ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

+3
கரூர் கவியன்பன்
ayyamperumal
சாமி
7 posters

Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by சாமி Sat Feb 02, 2013 8:30 pm

தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிக்கும் எதிரான குரல் என்றால், அது முதலில் கர்நாடகாவில் இருந்துதான் ஒலிக்கும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இது. தமிழகத்தில் தமிழ் மொழி கட்டாய முதன்மைப் பாடமாக இருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கர்நாடகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருப்பது வேடிக்கையான வேதனை!

கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக – கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் குவிந்த அவரது கன்னட சலுவாளி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எல்லை ஓரங்களில் இருக்கும் குழந்தைகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்னார் வாட்டாள் நாகராஜ்.

வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் எல்லையில் உள்ள தமிழர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘ஒகனேக்கல்-2025’ அமைப்பின் நிறுவனர் மது நம்மிடம், எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மொழி சிறுபான்மைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியை (மலையாளம், கன்னடம், தெலுங்கு) முதன்மைப்பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பது இதுவரை நடைமுறையில் இருந்தது. தமிழக அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் தமிழ் முதன்மைப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனையானது.

தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வாட்டாள் நாகராஜுக்கு யார் கொடுத்தது? இதெல்லாம் அவர் நடத்தும் அரசியல் நாடகம்.

இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓசூர் எம்.எல்.ஏவான கோபிநாத் செய்திருப்பது அதைவிட வேதனையானது. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரத்தில் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி தொடர்வதை தடை செய்யக்கூடாது. கட்டாயத் தமிழ் சட்டத்திக் கொண்டு வந்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோபிநாத் மனு கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருக்கும் கோபிநாத் இப்படி மனு கொடுத்து இருப்பது அதிர்ச்சியானது. இதுவே கர்நாடக எல்லைக்குள் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்க முடியுமா? அந்தத் தைரியம் அவருக்கு இருக்கிறதா? இவர்களை எல்லாம் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்போகிறோம்”
என்றார் கோபத்தோடு.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ கோபிநாத் என்ன சொல்கிறார்? “வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு தமிழ் வழியில் பாடம் நடத்தினால், படிப்பின் தரம் குறையும். அதைக் குறிப்பிட்டுத்தான் மனு கொடுத்தேன். மற்றபடி, நான் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ எதிரானவன் கிடையாது. தமிழை ஒரு பாடமாக வைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்” என்றார்.

தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சோதனைதானோ?

(நன்றி-எஸ்.ராஜாசெல்வம்-ஜூனியர் விகடன்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by ayyamperumal Sat Feb 02, 2013 9:27 pm

அடப்பாவிகளா !
இங்கயே தமிழ் படிக்கிறது கேவலம் என நினைக்கிறார்கள். போதா குறைக்கு TNPSC போன்ற போட்டிதேர்வுகளில் கூட தமிழை நீக்கும் முயற்சி நடக்கிறது . இதுல விளம்பர அரசியலுக்கு தமிழ் தான் கிடச்சதா ?


தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by கரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 9:47 pm

நடத்துங்கப்பா.............. இவ்வளவு தான் உங்களுக்குத் தெரியுமா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by யினியவன் Sat Feb 02, 2013 9:54 pm

சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.

நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by ayyamperumal Sat Feb 02, 2013 10:17 pm

யினியவன் wrote:சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.

நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!


அம்... மணி யினை ஆட்டுவிப்பது யார் ?


தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by mahadevan Sat Feb 02, 2013 10:27 pm

viotha manitharkal
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by மாணிக்கம் நடேசன் Sun Feb 03, 2013 6:19 am

இதுக்கு பதில் சொல்ல பானபத்தர பாகவதரை கூப்பிடுங்கள், ஒரு நாள் போதுமா? என்று பாடியே பதில சொல்லிடுவாரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by கோவிந்தராஜ் Sun Feb 03, 2013 7:05 am

தமிழ் தமிழ்நாடு என்றாலே ..........இலக்காரமாக போய்விட்டது .
"உள்ளூர் குளம் தீர்த்தத்திற்கு உதவாது " என்ன கொடுமை சார் இது


தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! 599303
தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே! Empty Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum