Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை!
Page 1 of 1
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை!
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/e77bcc3a-5602-412b-a819-50b2d446cad6_S_secvpf.gif
இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் திருமணம் பற்றி பல கனவுகள் இருக்கும். அதற்கு நேர் மாறாக வாழ்க்கை அமையுமானால் அந்தத் திருமணம் அவர்களின் எதிர்காலம் வரை புரட்டிப் போட்டு விடுகிறது. இக்காலத்து இளைஞர்கள் திருமண விஷயத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தை மீறி நடக்கும் திருமணத்தை வாழ்க்கையின் மிகப் பெரிய தோல்வியாகவே கருதுகிறார்கள்.
எதையும் தாங்கும் இதயம் இந்த திருமண விஷயத்தில் அனைவருக்கும் தேவைப்படும்.வாழ்க்கையை இனிதாக துவங்க வேண்டிய காலத்தில் மனதுக்குப் பிடிக்காத திருமணங்கள் வாழ்க்கையே முடித்துக் கொள்ள காரணமாகி விடுகிறது. மனம் விரும்பாத திருமணம் மனி தர்களுக்கு பாரமாகி விடும்.
-
என்ன தான் பெற்றோருக்கு தங்கள் மகன்-மகள் வாழ்க்கையில் உரிமையிருந்தாலும், திருமண விஷயத்தில் அவர்களின் கருத்துக்கு மாறாக நடக்க முயற்சிப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் செய்யும் செயல் நியாயமானது என்றால் அதை பேசி தெளிவாக புரிய வையுங்கள். அதன் பிறகு அவர்களுடைய முழுமையான சம்மதத்தை பெற்ற பின் மேற்கொண்டு கல்யாண வேலைகளில் ஈடுபடுங்கள்.
-
உங்களுடைய பெற்றோர் என்ற உரிமையைச் சொல்லி அவர்கள் உயிரைப் பறித்து விடாதீர்கள். வாழ்க்கையின்எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்தக் கால இளைஞர்களுக்கு கிடையவே கிடையாது. அவர்கள் வாழும் கற்பனை உலகம் கண் முன்னே வரவேண்டும். மனதுக்கு படித்த ஜோடியுடன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
-
அது சாத்தியப் படாதபோது மனமுடைந்து போகிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. அதேநேரம் அதற்கு கற்பனைகளும் கனவுகளும் மட்டும் போதாது. நிஜ உலக யதார்த்தங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். அந்த மனப்பக்குவத்திற்கு அவர்களை கொண்டு வந்த பின் தான் திருமணம் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டும். கனவுகள் என்பது நிஜங்களோடு சிறிதும் ஒத்துப் போகாத ஒன்று.
-
அதீத கற்பனையோடு இணைந்தது.இதையெல்லாம் விட்டு அவர்களை வெளியே இழுத்து வருவது பெரிய விஷயம். வாழ்க்கை என்பது நிஜமானது.கற்பனை என்பது பொய்யானது. இதை முதலில் புரியவைக்க வேண்டும். அப்போது தான் நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது.
தவறில்லை. ஆனால் குடும்பச்சூழலையும் மனதில் கொள்ள வேண்டும். பெற்றோரின் நிலையையும் யோசிக்க வேண்டும். திருமணம் என்பதுவீட்டில் உள்ள எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஒருதலைப்பட்சமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
-
அது நியாயம் தான். ஆனால் திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கை பிரச்சினை. இதில்சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்பு மிக முக்கியம். அதனால் பிள்ளைகளின் கருத்துக்கு மாறாக பெற்றோர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.அது நல்ல பலனைத் தராது. சிலவீடுகளில் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டால் பெரிய பொறுப்பு முடிந்து விட்டது என்று பெற்றோர் நினைப்பார்கள்.
அதனால் அவசர அவசரமாக வரன் தேடி முடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். அத்தனை பரபரப்பிலும் தங்கள் மகளின் ஆலோசனை பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். திருமணம் என்பது சாபமா? இத்தனைக்கும் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் கலாட்டாவில்முடிகிறது. மற்ற திருமணங்களுக்கும் அதே நிலைமை என்றால் என்ன தான் செய்வது? திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
-
இந்த சிந்தனை துளியும் இல்லாமல் கட்டாய திருமண ஏற்பாடுகள் தொடரும்போது கடைசியில் அது கால விரயத்திலும், கண்ணீரிலும் தான் போய் முடியும். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் விரும்பிக் கேட்ட எதையும் பெற்றோர் மறுப்பதில்லை. இதே பெற்றோர் கூட, திருமண விஷயத்தில் நேருக்கு மாறாக நடந்து தங்கள் பிள்ளைகளின் மனதை சிதைத்து விடுகிறார்கள்.
திருமணம் என்பது மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம். ஒரு மனிதனின் வாழ்க்கையின் இரண்டாம் பாகம். இதில் நிதானமும், அறிவுத் தெளிவும், அனுபவமும் அவசியம். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை.அதை மீற நினைப்பது தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தவறு தான்.
திருமணம் செய்து கொள்பவர்கள் மேஜராக இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய திருமணம் சட்டப்படி செல்லும். எல்லாவிஷயத்திலும் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர், திருமண விஷயத்தில் மட்டும் ஏன் வில்லன்களாக உருவெடுக்கிறார்கள் என்பது மட்டும் இன்னமும் புரியாத புதிர். மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
-
வெளிநாடுகளில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதில்லை. திருமண விஷயத்தில் எந்த கட்டாயமும் இருப்பதில்லை. வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் அவல நிலையும் அங்கில்லை. நம் நாட்டில் கடைசிவரை பிள்ளைகளுக்கு பெற்றோரின்ஆலோசனையும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தைமுழுக்க முழுக்க அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, எது நடந்தாலும் கவலையில்லாமல் பெற்றோரால்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதற்காக அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக அவர்களுடைய வாழ்க்கையில் திணிக்கவும் முற்படக்கூடாது. கண்ணாடி பாத்திரத்தை கொடுப்பவர் வாங்குபவர் இருவருமே ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம். இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உடைந்த பாத்திரமாய் எதிர்காலமே சிதறி விடும். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.
-
வளமோடு காப்பது பெற்றோரின் கடமை.
இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் திருமணம் பற்றி பல கனவுகள் இருக்கும். அதற்கு நேர் மாறாக வாழ்க்கை அமையுமானால் அந்தத் திருமணம் அவர்களின் எதிர்காலம் வரை புரட்டிப் போட்டு விடுகிறது. இக்காலத்து இளைஞர்கள் திருமண விஷயத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தை மீறி நடக்கும் திருமணத்தை வாழ்க்கையின் மிகப் பெரிய தோல்வியாகவே கருதுகிறார்கள்.
எதையும் தாங்கும் இதயம் இந்த திருமண விஷயத்தில் அனைவருக்கும் தேவைப்படும்.வாழ்க்கையை இனிதாக துவங்க வேண்டிய காலத்தில் மனதுக்குப் பிடிக்காத திருமணங்கள் வாழ்க்கையே முடித்துக் கொள்ள காரணமாகி விடுகிறது. மனம் விரும்பாத திருமணம் மனி தர்களுக்கு பாரமாகி விடும்.
-
என்ன தான் பெற்றோருக்கு தங்கள் மகன்-மகள் வாழ்க்கையில் உரிமையிருந்தாலும், திருமண விஷயத்தில் அவர்களின் கருத்துக்கு மாறாக நடக்க முயற்சிப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் செய்யும் செயல் நியாயமானது என்றால் அதை பேசி தெளிவாக புரிய வையுங்கள். அதன் பிறகு அவர்களுடைய முழுமையான சம்மதத்தை பெற்ற பின் மேற்கொண்டு கல்யாண வேலைகளில் ஈடுபடுங்கள்.
-
உங்களுடைய பெற்றோர் என்ற உரிமையைச் சொல்லி அவர்கள் உயிரைப் பறித்து விடாதீர்கள். வாழ்க்கையின்எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்தக் கால இளைஞர்களுக்கு கிடையவே கிடையாது. அவர்கள் வாழும் கற்பனை உலகம் கண் முன்னே வரவேண்டும். மனதுக்கு படித்த ஜோடியுடன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
-
அது சாத்தியப் படாதபோது மனமுடைந்து போகிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. அதேநேரம் அதற்கு கற்பனைகளும் கனவுகளும் மட்டும் போதாது. நிஜ உலக யதார்த்தங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். அந்த மனப்பக்குவத்திற்கு அவர்களை கொண்டு வந்த பின் தான் திருமணம் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டும். கனவுகள் என்பது நிஜங்களோடு சிறிதும் ஒத்துப் போகாத ஒன்று.
-
அதீத கற்பனையோடு இணைந்தது.இதையெல்லாம் விட்டு அவர்களை வெளியே இழுத்து வருவது பெரிய விஷயம். வாழ்க்கை என்பது நிஜமானது.கற்பனை என்பது பொய்யானது. இதை முதலில் புரியவைக்க வேண்டும். அப்போது தான் நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது.
தவறில்லை. ஆனால் குடும்பச்சூழலையும் மனதில் கொள்ள வேண்டும். பெற்றோரின் நிலையையும் யோசிக்க வேண்டும். திருமணம் என்பதுவீட்டில் உள்ள எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஒருதலைப்பட்சமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
-
அது நியாயம் தான். ஆனால் திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கை பிரச்சினை. இதில்சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்பு மிக முக்கியம். அதனால் பிள்ளைகளின் கருத்துக்கு மாறாக பெற்றோர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.அது நல்ல பலனைத் தராது. சிலவீடுகளில் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டால் பெரிய பொறுப்பு முடிந்து விட்டது என்று பெற்றோர் நினைப்பார்கள்.
அதனால் அவசர அவசரமாக வரன் தேடி முடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். அத்தனை பரபரப்பிலும் தங்கள் மகளின் ஆலோசனை பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். திருமணம் என்பது சாபமா? இத்தனைக்கும் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் கலாட்டாவில்முடிகிறது. மற்ற திருமணங்களுக்கும் அதே நிலைமை என்றால் என்ன தான் செய்வது? திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
-
இந்த சிந்தனை துளியும் இல்லாமல் கட்டாய திருமண ஏற்பாடுகள் தொடரும்போது கடைசியில் அது கால விரயத்திலும், கண்ணீரிலும் தான் போய் முடியும். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் விரும்பிக் கேட்ட எதையும் பெற்றோர் மறுப்பதில்லை. இதே பெற்றோர் கூட, திருமண விஷயத்தில் நேருக்கு மாறாக நடந்து தங்கள் பிள்ளைகளின் மனதை சிதைத்து விடுகிறார்கள்.
திருமணம் என்பது மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம். ஒரு மனிதனின் வாழ்க்கையின் இரண்டாம் பாகம். இதில் நிதானமும், அறிவுத் தெளிவும், அனுபவமும் அவசியம். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை.அதை மீற நினைப்பது தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தவறு தான்.
திருமணம் செய்து கொள்பவர்கள் மேஜராக இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய திருமணம் சட்டப்படி செல்லும். எல்லாவிஷயத்திலும் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர், திருமண விஷயத்தில் மட்டும் ஏன் வில்லன்களாக உருவெடுக்கிறார்கள் என்பது மட்டும் இன்னமும் புரியாத புதிர். மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
-
வெளிநாடுகளில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதில்லை. திருமண விஷயத்தில் எந்த கட்டாயமும் இருப்பதில்லை. வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் அவல நிலையும் அங்கில்லை. நம் நாட்டில் கடைசிவரை பிள்ளைகளுக்கு பெற்றோரின்ஆலோசனையும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தைமுழுக்க முழுக்க அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, எது நடந்தாலும் கவலையில்லாமல் பெற்றோரால்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதற்காக அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக அவர்களுடைய வாழ்க்கையில் திணிக்கவும் முற்படக்கூடாது. கண்ணாடி பாத்திரத்தை கொடுப்பவர் வாங்குபவர் இருவருமே ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம். இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உடைந்த பாத்திரமாய் எதிர்காலமே சிதறி விடும். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.
-
வளமோடு காப்பது பெற்றோரின் கடமை.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை!
பிள்ளைகளின் எதிர்காலத்தைமட்டுமே கருத்தில் கொண்ட பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை என்ற இரண்டாம் அத்தியாயத்திலும் அன்புடன் கூடிய அக்கறைப் பார்வையை பதிக்க வேண்டும்.அப்படி பதித்தால் வாரிசுகள் மூலம் அவர்கள் பெற வேண்டிய மகிழ்ச்சியையும் போதும்போதும் என்கிற அளவுக்கு பெற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
-
மாலைமலர்
-
மாலைமலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» விரும்பிய இணையத்தளத்தை விரும்பிய நிறத்தில் பார்க்கவேண்டுமா..?
» மன நிறைவோடு விட்டுக் கொடுங்கள்..!
» காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» விட்டுக் கொடுக்கவும்.....
» மன நிறைவோடு விட்டுக் கொடுங்கள்..!
» காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» விட்டுக் கொடுக்கவும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|