புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
49 Posts - 60%
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
44 Posts - 60%
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
2 Posts - 3%
Guna.D
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ் இயக்கத் தந்தை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 06, 2013 11:08 pm

தனித்தமிழ் இயக்கத் தந்தை - (டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)

உலகமொழிகளின் தாயாம் தமிழ், ஆரியர் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர்க் கி.மு.1500க்கு முன்னர் வடாது மனிபடு நெடுவரையிலிருந்து தெனாது உருகெழு குமரிக்கடல் வரையில் இந்நாட்டு மக்களின் ஒரே மொழியாய் வழங்கியது, ஆரியம் இந்நாடிற்கு வந்து தமிழுடன் கலந்த பின்னர் வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் தோன்றின.

வட இந்திய மொழிகளில் வடமொழிச்சார்பு மிகுதியாய் இருத்தலினால் வடமொழியில் கிளைமொழிகள் என்று கருதினாலும் அவைகளின் இலக்கண அமைப்புத் தமிழ்ச் சார்புடையதே. தென்னிந்திய மொழிகளாம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலியன வடமொழிக்கலப்பு மிகுதியாகப் பெற்றிராததனால் திராவிட மொழிகள் என்றேவ் அழைக்கப்படுகின்றன.

தொல்காப்பியக் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு வரை வடவேங்கடம் தென்முலரியிடைத் தமிழ்கூறும் நல்லுலகமாக விளங்கியது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை நற்றமிழ் மொழி தமிழகத்தில் தனியாட்சி புரிந்தது. பின்னர்க் களப்பிரர், பல்லவர் ஆட்சியால் தமிழகத்தில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. தமிழர்கள் தமிழைப் புறக்கணித்து வடமொழியை விரும்பிக் கற்று அதன் வளத்திற்கும் உயர்வுக்கும் உழைத்தனர். சமய வாழ்வுக்கும் கலை வாழ்வுக்கும் வடமொழி இன்றியமையாதது எனக்கருதினர். வடமொழிப் புலமையே உயர் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு என உளமார எண்ணினர். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதியும் பேசியும் மணிப்பிரவாள நடையொன்றைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டவுடன் ஆங்கிலமே எல்லாத்துறையிலும் ஆட்சி புரிந்தாலும் வடமொழியின் செல்வாக்கும் குறைந்துவிடவில்லை. இந்திய மொழிகள் எல்லாம் வடமொழியின் புதல்விகள் என்ற கொள்கை வலுப்பெறத் தொடங்கியது.
இந்நாட்டில் தம் சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவப் பெரியார்கள் இந்நாட்டின் மொழிகளையும் கற்றார்கள். கற்றபின்னர் தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்குள்ள ஏற்றத்தை எடுத்து மொழிந்தனர். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஒன்று எழுதித் தமிழின் தூய்மையை உலகறியச் செய்தார். ஆரியம் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார். திராவிட மொழிகள் ஆரியத்தின் சிதைவு மொழிகள் அல்ல என்று துணிந்து உரைத்தார். வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் என்று நிலைநாட்டினார்.
(தொடரும்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 11:16 pm

தமிழின் பெருமை பேசும் பதிவு மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 06, 2013 11:54 pm

ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 11:57 pm

அசுரன் wrote:ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

இயங்க முடிகிறதே




தனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Tதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Oதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Aதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Eதனித்தமிழ் இயக்கத் தந்தை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 07, 2013 9:25 pm

இச்சூழ்நிலையில்தான் மறைமலையடிகள் தமிழின் தூய்மை காக்கத் தோன்றினார். சாமி வேதாச்சலம் என்ற பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். பிற மொழி கலவாத தூய தமிழில் எழுதுவது தமிழரின் கடன் என அறிவுறுத்தினார்.

ஆரியத்திலும் ஆங்கிலத்திலும் அளப்பரும் புலமை பெற்றார். மும்மொழிப் புலமையினால் முத்தமிழின் ஏற்றம் கருதித் தனியொருவராக நின்று போராடினார். அக்காலத்தில் தமிழைப் போற்றுவதென்றால் அவ்வளவு எளிதன்று. இன்று கூட தூயதமிழில் எழுதும், பேசும் தமிழ்ப்புலவர்களைத் தி.க., தி.மு.க என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அக்காலத்தில் ஆட்சியிலும் பிற துறைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் ஆரியச் சார்புடையவர்களே. தனித்தமிழ் என்றால் அவ்வாறு கூறுகின்றவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவே முடியாது. பல இடர்ப்பாடுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்.

பெரியார் மறைமலைஅடிகள் எவற்றுக்கும் அஞ்சாது தமிழ்நலம் நாடிப் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழை தூய்மையாகப் போற்ற வேண்டுமென்பது வடமொழியின் வெறுப்பாலன்று; தம் வீட்டுத் தாயைப் போற்ற வேண்டுமென்றால் பிறர் அன்னையர்களை வெறுக்கவேண்டுமென்று கொள்ளுதல் பொருந்துமா? அடிகளார் ஆங்கிலத்தையும் ஆரியத்தையும் வெறுத்தாரல்லர். ஆரிய நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். தாம் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதினார். அம்மொழிகளை வெறுப்பின் அவ்வாறு செய்வாரோ?
அடிகளார் இனிய குரலில் அழகாகக் கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மை பெற்றவர். சொற்செறிவும் பொருள் தெளிவும் சுவை நலமும் வாய்ந்த உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டார். இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் எவரும் போற்ற எழுதினார். மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி என்று மனித இயல் பற்றிய மாண்புறு நூலும் எழுதினார்.

இன்றைய இலக்கியங்களில் தோன்றியுள்ள தமிழ் மறுமலர்ச்சிக்குக் கால்கோள் இட்டவரும் அடிகளாரே. அடிகளின்றேல் தனித்தமிழ் இல்லை./ அடிகளே தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாவார். அவர் வழி நின்று தமிழைக் காத்து வளர்த்தல் நம்மனோர் கடனாகும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
மறைமலை வழி நிற்போம்;
மாண்புறு தமிழ் காப்போம்.


(டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 11:32 am

பகிர்வுக்கு நன்றி சாமி!



தனித்தமிழ் இயக்கத் தந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக