ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

5 posters

Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by Guna Tamil Mon Jan 28, 2013 1:31 pm

பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் கௌரவமான [Chevalier] செவாலியர் விருதை, இலங்கைத் தமிழரான திருமதி ஷெரின் சேவியர் அவர்கள் பெற்றிருக்கின்றார். இதன் மூலம், இவ் உயர் கௌரவத்தை பெறும் முதல் இலங்கைத் தமிழர் என்னும் பெருமை ஷெரின் சேவியரை சார்கிறது.


யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்டவரான ஷெரின் சேவியருக்கான மேற்படி விருது, இலங்கைக்கான பிரெஞ் தூதுவர் கிறிஸ்டைன் ரொபிசோன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


உலகின் பல பாகங்களிலும் இயங்கிவரும் முன்னனி மனிதர்களை கௌரவிக்கும் வகையில், பிரெஞ் அரசாங்கம் 1957ம் ஆண்டிலிருந்து இவ்விருதை வழங்கிவருகின்றது. தற்போது அவ்வாறான முன்னணி மனிதர்களில் ஷெரீன் சேவியரும் ஒருவராகியிருக்கின்றார். தமிழர் என்னும் இனத்துவ அடையாளத்தின் ஊடாக நோக்குவதாயின், செவாலியர் கௌரவத்தை பெறும் இரண்டாவது தமிழரென்னும் பெருமை ஷெரினைச் சார்கிறது.


இவ்வுயர் விருது, 1995ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவாஜியின் கலைத்துறை பங்களிப்பிற்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.


ஆனால் ஷெரீன் சேவியர், தனது மனித உரிமைசார் பணிகளுக்காக இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் – கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும், மனித உரிமைசார் கொள்கைகள் தொடர்பான சமூக அபிவிருத்தி விவகாரங்கள், பெறுபேற்று அடிப்படையிலான முகாமைத்துவம், சமூக ஆய்வுகள் மற்றும் உயிர்வாழ் உதவிகள் போன்ற பல்துறைசார் பணிகளுக்கான அனைத்துலக அங்கீகாரமாகவே, இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


தற்போது, இலங்கையின் முன்னணி மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமான [HHR] மனித உரிமைகள் இல்லத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி ஷெரின் சேவியர், யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியான இன்னாசிமுத்து பிரான்சிஸ் சேவியரின் புதல்வியாவார்.


சிறு வயதிலிருந்தே மனித உரிமைசார் பணிகளில் ஈடுபட்டுவரும், ஷெரீன் உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஷெரீன், மேலும் ஆபிரிக்காவின் சியரோ லியோன், மற்றும் எல் ஷல்வடோர் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பணியாற்றியிருக்கின்றார்.


அடிப்படையில் ஷெரீன் சேவியர் ஒரு [Chemistry] இரசாயனவியல் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் பட்டம்பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழமான [Concordia University] கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது [M.Sc] முதுமானி கல்வியை பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பில் பிறிதொரு [LLM] முதுமானிப்பட்டத்தை [Columbia University, New York] கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் தனது, கடந்த 25 ஆண்டுகால மனிதநேய பயணத்தின் போது பல்வேறு பதவி நிலைகளை வகித்திருக்கின்றார். குறிப்பாக, [[Head of Delegation - Canadian Red Cross Society - CRCS - New Delhi, India]] கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவிற்கான பிரதான இயக்குனர், [CRCS Humanitarian Values Program – Canada] கனடிய மனிதநேய விழுமியங்களுக்கான திட்டத்தின் தேசிய இணைப்பாளர், அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட [Fourth World Vision - FWV, California] நான்காவது உலக தரிசனம் திட்டத்தின் பணிப்பாளர் – என பல்வேறு பதவிகளை ஷெரின் வகித்திருக்கின்றார்.


மேலும், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கும் ஷெரீன், பால்நிலை சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகள் தொடர்பில், சுயாதீன ஆய்வாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.


இவ்வாறான பன்முக ஆளுமையைக் கொண்டவரான ஷெரீன், 2007ம் ஆண்டிலிருந்து, அவரது தகப்பனாரால் உருவாக்கப்பட்ட நிறுவனமான, ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அனுபவம், ஆற்றல் மற்றும் அவரது உலகளாவிய தொடர்புகள் அனைத்தும், இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டுமெனும் ஒரே நோக்குடன் செயலாற்றி வருகின்றார்.


குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி இங்கு விதந்துரைக்கத்தக்கதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் நோக்கில், அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். இது அவர் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார்ந்து செயற்பட்டுவரும், திருமதி ஷெரின் சேவியருக்கு இவ்வுயர் கௌரவம் கிடைத்திருப்பதானது, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையாகும்.
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by பாலாஜி Mon Jan 28, 2013 1:34 pm

வாழ்த்துக்கள் திருமதி ஷெரின் சேவியர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by jeju Mon Jan 28, 2013 4:05 pm

ஈழ தமிழர்களை பெருமிதம் செய்துள்ளார் ஷெரீன் சேவியர். வாழ்த்துகள்
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by Pakee Mon Jan 28, 2013 4:36 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by Ahanya Mon Jan 28, 2013 5:25 pm

வாழ்த்துக்கள்.....தமிழர்கள் எங்கிருந்தாலும் சாதிப்பார்கள்..... சூப்பருங்க


பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Empty Re: பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum