Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை! - சிறுவர்கதை
Page 1 of 1
விடுகதை! - சிறுவர்கதை
தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன்.
அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.
காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர்.
பல நாட்களுக்குப் பின்னர் ஒரு கிராமத்தில் அவர்கள் ஒரு நாள் தங்கினர். கிராமத்தின் நடுவில் வளர்ந்து பரவி இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ், ஐவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் இருந்த ஒருவர் வேடிக்கையாக பேசினார்.
காவலர்கள் அவர்களை நெருங்கும் போது, "தேருவருதே, தேருவருதே, என்று சத்தம் கேட்டது. காவலர்கள் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் வைக்கப் பெற்றிருந்த தேரைப் பார்த்தனர். தேர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தது.
வலமிருந்து இடமாகப் படித்தாலும், இடமிருந்து வலமாகப் படித்தாலும் ஒன்றாகவே இருந்தது.
ஐவரிலும் நடு நாயகமாய் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சொன்ன கருத்தை அனைவரும் கவனமாய் கேட்டனர்.
""அண்ணன் தம்பியர் ஐவர், அண்ணன் இல்லையேல் திண்டாடுவர் தம்பியர்... அவர்கள் யார்?
காவலர்கள் சிந்தித்தனர்.
"அங்கே அமர்ந்திருக்கும் ஐவர்' இதுதான் விடையாக இருக்குமோ என்று எண்ணினர். ஆனால், அவர்கள் விடை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
""அண்ணன் தம்பியர் ஐவர் என்பது கை விரல்கள். அவைகளில் அண்ணன் என்பது கட்டை விரலாகும். கட்டை விரல் இல்லாவிடில் பிற நான்கு விரல்களும் வேலை செய்ய சிரமப்படுகின்றன.
ஐவரில் ஒருவர் இந்த விடையைச் சொன்னார்.
புதிர் போட்டவர், இதுதான் விடையென ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல, குருதட்சணையாக ஏகலைவனின் கட்டை விரல் கேட்கப்பட்ட நிகழ்வை அவர் அழகாய் விளக்கினார்.
இப்போது காவலர்கள் புரிந்து கொண்டனர். புதிர் போட்டவர்தான் சிம்பு என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டனர்.
அவரிடம் சென்ற காவலர்கள், அரசன் இட்ட கட்டளையை எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சிம்பு அவர்களுடன் சென்றான்.
சிம்பு அரசர் முன் வந்து நின்று வணங்கினான்.
அரசன் சந்தோஷப்பட்டான். மன்னர் விரலில் அணிந்துள்ள முத்திரை மோதிரம் டாலடித்தது. அதைப் பார்த்து சிம்பு புன்னகை செய்தான்.
""என்ன?'' என்று கேட்டான் அரசன்.
""மன்னரே, அது மீனை விடவும் சிறியது. ஆனால், மிகுதியான அதிகாரம் உடையது. விரலை விடப் பெரியது. ஆனால், வீரர்களை அடக்கி ஆள்வது,'' என்றான் சிம்பு.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
நீண்ட நேரமாகியும் மன்னரால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சிம்பு விடை கூறினான்.
""அரசே முத்திரை மோதிரத்தைத்தான் சொன்னேன்,'' என்றான்.
"இவன் என்னைக் கேவலப்படுத்துகிறான். இவனை எப்படியாவது மடக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று மன்னர் சில நிமிடங்கள் சிந்தித்தார். அவர் மனதில், சிம்புவை மட்டம் தட்டக்கூடிய அருமையான கருத்து உதயமானது.
""நான் உன்னை அரசவைக் கலைஞனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நீ எனக்கொரு கோழியைக் காணிக்கையாகத் தர வேண்டும், இது மன்னரின் கோரிக்கை,'' என்றார்.
"அரசே, நான் வீட்டில் கோழி வளர்க்கிறேன். அவைகளில் ஒன்றை தங்களுக்கு காணிக்கை தரத் தயாராய் இருக்கிறேன். இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,'' என்றான் சிம்பு.
""நீ கொண்டு வரும் கோழி சேவலாக இருக்கக் கூடாது. பெட்டையாகவும் இருக்கக் கூடாது,'' என்றார் மன்னர்.
மன்னர் தன்னை சோதித்துப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, மன்னரை மடக்க, தகுந்த பதில் கொடுத்தான்.
""மன்னரே ஒரு காவலரை அனுப்பி அந்தக் கோழியை பிடித்து வரச் சொல்லுங்கள். ஆனால், காவலனை பகலில் அனுப்ப வேண்டாம். அதாவது காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை, இரவிலும் அனுப்பி வைக்க வேண்டாம். அதாவது மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை,'' என்றான்.
""பகலில் ஏன் அனுப்பக்கூடாது?'' என்று மன்னர் கேட்டார்.
""பகலில் மேய்வதற்காக, கோழிகள் காட்டுக்குள் சென்று விடும். அதனால் பகலில் வேண்டாம்!'' என்றான்.
""இரவில் ஏன் வேண்டாம்?''
""இரவில் தானம் கொடுப்பதையும், கடன் கொடுப்பதையும் சாத்திரங்கள் தடுக்கின்றன. ஏனென்றால், அப்படிச் செய்தால் செல்வத்தைத் தரும் திருமகள் நமது வீட்டிலிருந்து போய் விடுவாள்,'' என்றான்.
சிம்புவின் பதிலைக் கேட்டு மன்னன் திகைத்துப் போனான். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவனை வெற்றி கொள்வது நம்மால் இயலாத செயல்' என்று மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.
சிம்புவை, மந்திரியாக நியமித்து, அவனுடைய அறிவை பயன்படுத்திக் கொண்டான்.
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கவலை! - சிறுவர்கதை
» மகனே! - சிறுவர்கதை
» சிலுக்கு - சிறுவர்கதை
» பொன் - சிறுவர்கதை
» முட்டை! - சிறுவர்கதை
» மகனே! - சிறுவர்கதை
» சிலுக்கு - சிறுவர்கதை
» பொன் - சிறுவர்கதை
» முட்டை! - சிறுவர்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|