புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_m101962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 24, 2012 6:09 pm

இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்து வந்த சீனா, 1962_ல் இந்தியா மீது திடீரென்று படையெடுத்தது. இப்படி படையெடுத்ததற்கு பின்னணி என்னவென்றால் சீனாவால் விரட்டி அடிக்கப்பட்ட திபெத் தலைவர் தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததுதான். இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத் 1959_ம் ஆண்டு வரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது.

புத்த மதத் தலைவரான தலாய்லாமா நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். (ஒரு தலாய்லாமா இறந்ததும் திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய்லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்). அதாவது இறந்த தலாய்லாமா மறுபிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய்லாமா 1935_ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14_வது தலாய்லாமா.) 1959_ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத் மீது சீனா படையெடுத்து அந்த நாட்டை சீனாவுடன் சேர்த்துக்கொண்டது. தலாய்லாமா தன் ஆதரவாளர்கள் 9 ஆயிரம் பேருடன் இந்தியாவுக்கு ஓடி வந்தார்.

நேரு தலைமையிலான இந்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. தலாய்லாமாவை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சீனா கோரியது. அதற்கு நேரு மறுத்துவிட்டதால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தலாய்லாமாவுக்கு அடுத்த தலைவராக இருந்த பஞ்சன்லாமா சீன ஆட்சிக்கு அடி பணிந்து திபெத்திலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் 1962 செப்டம்பர் 19_ந்தேதி இந்தியாவின் வட கிழக்கு எல்லைப்பகுதியிலும் (நேபா) லடாக் பகுதியிலும் சீனப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா மீது சீனா படையெடுக்கும் என்று கனவிலும் கருதாத நேரு சீனா இப்படி முதுகில் குத்திவிட்டதே என்று மனம் நொந்தார். போர் நடைபெற்ற இடம் இமயமலை அடிவாரம். தரை மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் கடும் குளிர் காலத்தில் இப்போர் நடந்தது. இந்திய ராணுவ வீரர்கள் தாய் நாட்டைக் காக்க தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வீரப்போர் புரிந்தனர்.

சீனா பெரும் படையுடனும் நவீன ஆயுதங்களுடனும் வந்து தாக்கியதால் இரண்டு முனைகளிலும் இந்திய ராணுவம் பின்வாங்க நேரிட்டது. போர் காரணமாக இந்தியாவில் முதல் முறையாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவியது. சீனாவின் படையெடுப்பை உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டித்தன. இதன் காரணமாக சீனா நவம்பர் 21_ந்தேதி போர் நிறுத்தம் செய்வதாகத் தானாகவே அறிவித்தது.

சீனாவின் பகுதிகளை ஏற்கனவே இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்ததாகவும் அவர்களை பழைய இடத்துக்கு விரட்டுவதே தங்கள் நோக்கம் என்றும் அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்றும் சீனா கூறியது. "போரில் பிடித்த இடங்களில் இருந்து சீனப்படைகள் வாபஸ் ஆகிவிடும். அந்தப்பகுதி ராணுவம் இல்லாத சூனியப் பிரதேசமாக இருக்கவேண்டும். (அதாவது இந்தியப்படைகள் கைப்பற்றிக்கொள்ளக் கூடாது) ஆக்கிரமிப்பு செய்தால் திருப்பித் தாக்குவோம்" என்று கூறிவிட்டு படைகளை சீனா வாபஸ் பெற்றது.

இந்தியாவின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து கொண்டிருந்த நேருவின் புகழுக்கு சீனப்படையெடுப்பின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

பாராளுமன்றத்தில் முதன் முதலாக நேரு மந்திரிசபை மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நேரு ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வற்புறுத்தினர்.

"நட்புடன் இருந்த சீனா நம்பிக்கைத் துரோகம் செய்ததால் நமக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது. இனி இத்தகைய நிலை ஏற்படாது. இந்தியாவிடம் எந்த நாடாவது வாலாட்டினால் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பலப்படுத்தப்படும்" என்று நேரு பதிலளித்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது.

அதுவரை இந்தியாவை தொழில் துறையில் முன்னேறச் செய்ய பாடுபட்டு வந்த நேரு, ராணுவ பலம் மிக்க நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். "இந்தியாவை வல்லரசு நாடாக்கவேண்டும்" என்று உறுதியுடன் செயல்படலானார். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்காக அதிகத் தொகை ஒதுக்கப்பட்டது.

நவீன போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. முப்படைகளுக்கும் அதிக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். "இனி போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு தோல்வி ஏற்படக்கூடாது" என்ற உறுதியுடன் நேரு வகுத்தத் திட்டங்களால் இந்திய ராணுவத்தின் பலம் படிப்படியாக உயர்ந்தது
நன்றி மாலைமலர்,,
1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! Sinoindianwar1962300x20



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 6:40 pm

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:17 am

இனியும் சீனா இந்தியாவிடம் வாலாட்டுமா? அப்படியே வாலாட்டினாலும் ஒட்ட நறுக்கப்படும் என்பது உறுதி.
இந்தியனா கொக்கா, உலகம் முழுவதும் உள்ள எல்லா இந்தியர்கள் இணைய மாட்டார்களா என்ன?


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 23, 2013 3:39 am

சூப்பருங்க
ஜெய்ஹிந்த்...

இந்தியாவைவிட ராணுவ பலத்தில் சீனா பன்மடங்கு பலம் வாய்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.அதே சமயம் தன எல்லையை காக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் கண்ணிமைக்காமல் கருத்துடன் காத்திருக்கிறார்கள்...ஜாக்கிரதை.
கடுகு சிருத்தாலும் காரம் குறையாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக