புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
19 Posts - 3%
prajai
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 6:31 pm

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவுடன்இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்று, காஷ்மீர், அல்லாடிக் கொண்டிருந்தது. காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த, சுதேசிமன்னர் மகாராஜா ஹரிசிங்,"பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றுங்கள்; காஷ்மீர் இந்தியாவுடன் தான் இணைய விரும்புகிறது' என்று, வேண்டுகோள் விடுத்தார்.
-
அப்போதே உறுதியான முடிவெடுத்து, காஷ்மீர் பகுதியில் ஊடுருவி, உட்கார்ந்து கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளை, நம் ராணுவம் அடித்து விரட்டியிருந்தால், காஷ்மீர் பிரச்னை அப்போதே ஓரிரு நாட்களில் அல்லது அதிகபட்சம் ஒரு வாரத்தில் தீர்ந்திருக்கும்; அதன் பிறகு, பாகிஸ்தானும் பணிவுடன் நடந்து கொண்டிருக்கும்.-
இப்போது, எத்தனை அணைகள் :
வெள்ளைப் புறாவைப் பறக்க விட்டபடி, சமாதானத் தூதுவனாக, தன்னை உலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்ட ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையை, ஐக்கிய நாடுகள்சபைக்கு கொண்டு சென்றதால் தான், 65 ஆண்டுகள் கடந்தும், காஷ்மீர் பிரச்னை, துவங்கிய நிலையிலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறது; இது வடக்கே. காவிரி பிரச்னையும் இதே போன்று, ஆண்டுகள், 30 கடந்தும், தீர்க்கப்படாமல், தூங்கிக் கொண்டு இருக்கிறது; இது தெற்கே.
-
எப்போது காவிரி நதிநீர் குறித்து, தமிழகமும், கர்நாடகமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதோ, அப்போதே, "உள்ளது உள்ளபடி' என்ற ஒரு ஷரத்தை தமிழகம் பிடிவாதமாக இருந்து, ஒப்பந்தத்தில் கோர்த்திருக்க வேண்டும். அப்படி கோர்க்காமல் விட்டதன் பயனை, தமிழகம் தொடர்ந்து அனுபவித்து வருகிறது. காவிரி நதிநீர் ஒப்பந்தம் உருவான போது, கர்நாடகாவில் எத்தனை அணைகள் இருந்தன; இப்போது, எத்தனை அணைகள் உள்ளன; இடைப்பட்ட காலத்தில், எத்தனை அணைகள் புதிதாகக் கட்டப்பட்டன? இப்படிப் புதிதாகக் கட்டப்பட்ட அணைகளில், கர்நாடகம் தேக்கி வைக்கும் நீர், அத்தனையும், தமிழகத்திற்குச் சேர வேண்டியவை.
-
"அவுங்க ஊருல தானே கட்டுறாங்க. நமக்கென்ன?' என்று, தமிழகத்தை ஆண்ட மகானுபவர்கள் அமைதியாக இருந்ததன் விளைவு, இன்று, காவிரியில் உற்பத்தியாகிப் பெருகி வழியும் தண்ணீர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணா ராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளையும் நிரப்பி, இதற்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க முடியாது என்ற நிலை வரும் போது தான், காவிரி நீரை, கர்நாடகம், தமிழகம் நோக்கித் திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. காவிரி நீரைப் பொறுத்தவரை, தமிழகத்திலுள்ள நாம் தான் உரிமை, உரிமை என்று முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
-
அது, காங்கிரஸ் கட்சியானாலும் சரி, பா.ஜ., ஆனாலும் சரி, மதச்சார்பற்றஜனதா தளமோ, மதச்சார்புள்ள ஜனதா தளமோ, எந்த கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்து இருந்தாலும், காவிரி நீர் விவகாரத்தில்,"பிச்சையிடுவது' என்ற, மனோபாவத்தில் தான் நடந்து கொள்கின்றன.நல்ல வேளையாக கர்நாடகத்தில், கம்யூனிஸ்ட்கள்,"லைம்லைட்'டில் இல்லை; இருந்தால் அவர்களும் இப்படித்தான் நடந்து கொள்வரோ என்னமோ? ஆனால், அதற்கு பதிலாக முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி, கேரள மக்களிடையே, "உயிர்' பயத்தைஉருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம், மத்திய அரசோ, இவைகளுக்கும், தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; அவை, மாநில அரசுகளின் தலைவலிகள் என்ற கோணத்தில் தான் செயல்படுகிறது.
-
உச்சநீதி மன்ற உத்தரவை அடுத்து, கூட்டப்பட்ட காவிரி நீர் ஆணையக்கூட்டத்தில், ஆணையத்தின் தலைவரும், நாட்டின் பிரதமருமான மன்மோகன் சிங், 20 நாட்களுக்கு, தினசரி, 9,000கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி, கர்நாடகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
-
"தமிழகம் கேட்கும் அளவான இரண்டு, டி.எம்.சி., தண்ணீரைகர்நாடகம் உடனடியாக திறந்து விடவேண்டும்' என்று நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளவர்,"உத்தரவு' அல்லவா பிறப்பித்திருக்க வேண்டும்? இவர் கோரிக்கை வைக்கிறார்; வேண்டுகோள் விடுக்கிறார். அதுவும், உச்சநீதி மன்றம் காவிரி நதி நீர் ஆணையத் தலைவராக, பிரதமர் நடந்து கொள்ளவேண்டும் என்று, ஆலோசனை வழங்கிய பிறகு தான். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட, "நடுவர் மன்றம்' ஆண்டுக் கணக்கில் கூடி விவாதித்து, நிலைமைகளை ஆராய்ந்து,"கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு, 215 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
-
இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, ஒரு ஆண்டு கூட, 215 டி.எம்.சி., நீரை, கர்நாடகம் வழங்கியதில்லை. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு மவுனமாக உள்ளது. தமிழகத்தை ஆள வருபவர்கள், அந்த நடுவர் மன்ற உத்தரவை, அரசிதழில் வெளியிடுமாறு இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருப்பர். மத்தியில் ஆளும் அரசுகள், அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
-
இப்போது, உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, காவிரி நதி நீர் ஆணையத் தலைவரின் (பிரதமரின்) வேண்டுகோளை உதாசீனப்படுத்த முடியாமல், கர்நாடக முதல்வர், 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட்டார்.
-
அது, எங்கே உள்ளது? : அவ்வளவு தான், ஷட்டரை திறந்து விட்ட, ஜெகதீஷ் ஷெட்டரை, "ராஜினாமா' செய்ய வலியுறுத்தி, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்கள்சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து, போராடினர். கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பக்கபலமாக உள்ளனர். நடக்கிற நிகழ்வுகளையும், மத்திய அரசு காட்டும் மவுனத்தையும், கர்நாடக அரசின் பிடிவாதத்தையும் பார்க்கும் போது, இந்திய ஒருமைப்பாடு, தேச ஒற்றுமை என்றெல்லாம் சொல்கின்றனரே, அது, எங்கே உள்ளது? என்று, கேட்கத் தோன்றுகிறது.மன்மோகன் அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, காஷ்மீர்பிரச்னையை ஐ.நா., சபைக்கு எடுத்து சென்றது மாதிரி, காவிரி நீர் பிரச்னையையும், ஐ.நா., சபைக்கு எடுத்துச் சென்று விடுவரோ என்று அச்சமாக உள்ளது.
-
எஸ். ராமசுப்ரமணியன் - எழுத்தாளர்-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக