புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_lcapஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_voting_barஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:49 am

First topic message reminder :


அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 Images?q=tbn:ANd9GcQyIWxKFeE6QSI2xXVhgJYBo8c-Z86fDi1ZDbjd5IUALrNZNYkGeA
இது என்னுடைய 12,000மாவது பதிவு நண்பர்களே ! நான் இந்த கட்டுரையை சர்வோதயா நாள் அன்றே எழுத வேண்டும் என்று இருந்தேன். சர்வோதயா நாள் என்றால் என்ன வென்று தெரியாதவர்களும் இங்கு இருக்கலாம். அவர்களுக்காக நான் இதை விளக்க கடமைப்படிட்டிருக்கிறேன். அதாவது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் மரணத்தை தழுவிய அந்த துக்கமான நாளை தான் நாம் சர்வோதயா நாள் என்று அழைக்கிறோம். அது ஜனவரி 30ம் தேதி.

முன்பெல்லாம் நான் சிறுமியாக இருந்த போது ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு, எங்கள் பள்ளி இல் ஒரு மணி அடிக்கும் நாங்க எல்லோரும் எழுந்து அந்த தேசத்தந்தைக்கு மௌன அஞ்சலி செலுத்துவோம். மறுபடி 11.02 க்கு ஒரு மணி அடிக்கும் அப்போது எங்கள் மௌனத்தை கலைப்போம். பள்ளிகளில் மட்டும் அல்ல அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவ மனைகளிலும் இந்த மௌன அஞ்சலி யை எல்லோரும் பின் பற்றினார்கள். 1970 இல் என் அம்மா என் கடைசி தம்பிகளை ஜனவரி 30ம் தேதி காலை 7 மணிக்கு ஒரு ஆண் குழந்தை அடுத்து 7.20 மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று பெற்றிருந்தார்கள்.ஆம் எங்க அம்மாக்கு இரட்டை பிள்ளைகள் பிறந்தார்கள்.புன்னகை அன்று 11 மணி க்கு மணியடித்ததும், அங்கிருந்த செவிலி எங்க அம்மாவையும் மணி அடித்ததும் எழுந்து நிற்க சொன்னார்களாம். "காந்தி எவ்வளவோ கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினார் ; அதற்கு முன் உன்னுடைய பிரசவித்த வலி ரொம்ப சின்னது, 2 நிமிஷம் நிற்பதால் உன் உடம்புக்கு ஒன்றும் ஆகாது எழுந்திரு" என்றளாம். அம்மா சொல்வார். {அது போல இப்ப யாரும் சொல்வாளா தெரியலை சோகம் } அப்படி இருந்த அந்த நல்ல வழக்கம் எப்ப எப்படி நின்று போனது என்று தெரியலை. சோகம்

எனக்கு நல்லா நினைவில் இருக்கு , எங்க கிருஷ்ணா 7 வது வரை இந்தியாவில் தான் படித்தான் , அது வரை அந்த பழக்கம் இருந்தது. நான் அவனை எப்போதும் அகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 அன்று கண்டிப்பாக கொடியேற்றும் விழாவுக்கு அனுப்பிவிடுவேன். நான் பள்ளி சென்ற காலத்தில் கூட எங்க அம்மா எங்கள் அனைவரையும் ( நங்கள் 5 பேர் பிள்ளைகள்) அனுப்பிவிடுவார்கள். எனக்கும் அதே பழக்கம். ஆட்டோ டிரைவர் லீவு கேட்டால் கூட நான் அனுமதிக்க மாட்டேன். காத்திருந்து கிருஷ்ணாவை அழைத்துவர செய்வேன்.புன்னகை அதன் பிறகு நாங்கள் சௌதி சென்று விட்டோம். அங்கும் இந்தியன் எம்பசி ஸ்கூல் இல் இந்த வழக்கம் இருந்தது. நாங்கள் மீண்டும் கிருஷ்ணா 12 வது முடித்ததும் இந்தியா வந்தோம். முதல் வருடம் அவன் B .E . சென்று கொண்டிருந்தான், அந்த வருடம் ஜனவரி 30 அன்று எங்க வீட்டின் அருகிலேயே 2 பள்ளிகளிருந்ததால், கண்டிப்பாக அவர்கள் 11 மணிக்கு ஒரு ஸ்பெஷல் மணி அடிப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ........சோகம் இல்லை சரி என்று நான் 2 நிமிடம் மௌனமாக அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு எங்கள் வீடுகளை 'மெஇண்டென்' செய்யும் மாமி இடம் இது பற்றி விசாரித்தேன். மாமி சிரிக்காத குறைதான் .....சோகம் " என்ன சுமதி எந்த உலகத்தில் இருக்க?, அதெல்லாம் இப்ப யார் செய்யரா?" என்றாளே பார்க்கணும். எனக்கு ரொம்ப வருத்தமாக போச்சு. சர்வோதயா நாள் என்றால் என்ன என்று கூட இந்த காலத்து பசங்களுக்கு தெரியாது என்கிறாள். சாயங்காலம் கிருஷ் வந்ததும் அவனும் சொல்கிறான், " அம்மா சௌதி லையே நாங்க ப்ரே பண்ணுவோம் இங்க ஒன்னும் இல்லமா, கேட்டா பசங்க சிரிக்கறாங்க" என்கிறான். நானும் என் அனுபவத்தை சொன்னேன். எங்கள் இருவருக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அன்று. பிறகு யார் யாரிடமோ கேட்டும் எப்ப அந்த வழக்கம் நின்று போனது என்று தெரியலை. சோகம்

எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு நம் தேச தந்தை மற்றும் தியாகிகளைப்பற்றி சொல்லித்தரா? எதற்குமே நேரம் இல்லாமல் அலைகிறார்களே..... எதற்கு? பிள்ளைகளுக்கு ஆகஸ்ட் 15 மட்டும் ஜனவரி 26 பள்ளி எதற்கு விடுமுறை என்று கூட தெரிவதில்லை.
சுதந்திர தினம் எது குடியரசு தினம் எது என்று கூட தெரியாது. அன்று பள்ளி விடுமுறை, டிவி பார்க்கலாம். அல்லது 4 குத்தாட்டம் ( அது கூட தேசிய பாடல்கள் அல்ல ) பழகிவிட்டு மேடையில் ஆடிட்டு வரலாம் என்று மட்டுமே தெரிகிறது.

ஒருநாள் சன் டிவி இல் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் பார்த்தேன் ; சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அது. அதன் அமைப்பாளர் ஒரு குழந்தை யை கேட்கிறார் 500 ருபாய் தாளில் , கண்ணாடி போட்டிருப்பரே அவர் பெயர் என்ன ? என்று, அதற்கு அந்த குழந்தை சொல்கிறது அது "பவர் ஸ்டார்' என்று. அதைக்கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். ஒருவருக்கு கூட ஒரு குற்ற உணர்வு இல்லவே இல்லை எனக்கு அவர்களை அப்படியே சுடனும் போல இருந்தது. என்னால் முடிந்தது சேனல் ஐ மாற்றுவது தான். என்ன ஒரு பொறுப்பு அற்ற ஜனங்கள் . கண்டிப்பாக அது பெற்றோர்கள் சொல்லித்தந்தது தான். அந்த குழந்தை தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாஇல்லை. ஏதோ ஒரு பொறம்போக்கு (மன்னிக்கணும்) பேரை சொல்கிறதே என்று எனக்கு ரொம்ப வெறுப்பாக இருந்தது.

நீங்கள் சமீப கால தினசரிகளில் படித்திருக்கலாம்;

ஒரு பள்ளி இன் +1 மாணவர்கள் 6ம் வகுப்பு மாணவர்களை அடித்து , குடிப்பதற்காக பணம் கேட்டார்களாம்.அவர்கள் அப்படி கேடட போதே குடித்திருந்தார்களாம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இன்னும் ஒன்று. + 1 மாணவர்கள் இருவர் அங்கிருந்த பியூன் னுடன் சேர்ந்து பள்ளி இன் பெஞ்சை விற்று விட்டு குடித்தார்களாம்.

மற்றும் ஒரு செய்தி 4 வது படிக்கும் மாணவி இடம் + 1 மாணவர் சில்மிஷம் என்ன கொடுமை சார் இது

இது போல பல சொல்லலாம். இவர்களின் பெற்றோர் இவர்களை கவனிப்பதை விடுத்து என்ன செய்கிறார்கள் என்பது மிலியன் டாலர் கேள்வி. கோபம்

நம் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் 2020 இல் நம் நாடு வல்லரசாகும் என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார், அந்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை இல் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்று தான் சொன்னார். இன்றைய பெற்றோர்களுக்கு அந்த பொறுப்பு இருப்பதாக வே தெரியலை சோகம் மேலே சொன்ன இளைஞர்கள் 2020 இல் என்ன மாதிரி இருப்பார்கள் ? இவர்களை நம்பியா நம நாடு இருக்கு ? பயம் பயம் பயம்

இது போல பொறுப்பு அற்ற பிள்ளைகள் ஒரு புறம்; வெறும் குத்தாட்டத்திலும், தமாஷ் என்கிற பெயரில் இதைப்போல பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தங்கள் குழந்தைகளை தயார் படுத்தும் பொறுப்பு இல்லா பெற்றோர் ஒருபுறம் . (எல்லா பெற்றோர்களையும் நான் குறை சொல்லவில்லை. இவ்வாறு செய்பவர்களை மட்டும் தான் சொல்கிறேன்.) நம நாட்டின் எதிர் காலம் ??????????????????????????

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு அவர்கள் பார்த்து பின்பற்ற நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் , எனவே நாம் நம் தலைமுறை தலைவர்களைப்பற்றி தான் சொல்லணும். அந்த காலத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தை பெற்று த்தந்தர்கள் என்று சொல்லணும்.

வெளி நாடுகளில் "பெட் டைம் ஸ்டோரி' என்கிறது ரொம்ப பிரபலம். அது போல நாமும் பழகனும். சின்ன சின்ன கதைகளாக சொல்லணும். சும்மா நேரம் இல்லை என்று சொலக்கூடாது. நாம் கதை சொல்ல எவ்வளவு பேர் இருக்கா? காந்தி, நேரு, வல்லபபாய் பட்டேல், திலகர், திருப்பூர் குமரன், வாஞ்சி நாதன் என பட்டியல் நீளுமே !

மேலும் நாங்க சின்ன வர்களாக இருந்த போது எங்க விட்டுக்கு 'சர்வோதயா மாமி' என்று ஒருவர் வருவார். வெகு வருஷங்கள் நாங்க அவர் எங்க உறவினர் என்றே நினைத்திருந்தோம் புன்னகை காலை ஒரு பத்துமணி வாக்கில் சனிக்கிழமைகளில் வருவார் . பொதுவாக மாதம் இருமுறை வருவார். வரும் போது கைகுத்தல் அவல், ஊதுபத்தி, ரொம்ப பளப்பு இல்லாத சோப்பு கட்டிகள், பனை வெல்லம் என்று பல பொருட்கள் கொண்டுவருவார். எங்கள் வீட்டிலேயே அம்மா மற்றும் பாட்டி யுடன் பேசி விட்டு கொண்டு வந்த பொருட்களை தருவார். சில சமயம் எங்களுடன் சாப்பிடுவார் அல்லது அவர் எடுத்து வந்துள்ள டப்பாவிலிருந்து சாப்பிடுவார். பிறகு எங்களுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வார். நாங்கள் அதற்காகவே காத்திருப்போம். கதைகள் முடிந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு எடுப்பார் பிறகு சென்றுவிடுவார். காபி டீ குடிக்க மாட்டார் . மோர் தான் குடிப்பார். ஆனால் இப்போது அது போல வருகிறார்களா தெரியலை.
அதற்கு பதில் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வோதயா டே இன் போது கடைகளில் தள்ளுபடி விலை இல் பொருட்கள் தருகிறார்கள் அல்லது 'மேளா' ஏற்ப்பாடு செய்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதைப்போன்ற 'காதி' பொருட்களை எவ்வளவு பேர் வாங்கறா, அதன் பலன்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரா தெரியலை.

இதையெல்லாம் நான் இங்கு கொட்டுவதன் நோக்கமே, குறைந்த பக்ஷம் இதைப்படிக்கும் உறவுகளாவது, தங்கள் சந்ததி இனருக்கு நம் முன் தலை முறை வாழ் பெரியவர்கள் மற்றும் தலைவர்களின் அருமை பெருமைகளை சொல்லி வளருங்கோ, இந்த அபத்த டிவி நிகழ்ச்சிகளை பார்க்காமலும் அதில் பங்கு பெறாமலும் இருங்கோ என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளத்தான் புன்னகை

டிவி காராளை கேட்டால் மக்கள் பார்ப்பதால் தான் நாங்கள் இப்படி நிகழ்ச்சிகள் தருகிறோம் என்பார்கள். நாம் பார்க்காமல் தவிர்த்தாலே சில நிகழ்ச்சிகள் நின்றுவிடும். அதற்கு உதவுங்கோ. :வணக்கம்: அன்பு மலர்

தாய் மொழிப்பற்று மற்றும் தேசப்பற்று ரொம்ப முக்கியம் நமக்கு. நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கா அவர்களுக்கு பொறுப்பு இரண்டு மடங்குஆகிறது. காந்தி இன் கொள்கைகளை பசங்களுக்கு சொல்லுங்கோ , ரொம்ப சிம்பிள் தான் புன்னகை முதலில் 'மன்னிப்பு' கேட்க (சாரி சொல்ல ) பழக்கணும். அடுத்தது 'நன்றி' சொல்ல பழக்கனும். முளைத்தது முதலே எல்லாத்துக்கும் 'ஈகோ' தப்பு செய்தால் 'மன்னிப்பு' கேட்டுத்தான் ஆகணும் என்று சொல்லி பழக்கனும். அடுத்தது பெரியவாளை மதிக்க கத்து தரனும்.

"ஒழுக்கம் தான் அதன் அடிப்படையே. "ஸெல்ப் டிசிப்ளின்" சுய ஒழுக்கம் அது தான் இப்போ ரொம்ப ரொம்ப தேவை புன்னகை

சர்வோதயம் என்பது மகாத்மா காந்தி கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதயச் சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.

1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.

காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.



சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், "வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.

இவையெல்லாம் நாம் செய்தித்தாள்களில் காந்தி ஜெயந்தி அன்று அல்லது சர்வோதய நாள் அன்று படிப்போம் அவ்வளவுதான்.
ஆனால் இனி கொஞ்சம் பின்பற்ற பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:23 pm

Aathira wrote:பனிரெண்டாயிரம் பதிவுகளுக்குச் சமமாக இந்த ஒரு பதிவைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் கிருஷ். இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.

நானும் மெளன அஞ்சலி செலுத்தியுள்ளேன்.

நன்றி ஆதிரா, உங்கள் அறிவுரைப்படி நடக்க முயலுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:24 pm

ச. சந்திரசேகரன் wrote:கடந்த 30/01/2013 அன்று கூட நான் மௌன அஞ்சலி எங்கள் அலுவலகத்தில் அறிவிக்காததைக் குறித்து வருத்தப்பட்டேன்.

மகாத்மாவின் அவமதிப்பு இனி தொடராது பார்த்துக் கொள்வோம்.

நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்.

ஜெய் ஹிந்த்.

நல்லது சேகரன் புன்னகை கண்டிப்பாக நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் புன்னகை ஜெய் ஹிந்த்! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:26 pm

சதாசிவம் wrote:பயனுள்ள செய்தி பகிர்தமைக்கு மிக்க நன்றி...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் வருத்தத்தை தான் தருகிறது. இங்கு உள்ள பாரம்பரியம், மொழிவளம், கட்டடக்கலை, இசைநயம் இன்னும் பலவன பற்றி நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.. flying கிஸ் சொல்லிகொடுத்து குழந்தையை வளர்த்தால் நாடு எங்கே வளப்படும். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரொம்ப சரி ஐயா, பெற்றோராகிய நாம் தான் குழந்தைகளுக்கு நல்லது கேட்டது சொல்லித்தரனும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:27 pm

கே. பாலா wrote:கிருஷ்ணம்மா ..உங்கள் இந்த பதிவில் .."அம்மாவின்" அக்கறை தெரிகிறது...
மிகச்சிறந்த பதிவு ..பாராட்டுக்கள்

நன்றி பாலாபுன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 22, 2013 5:50 pm

நல்லொழுக்கம், நற்பண்புகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசான்கள் பெற்றோர். அவ்வாறு கற்றுத்தராமல் டீவி சீரியல்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் குழந்தைகள் தான் இன்று நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு காரணகர்த்தவாகத் திகழ்கிறார்கள் என்பது என் கணிப்பு. முகநூல் பக்கங்களில் காந்தி, நேரு, நேதாஜி போன்றவர்களை மிக அசிங்கமாக விமர்சிக்கும் ஒரு பன்றிக் கூட்டமே உள்ளது. அவற்றைப் படித்து மனம் வெந்து போயிருந்த எனக்கு தங்களின் கட்டுரை அருமருந்தாக அமைந்தது அக்கா.

முதலில் ஒரு குடிமகனுக்கு நாட்டுப்பற்று வேண்டும், அடுத்து அந்த நாட்டின் தலைவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு வேண்டும் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஆனால் சர்வோதயா நாள் என்பது எனக்கும் இதுநாள்வரை தெரியாமல் இருந்துவிட்டேன் என்று வருந்துகிறேன்! (உங்களுடன் படித்த ஜாகிதாபானு அக்காவிற்கே தெரியவில்லையாம், பிறகு எப்படி எனக்கு தெரியும்! சோகம் )

இப்பொழுது தொலைக்காட்சி முதல் அனைத்து ஊடகங்களுமே பணத்திற்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்ப, எழுத தயாராக உள்ளார்கள். இவர்களிடம் நாட்டுப் பற்றை எதிர்பார்க்கும் நம்மைப் போன்றவர்கள் அவர்கள் பார்வையில் பைத்தியக்காரர்களாகத்தான் தெரிவோம்!

கட்டுரை அருமை அக்கா!




அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 6:49 pm

சிவா wrote:நல்லொழுக்கம், நற்பண்புகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசான்கள் பெற்றோர். அவ்வாறு கற்றுத்தராமல் டீவி சீரியல்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் குழந்தைகள் தான் இன்று நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு காரணகர்த்தவாகத் திகழ்கிறார்கள் என்பது என் கணிப்பு. முகநூல் பக்கங்களில் காந்தி, நேரு, நேதாஜி போன்றவர்களை மிக அசிங்கமாக விமர்சிக்கும் ஒரு பன்றிக் கூட்டமே உள்ளது. அவற்றைப் படித்து மனம் வெந்து போயிருந்த எனக்கு தங்களின் கட்டுரை அருமருந்தாக அமைந்தது அக்கா.

முதலில் ஒரு குடிமகனுக்கு நாட்டுப்பற்று வேண்டும், அடுத்து அந்த நாட்டின் தலைவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு வேண்டும் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஆனால் சர்வோதயா நாள் என்பது எனக்கும் இதுநாள்வரை தெரியாமல் இருந்துவிட்டேன் என்று வருந்துகிறேன்! (உங்களுடன் படித்த ஜாகிதாபானு அக்காவிற்கே தெரியவில்லையாம், பிறகு எப்படி எனக்கு தெரியும்! சோகம் )

இப்பொழுது தொலைக்காட்சி முதல் அனைத்து ஊடகங்களுமே பணத்திற்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்ப, எழுத தயாராக உள்ளார்கள். இவர்களிடம் நாட்டுப் பற்றை எதிர்பார்க்கும் நம்மைப் போன்றவர்கள் அவர்கள் பார்வையில் பைத்தியக்காரர்களாகத்தான் தெரிவோம்!

கட்டுரை அருமை அக்கா!

நிஜமாகவே நாம் பைத்தியக்காரா தான் சிவா சோகம் ரொம்ப நாட்களாக என் மனதை உறுத்தி வந்த விஷயம் இது சிவா ; யாரிடமாவது பகிர்ந்தால் தேவலை போல இருந்தது. அதுதான் இங்கே போட்டேன்புன்னகை உங்களின் தெம்பான பின்னுட்டத்துக்குநன்றி நன்றி அன்பு மலர்

விருப்ப பொத்தானை பாவித்தேன் சிவா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 22, 2013 7:37 pm

இங்க சிவா சிவான்னு சொல்லுரீங்களே அவரு யாரு? எங்க மாமா அங்களும் அந்த போருல தான் இருக்காரு. ஒருவேள அவருதான் இவரோ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 8:48 am

மாணிக்கம் நடேசன் wrote:இங்க சிவா சிவான்னு சொல்லுரீங்களே அவரு யாரு? எங்க மாமா அங்களும் அந்த போருல தான் இருக்காரு. ஒருவேள அவருதான் இவரோ?

இந்த சிவா ரொம்ப நல்லவரு! உங்க மாமா மாதிரி இல்லை!



அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 23, 2013 7:32 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இங்க சிவா சிவான்னு சொல்லுரீங்களே அவரு யாரு? எங்க மாமா அங்களும் அந்த போருல தான் இருக்காரு. ஒருவேள அவருதான் இவரோ?

இந்த சிவா ரொம்ப நல்லவரு! உங்க மாமா மாதிரி இல்லை!

புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:06 am

இன்று ஜனவரி 30 - சர்வோதயா தினம் !

எனவே இதை மீண்டும் மேலே கொண்டு வருகிறேன் நண்பர்களே ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக