புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
கடல் - சினிமா விமர்சனம் I_vote_lcapகடல் - சினிமா விமர்சனம் I_voting_barகடல் - சினிமா விமர்சனம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் - சினிமா விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 02, 2013 6:21 pm

நம்ம கார்த்திக்கு மவனும், ராதா மவளும் சோடி போட்டிருக்கிற படம், அதுவும் மணிரத்னம் டைரக்சன்லன்னா சும்மாவா..ஏலெ, கேட்டதுமே ஜில்லுன்னு இருக்குல்லா? போதாததுக்கு லிப்-கிஸ்ன்னு வேற கிளப்பிவிட்டுட்டாங்க..நம்ம ஜெயமோகன் டயலாக் வேற.(அட, பயப்பாடாதீக பயபுள்ளைகளா..அவரு சினிமாக்கு மட்டும்தமிழ்ல தான் எழுதுவாரு..நம்புங்க!)..கொஞ்சநாளாவே இங்க நல்ல படங்கள்லாம் வர்றதில்லை, இது என்னாகுதோன்னு பயந்துக்கிட்டே இருந்தோம்..’யாரும் பாக்காத’ படமுல்லா..அதான் சட்டுப்புட்டுன்னு ரிலீஸ் பண்ணிப்புட்டாக.
-
ஒரு ஊர்ல.....................:
நல்லாக் கேட்டுக்கோங்க..நம்ம அர்ஜீனும், சிவப்ப்பழகன் அர்விந்தசாமியும் ஃபாதர் ஆகறதுக்கு படிக்காக..அய்யய்யோ,பாலியல் கல்வின்னு நினைச்சுப்புடாதீக மக்கா..இது சர்ச்-ல ஃபாதர் ஆகறதுக்கான படிப்பாக்கும்..அர்விந்தசாமி நல்ல புள்ளை, அர்ஜூனு சோக்காளி..படிக்க வந்த இடத்துல படிக்கிற சோலியை மட்டும்தானே பார்க்கணும்? அர்ஜூனு வேறொரு சோலி பாத்துப்புடுதாரு.அதை அர்விந்தசாமி பெரிய்ய ஃபாதர்க கிட்ட போட்டுக்கொடுத்துடுதாரு..அதனால அர்ஜூனு ஃபாதர் ஆக முடியாமப் போகுது..அப்போ அர்ஜூனு தொடைதட்டி சபதம் எடுக்காரு.’ஏலே அர்விந்தசாமி..உன்னையும் டர்ர் ஆக்குவேம்ல’ன்னு.
-
அப்புறம் பாத்தீகன்னா, அர்ஜூனு டான் ஆகிடுதாரு..அர்விந்தசாமி ஃபாதர் ஆகி(சர்ச்ல தான்), அர்ஜூனு ஊருப்பக்கமே வந்திடுதாரு..அப்புறமென்னலே, அன்புக்கும் வெறுப்புக்கும்-நன்மைக்கும் தீமைக்கும்-அதுக்கும் இதுக்கும் நடக்கிற ஃபைட் தாம்லெ படம்.
-
உரிச்சா....:
ஏலெ, இது மாதிரி யதார்த்தமா, உக்கிரமா ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு..அதுவும் முத பாதி பாத்தீகன்னா, சர்ச்ச்ல காளியாத்தா சாமீ வந்த வந்தமாதிரி அப்படி ஒரு ஆக்ரோசம்..இடைவேளை விடற வரைக்கும் ராதா மவளோட லிப்-கிஸ்ஸே ஞாபகம்வரலைன்னா பார்த்துக்கோங்களேன்!
-
அரவிந்தசாமி ஃபாதராஊருக்கு வரும்போது,சர்ச் கிடக்கிற கெதியும், அந்த சனங்க பேசுற பேச்சும் நம்மளை அப்படியே படத்துக்குள்ள இழுத்துறுதுய்யா..என்ன இருந்தாலும் நம்ம பயலுவல்லா..சாமீன்னா பயந்து நடுங்காம, தோள்ல கைபோட்டுல்லாபேசுறாங்க..(இயேசுவையும் சர்ச்சையும் பத்தி ஆரம்பத்துல அந்த சனங்க நக்கலா பேசுறதுக்கு யாரும்பஞ்சாயத்தைக் கூட்டாம இருக்கணும். ஆனா ஒட்டுமொத்தமா’அன்னை வேளாங்கண்ணி’ படம் தராத பக்தியெல்ல சொல்லுது!)
-
அந்த ஊருல ஏறக்குறைய அனாதையா சுத்துற பய மேல ஃபாதர் கருணை காட்டுறதும், அன்பாலயே அந்த பயல மாத்தறதும் கவிதை.கவிதை. (ஏ, உங்களுக்கு தனியா வேறெ சொல்லணுமாக்கும், அந்தப் பயதாம்லெ கார்த்திக்கு மவன் கௌதமு!).
-
அப்புறம் வாராரு அர்ஜூனு..வந்து அவருபண்ற ஒரு காரியம் இருக்கே..ஏ, அதை வெளில சொல்றது தப்புல்லா..நமக்கே பக்குன்னுல்லா ஆயிடுச்சு..படத்துல ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்குய்யா.அதெல்லாம் சொல்றது நியாயமில்லைல்ல..அரவிந்தசாமி திருத்துன பயலை, அர்ஜூனு திரும்ப ரவுடியா ஆக்க பாக்குதாரு..இன்னொரு பக்கம் ராதா மவளோட வெள்ளந்தியானஅன்பு அந்த பையனுக்கு கிடைக்கு..அப்புறமென்ன, ஃபாதர்-மொதலாளி-ஹீரோயின்னு மூணுபேர்ல யாரு அதிக தாக்கத்தை ஹீரோ மேல உண்டாக்குதாங்கன்னு கதை பிச்சுக்கிட்டுப் போகுது.
-
ஆன ஒன்னுய்யா, இந்த மணிரத்னம் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசன் பாக்கும்படியா ஒரு படம் எடுத்துருக்காரு..வழக்கமா அவரு, இந்திக்கும் தமிழுக்கும் பொருந்தற மாதிரி ஒரு ‘ஜந்து’வைல்லா ரெடி பண்ணுவாரு..இதுஅப்படி இல்லை, படம்யா..படம்...கலக்கிப்புட்டாரு!
-
அரவிந்தசாமி :
இவரு சினிமாவே வேணாம்னு போனவருல்ல..ஏந்திடீர்னு வந்திருக்காருன்னு எனக்கு அப்பவே டவுட்ல..படத்தைப் பாக்கவுமில்ல தெரியுது..ஃபாதர்னா ஃபாதர்..அப்படி ஒரு தங்கமான ஃபாதர். ஆத்தீ, இப்படியாப்பட்ட நல்ல மனுசனையா நானா யோசிச்சேன் ல அப்படி எழுதுனோம்..சாமி..சாமி-ன்னு கன்னத்துல போட்டுக்கிட்டேம்லெ..அப்படி ஒரு நடிப்பு. இப்படி ஒருகேரக்டெரு கொடுத்தா, எவம்தான்நடிக்க மாட்டேன்னு சொல்லுவாம்?. ஏ, இப்பச் சொல்லுதேம்ல..படத்துக்கு ஹீரோவே இந்த’ஃபாதர் சாம்’ தாம்லெ!
கருணையின் வடிவமா காட்டுறதுக்கு இவரைவிடச் சரியான ஆளு வேறெ யாரு இருக்கா?மணிரத்னம் லேசுப்பட்ட ஆளு இல்லவே!..எப்பிடி பிடிச்சாந்திருக்கார்
பாத்தீகளா?
-
அர்ஜூன் :
நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒருவில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?..ஆனாலும் அந்தாளு தைரியத்தைப் பாராட்டணும்..மனுசன் கொன்னுட்டாரு!
-
கௌதம் :
இந்தப் பையன் சிம்பு மாதிரி கெக்கெபிக்கேன்னு இருக்காரே..தேறுவாரான்னு நமக்கு டவுட்டாத் தாம்லெ இருந்துச்சு..ஆனாலும் அந்த சின்ன கொள்ளிக்கண்ணை வச்சுக்கிட்டே, பல எக்ஸ்பிரசனல்ல கொடுக்காரு..கண்ணீரே வத்திப்போன ஒரு சீவனாவும், அந்த பிரசவ சீனுல புதுசாப் பிறந்து அழுற மனுசனாவும்..அட, அட! மீனவப் பையன் வேசத்துக்கு ஓகே தாம்லெ..இதே மாதிரி நல்ல படமா நடிச்சா பையன் பொழச்சுக்கிடுவாரு!..ஒரு நடிகனா கார்த்திக்கு பேரை காப்பாத்திட்டாரு!
-
துளசி :
கொஞ்சம் மூளை வளர்ச்சி நின்னுபோனஅல்லது மூளை உறைஞ்சு போன அல்லதுலப்பாதிக்காஜக்கோமக்கா-ன்னு என்னமோ ஒரு பிரச்சினை உள்ளபிள்ளையா நடிச்சிருக்கு. ஏ, அதுக்காக கவலைப்பட வேணாம்..நமக்கு கிளிவேஜ் சீன் இருக்கு, கேட்டியளா? ஆனா ஒன்னு, இந்தப் புள்ளை நல்லா நடிக்குது..அக்காக்கு மேலெ,,அம்மாக்கு கீழன்னு வச்சிக்கோங்களேன்..மொத்தத்துல மொத படத்துல ராதா எப்படி இருந்துச்சோ, அப்படியே இருக்கு. இன்னும் ரெண்டு, மூணு படம் பண்ணாத்தான் தெரியும், தேறுதான்னு.
ஏ, நாம என்ன பெருசா கேட்கிறோம்? ஒரு ராதா மாதிரி பாக்குறதுக்கு அழகாவும் இருக்கிற,நடிக்கவும் தெரிஞ்சநடிகை வேணும்னு ஆசைப்படறது தப்பா? ஏசைய்யா கண்ணைத் திறக்க மாட்டேங்கிறாரே? வேற வழியில்லை, பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 02, 2013 6:29 pm

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- இந்த கதைக்கு தேவையே இல்லாத சில காதல் காட்சிகள் + டூயட்கள்..ஆனாலும் சினிமால்ல..என்ன செய்ய!
-
கதாநாயகிக்கு என்ன நோய்(?)ன்னு என்னை மாதிரி ஆளுங்களுக்கும் புரியறமாதிரி சொல்லாம விட்டது.(சொல்லுதாங்கலெ,புரியலைல்ல.)
-
ஏ, முடிச்சுப் போடறது ஒரு சுகம்னாமுடிச்ச அவுக்கிறதுதனி சுகம்னு ஏதோ மலையாள பிட்டு படத்துல சொல்லுவாகல்ல..அது சரி தாம்லெ..படத்துலநிதானமா, வலுவா முடிச்சு போட்டளவுக்கு, நிதானமா புடிச்ச அவுக்கலை பாத்துக்கோ..படத்தை முடிக்கணுமேன்னு, சினிமாத்தனமா ஒரு கிளைமாக்ஸ் ஃபைட் வச்சு, டபக்குன்னு முடிச்சை அவுத்துட்டாக. ஒரு நல்ல நாவலை படக்குன்னு முடிச்சஃபீலிங்யா.
-
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- மணிரத்னத்தின் கச்சிதமான திரைக்கதை + இயக்கம்
- ராஜீவ் மேனனின் கேமரா..சும்மாவே மணிபடத்துல கலக்குவாங்க..இதுல கடல் வேறெ..கேக்கணுமா? கொள்ளை அழகுல்லா..குறிப்பாக கிளைமேக்ஸ் சீன்..படத்துல ஹீரோயின்னா, அது கடல் தாம்லெ!
-
- ஏ.ஆர்,ரஹ்மான் இசைன்னா சொல்லவா வேணும்? பாட்டுகளும் பெக்கிரவுண்டு மூசிக்கும் பட்டயக்கிளப்புது. (அந்த டைட்டில் மியூசிக் மட்டும், அந்த சீன்களோட ஒட்டலை!)
- ஜெயமோகனின் கதை-வசனம்-திரைக்கதை : ’கதை வறட்சி, அதனால தான் இங்கிலிபீசு படத்தைசுடுதோம்’ன்னு சொல்றவங்க, கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும். இலக்கியவாதிகளை எப்படி யூஸ் பண்றதுன்னும் மணிரத்னம்கிட்ட கத்துக்கணும். படத்தின் பெரும்பலமே இயல்பானவசனங்கள் தான்..’ஏலெ,மக்கா, நாற முண்டை’ என அப்படியே தெக்குப்பக்கம் போய் வந்த உணர்வைத்தரும் வார்த்தைப் பிரயோகம்..’தப்பு செய்றது நடக்கர மாதிரி, மனுசன்னு தானா வந்திடும்.’ என்பது போன்ற நறுக்கு தெறிச்ச மாதிரி வசனங்கள்.
-
மணியோ ஒத்தைவரி ஆளு..இவரோ எழுதித் தள்ளுற ஆளு..ரெண்டும் சேர்ந்து என்ன செய்துகளோன்னு ஒரு பயம் இருந்துச்சு. நம்ம தெக்கத்தி ஆளுக ஒத்தை வார்த்தைல பேசுனா நல்லவா இருக்கும்..பரவாயில்லைய்யா, மணி நல்லா சுதந்திரம் கொடுத்திருக்காரு. இவரும் அடிச்சு விளையாடி இருக்காரு. (ஆதியில கோவில்பட்டித் தமிழா இருந்த என் தமிழ், அப்புறம் மெட்ராஸ் பாஷை மிக்ஸ் ஆகி, கூடவே கோயம்புத்தூர் ஸ்லாங்கும் கலந்து,இப்போ ஏதோ ஒரு தமிழ் பேசிக்கிட்டுதிரியறேன். எனக்கே இந்தப் படம் பார்க்கவும் ஏலெ, மக்கான்னு தான் வருது பார்த்துக்கோங்க!)
-
அப்புறம்...:
எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மணிரத்னம் படம் பார்த்து? அந்த மனுசனை எல்லாரும் தலையில வச்சு ஆடுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.
மணி படம்னா சர்ச்சைஇல்லாமலா?..ஆரம்ப காட்சிகளை மட்டும் பார்க்கிற மீனவ அமைப்புகளோ,சர்ச்களோ பஞ்சாயத்து கூட்டவாய்ப்பு இருக்கு.அப்புறம் நம்ம இணைய புர்ச்சியாளர்கள் படத்தை நுணுக்கமா ஆராய்ச்சி, இதுவும்பார்ப்பனீய படமேன்னு சொல்லத்தான் போறாங்க.சரி, நமக்கும் பொழுதுபோகணுமில்லை..
-
பார்க்கலாமா? :
- ஒரு கிறிஸ்தவ கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உணர்வைத் தருவதாலும், அன்பையே போதிக்கும்கிறிஸ்தவத்தை முன்னிறுத்துவதாலும், அதன் பிரதிநிதிகளான ஃபாதர்கள்/ஸிஸ்டர்களின் தியாகத்தை, அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக நமக்குஉணர்த்துவதாலும்,அன்பு-அஹிம்சை-அறம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நமக்குள்எழுப்புவதாலும்........
- கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
-
நன்றி செங்கோவி முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக