Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குவளை மலரைத் தேடும் வண்டுகள்!
Page 1 of 1
குவளை மலரைத் தேடும் வண்டுகள்!
சங்க இலக்கிய அகப்பாட்டுகள் திணைதுறைகளோடு அமைந்த பாடல்கள். அவற்றில் வரும் தலைவி உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவள். ஆனால், அவற்றில் வரும் தலைவனை அப்படிச் சொல்ல இயலாது. அவன் வீரமும் ஈரமும் ஊக்கமும் நிறைந்தவன் என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவன் அல்லன். அவன் கால்கள் பரத்தையர் சேரியை நோக்கி நடக்கின்றன.
மருதத்திணைப் பாடல்களில் தலைவன் பரத்தையோடு கொள்ளும் உறவே தலைவியின் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது. தலைவனின் அச்செயலால் மனம் வாடித் துன்புறும் தலைவி, அவன் மீது மனவேறுபாடு கொள்கிறாள். அவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்து தன்னை அணுகும்போது விலகி நிற்கிறாள். அவள் ஊடலைத் தோழியோ பிறரோ தணிவிக்க, அவள் மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்கிறாள். தானே தணிந்து ஏற்றுக்கொள்வதும் உண்டு.
தலைவனின் தவறான ஒழுக்கத்தைத் தோழியும் சிலபொழுது தலைவியும் சுட்டிக் காட்டுவர். அப்படிக் காட்டும்போதும் அவர்கள் சொற்களில் கண்ணியம் குடியிருக்கும். அவர்கள் அவனது பிழையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் அழகே அழகு.
அகப்பாடல்களில் காணப்படும் இந்த உத்தியை "உள்ளுறை உவமம்' என்பர். பாட்டில் சொல்ல நினைக்கும் கருத்தினை அதற்குரிய உவமைகளைக் கூறிப் பொருள்களைப் (உவமேயத்தை) படிப்பவர் அறிந்து அமைத்துக் கொள்ளும்படி உள்ளே வைத்துப் பாடுவது "உள்ளுறை உவமம்' (தொல்.அகத். நூ.51) எனப்படும்.
தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி முதலியோர் இப்படிக் குறிப்பாகப் பேசுவதற்குரியவர்கள். பெரும்பாலும் தோழியும் தலைவியுமே இப்படி உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதாகக் காணப்படுகிறது.
தலைவன் பரத்தையரோடு இன்பம் நுகர்ந்து திரும்புகிறான். அந்தத் தரமற்ற செயலைத் தோழி மருதநிலத்தில் இருக்கும் தாமரை, குவளை, வண்டு ஆகியவற்றைக் கொண்டு குறிப்பாகத் தெரிவிக்கிறாள். பேச்சு ஏதோ வண்டு ஒன்றின் செயலைப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், அது தலைவனின் அடாத செயலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பேச்சாகும்.
ஓர் அழகான தாமரை மலர். அது மிகுந்த தேனினைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் செழுமலரில் தேன் உண்ணுதற்குரிய வண்டு அதனை விடுத்துக் குவளை மலரை நாடிச் செல்கிறது. அதுவோ வெறிகொண்ட சுரும்புகள் வேட்கையோடு படிந்து தேனை உண்டு சென்ற மலர். அதில் சிறிதளவு தேனே எஞ்சி இருக்கிறது. அந்தச் சிறிதளவு தேனை விரும்பியும் அலைகிறதே வண்டு. என்னே அறியாமை! என்கிறாள் தோழி.
வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்துச் செவ்வி உடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.
இதில் வளமான தாமரை தலைவியையும், அது தேன் நிறைந்து ஆடிக்கொண்டிருப்பது அவள் மிகுந்த இன்பத்தை வழங்கக் காத்துக் கொண்டிருப்பதையும், தாமரையைப் பிரிந்த வண்டு தலைவியைப் பிரிந்த தலைவனையும், வெறிகொண்ட சுரும்புகள் காமம்மிக்க விடலைகளையும், சுரும்புகளால் மேயப்பட்ட குவளை காமுகர்களால் நுகரப்பட்ட பரத்தையையும், குவளை மலரில் உள்ள சிறிதளவு தேன் பரத்தை தரும் சிறிதளவு இன்பத்தையும் குறிக்கும் உவமைகளாக உள்ளன.
"செவ்வி உடையது ஓர் வண் தாமரை'' என்பது தலைவி அழகும் இனிமையும் நிறைந்தவள் என்பதையும், ""குறைபடுதேன்'' என்பது சிறிதளவு கிடைக்கும் இன்பம் என்பதனோடு, குறைவை ஏற்படுத்தும் இன்பம் என்பதனையும் சுட்டும் வகையில் அமைந்துள்ளன. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் குற்றமாகக் கருதப்படவில்லை என்றாலும் குறையாகக் கருதப்பட்டது.
தலைவன் தவற்றினை நயமாகச் சுட்டும் இப்பாட்டு உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் உரையில் தரப்பட்டுள்ளது. இப்பாட்டைப் பாடியவர் யார் என்பது தெரியவில்லை. எத்தனையோ சங்கப் பாட்டுகளை மேற்கோள் காட்டும் இளம்பூரணர், உள்ளுறை உவமத்திற்கு அவற்றில் ஒன்றினை எடுத்துக்காட்டாமல் இந்த வெண்பாவைக் காட்டியிருப்பதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.
முனைவர் தெ. ஞானசுந்தரம் நன்றி தினமணி
மருதத்திணைப் பாடல்களில் தலைவன் பரத்தையோடு கொள்ளும் உறவே தலைவியின் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது. தலைவனின் அச்செயலால் மனம் வாடித் துன்புறும் தலைவி, அவன் மீது மனவேறுபாடு கொள்கிறாள். அவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்து தன்னை அணுகும்போது விலகி நிற்கிறாள். அவள் ஊடலைத் தோழியோ பிறரோ தணிவிக்க, அவள் மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்கிறாள். தானே தணிந்து ஏற்றுக்கொள்வதும் உண்டு.
தலைவனின் தவறான ஒழுக்கத்தைத் தோழியும் சிலபொழுது தலைவியும் சுட்டிக் காட்டுவர். அப்படிக் காட்டும்போதும் அவர்கள் சொற்களில் கண்ணியம் குடியிருக்கும். அவர்கள் அவனது பிழையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் அழகே அழகு.
அகப்பாடல்களில் காணப்படும் இந்த உத்தியை "உள்ளுறை உவமம்' என்பர். பாட்டில் சொல்ல நினைக்கும் கருத்தினை அதற்குரிய உவமைகளைக் கூறிப் பொருள்களைப் (உவமேயத்தை) படிப்பவர் அறிந்து அமைத்துக் கொள்ளும்படி உள்ளே வைத்துப் பாடுவது "உள்ளுறை உவமம்' (தொல்.அகத். நூ.51) எனப்படும்.
தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி முதலியோர் இப்படிக் குறிப்பாகப் பேசுவதற்குரியவர்கள். பெரும்பாலும் தோழியும் தலைவியுமே இப்படி உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதாகக் காணப்படுகிறது.
தலைவன் பரத்தையரோடு இன்பம் நுகர்ந்து திரும்புகிறான். அந்தத் தரமற்ற செயலைத் தோழி மருதநிலத்தில் இருக்கும் தாமரை, குவளை, வண்டு ஆகியவற்றைக் கொண்டு குறிப்பாகத் தெரிவிக்கிறாள். பேச்சு ஏதோ வண்டு ஒன்றின் செயலைப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், அது தலைவனின் அடாத செயலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பேச்சாகும்.
ஓர் அழகான தாமரை மலர். அது மிகுந்த தேனினைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் செழுமலரில் தேன் உண்ணுதற்குரிய வண்டு அதனை விடுத்துக் குவளை மலரை நாடிச் செல்கிறது. அதுவோ வெறிகொண்ட சுரும்புகள் வேட்கையோடு படிந்து தேனை உண்டு சென்ற மலர். அதில் சிறிதளவு தேனே எஞ்சி இருக்கிறது. அந்தச் சிறிதளவு தேனை விரும்பியும் அலைகிறதே வண்டு. என்னே அறியாமை! என்கிறாள் தோழி.
வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்துச் செவ்வி உடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.
இதில் வளமான தாமரை தலைவியையும், அது தேன் நிறைந்து ஆடிக்கொண்டிருப்பது அவள் மிகுந்த இன்பத்தை வழங்கக் காத்துக் கொண்டிருப்பதையும், தாமரையைப் பிரிந்த வண்டு தலைவியைப் பிரிந்த தலைவனையும், வெறிகொண்ட சுரும்புகள் காமம்மிக்க விடலைகளையும், சுரும்புகளால் மேயப்பட்ட குவளை காமுகர்களால் நுகரப்பட்ட பரத்தையையும், குவளை மலரில் உள்ள சிறிதளவு தேன் பரத்தை தரும் சிறிதளவு இன்பத்தையும் குறிக்கும் உவமைகளாக உள்ளன.
"செவ்வி உடையது ஓர் வண் தாமரை'' என்பது தலைவி அழகும் இனிமையும் நிறைந்தவள் என்பதையும், ""குறைபடுதேன்'' என்பது சிறிதளவு கிடைக்கும் இன்பம் என்பதனோடு, குறைவை ஏற்படுத்தும் இன்பம் என்பதனையும் சுட்டும் வகையில் அமைந்துள்ளன. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் குற்றமாகக் கருதப்படவில்லை என்றாலும் குறையாகக் கருதப்பட்டது.
தலைவன் தவற்றினை நயமாகச் சுட்டும் இப்பாட்டு உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் உரையில் தரப்பட்டுள்ளது. இப்பாட்டைப் பாடியவர் யார் என்பது தெரியவில்லை. எத்தனையோ சங்கப் பாட்டுகளை மேற்கோள் காட்டும் இளம்பூரணர், உள்ளுறை உவமத்திற்கு அவற்றில் ஒன்றினை எடுத்துக்காட்டாமல் இந்த வெண்பாவைக் காட்டியிருப்பதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.
முனைவர் தெ. ஞானசுந்தரம் நன்றி தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
» விஷ வண்டுகள் தாக்குதல்: மகனை காத்து உயிரிழந்த தாய்
» பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
» வசந்தம் தேடும் வலி.
» விஷ வண்டுகள் தாக்குதல்: மகனை காத்து உயிரிழந்த தாய்
» பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
» வசந்தம் தேடும் வலி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|