புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரங்கணில் முட்டம் Poll_c10குரங்கணில் முட்டம் Poll_m10குரங்கணில் முட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கணில் முட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 11:32 pm

நினைத்தாலே முக்தியைத் தரும் அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இந்த திருத்தலம் திருவண்ணாமலையில் உள்ளது. இதே போல் முக்தியை வழங்கும் மற்றொரு பிறவாத் தலமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தூசி என்ற கிராமம். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரங்கணில்முட்டம். இந்த திருத்தலத்தில் உள்ள வாலீஸ்வரர் தான் முக்தியை அருளும் ஒப்பற்ற இறைவனாக வீற்றிருக்கிறார்.

எமனுக்கு ஏற்பட்ட சாபம்

16வது வயதில் இறப்பு என்ற நிலையில் பிறந்தவர் மார்க்கண்டேயர். இவர் தனது இறுதி நாள் நெருங்கி விட்டதை அடுத்து, சிவதல யாத்திரை மேற்கொண்டார். திருக்கடவூர் தலத்தில் சிவனை தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, மார்க்கண்டேயரின் இறப்பு நாள் வந்தது. அப்போது அங்கு வந்த எமதர்மன், பாசக்கயிற்றை மார்க்கண்டேயரை நோக்கி வீசினார். அதைப் பார்த்ததும் மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். பாசக்கயிறு சிவபெருமானையும் சேர்த்து இழுத்தது. அப்போது சிவபெருமான் வெளிப்பட்டு, எமனை தனது காலால் எட்டி உதைத்தார். தனது பக்தனின் உயிரை பறிக்க வந்த எமனின் பதவியை பறித்தார் சிவபெருமான். இதையடுத்து எமதர்மன், சிவபெருமானை வணங்கி தனது தவறை மன்னித்தருள வேண்டினார்.

குரங்கணில் முட்டம்

மனம் இறங்கிய ஈசன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தனது தரிசனம் கிடைக்கப்பெற்று, அதன் மூலமாக இழந்த பதவி கிடைக்கும் என்று கூறினார். அதன்படி பூலோகம் சென்ற எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வந்தார். அப்போது கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால், உடல் முழுவதும் கண்களாக மாறப்பெற்ற இந்திரனும், பூலோகத்தில் சிவதலங்களை தரிசித்து வந்தார்.

பின்னர் காகம் உருவில் இருந்த எமனும், அணில் உருவில் இந்திரனும் குறிப்பிட்ட தலத்திற்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையில் சிறந்த சிவபக்தனான வாலியும் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் மூவரும் சேர்ந்து இத்தல இறைவனை தரிசனம் செய்தனர். இதனால் எமதர்மனும், இந்திரனும் சாபவிமோசனம் பெற்றனர். மூவருக்கும் காட்சி தந்தார் சிவபெருமான். பின்னர் அவர்களின் வேண்டுதலுக்காக அங்கு சுயம்புவாக எழுந்தருளினார். மூவரும் வழிபட்டதால் இந்த தலம் குரங்கு அணில் முட்டம் என்றானது.

வாலீஸ்வரர்

இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன், மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில், இறையார்வளையம்மை என்ற பெயருடன் அருளாசி வழங்குகிறார். வாலி, இந்திரன், எமன் மூவரும் சிவனை வணங்குவதற்கு முன்பாக, அம்பாளை தரிசனம் செய்ததாகவும், அம்பாள் சிவபெருமானிடம் மூவருக்கும் அருள்புரியும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இரு கைகளிலும் வளையல் அணிந்து மகிழ்ந்த முகத்துடன் அம்பாள் காட்சி தருகிறார். திருமணமான பெண்கள், கர்ப்பிணிகள் இந்த அம்மனுக்கு வளையல் அணிவித்து, பின்னர் அதனை அணிந்து கொள்கின்றனர். இதனால் விரைவில் குழந்தைப்பேறு, சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் இறைவனின் மீது சூரிய ஒளி விழுகிறது. சூரிய ஒளியில் சிவலிங்கம் ஜொலிப்பதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாகும்.

குரங்கு வடிவில் வந்த வாலி சிவனை வணங்கிய போது அவருக்கு பூஜை செய்வதற்காக கையால் மலர்களை பறிக்காமல், மரத்தை உலுக்கி பூஜித்துள்ளார். இதனால் கொய்யா மலர் நாதர் (பறிக்கப்படாத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற சிறப்பு பெயராலும் சிவன் வணங்கப்படுகிறார்.

கரும்புச்சாறு அபிஷேகம்

இந்த தலத்தில் விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையார் இருக்கிறது. இது விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்று கூறுகிறார்கள். வலது கையில் பிரயோக சக்கரம், இடது கையில் சக்கர முத்திரையுடன் சாந்தமான முகத்தோடு, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். கோவில் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், சப்தமாதர், நாக தேவதை, நவக்கிரகங்களும், கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகிறார்கள்.

இந்த கோவிலில் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு, அது நிறைவேறியதும், ஈசனுக்கு அபிஷேகம் செய்தும், புதுவஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வாலீஸ்வரருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் வாழ்க்கை இனிமையாக அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.

இங்குள்ள இறைவனை வழிபட்டால் அறிவுத்திறன், ஞானம் வளரும்; பாவ விமோசனம் கிடைக்கும்.

களக்காடு மாரிசுப்ரமணியன்



குரங்கணில் முட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 31, 2013 12:08 am

இது போல இன்னும் ஆயிரம் ஆயிரம் புராண கால த்து கோவில்கள் அருமை பெருமைகள் வெளியே தெரியாமல் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி தல ,.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 30/11/2012

PostAhanya Thu Jan 31, 2013 1:27 am

நல்ல தகவல்கள் ...........பகிர்வுக்கு நன்றி சிவாஸ்டார் அண்ணா நன்றி



குரங்கணில் முட்டம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Jan 31, 2013 4:11 am

பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக