ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி-பகவன்விமர்சனம்

4 posters

Go down

ஆதி-பகவன்விமர்சனம் Empty ஆதி-பகவன்விமர்சனம்

Post by Powenraj Sat Feb 23, 2013 7:45 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/7df38b307602e35858bf410f5943c060_XL.jpg
அமீர் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் இந்துஅமைப்புகளின் எதிர்ப்பால் அமீரின் ஆதி பகவன் என பெயர் மாறி(??) வெளிவந்திருக்கிறது. கதைக்கும் இவர்கள் பேசிய மததொடர்புக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. உண்மையில் படத்தைப் பார்த்தபின் கதைக்கும் அமீருக்குமே சம்பந்தம் இல்லையோ என தோன்றுகிறது.
கனவருடன் பிரச்சினையால் சுதா சந்திரன் பாங்காக்கிற்கு(?) பொழைப்பு தேடி மகன் (ஜெயம் ரவி), மகளுடன் செல்கிறார். கஷ்டப்பட்டு வாழ்கிறார். கஷ்டப்படுவதைப் பொறுக்காத ஜெயம் ரவி தடம் மாறி சின்னச்சின்னத் திருட்டுகள், போதை மருந்தை ரோட்டில் விற்கும் கடைநிலைடீலர் என தொழிலில் வளர்ந்து சம்பாதிக்க அதைப்பிடிக்காத அம்மா,தங்கையுடன் தனியாய் சென்றுவிட, பெரியபணக்காரரான ஜெயம்ரவி அவ்வப்போது அம்மாவை பார்த்துவாம்மா என கெஞ்சுவதும், மற்ற நேரங்களில் கோட்டு போட்டு நடப்பதும், டான் வேலைகளை செய்வதுமாய் இருந்தாலும் தனிமையில் வாடிக்கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் பாங்காக்கில் ஒருபாரில் வேலை பார்க்கும் நீது சந்திராவைப் பார்த்து பரிதாபப்பட்டு 1000 டாலர் டிப்ஸ் வைக்கிறார். அவர் மறுக்க, அடுத்தடுத்து சம்பவங்களில் நீது சந்திரா படும் கஷ்டங்களைப் பார்த்து காப்பாற்றுகிறார். அவளது பாஸிடம் ஒரு பேக் நிறைய கரன்ஸி கட்டுகளை மூட்டையாய் குடுத்து நீது சந்திராவை மீட்டுதன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
மறுபடி சில முறை அம்மாவை பார்த்துபேச முயலுகிறார். தங்கை ஒரு தகுதியில்லாதவனை காதலிக்க அவனை கொல்கிறார். பின் தன் முன்னால்-பார்ட்னர்-இந்நாள்-எதிரியுடன் மோதலில் குண்டடிபட்டுக்கிடக்க நீது சந்திராதான் அவரைக் காப்பாற்றுகிறார். ஜெயம் ரவி நெஞ்சில் பாய்ந்தபுல்லட்டை நீது சந்திராவே(?) எடுத்து குண்டுக்குப் பதிலாய் தானே நெஞ்சுக்குள் குடி போகிறார். கல்யாணம் பண்ணிக்கலாமா என ஜெயம் ரவி கேட்க, மும்பையில் இருக்கும் அப்பாவைப் பார்த்து பேசலாம்வா என மும்பைக்குகூட்டி வருகிறார். ஆனால் மும்பையில் பகவான் என்றொரு வில்லன். பெண் தன்மையுடன், நளினத்துடன், லிப்ஸ்டிக்குடன் என இன்னொரு ஜெயம்ரவி ஒருவரை கொடூரமாய் கொல்வதுடன் இன்டர்வல்.
இவரு யாரு. அவரு யாரு. ரெண்டுபேருக்கும் இடையில நீது சந்திரா யாரு. பகவான கொல்ல அலையுற கூட்டம் யாரு. ஆனா உன்மையிலேயே மாட்டுறது யாரு கடைசியில ஜெயிக்கிறது யாரு... இதெல்லாம் மீதிப்படம்.
ஒரு ஆக்சன் படமாய் கதையின் இரண்டாம் பாதி ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. பகவான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, ஆரம்பத்தில் வரலாறு அஜீத், அப்பு பிரகாஷ் ராஜ் என ஒப்பிடும்போது ஜெயம் ரவி சுமாராய் இருந்தாலும் போகப்போக அவர் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் என்றேசொல்லலாம். இயல்பாகவே பொருந்தும் அவரதுகுரல் இன்னொரு ப்ளஸ்.
படத்தில் பிடித்தவிசயம் நீது சந்திராவின் கதாபாத்திரமும், அதற்கு அமீர் குடுத்திருக்கும் முக்கியத்துவமும். ஆக்சன் படங்களில் ஊறுகாயாய் வரும் கதாநாயகிகளுக்கு மத்தியில் இங்கே நீது சந்திராவிற்கு ஒரு முழு நீள ஆக்சன் சீக்வென்ஸ். அநேகமாய் ஒரு ஹீரொவும் ஹீரோயினும் மோதும் இவ்வளவு அட்டகாசமான சண்டைக்காட்சி இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறையாய் இருக்கவேண்டும். நீதுவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். மொத்தமாய் நீது சந்திராவுக்கு இது பெயர் சொல்லும் படம்தான். அவ்வப்போது மாடர்ன் பிரியாமணியை நினைவு படுத்துகிறார் என்பதும் சுவாரஸ்யம்.
யுவன் பாடல்களில்ஏமாற்றுகிறார். பின்னணியில் மிரட்டுகிறார்.
இப்படி இரண்டாம் பாதி ஓரளவுக்கு இருந்தாலும் இதை எதையுமே ரசித்துவிட முடியாதபடி முதல் பாதியில் படத்தை குழி தோண்டிப்புதைக்கும் பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாய் அரங்கேறுகின்றன.
பகவான் கதாபாத்திரத்தில் ஓரளவு ஸ்கோர் பண்ணிய ஜெயம் ரவி, முதல்பாதியில் ஆதி கதாபாத்திரத்தில் பரிதாபமாய் இருக்கிறார். பேராண்மையில் கோவனத்திலேயே கம்பீரமும், மிடுக்கும் காட்டியவர் இங்கேகோட்டு போட்ட குழந்தையாய், ஒருடானுக்குறிய எந்தபாடி லாங்வேஜும் இல்லாமல் மொத்தமாய் ஏமாற்றுகிறார். அம்மாவிடம் பேசும் காட்சிகளில் அதைவிட மோசம்.
ஜெயம் ரவி குடும்பம் கஷ்டப்படுவது, இவர் டான் ஆவது, ஜெயம் ரவிக்கும் நீது சந்திராவுக்கும் நெருக்கமாகும் காட்சிகள் என எல்லாயிடங்களுமே அரதப்பழசாய், செயற்கையாய், பொருத்தமில்லாமல்...ஷ்ஸ்ஸப்பா..
ஆரம்பத்திலிருந்து எல்லாக் காட்சிகளிலுமே வசனங்கள் படு மோசம். 'டேய் பகவான் உன்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்டா. ' என டயலாக் வரும்போது தியேட்டரில் எல்லோரும் நாங்களும் தாண்டாஎன கத்தும் அளவுக்கு இருக்கிறது. 'என்னமாமா சௌக்யமா?', 'உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா', 'போய் வீட்ல பெரியமனுசன் இருந்தா கூட்டிட்டுவா' இப்படி பருத்தி வீரனில் எல்லா இடங்களிலும் வசனங்களில் ஜமாய்த்த அமீரை இங்கே எந்த காட்சியிலும் கானவில்லை. இயக்குநர் அமீர் படத்தை குழியில் தள்ளுகிறார் என்றார் வசனகர்த்தா அமீர்அந்த குழியில் படத்தை புதைத்து மேலே கான்க்ரீட் போட்டு இறுக்கி மூடுவிடுகிறார்.
பருத்திவீரன் என்ற ஒரு அட்டகாசமான திரைக்காவியத்தைக் கொடுத்த அமீர்அடுத்து 5, 6 வருடங்கள் கழித்து இப்படி ஒரு படம் எடுப்பதைப் பார்க்கும் போது நமக்கு தோனுவதெல்லாம்.. இந்த யூனியன், பஞ்சாயத்து, அறிக்கை, தாடி, டூட்ஸி, வெட்டியாரெண்டு வருசம் சூட்டிங்.. இந்த குழப்பங்களிலிருந்து மீண்டு அமீர் என்ற அந்த அட்டகாசமான டைரக்டரை மறுபடி எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கம்தான்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆதி-பகவன்விமர்சனம் Empty Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by பாலாஜி Sat Feb 23, 2013 7:59 pm

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆதி-பகவன்விமர்சனம் Empty Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by ராஜா Sun Feb 24, 2013 11:21 am

என்ன கொடுமை சார் இது இதுக்கு தான் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தாரா ?!!! சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதி-பகவன்விமர்சனம் Empty Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by யினியவன் Sun Feb 24, 2013 6:25 pm

இது தான் அமீரின் ஆதி முதல் அந்தம் வரையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆதி-பகவன்விமர்சனம் Empty Re: ஆதி-பகவன்விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum