Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
+10
curesure4u
ஹர்ஷித்
Muthumohamed
யினியவன்
mahadevan
Dr.S.Soundarapandian
ganeshraja
ராஜா
பூவன்
பாலாஜி
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
First topic message reminder :
திருப்பூர்: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் ஆண்டு சராசரி வருமானம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து தற்போது 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2003-04ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபட்டபோது ஆண்டில் 139.57 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கிடைத்த வருவாய் 3639.93 கோடி ரூபாய். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 536.35 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள சூழலில் தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் கலால் வரியாக ரூ.23,500 கோடி வருமானத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகம் மற்ற தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இதில் மட்டும் பல மடங்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. கல்வியிலோ, மற்ற துறைகளிலோ இந்த அளவுக்கு சாதனை இல்லை. படித்து சாதிக்காததை குடித்து சாதிக்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர்.
அதிரவைக்கும் ஆய்வு
குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நம்பர் 2
தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தமிழகத்தில் தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பதுதான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரியவந்தது.
அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது.
வேறு வேலைக்கு செல்ல ஆர்வம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் கடந்த நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதி பெற்ற பார்கள் செயல்படுகிறது.
8 நாட்கள் மட்டுமே விடுமுறை
காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று எதுவும் இல்லை.
தற்காலிக பணியாளர்கள்
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும், கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். இதில் மேற்பார்வையாளருக்கு ரூ.5,500 ஊதியமாகவும், விற்பனையாளருக்கு ரூ. 4,000 ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
கேரளா நிலவரம்
கேரள மாநிலத்தில் அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது. தவிர மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிக விலை
கேரள மாநிலத்தில் மதுபாட்டில்கள் எல்லாமே எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கணினி பில்தான். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கின்றனராம். இதனை விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்க உள்ளிட்ட பலரும் சதவிகித கணக்குப் படி பங்கு பிரித்துக்கொள்கின்றனராம்.
பதின் பருவத்தினர் தடுமாற்றம்
1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அல்லது அதிகாலையில் கள்ளத்தனமாக அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதுதான் வேதனையான விசயம்
5 ஆண்டில் ரூ.2 லட்சம்
தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்கின்றனர். தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க சைட் டிஸ் உடன்100 வரை ரூபாய் செலவு செய்கின்றனர். ஒரு ஆண்டில் 36,500 ரூபாயை காலி செய்கின்றனர். இதுவே ஐந்து ஆண்டுகளில் 1,82,500 ரூபாய் சத்தமில்லாமல் குடிமூலம் காலியாகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் பொருளாதார ரீதியாகவும், உடல்நலத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பணத்தை சேமித்தால், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமித்துவைக்கலாம்.
வருங்கால சமுதாயம்
அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது எனினும், மது குடிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் வலுவடைந்து வருகிறது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.
-தட்ஸ்தமிழ்
அதிரவைக்கும் ஆய்வு
குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நம்பர் 2
தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தமிழகத்தில் தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பதுதான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரியவந்தது.
அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது.
வேறு வேலைக்கு செல்ல ஆர்வம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் கடந்த நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதி பெற்ற பார்கள் செயல்படுகிறது.
8 நாட்கள் மட்டுமே விடுமுறை
காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று எதுவும் இல்லை.
தற்காலிக பணியாளர்கள்
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும், கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். இதில் மேற்பார்வையாளருக்கு ரூ.5,500 ஊதியமாகவும், விற்பனையாளருக்கு ரூ. 4,000 ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
கேரளா நிலவரம்
கேரள மாநிலத்தில் அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது. தவிர மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிக விலை
கேரள மாநிலத்தில் மதுபாட்டில்கள் எல்லாமே எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கணினி பில்தான். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கின்றனராம். இதனை விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்க உள்ளிட்ட பலரும் சதவிகித கணக்குப் படி பங்கு பிரித்துக்கொள்கின்றனராம்.
பதின் பருவத்தினர் தடுமாற்றம்
1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அல்லது அதிகாலையில் கள்ளத்தனமாக அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதுதான் வேதனையான விசயம்
5 ஆண்டில் ரூ.2 லட்சம்
தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்கின்றனர். தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க சைட் டிஸ் உடன்100 வரை ரூபாய் செலவு செய்கின்றனர். ஒரு ஆண்டில் 36,500 ரூபாயை காலி செய்கின்றனர். இதுவே ஐந்து ஆண்டுகளில் 1,82,500 ரூபாய் சத்தமில்லாமல் குடிமூலம் காலியாகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் பொருளாதார ரீதியாகவும், உடல்நலத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பணத்தை சேமித்தால், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமித்துவைக்கலாம்.
வருங்கால சமுதாயம்
அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது எனினும், மது குடிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் வலுவடைந்து வருகிறது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.
-தட்ஸ்தமிழ்
Last edited by பாலாஜி on Thu Jan 24, 2013 12:26 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
உங்களுக்கு தெரிந்த மகா குடிகாரர்களை திருத்தலாம் ..
குடிப்பவர்க்கே தெரியாமல் குடி மறக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளது
குடிப்பவர்க்கே தெரியாமல் குடி மறக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளது
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
ஒரு த்ரில் வேண்டும் என்பதற்காக ஆரம்பித்து பின்னர்
வாழ்க்கையே திகில் ஆகிப் போனது இந்த மதுவினால்
அதனால் வேண்டாமே இந்த மதுப் பழக்கம் !!!
என்னவோ தமிழ் நாட்டில் தான் மதுப் பழக்கம் பெருகி விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய்.என்ன மற்ற மாநிலங்களில் மது பாட்டில்கள் பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது .குஜராத் தவிர .தனியார் மயம்தான் அங்கு.
ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் தனி மனிதன் கொள்ளை அடிப்பதை விட அரசாங்கமே நடத்தினால் என்ன ?ஒரு சின்ன தீப் பொறியால்.இன்று தமிழ் நாட்டின் வருமானம் பெருகி இருப்பது உண்மையா?இல்லையா ?
தீங்கு எங்குதான் இல்லை.இன்டெர் நெட்டில் இல்லாத தீங்குகளா?அதையும் மீறி ஈகரையில் இணைய வில்லையா?முதலில் நாம் திருந்துவோம் பின்பு இந்த
நாட்டை திருத்துவோம் .
வாழ்க்கையே திகில் ஆகிப் போனது இந்த மதுவினால்
அதனால் வேண்டாமே இந்த மதுப் பழக்கம் !!!
என்னவோ தமிழ் நாட்டில் தான் மதுப் பழக்கம் பெருகி விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய்.என்ன மற்ற மாநிலங்களில் மது பாட்டில்கள் பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது .குஜராத் தவிர .தனியார் மயம்தான் அங்கு.
ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் தனி மனிதன் கொள்ளை அடிப்பதை விட அரசாங்கமே நடத்தினால் என்ன ?ஒரு சின்ன தீப் பொறியால்.இன்று தமிழ் நாட்டின் வருமானம் பெருகி இருப்பது உண்மையா?இல்லையா ?
தீங்கு எங்குதான் இல்லை.இன்டெர் நெட்டில் இல்லாத தீங்குகளா?அதையும் மீறி ஈகரையில் இணைய வில்லையா?முதலில் நாம் திருந்துவோம் பின்பு இந்த
நாட்டை திருத்துவோம் .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
போதையால்தான் தள்ளாடாம போய்க்கிட்டிருக்கா தமிழக அரசு..!
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
அண்ணா இதன் விரங்களை எனக்கு தாருங்கள்curesure4u wrote:உங்களுக்கு தெரிந்த மகா குடிகாரர்களை திருத்தலாம் ..
குடிப்பவர்க்கே தெரியாமல் குடி மறக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
பார் வசதியுடன் மதுக்கடைகளையும் நடத்தி.... குடிபோதையில் வாகனத்தில் வரும் நபர்களை வாயை ஊத சொல்லி பிடிக்கவும் செய்து அபராதமும் விதிப்பது நல்ல காமெடி.... பார்களை முடிவிட்டு இதை செய்தால் வரவேற்கலாம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
positivekarthick wrote:ஒரு த்ரில் வேண்டும் என்பதற்காக ஆரம்பித்து பின்னர்
வாழ்க்கையே திகில் ஆகிப் போனது இந்த மதுவினால்
அதனால் வேண்டாமே இந்த மதுப் பழக்கம் !!!
என்னவோ தமிழ் நாட்டில் தான் மதுப் பழக்கம் பெருகி விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய்.என்ன மற்ற மாநிலங்களில் மது பாட்டில்கள் பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது .குஜராத் தவிர .தனியார் மயம்தான் அங்கு.
ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் தனி மனிதன் கொள்ளை அடிப்பதை விட அரசாங்கமே நடத்தினால் என்ன ?ஒரு சின்ன தீப் பொறியால்.இன்று தமிழ் நாட்டின் வருமானம் பெருகி இருப்பது உண்மையா?இல்லையா ?
தீங்கு எங்குதான் இல்லை.இன்டெர் நெட்டில் இல்லாத தீங்குகளா?அதையும் மீறி ஈகரையில் இணைய வில்லையா?முதலில் நாம் திருந்துவோம் பின்பு இந்த
நாட்டை திருத்துவோம் .
தண்ணி அடிப்பவர்கள் கவனிக்கவும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
கவனிச்சாச்சி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
அசுரன் wrote:அண்ணா இதன் விரங்களை எனக்கு தாருங்கள்curesure4u wrote:உங்களுக்கு தெரிந்த மகா குடிகாரர்களை திருத்தலாம் ..
குடிப்பவர்க்கே தெரியாமல் குடி மறக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளது
நிறமற்ற சுவையற்ற மணமற்ற -ஒரு மாவு எங்களிடம் உள்ளது ..
இந்த மருந்து KUDZU என்ற மூலிகை ஆகும். இந்த மருந்தை நாம் குடிப்பவர்க்கே தெரியாமல் அவர் சாப்பிடும் உணவில் கலந்து கொடுத்தால் ..ஒரு வாரத்தில் குடி மேல் வெறுப்பு ஏற்ப்பட்டு குடியை மறந்து விடுவார்கள் ..எந்த பக்க விளைவுகளும் இருக்காது ..ஆல்கஹாலிக் வித் ட்ரையால் சின்றோம் என்னும் குடி இரத்தத்தில் குறைவதால் ஏற்படும் பாதிப்புகளும் இந்த மருந்தே வேலை செய்யும் ..சர்க்கரை நோயாளிக்கும் இரத்த கொதிப்பு நோயாளிக்கும் ,மஞ்சள் காமாலை பாதிப்புள்ளவர்க்கும் ,வலிப்பு உள்ள நோயாளிக்கும் தரும் போது மட்டும் கவனம் தேவை ..மூன்று மாதங்கள் குடியை நிறுத்தினாலும் மருந்தை தருவது ஆயுள் முழுமைக்கும் ஒரு குடி மேல் வெறுப்பை உண்டாக்கும் ..
மருந்தின் விலை ஒரு நாளைக்கு நாற்பது ,எண்பது ,நூறு ,நூற்று எண்பது ரூபாய் என குடி நோயாளியின் குடி வெறிக்கும் அவர்கள் திருந்துவதை பொருத்தும் மாறுபடும் ...மருந்து வேண்டும் என்பவர்கள் ..எனக்கு தனி மடல் அனுப்பினால் விவரம் தருவோம் ( ஈகரை நிர்வாக எல்லைக்குள் -இது அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மட்டும் -அது வரை எனது விலாசம் தொடர்பு பற்றி சொல்வதற்கில்லை ..ஈகரை நிர்வாகம் இதை விளம்பரம் என்று கருதினால் இதை அழித்து விடலாம் ..) நான் நிச்சயமாக சுய விளம்பரம் செய்ய மாட்டேன் ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்
» நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு உதவ நலநிதி: வயலார் ரவி
» சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்
» நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் ஐ.நா.,
» டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி!
» நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு உதவ நலநிதி: வயலார் ரவி
» சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்
» நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் ஐ.நா.,
» டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|