புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
3 Posts - 3%
prajai
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
21 Posts - 5%
prajai
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_m10வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 11:02 am

வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Vallal10

ஆடு, மாடு, கோழி போன்ற விலங்கினங்களிடம், இல்லை... இல்லை... மனிதனுக்கு மனிதனிடமே கூட இரக்கம் என்பது எப்போதுமே, தாமரை இலை மேல் உள்ள தண்ணீரைப் போல பட்டும் படாமல் தான் இருந்து வந்துள்ளது. இப்போதும் இருந்து வருகிறது. இரக்கத்தைப் பற்றி வாய் வலிக்க பலவாறு பேசுவார்களே தவிர, அதனை செயல்படுத்துபவர்களை காண்பது அரிதிலும் அரிதுதான்.

வாடிய வள்ளலார்

ஆனால் விலங்குகள், மனிதர்கள் மட்டும் அல்ல, தாவரங்களும் ஒரு உயிர் என்பதை கருத்தில் கொண்டு, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அவைகளிடமும் தனது இரக்கத்தை வெளிகாட்டியவர் வள்ளலார் என்று வர்ணிக்கப்படும் ராமலிங்க அடிகளார்.

உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை வாழ்க்கையில் கொண்டிருந்தவர் வள்ளலார். உயிர்பலிக் கூடாது என்ற உயர்ந்த கருத்தை உதிர்த்தவர். பெரும் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் சாதி, மத, இன வேறுபாடு மனிதர்களிடையே இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அனைவருக்கும் வழிகாட்டிய, மருதூர் மாணிக்கம். மனித வாழ்வில் பலர் ஒரு வேளை உணவுகூட இன்றி பசித்து வாழ்கின்றனர் என்பதை அறிந்து, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையை தொடங்கி பசித்து வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்கும் திட்டத்தை ஏற்படுத்திய உயர்வுமிக்க உத்தமர்.

மருதூரில் பிறந்தார்

சிதம்பரத்திற்கு வடமேற்கே உள்ளது மருதூர் என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமையாபிள்ளை. இவரது மனைவி சின்னம்மை. ராமையா பிள்ளை, கிராம கணக்கு வேலையும், குழந்தைகளுக்கு பாடல் சொல்லி கொடுக்கும் பணியும் செய்து வந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன் என்ற மகன்களும், உண்ணாமலை, சுந்தராம்பாள் என்ற மகள்களும் இருந்தனர்.

ஒரு முறை பசி என்று தனது வீட்டிற்கு வந்த சிவனடியார் ஒருவரை, சின்னம்மை வரவேற்று பசியை போக்கினார். பசி நீங்கிய சிவனடியார், உனக்கு உலகம் போற்றும் உத்தம மகன் பிறப்பான் என்று ஆசி வழங்கிச் சென்றார். அவரது வாக்கின்படி 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி ராமையாபிள்ளைக்கும், சின்னம்மைக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.

ராமலிங்கத்தின் 6-வது மாதத்தில் ராமையாபிள்ளை இயற்கை எய்தினார். இதையடுத்து சின்னம்மை தனது குழந்தைகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு உரையாசிரியர் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவரிடம், சபாபதியும், பரசுராமனும் கல்வி பயின்றனர். பின்னர் சபாபதி புராண பிரசங்கம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அண்ணன் சபாபதி, அவரது மனைவி பாப்பாத்தி அம்மாள் ஆகியோரால் ராமலிங்கம் வளர்க்கப்பட்டார்.

படிப்பில் ஆர்வம் இல்லை

ராமலிங்கம் பள்ளியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு படிப்பின் மேல் நாட்டம் இல்லை. தனது பள்ளி தோழர்களுடன் கந்தக்கோட்டம் கந்தனை காணச் சென்று விடுவார். அவரை துதித்து பாடல்களும் பாடி வந்தார். இதனை கண்டு வருத்தமுற்ற சபாபதி, தனது தம்பியை திருத்தும் வகையில் தனது மனைவியிடம், இனிமேல் அவனுக்கு வீட்டில் உணவோ, உடையோ கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டார். ஆனால் பெற்ற அன்னையை போன்ற, பாப்பாத்தி அம்மாளுக்கு இது பெரிய வருத்தத்தை கொடுத்தது. அவர் தன் கணவர் இல்லாத நேரத்தில் புறக்கடை வாசலுக்கு ராமலிங்கத்தை வரவழைத்து உணவு, உடை கொடுத்து வந்தார். அப்படி ஒரு முறை உணவு கொடுத்த போது அண்ணியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை கண்டு காரணம் கேட்டார் ராமலிங்கம். அதற்கு அவர், உங்கள் அண்ணன் சொல்படி படிப்பை தொடர்ந்தால், இப்படி புறக்கடையில் வைத்து சாப்பிடும் நிலை வருமா? இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று கூறினார்.

கண்ணாடியை வழிபட்டார்

அண்ணியின் அழுகையை சகிக்காத ராமலிங்கம், எனக்கு வீட்டில் தனி அறை ஒதுக்கி கொடுங்கள். நான் படிப்பை தொடர்கிறேன் என்று கூறிவிட்டார். வீட்டின் மாடியில் ராமலிங்கத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் திருவிளக்கை ஏற்றி, ஒரு கண்ணாடியை சுவரில் மாட்டி, அந்த கண்ணாடிக்கு மாலை அணிவித்து, நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி, கண் இமைக்காமல் அதனையே உற்று நோக்கினார் ராமலிங்கம்.

அப்போது கந்தக்கோட்டம் கந்தக்கடவுள் அவருக்கு காட்சியளித்தார். அன்றுமுதல் அந்த திருவுருவையே தரிசிக்கலானார். கந்தனின் கருணையால், ராமலிங்கத்தின் அனைத்து கலைகளும் தாமாகவே விளங்கின. அண்ணியின் உத்தரவுப்படி, தன் சகோதரியின் மகள் தனக்கோட்டியம்மை என்பவரை ராமலிங்கம் மணந்து இல்லறத்தை நடத்தி வந்தார். பின்னர் திருவாசத்தை படித்துக்காட்டி இல்லறத்தை துறந்து சென்றார்.

திருவொற்றியூர் சென்று பதிகம் பாடினார். சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்து பாடித் துதித்தார். 1965-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.

அருட்ஜோதியானார்

வடலூர் பகுதியில் 1867-ம் ஆண்டு சமரச சுத்த சன் மார்க்க சத்திய தருமசாலை அமைத்து பசி என்று வருபவர்களுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி மூன்று வேளை உணவு வழங்க செய்தார். 1872-ல் சத்திய ஞானசபை கட்டினார். 1873-ல் சமரச வேத பாடசாலை அமைத்தார். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1873-ம் ஆண்டு சன்மார்க்க கொடிஏற்றி பேருபதேசம் செய்வித்தார். உலகம் உய்யும் வழியில் திருஅருட்பாவை, ஆறு திருமுறைகளாக்கி உலகிற்கு வழங்கினார். மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில் புணர்பூசமும், பூசமும் இணைந்த நள்ளிரவில் 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி அருட்பெருஞ்ஜோதியானார்.



வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 11:02 am

வள்ளலாரின் கொள்கைகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

புலால் உணவு உண்ணக்கூடாது.

எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.

சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.



வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 11:03 am

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.



வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 11:04 am

வள்ளலார் பதிப்பித்தவை

சின்மய தீபிகை
ஒழிவிலொடுக்கம்
தொண்டமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

மனுமுறை கண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1 . சிறந்த சொற்பொழிவாளர் .

2 . போதகாசிரியர்.

3 . உரையாசிரியர்.

4 . சித்தமருத்துவர்.

5 . பசிப் பிணி போக்கிய அருளாளர் .

6 . பதிப்பாசிரியர்.

7 . நூலாசிரியர்.

8 . இதழாசிரியர்.

9 . இறையன்பர்.

10 . ஞானாசிரியர்.

11 . அருளாசிரியர்.



வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 26, 2013 11:28 am

பதிவு அருமை சிவா!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 26, 2013 11:31 am

அருமையான பதிவு சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக