புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பேய் இருக்கு! Poll_c10பேய் இருக்கு! Poll_m10பேய் இருக்கு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:11 am



ஒரு ஊரில் ராமு, சோமு என்று இருவர் இருந்தனர். இருவரும் விவசாயிகள்; ராமுவின் சகலை சோமு. அதாவது இருவரின் மனைவிகளும் சகோதரிகள். இரு குடும்பங் களும் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்தன.

ராமு விவசாயம் செய்யும் போது, அனுபவமிக்க விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே செய்வான். உள்ளூரில் இருந்த அரசாங்க விவசாய அதிகாரிகளையும் அவ்வப்போது சந்தித்து, விவசாயத்தைப் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டே இருப்பான். தான் கற்றதை மற்ற விவசாயிகளிடமும் பகிர்ந்து கொள்வான். இத்தகைய கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்தால், அவன் நிலத்தின் விளைச்சல் செழிப்பாக இருந்ததுடன் அவனுக்கும் கிராமத்தில் பெருமதிப்பு இருந்தது.

ஆனால், அவன் சகலை சோமு அதற்கு நேர்மாறானவன். தனக்குத் தெரிந்த எந்த விஷயத்தையும் மற்ற விவசாயிகளுக்கு சொல்ல மாட்டான். தனது நிலத்தில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை மற்றவர் களுக்கு சொல்ல மாட்டான். தன் நிலத்தில் பயிர்கள் ஏதாவது நோய்கொண்டு வாடினாலோ, பூச்சிகள் தாக்கினாலோ, அதையும் மற்றவர் களுக்கு சொல்ல மாட்டான். தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கும் கெட்ட மனம் படைத்தவன். தன் சகலை தன்னைவிட நன்றாக வசதியுடன் வாழ்வதைக் கண்டு, சகலை ராமு மீது அவனுக்கு பொறாமை! அவனை விட எப்படியாவது முன்னேற வேண்டும் என்பதே அவன் கனவு.

ஓராண்டு மழையே பெய்யாமல் போக, இரண்டு கிராமத்துக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து போயிற்று. வழக்கப்படி கிணற்றிலிருந்து ஏற்றம் வைத்து வயலுக்குத் தண்ணீர் இறைப்பது மிகவும் கஷ்டமாகப் போயிற்று. உடனே, கிராம விவசாயிகள் ராமுவிடம் வந்து ஆலோசனை கேட்க, ராமு அவர்களை அழைத்துக் கொண்டு, விவசாய அரசு அதிகாரியிடம் சென்று யோசனை கேட்க, அவர் டீசல் இன்ஜினுடன் பொருத்தப்பட்ட பம்பு செட் வாங்கி உபயோகப்படுத்தச் சொன்னார். அது பம்புசெட்கள் வந்த காலம். அதைப்பற்றிய அறிவு நிறைய பேருக்கு கிடையாது.

உடனே எல்லா விவசாயி களும் ராமுவின் ஆலோசனைப்படி, ஒன்று சேர்ந்து பணம் திரட்டி பொதுவில் ஒரு பம்பு செட் வாங்கினார்கள். எல்லாரும் முறை வைத்து அதைப் பயன்படுத்த மிகக் குறுகிய காலத்தில் ஒரு பம்பு செட் மூலம், பல வயல்களுக்கு ஒரு நாளில் தண்ணீர் பாய்ச்ச முடிந்தது. எல்லா விவசாயிகளும் இதனால் பயன் பெற்றனர்.

இதைப்பற்றிய செய்தி சோமுவின் செவிகளையும் எட்டியது. உடனே தன் ஊரில் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி பம்பு செட் வாங்க முற் பட்டனர். ஆனால், சோமு வழிதான் தனி வழி ஆயிற்றே... அவன் யாருடனும் கூட்டு சேரவில்லை.

பணம் கடன் வாங்கி, தன்னுடைய உபயோகத்திற்காக மட்டும் ஒரு பம்பு செட் வாங்க விரும்பினான். உடனே, உள்ளூர் சேட்டிடம் சென்று கடன் வாங்கினான்.

தான் கடன் வாங்கிய விஷயத்தையும், தனக்கென்று தனியாக பம்பு செட் வாங்கப் போகும் விஷயத்தையும் தன் சகலையிடம் சொல்லவில்லை. கிராமத்து மற்ற விவசாயி களிடமும் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. தன்னந்தனியாக ஒரு நாள் நகரத்துக்கு பம்பு செட் வாங்கப் போனான். எப்படிப்பட்ட பம்பு செட், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு நன்றாக வேலை செய்யும் என்று அவனுக்கு சுத்தமாகத் தெரியாது. மற்ற விவசாயிகளை அவன் கேட்கவும் இல்லை. நகரத்தில் கடைத் தெருவை சுற்றிச் சுற்றி வர, ஒரு ஆள் சோமுவை நோட்டம் விட்டான்.

சோமுவை அணுகிய அவன், அவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் எதற்காக நகரம் வந்திருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், சோமுவை ஏமாற்றிப் பணம் பறிக்கத் திட்டமிட்டு, அவனை ஒரு பம்பு செட் கடைக்கு அழைத்துச் சென்றான்.

அந்தக் கடைக்காரனிடம், பம்பு செட் வாங்க யாரையாவது கூட்டி வந்தால், அந்த தரகனுக்கு கடைக்காரன் கமிஷன் தருவான். அதன்படி அந்த ஆள் சோமுவை அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று மிகவும் மட்டமான பம்பு செட் ஒன்றை சோமுவின் தலையில் கட்டி விட்டு, தன் கமிஷனைப் பெற்றுக் கொண்டு ஓடி விட்டான்.

தன் கிணற்றில் புதிய பம்பு செட்டைப் பொருத்தியவுடன், சோமு எதிர் பார்த்தபடி இல்லாமல் பம்பில் தண்ணீர் மிகக் குறைவாக வந்தது. டீசலை மட்டும் பம்பின் இன்ஜின் வஞ்சனையில்லாமல் தாராளமாகக் குடித்தது. ஆனால், தண்ணீர் மிகக் குறைவாக வந்தது. புதிய பம்பில் ஏன் இந்த பிரச்னை என்று அவனுக்கு புரியவே இல்லை.

ஒருநாள், பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த சின்னசாமி, சோமுவின் பம்பு செட்டைப் பார்த்து விட்டு, ""அடப் பாவிப் பயலே! இன்னுமா புரிய வில்லை? உன் பம்பு செட்டில் ஒரு பிசாசு குடியிருக் கிறது. அதனால் தான் பம்பு சரியாக வேலை செய்வது இல்லை. நீ காளி கோவில் பூசாரியைக் கூட்டி வா! அவன் பம்புக்கு தாயத்து கட்டி பிசாசை விரட்டுவான்,'' என்றான்.

வெளியில் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாமென்று நினைத்த சோமு, நள்ளிரவில் பூசாரியை ரகசியமாக பேய் ஓட்டக் கூட்டி வந்தான். பூசாரியும் பலமாக பூஜை போட்டு, மந்திரித்த ஒரு தாயத்தை பம்பில் கட்டி விட்டு, ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு போனான். அப்படியும் பிசாசு டீசல் குடிப்பதை நிறுத்தவில்லை.

எத்தனையோ ரகசியமாக செயற்பட்டும், சோமுவின் பம்பில் பிசாசு குடியிருப்பது எல்லாருக்கும் தெரியவர, அவன் வயலில் வேலை செய்யவே யாரும் முன்வரவில்லை. ஒவ்வொருவரும் பிசாசை விரட்ட தங்களுக்குத் தெரிந்த யோசனைகளைக் கூறினர்.

தற்செயலாக, அப்போது ஏதோ வேலை விஷயமாக வந்த ராமு, தன் சகலையின் பம்பில் குடியிருக்கும் பிசாசு பற்றிய செய்தியை கேட்டு, நேராக சோமு வீட்டுக்குச் சென்று அவனுடன் வயலுக்குச் சென்று பம்பு செட்டைப் பார்வை இட்டான்.

""சகலை இத்தனை விஷயம் நடந் திருக்கிறது. நீ என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே... பம்பு செட் வாங்கு வதற்கு முன் என்னை கலந்து ஆலோசித்து இருக்கலாமே... அல்லது விஷயம் தெரிந்த யாரிடமாவது யோசனை கேட்டிருக்கலாமே! உன் பம்பு செட்டில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. இது மிக மோசமான பம்பு செட். இதை யாரோ உன் தலையில் கட்டியிருக்கின்றனர். தவிர, பம்பின் தண்ணீர் உறிஞ்சும் குழாய் அளவு சரி இல்லை, அதனால்தான் இன்ஜின் மிக அதிகமாக டீசலைப் பயன்படுத்துகிறது. குழாயின் மட்டத்தை உயர்த்து, ஓரளவு தண்ணீர் நன்றாக வரும். தண்ணீரை கிணற்றிலிருந்து உறிஞ்ச முடியாததற்கு பம்பின் தரக் குறைவும், குழாயின் உயரமும்தான் காரணம்!'' என்று விளக்கினான்.

ராமுவின் வார்த்தைகளைக் கேட்டு, சோமுவிற்கு அவமானமாக இருந்தது.

"இத்தகைய நல்ல மனிதனைப் பார்த்தா பொறாமைப்பட்டோம்' என்று வருந்தினான். தன்னுடைய குறுகிய மனப்பான்மையை எண்ணி வெட்கப்பட்டான். ராமுவிற்கு தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தபின், அன்று முதல் முற்றிலும் புதிய மனிதனாக மாறினான்.

சிறுவர் மலர்



பேய் இருக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 23, 2013 11:10 am

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 23, 2013 12:20 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு பேய் மேல
நம்பிக்கை வந்துடுச்சுன்னு நெனச்சேன் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 12:30 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 23, 2013 12:36 pm

ஜாஹீதாபானு wrote:கதை நன்று சூப்பருங்க
பேரபிள்ளைகளுக்கு கதை சொல்லுற வயசுல , "சிறுவர் கதைகள்" பகுதியில் உங்களுக்கு என்ன வேலை? உடுட்டுக்கட்டை அடி வ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 23, 2013 12:43 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:கதை நன்று சூப்பருங்க
பேரபிள்ளைகளுக்கு கதை சொல்லுற வயசுல , "சிறுவர் கதைகள்" பகுதியில் உங்களுக்கு என்ன வேலை? உடுட்டுக்கட்டை அடி வ

நம்ம தாத்தா இருக்காரேனு வந்தேன்...இதெல்லாம் படிச்சா தானே கதை விட முடியும் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 23, 2013 12:46 pm

நல்லதொரு படிப்பினைக் கதை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 23, 2013 2:48 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு பேய் மேல
நம்பிக்கை வந்துடுச்சுன்னு நெனச்சேன் புன்னகை


சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Feb 23, 2013 2:51 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு பேய் மேல
நம்பிக்கை வந்துடுச்சுன்னு நெனச்சேன் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கதை அருமை அண்ணா
:




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக