புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:24 pm

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.

அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,

சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

தட்ஸ்தமிழ்



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 5:28 pm

அடப்பாவிகளா,அதுக்கு ஒரு மனுசன இப்படியா பழிவாங்குவது?எத்தனை இன்னல்களை தாங்குவார் இவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:35 pm

அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைகாய் ஆக்கிவிட்டனர்-கமல்

சென்னை: அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் உருக்கமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஒரு படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர்.

யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும்

நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல-நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உள்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை என்றார் கமல்ஹாசன்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:36 pm

விஸ்வரூபம்: உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு, படத்துக்கும் தடை விதித்தனர்.

மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:36 pm

விஸ்வரூபம்: அப்பீல் செய்த ஜெ. அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி

சென்னை: விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு மேல் முறையீடு செய்வதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லீம்கள் நன்றி கடன் படுவார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கை பேணி காப்பவர்கள் முஸ்லிம்கள். இப்படத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:37 pm

கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் - இது கமல் ரசிகர்கள்

மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர்.

கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார்.

தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்.

அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்," என்றனர்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 5:38 pm

சிவா wrote:விஸ்வரூபம்: அப்பீல் செய்த ஜெ. அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி

சென்னை: விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு மேல் முறையீடு செய்வதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லீம்கள் நன்றி கடன் படுவார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கை பேணி காப்பவர்கள் முஸ்லிம்கள். இப்படத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தானே வேண்டும் இவங்களுக்கு., என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:42 pm

கமலுக்கு ஏற்பட்ட சோதனையை ஜீரணிக்க முடியவில்லை: அர்ஜுன்

சென்னை: விஸ்வரூபம் குறித்து இன்று கமல் ஹாசன் அளித்த பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விஸ்வரூபம் பற்றியும், அதற்கு தமிழக அரசு விதித்த தடை பற்றியும் உருக்கமாக பேட்டியளித்தார். தனக்கு மதமும் இல்லை, குலமும் இல்லை தற்போது பணமும் இல்லை என்றார். தன்னுடைய ரசிகர்களில் ஏராளமானோர் முஸ்லிம்கள் என்றும், யார் மனதையும் புண்படுத்த படம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன் என்றார்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில்,

கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கினேன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனையை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய இத்தனை ஆண்டு கலைசேவையில் அவர் இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர். அவருக்கா இப்படி ஒரு சோதனை. கமல் சார் எங்கும் போகக் கூடாது அவர் இங்கு தான் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கமல் சார் உங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது என்றார்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 30, 2013 5:48 pm

அம்மணியின் அட்டகாசத்திற்கும், அடக்குமுறைக்கும்,
ஆணவத்துக்கும் அளவில்லாம போச்சு என்பதற்கு
இதுவும் உதாரணம் அதனால் எத்துனை பேருக்கு ரணம்!!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:58 pm

தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால் வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் குடியேறுவேன்- கமல்

சென்னை: எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை.

தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன்.

என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார்.

தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.

மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.

எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக