புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
44 Posts - 59%
heezulia
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
3 Posts - 4%
viyasan
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
13 Posts - 2%
prajai
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவளை மலரைத் தேடும் வண்டுகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 21, 2013 11:53 am

சங்க இலக்கிய அகப்பாட்டுகள் திணைதுறைகளோடு அமைந்த பாடல்கள். அவற்றில் வரும் தலைவி உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவள். ஆனால், அவற்றில் வரும் தலைவனை அப்படிச் சொல்ல இயலாது. அவன் வீரமும் ஈரமும் ஊக்கமும் நிறைந்தவன் என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவன் அல்லன். அவன் கால்கள் பரத்தையர் சேரியை நோக்கி நடக்கின்றன.

மருதத்திணைப் பாடல்களில் தலைவன் பரத்தையோடு கொள்ளும் உறவே தலைவியின் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது. தலைவனின் அச்செயலால் மனம் வாடித் துன்புறும் தலைவி, அவன் மீது மனவேறுபாடு கொள்கிறாள். அவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்து தன்னை அணுகும்போது விலகி நிற்கிறாள். அவள் ஊடலைத் தோழியோ பிறரோ தணிவிக்க, அவள் மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்கிறாள். தானே தணிந்து ஏற்றுக்கொள்வதும் உண்டு.

தலைவனின் தவறான ஒழுக்கத்தைத் தோழியும் சிலபொழுது தலைவியும் சுட்டிக் காட்டுவர். அப்படிக் காட்டும்போதும் அவர்கள் சொற்களில் கண்ணியம் குடியிருக்கும். அவர்கள் அவனது பிழையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் அழகே அழகு.

அகப்பாடல்களில் காணப்படும் இந்த உத்தியை "உள்ளுறை உவமம்' என்பர். பாட்டில் சொல்ல நினைக்கும் கருத்தினை அதற்குரிய உவமைகளைக் கூறிப் பொருள்களைப் (உவமேயத்தை) படிப்பவர் அறிந்து அமைத்துக் கொள்ளும்படி உள்ளே வைத்துப் பாடுவது "உள்ளுறை உவமம்' (தொல்.அகத். நூ.51) எனப்படும்.

தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி முதலியோர் இப்படிக் குறிப்பாகப் பேசுவதற்குரியவர்கள். பெரும்பாலும் தோழியும் தலைவியுமே இப்படி உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதாகக் காணப்படுகிறது.

தலைவன் பரத்தையரோடு இன்பம் நுகர்ந்து திரும்புகிறான். அந்தத் தரமற்ற செயலைத் தோழி மருதநிலத்தில் இருக்கும் தாமரை, குவளை, வண்டு ஆகியவற்றைக் கொண்டு குறிப்பாகத் தெரிவிக்கிறாள். பேச்சு ஏதோ வண்டு ஒன்றின் செயலைப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், அது தலைவனின் அடாத செயலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பேச்சாகும்.

ஓர் அழகான தாமரை மலர். அது மிகுந்த தேனினைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் செழுமலரில் தேன் உண்ணுதற்குரிய வண்டு அதனை விடுத்துக் குவளை மலரை நாடிச் செல்கிறது. அதுவோ வெறிகொண்ட சுரும்புகள் வேட்கையோடு படிந்து தேனை உண்டு சென்ற மலர். அதில் சிறிதளவு தேனே எஞ்சி இருக்கிறது. அந்தச் சிறிதளவு தேனை விரும்பியும் அலைகிறதே வண்டு. என்னே அறியாமை! என்கிறாள் தோழி.

வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்துச் செவ்வி உடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.


இதில் வளமான தாமரை தலைவியையும், அது தேன் நிறைந்து ஆடிக்கொண்டிருப்பது அவள் மிகுந்த இன்பத்தை வழங்கக் காத்துக் கொண்டிருப்பதையும், தாமரையைப் பிரிந்த வண்டு தலைவியைப் பிரிந்த தலைவனையும், வெறிகொண்ட சுரும்புகள் காமம்மிக்க விடலைகளையும், சுரும்புகளால் மேயப்பட்ட குவளை காமுகர்களால் நுகரப்பட்ட பரத்தையையும், குவளை மலரில் உள்ள சிறிதளவு தேன் பரத்தை தரும் சிறிதளவு இன்பத்தையும் குறிக்கும் உவமைகளாக உள்ளன.

"செவ்வி உடையது ஓர் வண் தாமரை'' என்பது தலைவி அழகும் இனிமையும் நிறைந்தவள் என்பதையும், ""குறைபடுதேன்'' என்பது சிறிதளவு கிடைக்கும் இன்பம் என்பதனோடு, குறைவை ஏற்படுத்தும் இன்பம் என்பதனையும் சுட்டும் வகையில் அமைந்துள்ளன. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் குற்றமாகக் கருதப்படவில்லை என்றாலும் குறையாகக் கருதப்பட்டது.

தலைவன் தவற்றினை நயமாகச் சுட்டும் இப்பாட்டு உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் உரையில் தரப்பட்டுள்ளது. இப்பாட்டைப் பாடியவர் யார் என்பது தெரியவில்லை. எத்தனையோ சங்கப் பாட்டுகளை மேற்கோள் காட்டும் இளம்பூரணர், உள்ளுறை உவமத்திற்கு அவற்றில் ஒன்றினை எடுத்துக்காட்டாமல் இந்த வெண்பாவைக் காட்டியிருப்பதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.

முனைவர் தெ. ஞானசுந்தரம் நன்றி தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக