ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை

Go down

ஈகரை நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை

Post by Powenraj Sun Feb 10, 2013 6:31 pm

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவுடன்இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்று, காஷ்மீர், அல்லாடிக் கொண்டிருந்தது. காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த, சுதேசிமன்னர் மகாராஜா ஹரிசிங்,"பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றுங்கள்; காஷ்மீர் இந்தியாவுடன் தான் இணைய விரும்புகிறது' என்று, வேண்டுகோள் விடுத்தார்.
-
அப்போதே உறுதியான முடிவெடுத்து, காஷ்மீர் பகுதியில் ஊடுருவி, உட்கார்ந்து கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளை, நம் ராணுவம் அடித்து விரட்டியிருந்தால், காஷ்மீர் பிரச்னை அப்போதே ஓரிரு நாட்களில் அல்லது அதிகபட்சம் ஒரு வாரத்தில் தீர்ந்திருக்கும்; அதன் பிறகு, பாகிஸ்தானும் பணிவுடன் நடந்து கொண்டிருக்கும்.-
இப்போது, எத்தனை அணைகள் :
வெள்ளைப் புறாவைப் பறக்க விட்டபடி, சமாதானத் தூதுவனாக, தன்னை உலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்ட ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையை, ஐக்கிய நாடுகள்சபைக்கு கொண்டு சென்றதால் தான், 65 ஆண்டுகள் கடந்தும், காஷ்மீர் பிரச்னை, துவங்கிய நிலையிலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறது; இது வடக்கே. காவிரி பிரச்னையும் இதே போன்று, ஆண்டுகள், 30 கடந்தும், தீர்க்கப்படாமல், தூங்கிக் கொண்டு இருக்கிறது; இது தெற்கே.
-
எப்போது காவிரி நதிநீர் குறித்து, தமிழகமும், கர்நாடகமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதோ, அப்போதே, "உள்ளது உள்ளபடி' என்ற ஒரு ஷரத்தை தமிழகம் பிடிவாதமாக இருந்து, ஒப்பந்தத்தில் கோர்த்திருக்க வேண்டும். அப்படி கோர்க்காமல் விட்டதன் பயனை, தமிழகம் தொடர்ந்து அனுபவித்து வருகிறது. காவிரி நதிநீர் ஒப்பந்தம் உருவான போது, கர்நாடகாவில் எத்தனை அணைகள் இருந்தன; இப்போது, எத்தனை அணைகள் உள்ளன; இடைப்பட்ட காலத்தில், எத்தனை அணைகள் புதிதாகக் கட்டப்பட்டன? இப்படிப் புதிதாகக் கட்டப்பட்ட அணைகளில், கர்நாடகம் தேக்கி வைக்கும் நீர், அத்தனையும், தமிழகத்திற்குச் சேர வேண்டியவை.
-
"அவுங்க ஊருல தானே கட்டுறாங்க. நமக்கென்ன?' என்று, தமிழகத்தை ஆண்ட மகானுபவர்கள் அமைதியாக இருந்ததன் விளைவு, இன்று, காவிரியில் உற்பத்தியாகிப் பெருகி வழியும் தண்ணீர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணா ராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளையும் நிரப்பி, இதற்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க முடியாது என்ற நிலை வரும் போது தான், காவிரி நீரை, கர்நாடகம், தமிழகம் நோக்கித் திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. காவிரி நீரைப் பொறுத்தவரை, தமிழகத்திலுள்ள நாம் தான் உரிமை, உரிமை என்று முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
-
அது, காங்கிரஸ் கட்சியானாலும் சரி, பா.ஜ., ஆனாலும் சரி, மதச்சார்பற்றஜனதா தளமோ, மதச்சார்புள்ள ஜனதா தளமோ, எந்த கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்து இருந்தாலும், காவிரி நீர் விவகாரத்தில்,"பிச்சையிடுவது' என்ற, மனோபாவத்தில் தான் நடந்து கொள்கின்றன.நல்ல வேளையாக கர்நாடகத்தில், கம்யூனிஸ்ட்கள்,"லைம்லைட்'டில் இல்லை; இருந்தால் அவர்களும் இப்படித்தான் நடந்து கொள்வரோ என்னமோ? ஆனால், அதற்கு பதிலாக முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி, கேரள மக்களிடையே, "உயிர்' பயத்தைஉருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம், மத்திய அரசோ, இவைகளுக்கும், தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; அவை, மாநில அரசுகளின் தலைவலிகள் என்ற கோணத்தில் தான் செயல்படுகிறது.
-
உச்சநீதி மன்ற உத்தரவை அடுத்து, கூட்டப்பட்ட காவிரி நீர் ஆணையக்கூட்டத்தில், ஆணையத்தின் தலைவரும், நாட்டின் பிரதமருமான மன்மோகன் சிங், 20 நாட்களுக்கு, தினசரி, 9,000கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி, கர்நாடகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
-
"தமிழகம் கேட்கும் அளவான இரண்டு, டி.எம்.சி., தண்ணீரைகர்நாடகம் உடனடியாக திறந்து விடவேண்டும்' என்று நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளவர்,"உத்தரவு' அல்லவா பிறப்பித்திருக்க வேண்டும்? இவர் கோரிக்கை வைக்கிறார்; வேண்டுகோள் விடுக்கிறார். அதுவும், உச்சநீதி மன்றம் காவிரி நதி நீர் ஆணையத் தலைவராக, பிரதமர் நடந்து கொள்ளவேண்டும் என்று, ஆலோசனை வழங்கிய பிறகு தான். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட, "நடுவர் மன்றம்' ஆண்டுக் கணக்கில் கூடி விவாதித்து, நிலைமைகளை ஆராய்ந்து,"கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு, 215 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
-
இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, ஒரு ஆண்டு கூட, 215 டி.எம்.சி., நீரை, கர்நாடகம் வழங்கியதில்லை. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு மவுனமாக உள்ளது. தமிழகத்தை ஆள வருபவர்கள், அந்த நடுவர் மன்ற உத்தரவை, அரசிதழில் வெளியிடுமாறு இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருப்பர். மத்தியில் ஆளும் அரசுகள், அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
-
இப்போது, உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, காவிரி நதி நீர் ஆணையத் தலைவரின் (பிரதமரின்) வேண்டுகோளை உதாசீனப்படுத்த முடியாமல், கர்நாடக முதல்வர், 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட்டார்.
-
அது, எங்கே உள்ளது? : அவ்வளவு தான், ஷட்டரை திறந்து விட்ட, ஜெகதீஷ் ஷெட்டரை, "ராஜினாமா' செய்ய வலியுறுத்தி, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்கள்சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து, போராடினர். கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பக்கபலமாக உள்ளனர். நடக்கிற நிகழ்வுகளையும், மத்திய அரசு காட்டும் மவுனத்தையும், கர்நாடக அரசின் பிடிவாதத்தையும் பார்க்கும் போது, இந்திய ஒருமைப்பாடு, தேச ஒற்றுமை என்றெல்லாம் சொல்கின்றனரே, அது, எங்கே உள்ளது? என்று, கேட்கத் தோன்றுகிறது.மன்மோகன் அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, காஷ்மீர்பிரச்னையை ஐ.நா., சபைக்கு எடுத்து சென்றது மாதிரி, காவிரி நீர் பிரச்னையையும், ஐ.நா., சபைக்கு எடுத்துச் சென்று விடுவரோ என்று அச்சமாக உள்ளது.
-
எஸ். ராமசுப்ரமணியன் - எழுத்தாளர்-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum