகவேதான் அமில விற்பனை, பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
அமில வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "பிளாஸ்டிக் சர்ஜரி', மனநல ஆலோசனை, வேலைவாய்ப்பு ஆகியவை இன்றியமையாதவை. அமிலவீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் சில இருந்தாலும், இதில் அரசின் நிதியுதவி இல்லாமல், பாதிக்கப்பட்டவர் முழு சிகிச்சையைப் பெறுவது இயலாது. இதற்கான சிகிச்சைகள் மிகச் செலவு மிக்கவை. இந்த விஷயத்திலும்ஒரு பொதுவான விதியை அரசு உருவாக்கியே தீரவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதற்கு, மூன்று மாதங்கள்கழித்து இறந்த விநோதினி மற்றும் 30 நாள்கள் கழித்துஇறந்த வித்யா இருவரும் சாட்சி. இவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி அரசு திட்டத்தில் இப்போது இல்லை.
அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்.இது தெரிந்தும் செயல்படாமல் இருக்கிறார்களே, அவர்களும்தான் வினோதினி, வித்யா போன்றவர்களின் மரணத்திற்குக் காரணம்!
-
தினமணி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அமில அவலம்!
அரசும், காவல்துறையும், அரசியல்வாதிகளும் கண்மூடிகளாக இருந்தால் இவ்வாறான குற்றச் செயல்கள் இலகுவாக நடைபெறும்...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அமில அவலம்!
உண்மை உண்மை, ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவர்கள் இருந்தும், உபகரணங்கள் இல்லை.அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்
உதாரணம் என் அண்ணா காது மூக்கு தொண்டை நிபுணர் - சென்னையில் பெரிய மருத்துவமனையில் பணியாற்றுகிறார், சிறந்த சிகிச்சை அளிக்க அவரே 3 லட்ச ரூபாய் செலவில் (சொந்த) உபகரணங்கள் வாங்கி செய்து வருகிறார். இதற்கு அவருக்கு ஏகப்பட்ட சொந்த பிரச்சனைகள் உண்டு, இதையெல்லாம் தாண்டி தான் சேவை செய்து வருகிறார்.
அவர்களின் மாத சம்பளமும் மிக குறைவு, என்னில் பாதி தான் எனது அண்ணன் வாங்குகிறார் இதற்கு என்ன செய்வது, அரசு தான் இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டும்....... பார்க்கலாம்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: அமில அவலம்!
பெருமையாக உள்ளது சின்னவன் , உங்கள் சகோதரர் போல மருத்துவர்களும் உள்ளதால் தான் இன்னும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் இருக்கிறது இல்லையென்றால் எப்போவோ மூடியிருப்பார்கள்chinnavan wrote:உண்மை உண்மை, ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவர்கள் இருந்தும், உபகரணங்கள் இல்லை.உதாரணம் என் அண்ணா காது மூக்கு தொண்டை நிபுணர் - சென்னையில் பெரிய மருத்துவமனையில் பணியாற்றுகிறார், சிறந்த சிகிச்சை அளிக்க அவரே 3 லட்ச ரூபாய் செலவில் (சொந்த) உபகரணங்கள் வாங்கி செய்து வருகிறார். இதற்கு அவருக்கு ஏகப்பட்ட சொந்த பிரச்சனைகள் உண்டு, இதையெல்லாம் தாண்டி தான் சேவை செய்து வருகிறார்.
அவர்களின் மாத சம்பளமும் மிக குறைவு, என்னில் பாதி தான் எனது அண்ணன் வாங்குகிறார் இதற்கு என்ன செய்வது, அரசு தான் இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டும்....... பார்க்கலாம்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» தலைநகர ஆசிரியர்களின் அவலம்!
» அமில மழைப் பொழிவிற்கான காரணங்கள்
» அறிமுகமற்ற பெண்ணால் அமில வீச்சு தாக்குதல்
» அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன அறிந்து கொள்ளுங்கள்!
» அரசு மருத்துவமனையில் அவலம்!!
» அமில மழைப் பொழிவிற்கான காரணங்கள்
» அறிமுகமற்ற பெண்ணால் அமில வீச்சு தாக்குதல்
» அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன அறிந்து கொள்ளுங்கள்!
» அரசு மருத்துவமனையில் அவலம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|