Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெளனம் என்னும் மந்திர மொழி!
2 posters
Page 1 of 1
மெளனம் என்னும் மந்திர மொழி!
ஒரு விவசாயியின் கைக்கடிகரம், அவன் மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
-
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தருவீர்களா?” என்று கேட்டான்.
-
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
-
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான் எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாகஇருந்தேன். அப்போது கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும் சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம் அடைவீர்கள்…
-
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மெளனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மெளனம் என்பது இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மெளனம் என்பதுமூடி. இதை தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் பூட்டி வைக்கலாம். மெளனம் என்பது போதி மரம். இதுவரை சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மெளனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
-
மெளனம் என்பது வரம். நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும்மெளனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.
உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த இதயத்தை வருடிய வரிகள். அதனால்தான் நாம் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். பல நேரங்களில் நாம் யாரிடம்பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைக் கூட சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை நாம் பேச வேண்டும் என்பது மட்டுமே நமக்கு இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு, மெüனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகின்றான்.
-
நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம். அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது.பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.
-
மெளனத்தின் வெளிப்பாடு பல. கல்யாணப் பெண்ணின் மெளனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மெளனிக்கிறான். துன்பத்தின்உச்சியில் மெளனமே பேசுகிறது. மெளனம் இறைவனின் மொழி. “”சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே ” என்று முருகன்,
அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மெளனம். அமைதி வேறு, மெளனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மெளனம் உள்ளிருந்து வருவது. மெளனம்வார்த்தைகளற்ற நிலை. எண்ணங்கள் அற்ற நிலை. ஓம் என்ற பிரணவத்தின் பொருள், அறிவாக உள்ள இறைவனை, உயிராக உணர்கிற மனிதன், பேரின்ப நிலையாகிய மெளனத்தில் ஆழ்கிறான் என்பதே.
-
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக் கிறது. வாரம் ஒருமுறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி, மன அமைதி, மகிழ்ச்சி. இது மெளன தவத்தால் கிடைக்கும்.
-
மெளனத் தவம் செய்பவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி, அகக் கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது, அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது குறை, நிறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று, தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
-
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தருவீர்களா?” என்று கேட்டான்.
-
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
-
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான் எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாகஇருந்தேன். அப்போது கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும் சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம் அடைவீர்கள்…
-
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மெளனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மெளனம் என்பது இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மெளனம் என்பதுமூடி. இதை தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் பூட்டி வைக்கலாம். மெளனம் என்பது போதி மரம். இதுவரை சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மெளனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
-
மெளனம் என்பது வரம். நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும்மெளனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.
உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த இதயத்தை வருடிய வரிகள். அதனால்தான் நாம் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். பல நேரங்களில் நாம் யாரிடம்பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைக் கூட சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை நாம் பேச வேண்டும் என்பது மட்டுமே நமக்கு இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு, மெüனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகின்றான்.
-
நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம். அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது.பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.
-
மெளனத்தின் வெளிப்பாடு பல. கல்யாணப் பெண்ணின் மெளனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மெளனிக்கிறான். துன்பத்தின்உச்சியில் மெளனமே பேசுகிறது. மெளனம் இறைவனின் மொழி. “”சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே ” என்று முருகன்,
அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மெளனம். அமைதி வேறு, மெளனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மெளனம் உள்ளிருந்து வருவது. மெளனம்வார்த்தைகளற்ற நிலை. எண்ணங்கள் அற்ற நிலை. ஓம் என்ற பிரணவத்தின் பொருள், அறிவாக உள்ள இறைவனை, உயிராக உணர்கிற மனிதன், பேரின்ப நிலையாகிய மெளனத்தில் ஆழ்கிறான் என்பதே.
-
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக் கிறது. வாரம் ஒருமுறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி, மன அமைதி, மகிழ்ச்சி. இது மெளன தவத்தால் கிடைக்கும்.
-
மெளனத் தவம் செய்பவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி, அகக் கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது, அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது குறை, நிறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று, தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மெளனம் என்னும் மந்திர மொழி!
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம்.
நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம்.
எந்த தளத்திலிருந்து எடுத்து பதிவிடீர்கள் என்பதை குறிப்பிடவும்.
Re: மெளனம் என்னும் மந்திர மொழி!
“”தன்னை அறிந்து, இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீசொல்ல வேண்டும் வெண்ணிலாவே”என்ற வள்ளலாரின் பாடல் அவன்காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே அவன் இறைவனது பேராற்றலையும் பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கை கூடுகிறது. அவன்மனம் நிறைகிறது.
-
மெளன நோன்பு இரு வகை. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்துகொண்டு, அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனத்தையும் உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றி பெறும்.
-
இரண்டாவது ஆன்ம தூய்மைக்காககுடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும்.
மேலும் இந்த மெளனம் பற்றி யோகி வேதாத்திரி மகரிஷி கூறுவதைப் பாருங்களேன்!
-
மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில்மேம்பாடு வரும்.
-
இவைகளை எல்லாம் அனுபவத்தில்நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது,உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
-
ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாகஇருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
-
எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
-
அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள்அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதைஅழைத்துச் செல்லும்.
தகவலில் உதவி :; டாக்டர் பி.கி.சிவராமன், தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்
-
நன்றி ஆந்தை ரிப்ரோட்டர்
-
மெளன நோன்பு இரு வகை. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்துகொண்டு, அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனத்தையும் உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றி பெறும்.
-
இரண்டாவது ஆன்ம தூய்மைக்காககுடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும்.
மேலும் இந்த மெளனம் பற்றி யோகி வேதாத்திரி மகரிஷி கூறுவதைப் பாருங்களேன்!
-
மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில்மேம்பாடு வரும்.
-
இவைகளை எல்லாம் அனுபவத்தில்நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது,உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
-
ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாகஇருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
-
எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
-
அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள்அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதைஅழைத்துச் செல்லும்.
தகவலில் உதவி :; டாக்டர் பி.கி.சிவராமன், தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்
-
நன்றி ஆந்தை ரிப்ரோட்டர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» மவுனம் எனும் மந்திர மொழி!
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» மெளனம்
» மெளனம்
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» மெளனம்
» மெளனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|