Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று: வள்ளலார் சுவாமிகளின் ஜோதி தரிசனம்!
Page 1 of 1
இன்று: வள்ளலார் சுவாமிகளின் ஜோதி தரிசனம்!
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்ய ஞானசபையில் நாளை தைப்பூசம் ஜோதி தரிசனம் நடக்கிறது. இதில் தென் மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடவுள் ஜோதி வடிவில் இருக்கிறார் என்று கூறி ஜோதி வழிபாட்டை வள்ளலார் தொடங்கி வைத்தார். கடலூரில் அவர் தொடங்கி வைத்த தைப்பூசம் ஜோதி தரிசனம் 141 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது. நாளை நடப்பது 142 -வது ஆண்டு தைப்பூசம் ஜோதி தரிசனம் ஆகும். சத்தியஞான சபையில் அமைக்கப்பட்டுள்ள சதுர பீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அணையாமல் இருக்கிறது.
அந்த தீபம் பக்தர்கள் பார்வைக்கு காட்டப்படுவது தான் ஜோதி தரிசனம் ஆகும். வள்ளலர் தீபத்துக்கு முன்பு 6.9 அடி உயரம் 4.2அடி அகலத்தில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஜோதியை தரிசிக்க வேண்டும். கண்ணாடிக்கு முன்பு 7 திரைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த திரைகள் ஒவ்வொன்றாக ஆகற்றப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திர தினத்தன்று ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது 6 திரைகள் மட்டும் அகற்றி ஜோதி காண்பிக்கப்படும். தைப்பூசம் தினத்தன்று மட்டும்தான் 7 திரைகள் அகற்றப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். 7 திரைகள் அகற்றபடும் போது ஜோதியை பார்ப்பது விசேட சக்தி கொண்டதாகும்.
இந்த நாளில் தரிசனம் செய்தால் நாம் வேண்டியது நிறைவேறும், நோய்கள் தீரும், இறைவனை அடையலாம் என்ற ஐதீகம் உள்ளது. எனவே தான் தைப்பூசம் தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் குவிகிறார்கள். ஜோதி தரிசனத்துக்காக வடலூரில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் வள்ளலார் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.தந்தை பெயர் ராமையா பிள்ளை.தாயார் பெயர் சின்னம்மை. இவர்களின் 6-வது குழந்தை தான் வள்ளலார். அவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டனர். வள்ளலாருக்கு 5 மாதம் ஆன போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர். சாமியை தரிசித்த போது குழந்தை வள்ளலார் மகிழ்ச்சியில் வாய்விட்டு சிரித்தார்.
அப்போதே நடராஜர் வள்ளலாருக்கு காட்சி கொடுத்தாகவும், அதனால் தான் குழந்தை சிரித்ததாகவும் கருதப்படுகிறது. வள்ளலாருக்கு 5 வயதானபோது தந்தை இற்நது விட்டார். இதனால் குடும்பத்தில் கஷ்டம் நிலவியது .அப்போது வள்ளலரின் மூத்த அண்ணன் சபாபதி சென்னையில் இருந்தார். எனவே குடுபத்தினர் அனைவரும் சென்னை சென்றுவிட்டனர். சபாபதி பராமரிப்பில் அவர்கள் வளர்ந்தனர்.
வள்ளலாருக்கு சிறு வயதிலயே ஆன்மிக அறிவு மேலோங்கி இருந்தது. தினமும் சென்னையில் உள்ள கந்த கோட்டம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். சென்னையில் உள்ள மற்ற கோவிலுக்கும் சென்று வருவார். இதன் மூலம் ஆன்மிகத்தில் தீவிர ஆர்வம் காட்டினார்.ஆன்மிக சொற்பொழிவும் நிகழ்த்தினார். அவரது 27-வது வயதில் அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார். அதன்பிறகு சிதம்பரம் கோவிலை தரிசிக்க வந்த அவர் கருங்குழி கிராமத்தில் தங்கினார். அப்போது எண்ணைக்கு பதில் தண்ணீரை ஊற்றி விளக்கை எரிப்பது உள்ளிட்ட பல அற்புதங்களை செய்தார்.1858 முதல் 1867 வரை கருங்குழியிலே இருந்தார்.
அப்போது தான் அவர் சன்மார்க்க சங்கத்தை உருவாக்கினார். 1967-ல் வடலூர் வந்து சத்ஞானசபையை தொடங்கி ஆன்மிக பணிகளை செய்து வந்ததுடன் தனது போதனைகளையும் பகக்தர்களுக்கு அருளினார். பின்னர் அருகில் உள்ள மேட்டுக்குடிக்கு சென்று வசித்த அவர் 1874-ம் ஆண்டு ஜனவரிமாதம் 30-ந் தேதி சித்தி அடைந்தார்.
அணையாத அடுப்பு.......
வள்ளலார் பசித்தவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று தருமசாலையை தொடங்கினார். அங்கு தினமும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு அருந்துகிறார்கள். இந்த உணவை வழங்குவதற்காக பக்தர்களே தானமாக உணவு பொருட்களை வழங்குகிறார்கள். உணவு தயாரிக்க அடுப்பு எந்த நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அடுப்பு அணைக்கப்படுவதே இல்லை.
வள்ளலாரின் தத்துவங்கள்.......
*ஒருவனே தெய்வம். அவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.
*விலங்குகள், தாவரங்கள் அனைத்து உயரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
*புலால் உணவு கூடாது.
*ஜாதி,இனம்,மதம், வேறுபாடு கூடாது.
*சமதர்ம சமுதாயம் உருவாக்க வேண்டும்.
*பசித்தவனுக்கு உணவு அளிக்க வேண்டும். அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும்.
*ஆண்- பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களுக்கு ஞானகல்வி அளிக்க வேண்டும்.
6 முறை தரிசனம்....
நாளை 6 முறை ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6 மணிக்கு முதல் தரிசனம் நடக்கிறது. அதை தொடர்ந்து 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 6 மணி ஆகிய 6 முறை ஜோதி தரிசனம் நடக்கிறது.
7 திரைகளின் தத்துவம்.......
ஜோதியை காண்பிப்பதற்கு முன்பு 7 வண்ண திரைகள் அகற்றப்படுகின்றன. இந்த 7 திரைகளுக்கும் ஒவ்வொரு தத்துவம் உள்ளது. கருப்புதிரை மாயையும், நீலத்திரை உரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும், பச்சை திரை எல்லா உயரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதை அறியாமையாக இருப்பதையும், சிவப்பு திரை உணர்ச்சிகளை சீரமைக்காமல் இருப்பதையும், பொன்மை திரை ஆசையால் உண்டாகும் துன்பத்தையும், வெள்ளை திரை அகங்காரம் மற்றும் ஆணவத்தையும், இந்த 6 வண்ணங்களும் கொண்ட 7-வது திரை உலக மாயைகளையும், ஆசைகளையும் சீரமைத்தல் என்ற தத்துவத்தையும் காட்டுகின்றன.
இந்த 7 குணங்களையும் அகற்றினால் இறைவனை ஒளி வடிவத்தில் காணலாம் என்பதே இதன் தத்துவம் ஆகும். மேலும் 7 குணங்களும் அகற்றப்பட்டால் அகத்தில் ஒளி ஏற்படும் என்ற தத்துவமும் உணர்த்தப்படுகிறது.வடலூர்:வடலூர் சத்திய ஞானசபையில், 142வது தைப்பூச விழா, சன்மார்க்க கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார்நிறுவிய சத்திய ஞான சபையில், 142 வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது.
(நன்றி - மாலைமலர்)
> கடந்த, 19 முதல், 21ம் தேதி வரை, தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதலும்; 22 முதல், 25ம் தேதி வரை, ஞான சபையில் திருஅருட்பா முற்றோதலும் நடைபெற்றது.
>நேற்று காலை, 7.30 மணிக்கு, தருமச்சாலை,மருதூரில் அவதார சன்னிதி, கருங்குழி ஆகிய இடங்களில், கிராம மக்கள் சார்பில், சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.காலை,
>10:00 மணிக்கு, ஞானசபையில் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில், வள்ளலார்க்கு சீர் கொண்டு வந்து, 13 கொடி பாடல்களை பாடி. கொடி பீடத்தில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.
>இன்று காலை, 6:00 மற்றும் 10:00 மணிக்கும்; பகல், 1:00 மணிக்கும்; இரவு, 7:00 மற்றும் 10:00 மணிக்கும்; நாளை காலை, 6:00 மணி என, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெறும்.வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கி பேழை அலங்கரிக்கப்பட்டு, நாளை காலை, 10:00 மணிக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அதை வைத்து,திருஅறை திறக்கப்பட்டு, பகல், 12:00 முதல், மாலை, 6:00 மணி வரை, திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
(நன்றி-தினமலர்)
கடவுள் ஜோதி வடிவில் இருக்கிறார் என்று கூறி ஜோதி வழிபாட்டை வள்ளலார் தொடங்கி வைத்தார். கடலூரில் அவர் தொடங்கி வைத்த தைப்பூசம் ஜோதி தரிசனம் 141 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது. நாளை நடப்பது 142 -வது ஆண்டு தைப்பூசம் ஜோதி தரிசனம் ஆகும். சத்தியஞான சபையில் அமைக்கப்பட்டுள்ள சதுர பீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அணையாமல் இருக்கிறது.
அந்த தீபம் பக்தர்கள் பார்வைக்கு காட்டப்படுவது தான் ஜோதி தரிசனம் ஆகும். வள்ளலர் தீபத்துக்கு முன்பு 6.9 அடி உயரம் 4.2அடி அகலத்தில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஜோதியை தரிசிக்க வேண்டும். கண்ணாடிக்கு முன்பு 7 திரைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த திரைகள் ஒவ்வொன்றாக ஆகற்றப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திர தினத்தன்று ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது 6 திரைகள் மட்டும் அகற்றி ஜோதி காண்பிக்கப்படும். தைப்பூசம் தினத்தன்று மட்டும்தான் 7 திரைகள் அகற்றப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். 7 திரைகள் அகற்றபடும் போது ஜோதியை பார்ப்பது விசேட சக்தி கொண்டதாகும்.
இந்த நாளில் தரிசனம் செய்தால் நாம் வேண்டியது நிறைவேறும், நோய்கள் தீரும், இறைவனை அடையலாம் என்ற ஐதீகம் உள்ளது. எனவே தான் தைப்பூசம் தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் குவிகிறார்கள். ஜோதி தரிசனத்துக்காக வடலூரில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் வள்ளலார் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.தந்தை பெயர் ராமையா பிள்ளை.தாயார் பெயர் சின்னம்மை. இவர்களின் 6-வது குழந்தை தான் வள்ளலார். அவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டனர். வள்ளலாருக்கு 5 மாதம் ஆன போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர். சாமியை தரிசித்த போது குழந்தை வள்ளலார் மகிழ்ச்சியில் வாய்விட்டு சிரித்தார்.
அப்போதே நடராஜர் வள்ளலாருக்கு காட்சி கொடுத்தாகவும், அதனால் தான் குழந்தை சிரித்ததாகவும் கருதப்படுகிறது. வள்ளலாருக்கு 5 வயதானபோது தந்தை இற்நது விட்டார். இதனால் குடும்பத்தில் கஷ்டம் நிலவியது .அப்போது வள்ளலரின் மூத்த அண்ணன் சபாபதி சென்னையில் இருந்தார். எனவே குடுபத்தினர் அனைவரும் சென்னை சென்றுவிட்டனர். சபாபதி பராமரிப்பில் அவர்கள் வளர்ந்தனர்.
வள்ளலாருக்கு சிறு வயதிலயே ஆன்மிக அறிவு மேலோங்கி இருந்தது. தினமும் சென்னையில் உள்ள கந்த கோட்டம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். சென்னையில் உள்ள மற்ற கோவிலுக்கும் சென்று வருவார். இதன் மூலம் ஆன்மிகத்தில் தீவிர ஆர்வம் காட்டினார்.ஆன்மிக சொற்பொழிவும் நிகழ்த்தினார். அவரது 27-வது வயதில் அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார். அதன்பிறகு சிதம்பரம் கோவிலை தரிசிக்க வந்த அவர் கருங்குழி கிராமத்தில் தங்கினார். அப்போது எண்ணைக்கு பதில் தண்ணீரை ஊற்றி விளக்கை எரிப்பது உள்ளிட்ட பல அற்புதங்களை செய்தார்.1858 முதல் 1867 வரை கருங்குழியிலே இருந்தார்.
அப்போது தான் அவர் சன்மார்க்க சங்கத்தை உருவாக்கினார். 1967-ல் வடலூர் வந்து சத்ஞானசபையை தொடங்கி ஆன்மிக பணிகளை செய்து வந்ததுடன் தனது போதனைகளையும் பகக்தர்களுக்கு அருளினார். பின்னர் அருகில் உள்ள மேட்டுக்குடிக்கு சென்று வசித்த அவர் 1874-ம் ஆண்டு ஜனவரிமாதம் 30-ந் தேதி சித்தி அடைந்தார்.
அணையாத அடுப்பு.......
வள்ளலார் பசித்தவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று தருமசாலையை தொடங்கினார். அங்கு தினமும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு அருந்துகிறார்கள். இந்த உணவை வழங்குவதற்காக பக்தர்களே தானமாக உணவு பொருட்களை வழங்குகிறார்கள். உணவு தயாரிக்க அடுப்பு எந்த நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அடுப்பு அணைக்கப்படுவதே இல்லை.
வள்ளலாரின் தத்துவங்கள்.......
*ஒருவனே தெய்வம். அவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.
*விலங்குகள், தாவரங்கள் அனைத்து உயரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
*புலால் உணவு கூடாது.
*ஜாதி,இனம்,மதம், வேறுபாடு கூடாது.
*சமதர்ம சமுதாயம் உருவாக்க வேண்டும்.
*பசித்தவனுக்கு உணவு அளிக்க வேண்டும். அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும்.
*ஆண்- பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களுக்கு ஞானகல்வி அளிக்க வேண்டும்.
6 முறை தரிசனம்....
நாளை 6 முறை ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6 மணிக்கு முதல் தரிசனம் நடக்கிறது. அதை தொடர்ந்து 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 6 மணி ஆகிய 6 முறை ஜோதி தரிசனம் நடக்கிறது.
7 திரைகளின் தத்துவம்.......
ஜோதியை காண்பிப்பதற்கு முன்பு 7 வண்ண திரைகள் அகற்றப்படுகின்றன. இந்த 7 திரைகளுக்கும் ஒவ்வொரு தத்துவம் உள்ளது. கருப்புதிரை மாயையும், நீலத்திரை உரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும், பச்சை திரை எல்லா உயரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதை அறியாமையாக இருப்பதையும், சிவப்பு திரை உணர்ச்சிகளை சீரமைக்காமல் இருப்பதையும், பொன்மை திரை ஆசையால் உண்டாகும் துன்பத்தையும், வெள்ளை திரை அகங்காரம் மற்றும் ஆணவத்தையும், இந்த 6 வண்ணங்களும் கொண்ட 7-வது திரை உலக மாயைகளையும், ஆசைகளையும் சீரமைத்தல் என்ற தத்துவத்தையும் காட்டுகின்றன.
இந்த 7 குணங்களையும் அகற்றினால் இறைவனை ஒளி வடிவத்தில் காணலாம் என்பதே இதன் தத்துவம் ஆகும். மேலும் 7 குணங்களும் அகற்றப்பட்டால் அகத்தில் ஒளி ஏற்படும் என்ற தத்துவமும் உணர்த்தப்படுகிறது.வடலூர்:வடலூர் சத்திய ஞானசபையில், 142வது தைப்பூச விழா, சன்மார்க்க கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார்நிறுவிய சத்திய ஞான சபையில், 142 வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது.
(நன்றி - மாலைமலர்)
> கடந்த, 19 முதல், 21ம் தேதி வரை, தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதலும்; 22 முதல், 25ம் தேதி வரை, ஞான சபையில் திருஅருட்பா முற்றோதலும் நடைபெற்றது.
>நேற்று காலை, 7.30 மணிக்கு, தருமச்சாலை,மருதூரில் அவதார சன்னிதி, கருங்குழி ஆகிய இடங்களில், கிராம மக்கள் சார்பில், சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.காலை,
>10:00 மணிக்கு, ஞானசபையில் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில், வள்ளலார்க்கு சீர் கொண்டு வந்து, 13 கொடி பாடல்களை பாடி. கொடி பீடத்தில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.
>இன்று காலை, 6:00 மற்றும் 10:00 மணிக்கும்; பகல், 1:00 மணிக்கும்; இரவு, 7:00 மற்றும் 10:00 மணிக்கும்; நாளை காலை, 6:00 மணி என, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெறும்.வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கி பேழை அலங்கரிக்கப்பட்டு, நாளை காலை, 10:00 மணிக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அதை வைத்து,திருஅறை திறக்கப்பட்டு, பகல், 12:00 முதல், மாலை, 6:00 மணி வரை, திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
(நன்றி-தினமலர்)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜோதி வடிவில் வள்ளலார்
» ஜோதி தரிசனம்
» காளி கோவிலில் ஜோதி தரிசனம்
» சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
» இன்று வாரியார் சுவாமிகளின் பிறந்த நாள்
» ஜோதி தரிசனம்
» காளி கோவிலில் ஜோதி தரிசனம்
» சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
» இன்று வாரியார் சுவாமிகளின் பிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|