Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலல்லாமல் வேறென்ன?
4 posters
Page 1 of 1
அரசியலல்லாமல் வேறென்ன?
தேர்தல் நேரத்தில் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் கண்டிப்புக்குப் பிறகு மெளனம் காத்து, இப்போது மேலும் சில மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு மானிய விலையிலான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அரசியலல்லாமல் வேறென்ன?
நிர்வாகத் திறமை இருந்தும் - துணிவும், நேர்மையும் தான் கேள்விக்குறியாய் நிற்கிறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அரசியலல்லாமல் வேறென்ன?
"ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!"
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Similar topics
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» இணைய கலாட்டா
» வேறென்ன செய்ய? ...
» வேறென்ன வேண்டும்
» வேறென்ன காதல்தான்
» இணைய கலாட்டா
» வேறென்ன செய்ய? ...
» வேறென்ன வேண்டும்
» வேறென்ன காதல்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|