ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

+8
அருண்
சதாசிவம்
chinnavan
ச. சந்திரசேகரன்
அகிலன்
கரூர் கவியன்பன்
யினியவன்
அகல்
12 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by அகல் Mon Feb 25, 2013 10:04 pm

First topic message reminder :

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்


Last edited by அகல் on Tue Feb 26, 2013 2:32 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by சதாசிவம் Fri Mar 01, 2013 4:04 am

பூவன் அவர்களே,,,

நான் சொன்ன வரிகளை மாற்றவில்லை,,,ஒரு நிறுவனத்தில் சம்பளத்தை தாண்டி சில சலுகைகள் கொடுப்பது தொழிலாளியிடம் நல்லுறவைப் பேணுவதற்குத் தான். அப்போது தான் உற்பத்தி பெருகும், இது போன்று தான் விவசாயி கூலித் தொழிலாளி உறவு.....நீரும் மின்சாரமும் ஒத்துத்துழைத்தால் விவசாயம் லாபமே, பஞ்சாப், ஆந்திர கோதாவரி , கிருஷ்ணா டெல்டா பகுதி விவசாயிகள் இதற்கு சான்று..இங்கு பணக்காரர்களில் பெரும்பகுதியினர் விவசாயிகள் தான்..

நான் சொல்லிய வரிகளில் அவர்களிடையே இல்லாத ஒற்றுமையையும், நவீன உத்திகளை கையாள தயாராக இல்லாத நிலையையும், நீண்ட காலத் திட்டங்களில் நீர் வரத்தை பெருக்கும் உபாயங்கள் செய்ய வேண்டிய அவசியத்தை உணராமையையும் குறிப்பிட்டுள்ளேன்.....

விவசாயியுடன் இருந்த நெசவர், குயவர், கொல்லர், கருமார், தச்சர் இன்று எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் பார்க்க வேண்டும்,..நெசவு இன்று ஆலை மயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்களும் காலத்துக்கு தகுந்து தங்களை உருமாற்றம் செய்துள்ளது....

உங்களின் வரிகளின் மூலம் தென்னை, வாழை, காய்கறி, சோளம் லாபம் தரும் பயிர் என்று அறிய முடிகிறது....நான் அறிந்தவரை என் உறவுகள் அப்படி சொல்லவில்லை, அது உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், அதிக விலை கொடுக்கும் தனியார் ஆலைகளுக்கு கொடுக்காமல் எந்த முகாந்திரமும் இல்லாமல் அரசு ஆலைகளுக்குத் தான் கொடுக்கப்படுகிறது என்றும் கூறினீர். தாத்தா செய்தார், அப்பா செய்தார் அதனால் நஷ்டம் வந்தாலும், லாபம் இல்லையென்றாலும் நானும் நெல் விதைப்பேன், கடன் படுவேன், மேலும் மேலும் கடன் படுவேன் என்று இன்று ஒரு விவசாயி சொன்னால் அவரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்...இது சேவையா? அறியாமையா? கௌரவமா ?

இங்கு ஒரு செடியேனும் வளர்ந்துப் பாருங்கள் என்று கேட்கப்படும் நண்பர்களை உலக அளவில் அவசிய உணவு வகைகள் எவ்வாறு பயிர் செய்யப்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும் என்ற கோரிக்கை விடுக்கிறேன்.....

லாபம் தரும் பயிர்கள் ஆயிரம் இருப்பதாக தாங்களே சொல்கிறீர்கள்...இந்நிலையில் அவற்றையும் விதைக்காமல், நிலத்தடி நீர் பாராமரிப்பு இல்லாமை, நவீன உத்திகள் செயல்படுத்தாமல் இருத்தல் , இயந்திரங்களை புறக்கணிப்பு, கால மாற்றத்துடன் ஒத்துப் போகாமை, சுரண்டும் வணிகர்களை புரிந்து கொள்ளாமை, நீண்ட கால நீர் திட்டங்கள் , பெய்யும் மழையையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் சூழலை வளப்படுத்தாமை, காடு வளர்ப்பின் அவசியத்தையும் உணராத செயலில் விவசாயி ஒருவர் இருப்பாரானால் அத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?

இது விவசாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லுமே ஒழிய, வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லாது...



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by பூவன் Fri Mar 01, 2013 9:41 am

நண்பரே ....

சதாசிவம் wrote:நான் சொன்ன வரிகளை மாற்றவில்லை,,,ஒரு நிறுவனத்தில் சம்பளத்தை தாண்டி சில சலுகைகள் கொடுப்பது தொழிலாளியிடம் நல்லுறவைப் பேணுவதற்குத் தான். அப்போது தான் உற்பத்தி பெருகும், இது போன்று தான் விவசாயி கூலித் தொழிலாளி உறவு.....நீரும் மின்சாரமும் ஒத்துத்துழைத்தால் விவசாயம் லாபமே, பஞ்சாப், ஆந்திர கோதாவரி , கிருஷ்ணா டெல்டா பகுதி விவசாயிகள் இதற்கு சான்று..இங்கு பணக்காரர்களில் பெரும்பகுதியினர் விவசாயிகள் தான்..


நீங்கள் சொல்வது உண்மை தான் , நல்லுறவு என்பதை பேணுவதற்கும் , ஒரு சேவை மனபான்மை வேண்டும் எல்லா நிறுவனங்களிலும் சில சலுகைகள் உள்ளதா ? அதே போன்று தான் நல்ல மனம் கொண்ட விவசாயிக்கு அது சேவை , சில பேருக்கு அது உள்நோக்கம் கொண்ட உயர்வு படி ,


சதாசிவம் wrote:நான் சொல்லிய வரிகளில் அவர்களிடையே இல்லாத ஒற்றுமையையும், நவீன உத்திகளை கையாள தயாராக இல்லாத நிலையையும், நீண்ட காலத் திட்டங்களில் நீர் வரத்தை பெருக்கும் உபாயங்கள் செய்ய வேண்டிய அவசியத்தை உணராமையையும் குறிப்பிட்டுள்ளேன்.....

நாம் இங்கு ஒற்றுமையை பற்றியோ அல்லது அவர்கள் துறை குறித்தோ பேசினால் பேசிட்டே போகலாம் நாம் பேசுவது விவசாயி சேவை மனப்பான்மை கொண்டவர் என்ற கேருத்தை மட்டுமே ....

சதாசிவம் wrote:விவசாயியுடன் இருந்த நெசவர், குயவர், கொல்லர், கருமார், தச்சர் இன்று எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் பார்க்க வேண்டும்,..நெசவு இன்று ஆலை மயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்களும் காலத்துக்கு தகுந்து தங்களை உருமாற்றம் செய்துள்ளது....

இதற்க்கு விவசாயமோ ,விவசாயியோ எப்படி காரணம் ஆகமுடியும் ?

சதாசிவம் wrote:உங்களின் வரிகளின் மூலம் தென்னை, வாழை, காய்கறி, சோளம் லாபம் தரும் பயிர் என்று அறிய முடிகிறது....நான் அறிந்தவரை என் உறவுகள் அப்படி சொல்லவில்லை, அது உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், அதிக விலை கொடுக்கும் தனியார் ஆலைகளுக்கு கொடுக்காமல் எந்த முகாந்திரமும் இல்லாமல் அரசு ஆலைகளுக்குத் தான் கொடுக்கப்படுகிறது என்றும் கூறினீர். தாத்தா செய்தார், அப்பா செய்தார் அதனால் நஷ்டம் வந்தாலும், லாபம் இல்லையென்றாலும் நானும் நெல் விதைப்பேன், கடன் படுவேன், மேலும் மேலும் கடன் படுவேன் என்று இன்று ஒரு விவசாயி சொன்னால் அவரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்...இது சேவையா? அறியாமையா? கௌரவமா


நண்பரே இதில் கௌரவம் இல்லை அறியாமையும் இல்லை , நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எல்லோரும் வீழ்ச்சி ,நஷ்டம் என எண்ணிவிட்டால் நாம் எப்படி உணவருந்துவது ,அவர்கள் விவசாயம் அழிந்து விடக்கூடாது எனவும் , உணவுக்கு வழி இல்லாமல் போய்விடும் எனவும் தான் நெல் விதைகிறார்கள் , அனைவரும் பணபயிர்களை விதைத்தால் நமக்கு சாதம் என்டர் ஒன்றை கண்காட்சியில் தான் பார்க்க முடியும் .....

கரும்பு ஆலைக்கு தருவது என்ன காரணம் என அதையும் கூறுகிறேன் ,

தனியார் நிறுவனங்களுக்கு விற்றால் அவர்கள் அவராவே கரும்பை வெட்டி எடுத்து சென்று விடுவார்கள் தன்னை சார்ந்து உள்ளவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும் அவர்கள் வாழ்கை நிலை என்னவாகும் ?


சதாசிவம் wrote:இங்கு ஒரு செடியேனும் வளர்ந்துப் பாருங்கள் என்று கேட்கப்படும் நண்பர்களை உலக அளவில் அவசிய உணவு வகைகள் எவ்வாறு பயிர் செய்யப்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும் என்ற கோரிக்கை விடுக்கிறேன்.....

வளர்த்து பார்க்கும் போது தான் அதில் உள்ள உண்மை நிலை அறிய முடியும் என்பதற்காக கேட்க பட்ட கேள்வி ?


சதாசிவம் wrote:லாபம் தரும் பயிர்கள் ஆயிரம் இருப்பதாக தாங்களே சொல்கிறீர்கள்...இந்நிலையில் அவற்றையும் விதைக்காமல், நிலத்தடி நீர் பாராமரிப்பு இல்லாமை, நவீன உத்திகள் செயல்படுத்தாமல் இருத்தல் , இயந்திரங்களை புறக்கணிப்பு, கால மாற்றத்துடன் ஒத்துப் போகாமை, சுரண்டும் வணிகர்களை புரிந்து கொள்ளாமை, நீண்ட கால நீர் திட்டங்கள் , பெய்யும் மழையையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் சூழலை வளப்படுத்தாமை, காடு வளர்ப்பின் அவசியத்தையும் உணராத செயலில் விவசாயி ஒருவர் இருப்பாரானால் அத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?

இது விவசாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லுமே ஒழிய, வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லாது...
எல்லாரும் லாபம் தரும் பயிர்களையும் ,இயந்திரம் கொண்டும் அறுவடை செய்து விட்டால் கூலி தொழிலாளர் நிலை என்னவாகும் ?

இந்த துறை வீழ்ந்து விட்டது என யாரைவது கூற சொல்லுங்கள் , தவறான கருத்து துறை வீழ்த்தபட்டது , விவசாயி குளம் ,குட்டை ,ஏரிகளை கொண்டு நீரை சேமித்தான் அதை எல்லாம் திட்டம் என திட்டமிட்டு இல்லாமல் ஆக்கியது யார் விவசாயியா ?

காடுகள் இன்றும் வளர்க்கபடுகின்றன , அதை சாலைகள் மேம்படுத்தல் என்ற பெயரில் அழித்தது விவசாயியா ?
மலைகளை உடைத்து பல பல பாலங்கள் சுரங்கங்கள் என அமைத்தது விவசாயியா ?
தனிமங்கள் இருக்கும் காடுகளை தேடிபிடித்து கையக படுத்தி அந்த நிலங்களை சூறை அடியது விவசாயியா ?

சொல்லுங்கள் நண்பரே ....

இதில் கூறுவது உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது ,இருந்தபோதிலும் தான் விதைக்கிறார் எனதான் கூறுகிறோம் ..

இது பொது நலமோ தன்னலமோ , நாலு பேர் உயிர் வாழ உணவு அளிப்பவர் விவசாயி தான் ..
நம் வீட்டில் எல்லாம் அடுப்பில் பொங்க இவரது அன்பும் கொஞ்சம் பொங்க வேண்டும் ....


Last edited by பூவன் on Fri Mar 01, 2013 9:48 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by கரூர் கவியன்பன் Fri Mar 01, 2013 9:48 am

விவசாயம் இல்லையென்றாலும், இருக்கும் போதும் நாங்கள் அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறோம் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்
அள்ளி அள்ளி கொடுப்பதாக எந்த விவசாயும் இங்கு மார்தட்டிக் கொள்ளவில்லையே....?
மாறாக, உதவும் குணங்கள் அவர்களிடமும், மற்றவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்ளும் தன்மையும் அவர்களுடன் அதிகமே உண்டு...... நம்மைக் காட்டிலும்....


விவசாயி முன்னேறுவதை யாரும் தடுக்கவில்லை.
தங்களுக்கு தெரியாத வரலாறா...... இது பற்றி தங்களுக்கு தெரியாததா....
அதன் பிறகு விவசாயி உள்நோக்கம் இல்லாமல் கூலியாட்களுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுக்கிறான் என்று கூறுவதும் தான் நம்புவதற்கு கடினமாக உள்ளது.
நீங்கள் மட்டும் தான் உள்நோக்கம் உள்நோக்கம் என கூறுகிறீர்களே தவிர வேறு யாரும் கூறவில்லையே நண்பரே....

நம்புவதற்கு கடினமாக உள்ளது.
ஒருவர் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக உண்மைகள் இல்லை என்றாகிவிடுமா அய்யா.........
.
லாபமே illai
ஏற்றுக்கொண்டதற்கு நன்றி நண்பரே.....

இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ள தானே கொடுக்கிறோம்,
நாங்கள் இந்த எண்ணத்தில் கொடுப்பது இல்லவே இல்லை.ஏற்றுகொண்டமைக்கு நன்றிகள்....... ஆனால் அதற்காக ஒட்டு மொத்தமாக விவசாயிகள் என குறிப்பிடுவது ஏற்புடையது அன்று...

விவசாயம் எண்ணை வளமில்லாத ஜப்பான் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது, ஆனாலும் உயர்ந்த நிலையில் இருக்கிறது.
அவர்களும் விவசாயம் பெருமளவு செய்யத்துவங்கினால் இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே

புள்ளி விவரங்களின் படி விவசாயி வறுமை நிலையில் இருப்பது எப்படி உண்மையோ, அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை. இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான்.
நாம் அனைவரும் தவறு செய்து விட்டு விவசாயிகளை மட்டும் குற்றவாளியாக நிறுத்துவது எப்படி சரியாகும்.எல்லோரும் தவறு செய்து விளிம்பு நிலைக்கு வந்தப்பின்னர் ஒருவரை மட்டும் தன் விரல் நீட்டி காரணம் கற்பிக்கப்படுகிறது இந்த சமூக சூழலில் .
இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
காரணம் பல மட்டுமல்ல பலரும் கூட..... விவசாயிகளை மட்டும் குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது. காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை.
பாதிக்கப்பட்டிருப்பது அவன் தானே அவனே போராட்டும்.நாமெல்லாம் கையை கட்டி வேடிக்கை பார்க்கலாம்.ஆனால் அவன் விளைவித்த பொருட்களை மட்டும் நாம் பயன்படுத்தலாம்.... அப்படித்தானே அய்யா.....?
இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
அது சரி அப்போ..... சுடுகாட்டில் விவாயிகளை நாம் அடக்கம் செய்யும் வரை அவர்கள் லாபம் இல்லாமலேயே விவசாயம் பார்க்கட்டும்.நீங்கள் இந்த இடத்தில்ஒன்று மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்.நீங்கள் செல்லும் லாபம் பார்க்கும் விவசாயிகள் என்போர் பெரு விவசாயிகள் வேண்டுமானால் இருக்கலாம்.
அரசு தரும் பெரும் உதவிகள் பெரும்பாலும் அவர்கள் மடியிலேயே கொண்டு கொட்டப்படுகிறது.சிறு குறு விவாயிகள் இன்னும் கையேந்து நிலையில் தான் உள்ளனர்.
[quote]
புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை,
நீங்களே தான் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள் மரபு விவசாயத்தை விட்டு குறுகிய கால பயிர்களுக்கு மாறிவிட்டனர் என்று.ஏனிந்த முரண்பட்ட கருத்து அய்யா.....?
வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம்
வருமானம் போதாத அவல நிலை கொண்டு கடன் பட்டு சாக வேண்டிய நிலையில் உள்ளன் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
வரட்டு கௌரவம்
நீங்கள் பார்த்தது அப்படிப்பட்ட நபரைத் தானோ...

நான் இதனை மிகவும் கண்டனத்திற்கு உட்படுத்துகிறேன்.எதனடிப்படையில் இந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துநீர்கள் என விளக்க முடியுமா.....?
.பொத்தம் பொதுவாக இப்படி கூறுவதை நான் எதிர்க்கிறேன்.
வயிறு காயிந்து கொண்டிருக்கும் போது அவன் எங்கிருந்து வறட்டு கெளரவம் கொண்டிருந்தான்.நீங்கள் கூறுவது வேண்டுமானால் அவன் கொண்ட தன்மானத்தில்,சுய கௌரவத்தில் வேண்டுமானால் பொருந்தலாம்.

ஒற்றுமையின்மை
இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.ஒற்றுமையின்மை என்பது பல்வேறு கட்சி,சாதியம்,என்ற அடிப்படையில் இன்றும் நிலவுகிறது.ஆனால் விவாயிகளின் ஒட்டுமொத்த உணர்விற்கு பங்கம் ஏற்படும்போது அவர்கள் அதனையும் மீறி அணித்திரள்ந்ததை வரலாறு சொல்லும்.

அந்த அந்த மாநிலத்தில் விளையும் நெல் அந்த மாநிலத்தில் விலை போகும் உறுதி உள்ளது..
உறுதி உள்ளதா.........? அதிர்ச்சி எதனடிப்படையில் அய்யா... விவசாயி இன்னும் வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டுள்ளது தங்களுக்குத் தெரியாதா...?
இதை வாங்கி வியாபாரிகள் லாபம் பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும்,,,,
உண்மை.ஆனால் அவர்கள் விவாசயிகள் அல்லவே...
நெல் விளைந்தால் லாபம் தரும் பயிர் தான் என்பதை எந்த விவசாயியும் மறுக்க இயலாது.
நான் மறுக்கிறேன்.அய்யா.... நெல் லாபம் தரும் பயிர் என்பது இங்குதான் அறிகிறேன்.சொற்ப வரவு வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் முழுக்க லாபம் தரும் பயிர் என்பது அதிர்ச்சி .
அப்படியானால் அரசு நெல்லை லாபம் தரும் பணப்பயிர் வகையில் சேர்த்திருக்கலாமே...

இது போன்ற துறைகள் மனிதனின் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது, உணவை மட்டுமல்ல...
உணவை மட்டுமல்ல என்பது உங்கள் கருத்து.உணவு மிக மிக முக்கியமானது என்பது என் கருத்து.
(இவை இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு )

தமிழக எல்லைகள் மரங்கள் வெட்டப்பட்டு , வயல்களாகி, இப்போது நடு கற்களை நட்ட வியாபார நிலமாக உள்ளது....
இதற்க்கு கூடவா விவசாயி காரணம்..... தவறு செய்தவன் எங்கோ இருக்க பழி மட்டும் இங்கேயா.......?
காடுகளை அழித்தவன் குற்றவாளி என்றால் அதனை கை கட்டி வேடிக்கை பார்த்த நாமும் தான் மிக முக்கிய குற்றவாளி..... அதைவிட பழியை நாம் அடுத்தவர் மீது சுமத்துவது...

.நாங்கள் நஷ்டம் வந்தாலும் அடுத்தவருக்காகத் தான் விளைவிக்கிறோம்
நீங்களே வார்த்தைகளை புனைத்து ஒரு கருத்தை கூறினால் எப்படி.......

வாதம் தான் விதண்டாவாதமாக உள்ளது.
ஒருவருக்கு விதண்டாவாதமாக தோன்றுவது மற்றவருக்கு வாதமாக அமைவதில் அதில் அவர் தவறு ஒன்றும் இல்லையே நண்பரே . மேலும் வாதம் பிரதி வாதம் என்பதற்கும், விதண்டாவதத்திர்க்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது.
ஒருவரின் கருத்திற்கு எதிராக மாற்றுக் கருத்து வைப்பவர்களின் கருத்தினை விதண்டாவாதம் என எப்படி குறிப்பிடுவது என எனக்கு தெரியவில்லை. அதிர்ச்சி
இந்த நிலைக்கு விவசாயிகளின் பங்கும் இருக்கிறது....
அது எந்த நிலை என்று தெளிவாக குறிப்பிட இயலுமா அய்யா...
நாட்டில் உள்ள ஊழல்களில் பாதிக்கப்படும் பலரில் விவசாயியும் ஒருவர், அவர் மட்டும் அல்ல.
பலரில் ஒருவர் என்பது உங்கள் கருத்து பரவலாக விவசாயிகள் தான் என்பது என் கருத்து.
அவர் மட்டுமல்ல என்பது உங்கள் கருத்து, பெரும்பாலும் அவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து அவ்வளவு தான் நண்பரே புன்னகை

ஒவ்வொருவரும் அவர்களின் நிலங்களில் தான் தனியாக விவசாயம் செய்ய முயலுகின்றனர்...வளர்ந்த நாடுகளில் இந்நிலை வேறு..
அந்த நிலை எந்நிலை என கூறினால் நான் முயன்றுபார்க்கிறேன்.மேலும் இது போன்ற நிலை வேறு எந்த நாடுகளில் உள்ளது என குறிப்பிட்டாலும் எனக்கு உதவியாக இருக்கும் அய்யா.

லாபம் பொய்த்துப் போகும் என்ற நிலையிலும் கடன் மேல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள்
அதற்க்கு வேறென்ன காரணம் .இனிமேலாவது பயிரைக் காப்பாற்ற முடியாதா என ஏக்கம் தான் காரணம்.மேலும் லாபம் இல்லாமலென்ன தனது குடும்பம் அரைவயிறு கஞ்சியாவது குடிக்க முடியாதா என எண்ணம் தான் காரணம்.

விளைநிலங்கள் விலைபோவதில் எனக்கும் உடன்பாடில்லை.
மகிழ்ச்சி.....
பிழைக்கத் தெரியாத நிலையில் பொய்த்துப் போகும் போது கட்டிய மனைவியும் மதிக்க மாட்டாள்
அவளை மனைவி என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என புரியவில்லை..... மனைவி என்பதன் முழு அர்த்தம் என்னவென்று அறியாத மனித உருவினை வேண்டுமானால் நீங்கள் சொல்வது பொருந்தும் நண்பரே...
இன்று உலகமயமாக்களில் சிறு குறு வணிகர்கள் பாதிக்கபடுவதை நம்மால் ஏற்க இயலவில்லை, ஆனால் இந்த வணிகக் கூட்டம் தான் விவசாயிகளை பல்லாண்டுகளாக சுரண்டுகிறது.
இது உண்மைஎன்றால் அதற்க்கு நாமும் தான் துணைநின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம்..

இங்கு பணக்காரர்களில் பெரும்பகுதியினர் விவசாயிகள் தான்..
ஒரு சிறு மாற்றம்.பணக்காரர்கள் விவசாயம் செய்யலாம்.ஆனால் விவசாயத்தின் உதவியால் தான் பெரும் பணக்காரர்கள் ஆகினார்கள் என்பது பொருத்தமில்லாதது.

நான் சொல்லிய வரிகளில் அவர்களிடையே இல்லாத ஒற்றுமையையும், நவீன உத்திகளை கையாள தயாராக இல்லாத நிலையையும், நீண்ட காலத் திட்டங்களில் நீர் வரத்தை பெருக்கும் உபாயங்கள் செய்ய வேண்டிய அவசியத்தை உணராமையையும் குறிப்பிட்டுள்ளேன்.....
நாவீன உத்திகள் என்கிறீர்கள் நீங்களே தான் மரபு வழி பயிர்கள் கைவிடப்பட்டு விட்டன என கூறினீர்கள் நண்பரே...

.நான் அறிந்தவரை என் உறவுகள் அப்படி சொல்லவில்லை,
இவ்வளவு நேரம் உறவுகளிடம் கேட்டுத்தான் இவ்வளவு கருத்துகளை சொன்னீர்களா அய்யா... அதிர்ச்சி

விவசாயத்தினைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை நிலையையும் ஒருவரிடம் கேட்டு அறிந்துக்கொள்ள என்றுமே முடியாது நண்பரே........அதனை அந்த இடத்தில் இருந்து அறிந்தவனால் மட்டுமே முழுமையாக உணர முடியும் .

மற்ற தொழில்களும் காலத்துக்கு தகுந்து தங்களை உருமாற்றம் செய்துள்ளது....
நீங்கள் கூறுபவைகளில் பல தொழில்கள் முழுமையாக மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் இங்கும் மாற்றம் நிகழ்துள்ளது. அதற்காக நிலத்தினை விட்டு வேறெங்கும் நடவு செய்ய முடியாது நண்பரே .

தாத்தா செய்தார், அப்பா செய்தார் அதனால் நஷ்டம் வந்தாலும், லாபம் இல்லையென்றாலும் நானும் நெல் விதைப்பேன், கடன் படுவேன், மேலும் மேலும் கடன் படுவேன் என்று இன்று ஒரு விவசாயி சொன்னால் அவரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்...
இது வெறும் யூகத்தின் அடிப்படியிலான கேள்வி.நிகழ்கால சாத்தியமான கேள்வியைக் கேளுங்கள்.

இது போன்ற தொரு கருத்து கொண்டு இதுவரை யாரும் செயல்பட்டதாக நான் இன்றளவும் அறியவில்லை.மாறாக எனது தந்தையினைத் தொடர்ந்து நானும் விவசாயம் செய்ய விரும்புகிறேன் என சேற்றில் இறங்கிய பலரை நான் அறிவேன்.

அவரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்...
அதைத்தான் நானும் கேட்கிறேன் விவசாயிகளின் வீழ்ச்சிக்கு யார் காரணமென்று.....?

இது சேவையா? அறியாமையா? கௌரவமா ?
தன்னலத்துடன் கொண்ட பொதுநலம் என்றால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்குமா நண்பரே....
(தன்னலம் என்பது தானும் தன் குடும்பமும், பொதுநலம் என்பது இந்த சமூகமும்)
இப்படியும் கூறலாம் தன்னலத்தினுள் பெரிய அளவில் பொதுநலமும் உள்ளது என்றும் அல்லது பொதுனலத்தினுள் சிறிதளவு தன்னலமும் உள்ளது என்றும்.......

தங்களுக்கு எது தேவையோ அதனை எடுத்துக்கொள்ளுங்கள் அய்யா.

கௌரவமா ?
எனக்கொன்று ஆரம்பம் முதல் இதுவரை புரியவே இல்லை.எதனை நீங்கள் கௌரவம் கௌரவம் என குறிப்பிடுகிறீர்கள் அல்லது எண்ணுகிறீர்கள் என்று.....

உலக அளவில் அவசிய உணவு வகைகள் எவ்வாறு பயிர் செய்யப்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும்
தாங்கள் இதில் கூற வருவது என்ன...... நண்பரே ? அதிர்ச்சி

இங்கு ஒரு செடியேனும் வளர்ந்துப் பாருங்கள் என்று கேட்கப்படும்
உண்மைத்தன் ஒரு சிறு செடியை வளர்க்கும் பொறுப்பு என்பது... பெரிய பொறுப்பு அதனை முழுமையாக பராமரிப்போடு முழுமையாக வளர்ப்பது என்பது கடினமான ஒன்றுதான்.

லாபம் தரும் பயிர்கள் ஆயிரம் இருப்பதாக தாங்களே சொல்கிறீர்கள்...இந்நிலையில் அவற்றையும் விதைக்காமல்,
அய்யா லாபம் தரும் பயிர்களையே விதைத்தால் உணவிற்கு நாம் என்ன பண்ணுவது அய்யா..... புன்னகை

நிலத்தடி நீர் பாராமரிப்பு இல்லாமை, சுரண்டும் வணிகர்களை புரிந்து கொள்ளாமை, நீண்ட கால நீர் திட்டங்கள் , பெய்யும் மழையையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் சூழலை வளப்படுத்தாமை, காடு வளர்ப்பின் அவசியத்தையும் உணராத செயலில்
இவை அனைத்தும் விவசாயி மட்டும் தான் செய்யனுமா என்ன.............

நீங்களும் நானும் செய்ய கூடாதவைகளா இவை....... அல்லது செய்ய இயலாதவையா இவை..?

நவீன உத்திகள் செயல்படுத்தாமல் இருத்தல் , இயந்திரங்களை புறக்கணிப்பு, கால மாற்றத்துடன் ஒத்துப் போகாமை,
இன்று அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.பயன்படுத்திக்கொண்டும் உள்ளனர்.தாங்கள் அறியவில்லையா நண்பரே..

விவசாயி ஒருவர் இருப்பாரானால் அத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?
மிகவும் ஆராயப்பட வேண்டிய மற்றும் அவரவருள்ளும் எழுப்பிக்கொண்டு நடுநிலையோடு சரியான விடை காண வேண்டிய கேள்வி இது....

இது விவசாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லுமே ஒழிய, வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லாது...
விவசாயி மட்டுமே அவன் நிலையை காக்க செயல்கள் செய்ய வேண்டும் என்று நிலவும் சூழலில் நிச்சயம் பின்னோக்கி தான் செல்லும் அய்யா...

ஒவ்வெரு பதிலிலும் பல முரண்பட்ட கருத்துகளை தருகிறீர்களே இதில் தங்களின் நிலைப்பாடு தான் என்ன நண்பரே ..............கொஞ்சம் தெளிவாகத்தான் கூறுங்களேன். அதிர்ச்சி

எதுவானாலும் சரி....... விவசாயிகளின் நிலைக்கு விவசாயிகள் மட்டுமே காரணம் என்ற நிலைப்பாட்டையும், அதனை சீர் செய்ய விவசாயி தான் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் எனக்கு சற்றும் உடன்பாடில்லை.நாம் கடைசிரை அடுத்தவர்களை தான் பழிசுமத்தி காரணம் கற்ப்பிக்க முயலுகிறேம் .நமது நிலையை நாம் உணர மறுக்கிறோம் என்ற நிலை வருத்தத்தை ஏற்படுத்துகிறது எனக்கு.

எந்த ஒரு சமூகம் சமூகத்தில் நிலவும் ஒரு பொதுபிரட்சினைக்கு தனிப்பட்ட சிலரை காரணம் கற்பிக்கிறதோ அந்த சமூகம் நிச்சயம் முன்னேறாது.

மிக முக்கியமாக இதற்க்கு சரியான ஒரு நிகழ்வை குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது.

நேற்று வயலில் அறுப்பு வேலை நடந்தது.சொந்த வயல் இல்லை குத்தகைக்கு.அனைத்து வேலைகள் முடிந்தப்பிறகு வேலையாட்களுக்கு எனது தந்தை கூலியாக நெல் வேண்டுமா அல்லது பணம் வேண்டுமா என கேட்டார் அந்த நபரிடம்(அவர் தேவையை அவர் தேர்வு செய்துகொள்ளட்டும் என்று) . அந்த நபர் தனக்கு நெல்லே கொடுங்கள் என கேட்க , எனது தந்தை ,உங்களுக்கான கூலியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.அவர் கிட்ட வரவேயில்லை.
பின்பு அவர் தானாகவே தனக்கு உரிய கூலியாக நெல்லை எடுத்துக்கொண்டார்.

அதன் பின்பு நடந்தவைதான் மிக முக்கியம்....

உரிய கூலியை எடுத்துக்கொண்டப் பின்னரும் எனது தந்தை இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார்,அவர் எனது தந்தையைப் பார்த்தார்.மேலும் உறுதிபடித்தி எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறினார்.அவர் அதன் பின்பு மேலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டார்.

பின்பு அவர் தனது வீட்டிற்கு அவர் கூலியாக பெற்ற நெல்லை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது மீண்டும் அவரை அழைத்து இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொடு என்று என்னிடம் கூறினார்.நான் மேலும் அவர்க்கு நெல்லைக் கொடுத்தேன்.அவர் அதனைப் பெற்றுகொண்டு சென்று விட்டார்.இறுதியில் அவருக்கு கொடுத்த நெல்லானது அவர் கூலியை விட இரு மடங்கு இருந்தது.ஆனால் அதனைக்கண்டு எனது தந்தை மகிழ்ந்தாரே தவிர வருத்தம் கொள்ளவில்லை.

இங்கு மிக முக்கியமானது என்னவென்றால் இந்த விளைச்சலில் மனத்திருப்தி அடையும் அளவு விளைச்சல் வரவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்,கூலியை வாங்கிச் சென்ற அந்த நபருக்கும் அது நன்கு தெரியும் என்பது தான் .

நான் இங்கு குறிப்பிட காரணம் ஒன்றே ஒன்றுதான், இன்னும் விவசாயப் பெருமக்கள் மனித உணர்வுகள் மதிக்கின்றனர்,அவர்கள் மற்றவர்களின் துன்பங்களை தானும் உணர்கின்றனர்,சாதாசிவம் அய்யா கூறியதைப் போன்று பெரும்பாலும் இல்லை எனக் கூறவே.மற்றபடி எந்த எண்ணமும் இல்லை.மேலும் இது மிகச் சரியான தற்கால உதாரணம் என்பதனாலும் தான்.


Last edited by கரூர் கவியன்பன் on Fri Mar 01, 2013 9:58 am; edited 2 times in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by சதாசிவம் Fri Mar 01, 2013 11:09 am

நண்பரே,

வளர்ந்த நாடுகளில் விவசாயம் பெரிய அளவில் நடைபெறுகிறது. சிறு குறு நிலங்கள் ஒன்றுபடுத்தப் பட்டு அனைத்துமே மெகா அளவில் நடைபெறுகிறது, குறைந்த ஆட்களைக் கொண்டும், இயந்திரங்களின் துணை கொண்டும்.... இன்று நாம் காணும் பல துறைகளில் வேலை பார்ப்பவர் சென்ற தலைமுறையில் ஏதோ ஒரு துறை சார்ந்தவராகத் தான் இருந்திருப்பர். இந்த துறையில் இருந்த அனைவருமே, இவர்களின் துறையில் உள்ள வேலையாட்கள் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் நாட்டின் வளர்ச்சி எங்கே. கணிப்பொறி வந்து பலரது வேலையை வாங்கியது. சென்ற தலைமுறையில் ஒரு சராசரி ஸ்பின் மில்லில் வேலை பார்த்த ஆளை விட இந்த தலைமுறையில் இயங்கும் நிறுவனங்களில் உள்ள ஆட்கள் குறைவு...இது பல துறைகளுக்குப் பொருந்தும், மக்கள் சக்தி கூராக்கப்பட்டு பன்மடங்காகப்படுகிறது...இது போன்ற மாற்றங்களே நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது...இந்நிலையில் வேலையாட்கள் இருக்கவேண்டும் என்று உணர்வுடன் பேசி நீங்கள் செய்யும் சேவையில் நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை..

இந்தியாவில் விவசாயம் செய்வோரை விட, அதை வணிகம் செய்வோரை விட விலை பொருள்களை நுகர்வோர்கள் அதிகம்,,,விவசாயத் துறையில் உள்ள சறுக்கல்கள் நாடு முழுதும் பரவி அனைவருமே பாதிக்கபடுகின்றனர்... உங்கள் பேச்சிலே இயந்திரங்கள் பயன்படுத்தாமல் ஆட்களை பயன்படுத்தி வேலை வாங்கும் பொழுது விவசாயச் செலவு அதிகமாகிறது, லாபம் சொற்பமே என்ற வாதம் நிலவுகிறது...இந்நிலையில் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு , மானியம் என்று அரசு தரப்பில் கணிசமானத் தொகை ஒவ்வொரு வருடமும் செலவாகிறது. இதை தென்னை, மா விவசாயி கொடுப்பதில்லை, மக்களின் வரிப்பணம் தான் கொடுக்கிறது..

விவசாயம் தொடங்கினால் ஜப்பானும் பின்னுக்குப் போகும் என்ற உங்களின் ஊகம் உண்மை தான்..இது போன்ற விவசாயிகள் இருக்கும் வரை.

உங்களின் சேவை மனப்பான்மையும், வேலையாட்கள் மேல் இருக்கும் கரிசனும் அனைத்து துறைகளில் இருந்து நாங்கள் எங்கள் வேலையாட்களையும் இழக்க மாட்டோம், அவர்களுக்கு கொடுத்து வாழ்வோம், ஆட்களை குறைக்க மாட்டோம், இயந்திரங்கள் வைக்க மாட்டோம் என்று வாழ்ந்தால் நாட்டின் வளர்ச்சி எங்கே இருக்கும். விவசாயத்தை விவசாயியை நான் எதிர்க்கவில்லை.. ஆனால் அதை மக்கள் நலன் கருதி செய்கிறோம், அடுத்தவரின் மேல் உள்ள பரிவால், கருணை அடிப்படையிலே நஷ்டம் ஏற்படினும் செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்க இயலவில்லை. இக்கட்டுரையில் சாரம்ஸமாக கூறப்படும் கருணைத் தன்மை உங்களை மட்டும் பாதிக்கவில்லை எங்களைத் சேர்த்து தான்...




சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by chinnavan Fri Mar 01, 2013 11:15 am

பஞ்சாப், ஆந்திர கோதாவரி , கிருஷ்ணா டெல்டா பகுதி விவசாயிகள் இதற்கு சான்று
நண்பரே நாம் இங்கு பேசிகொண்டிருப்பது தமிழக விவசாயிகளின் நிலை பற்றி,

பஞ்சாப் - நீர் பாசனமும் மின்சாரமும் தடையில்லாமல் கிடைகிறது அதுபோலதான் நம் அண்டை மாநிலம் ஆந்திராவிலும், இங்கு நீருக்காக இன்னும் போராடிகொண்டிருகிரோமே தவிர வந்தபாடில்லை, இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும் அடுத்து மின்சாரம் - நிலை உங்களுக்கே தெளிவாக தெரியும்.

நேற்றைய செய்தி
-----------------------------
திண்டுக்கல் அருகே உள்ள ஊரை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் சென்று விட்டு நேற்று தான் வந்திருந்தார், வழக்கமான உரையாடலுக்கு பின் நான் அவரிடம் கேட்டது உங்கள் மாமா விவசாயம் எப்படி என்று... கரும்பு வைத்திருக்கிறார் ஆனால் ஆனதும் காய்ந்து கொண்டிருகிறது என்று ஏன் என கேட்டால் கிணறில் தண்ணீர் உள்ளது பாய்ச்சுவதற்கு போதுமான அளவு மின்சாரம் கிடைக்கவில்லை என்றார்.
இது ஒரு புறமிருக்க திருவைகுண்டம் பகுதியில் எனது அண்ணன் மகன் வாழை வைத்துள்ளார் அவரிடம் கேட்டது தண்ணீர் இல்லை சித்தப்பா, இத்தனைக்கும் அது தாமிரபரணி ஆற்றுப்பகுதி .

பொதுவாக எந்த கருத்தையும் முன்வைக்காதீர்கள், விவசாய பட்டினி கொலைகள் தமிழகத்தில் அதிகம்.

மேலும் ஏற்கனவே உங்களுக்கு சொன்னோமே இங்கு யாரும் முழு சேவையில் ஈடுபடவில்லை என்று.

விவசாயிகளை மதிக்கிறீர்களா கேட்கவே மிகவும் பகடியாக உள்ளது.
பள்ளியில் கேள்வி கேட்பார்கள் உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார் என, அரசாங்கத்தில், தொழில்நுட்ப துறையில் , மருத்துவராக.. இப்படி சொல்பவர்களின் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பதில்களும்

நான் உழவனின் மகன் என்பவருக்கு அளிக்கப்படும் பதில்களும் அனுபவித்தால் தான் தெரியும் நண்பரே, அனுபவித்து வெறுத்து போய்விட்டது. உழவனின் மகனுக்கு என்ன தெரியும் ஓரமாக உட்கார் என்ற கேள்விக்கு பதில் இன்று என்ன தெரியுமா

எனது வீட்டில் எனது முதல் அண்ணா தொழில் நுட்ப வல்லுநர் பணி புரிவது sterlite அனும தொழிற்சாலையில்
இரண்டாவது அண்ணா காது மூக்கு தொண்டை நிபுணர் - பணி புரிவது அரசு மருத்துவமனை சென்னை
நான் மென் பொறியியல் வல்லுனராக

இதையெல்லாம் இங்கு பகிர அவசியமில்லை, ஆனால் மீண்டும் உழவர்களை மதிக்கிறோம் என்ற கதையெல்லாம் இங்கு வேண்டாம்

ஆனாலும் இன்று வரை எங்களால் முடிந்த அளவு விவசாயத்தை தொடர்கிறோம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by பூவன் Fri Mar 01, 2013 11:34 am

வளர்ந்த நாடுகளில் விவசாயம் பெரிய அளவில் நடைபெறுகிறது. சிறு குறு நிலங்கள் ஒன்றுபடுத்தப் பட்டு அனைத்துமே மெகா அளவில் நடைபெறுகிறது, குறைந்த ஆட்களைக் கொண்டும், இயந்திரங்களின் துணை கொண்டும்.... இன்று நாம் காணும் பல துறைகளில் வேலை பார்ப்பவர் சென்ற தலைமுறையில் ஏதோ ஒரு துறை சார்ந்தவராகத் தான் இருந்திருப்பர். இந்த துறையில் இருந்த அனைவருமே, இவர்களின் துறையில் உள்ள வேலையாட்கள் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் நாட்டின் வளர்ச்சி எங்கே. கணிப்பொறி வந்து பலரது வேலையை வாங்கியது. சென்ற தலைமுறையில் ஒரு சராசரி ஸ்பின் மில்லில் வேலை பார்த்த ஆளை விட இந்த தலைமுறையில் இயங்கும் நிறுவனங்களில் உள்ள ஆட்கள் குறைவு...இது பல துறைகளுக்குப் பொருந்தும், மக்கள் சக்தி கூராக்கப்பட்டு பன்மடங்காகப்படுகிறது...இது போன்ற மாற்றங்களே நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது...இந்நிலையில் வேலையாட்கள் இருக்கவேண்டும் என்று உணர்வுடன் பேசி நீங்கள் செய்யும் சேவையில் நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை..

அப்படி என்றால் இயந்திரங்கள் வளர்ந்தால் வளர்ந்த நாடா ? இயந்திரங்கள் இல்லை என்று கூறவில்லையே , இருக்கிறது அதனுடன் மனிதநேயம் சேர்ந்து தான் இருக்கிறது ஏன் நாமெல்லாம் அரிசி விளைவிக்காமல் , இரும்பு போன்ற தனிமங்களை கொண்டு இயந்திரம் தயாரிக்கலாமே ?


நாம் பேசுவது விவசாயத்துறையை மட்டுமே ? கணிபொறி பற்றி நீங்கள் சொல்வது உண்மையே ஆனாலும் பஞ்சு மில் இயங்க இயந்திரம் இருக்கலாம் ஆனால் அங்கே நூல் தயாரிக்க பருத்தி பஞ்சு வேணும் விவசாயம் இல்லாமல் இயந்திரத்தை அரைத்து நூல் தயாரிக்க முடியுமா ?

வேலையாட்கள் வேண்டாம் இயந்திரங்கள் போதும் என்றால் இன்றிய நடுத்தர மக்களின் நிலை என்னவாகும் ? எண்ணி பாருங்கள் ?

இந்தியாவில் விவசாயம் செய்வோரை விட, அதை வணிகம் செய்வோரை விட விலை பொருள்களை நுகர்வோர்கள் அதிகம்,,,விவசாயத் துறையில் உள்ள சறுக்கல்கள் நாடு முழுதும் பரவி அனைவருமே பாதிக்கபடுகின்றனர்... உங்கள் பேச்சிலே இயந்திரங்கள் பயன்படுத்தாமல் ஆட்களை பயன்படுத்தி வேலை வாங்கும் பொழுது விவசாயச் செலவு அதிகமாகிறது, லாபம் சொற்பமே என்ற வாதம் நிலவுகிறது...இந்நிலையில் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு , மானியம் என்று அரசு தரப்பில் கணிசமானத் தொகை ஒவ்வொரு வருடமும் செலவாகிறது. இதை தென்னை, மா விவசாயி கொடுப்பதில்லை, மக்களின் வரிப்பணம் தான் கொடுக்கிறது..

இயந்திரங்களை பயன்படுத்தினால் மட்டும் லாபம் வருமா ? நீங்கள் கூறிய கூட்டு முயற்சி மற்றும் ஒற்றுமை இதெல்லாம் அப்ப்டின இங்கு தேவையே இல்லையே ?

நீங்கள் சொல்வதை ஒப்புகொள்கிறேன் மக்களின் வரிப்பணம் தான் என்று , அரசு ஏன் அப்புறம் இயற்கை விவசாயம் என்ற ஒன்றை ஆதரிக்காமல் ஆளுகொரு இயந்திரம் வாங்கி கொடுக்கலாமே ?

விவசாய துறை சறுக்கல் இயந்திரம் இல்லாதது மட்டும் என்றால் , எரிபொருள் விலையை ஏற்றி விட்டு இயந்திரம் வைத்து ஏற்படும் சறுக்கல் யார் பொறுப்பு ?
மின்சாரம் தடை செய்து விட்டு நீர் இறைக்கும் இயந்திரம் வைத்து ஏற்படும் சறுக்கல் யார் பொறுப்பு ?

இதெல்லாம் அரசு பணம் தருகிறாதா ? அணையில் நீர் உயர்ந்தால் எந்த அறிவிப்பும் இன்றி அணையை திறந்து விட்டு ஆற்றில் அடித்து செல்லும் சறுக்கல் யார் பொறுப்பு ?

உங்களின் சேவை மனப்பான்மையும், வேலையாட்கள் மேல் இருக்கும் கரிசனும் அனைத்து துறைகளில் இருந்து நாங்கள் எங்கள் வேலையாட்களையும் இழக்க மாட்டோம், அவர்களுக்கு கொடுத்து வாழ்வோம், ஆட்களை குறைக்க மாட்டோம், இயந்திரங்கள் வைக்க மாட்டோம் என்று வாழ்ந்தால் நாட்டின் வளர்ச்சி எங்கே இருக்கும். விவசாயத்தை விவசாயியை நான் எதிர்க்கவில்லை.. ஆனால் அதை மக்கள் நலன் கருதி செய்கிறோம், அடுத்தவரின் மேல் உள்ள பரிவால், கருணை அடிப்படையிலே நஷ்டம் ஏற்படினும் செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்க இயலவில்லை. இக்கட்டுரையில் சாரம்ஸமாக கூறப்படும் கருணைத் தன்மை உங்களை மட்டும் பாதிக்கவில்லை எங்களைத் சேர்த்து தான்..

மன்னிக்கவும் இது வேலை ஆட்களின் மேல் உள்ள சேவையோ கரிசனமோ இல்லை ?
உண்மையான மனிதனின் உணர்வுகள் ....

நாட்டின் வளர்ச்சி என்று சொல்கிறீர்கள் , சரி உங்கள் பேச்சுக்கே வரேன் இரண்டு கணினி மற்றும் நான்கு ட்ராக்டர் வைத்து நாடு வளர்ந்து விடுமா ? இல்லை இதை வைத்து நெல் விளைந்து விடுமா ?

கருணை , நஷ்டம் , என்று சேவை செய்கிறோம் என கூறி கொள்ள எந்த விவசாயியும் விரும்ப மாட்டார் , இவை எல்லாம் கடந்து தன் தொழிலை தொடர்ந்து செய்வதால் தான் இன்றும் உணவு பஞ்சம் என்ற ஒன்று தலை விரித்தாடாமல் உள்ளது .

இது மக்களின் நலனா ? இல்லை கருணையா ? இல்லை மனிதநேயமா ? இல்லை லாப நோக்கமா ? இல்லை என்னவென்று அவரவர் என்னும் மனதை பொருத்து ...

மனிதம் வாழ இந்த மண்ணும் வாழ விவசாயமும் விவசாயியும் வாழனும் என்பது மட்டும் உண்மை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by chinnavan Fri Mar 01, 2013 11:48 am

மனிதம் வாழ இந்த மண்ணும் வாழ விவசாயமும் விவசாயியும் வாழனும் என்பது மட்டும் உண்மை
ஆமோதித்தல்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by பூவன் Fri Mar 01, 2013 1:48 pm

இக்கட்டுரையில் சாரம்ஸமாக கூறப்படும் கருணைத் தன்மை உங்களை மட்டும் பாதிக்கவில்லை எங்களைத் சேர்த்து தான்...

கருணையில் என்ன பாதிப்பு என்று புரியவில்லை , நண்பரே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by chinnavan Fri Mar 01, 2013 2:09 pm

இல்லை பூவன் இவர் நாம் என்ன கூரினாலும் ஏற்க்கப் போவதில்லை. அடி படுபவர்களுக்குதான் வலி தெரியும். இத இத்துடன் விட்டு விடலாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 10 Empty Re: "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum