ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - சட்டம்

4 posters

Go down

சிறுகதை - சட்டம் Empty சிறுகதை - சட்டம்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 19, 2013 2:52 am

சிறுகதை - சட்டம்

இளங்கோவை கையில் விலங்கு பூட்டி, காவல் துறை இழுத்துச் சென்று கொண்டிருந்தது. அவனுக்கு வயது 30-32 இருக்கலாம். கல்யாணமானவன். இரு சிறு குழந்தைகளின் தந்தை. ஒரு சிறு ஸ்டேஷனரி கடையின் முதலாளி. மனைவி மனோ கள்ளங்கபடமில்லாதவள். என்ன செய்வதென்று அறியாது அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளங்கோவின் மேல் சாட்டப்பட்ட குற்றம்தான் என்ன? அது ஒரு பாலியல் வழக்கு. குற்றம் சுமத்தியவள் சுமதி. தன்னை மானபங்கப்படுத்த முயற்சித்ததாக அவள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று இளங்கோ சிறையில். சுமதி யார்? இளங்கோவின் கடைக்கு அருகில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். சுமதிக்கு வயது 25 இருக்கும். பார்க்க இலட்சணமாக இருப்பாள். தினமும் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் இளங்கோ தன்னை வெறித்துப் பார்ப்பது வழக்கம் என்றும், கண்ணால் ஜாடை காட்டுவதும் யாரும் பார்க்காதபோது சைகையால் அழைக்கவும் செய்வான் என்றும், இவ்வாறு நடப்பதை தன்னால் யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்ததாகவும் சுமதி கூறினாள். இப்படி இருக்கையில் அலுவலகத்தில் தான் அன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததால் எல்லோரும் சென்றபின்னரும் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது இளங்கோ திடீரென்று அலுவலகத்துக்குள் வந்து தன்னை இணங்கும்படி வற்புறுத்தியதாகவும், தான் மறுத்தவுடன் கோபத்தில் "என்னைக்காவது ஒருநாள் உன்னை அடைந்தே தீருவேன்" எனக் கூறிச் சென்றதாகவும் காவல் நிலையத்தில் சுமதி கூறினாள். சுமதி கொடுத்த இந்த புகாரின் அடிப்படையில் இளங்கோ கைது செய்யப் பட்டான்.

நீதிமன்ற விசாரணையில் இளங்கோ தான் எதுவும் செய்யவில்லை என்று கூறினான். ஆனால், பாலியல் தொல்லைக்குண்டான தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்,

இளங்கோ கடையில் அமர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கேட்கும் பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு அழகிய பெண், கடைக்கு வந்து ஜெராக்ஸ் பேப்பர் ஒரு கட்டு வேண்டும் எனக் கேட்க, இளங்கோ எடுத்துக் கொடுக்க, வாங்கியவள் இளங்கோவை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்துச் சென்றாள். இளங்கோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஓரிரு நாட்களுக்குப் பின், கடைக்கு எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் எதேச்சையாக இளங்கோ பார்க்க அதே பெண் மீண்டும் சிரித்தாள். இளங்கோ பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே பெண் கடைக்கு வர, இளங்கோவிற்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. இம்முறை, பொருளை வாங்கும்போது, அவள் வேண்டுமென்றே அவன் கைகளை தடவி வாங்க, இளங்கோவிற்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் அவளை கோபத்துடன் முறைக்க, அவளோ, "நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க" எனக் கூற, இளங்கோ பதிலுக்கு, "என் மனைவி கூட அதைத்தான் அடிக்கடி சொல்வாள்" என்று நாசுக்காக தான் கல்யாணமானவன் என்பதைக் கூற, அவள் உடனே "உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா?" எனக் கேட்க, இளங்கோ "ஆமாம். எனக்கு இரு குழந்தைகள் கூட இருக்கின்றனர்" எனக் கூறினான்.

அடுத்த சில நாட்கள், அவள் அந்தக் கடைக்கு வரவில்லை. இளங்கோவும் நிம்மதிப் பெருமூச்சுடன் இருந்தான். மனதிற்குள் தன் ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் வராததை எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. மறுநாள், மீண்டும் அவள் வந்தாள். வந்தவள் அவனிடம் நேரடியாக, தான் அவனை விரும்புவதாகவும், அவனோடு வாழ்க்கை நடத்த ஆவலாக இருப்பதாகவும், இதனால் அவன் குடும்பத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் நடந்துகொள்வதாகவும் அவன் கையை பிடித்துக் கூற, இளங்கோ உடனே கையை உதறி, தான் அப்படிப் பட்டவன் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறி அவளை உடனே வெளியேறும்படி கூறினான். அவளோ, தன் முடிவில் ஸ்திரமாக அதையே கூற, இளங்கோ அவள் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து, வெளியேற்றினான். அதற்கு அவள் "உன்னை கட்டாயமாக பழி வாங்கியே தீருவேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாள். அந்த நிகழ்வின் பலன்தான் இளங்கோ இன்று சிறையில்.

சுமதி போன்ற பெண்களும் நாட்டில் இருப்பார்களேயானால், இளங்கோ போன்ற ஆண்களுக்கு சட்டத்தில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஏனெனில், பாலியல் புகாரில் ஒரு பெண்ணின் சொற்களுக்கு உள்ள மதிப்பு, ஆண்களின் வார்த்தைகளுக்கு இல்லை. இந்தக் கதையில் சட்டத்தை சுமதி தனக்குச் சாதகமாக்கியது மட்டுமல்லாது இளங்கோவை பழி தீர்க்கவும் பயன்படுத்திக்கொண்டாள். உண்மையை உரைக்க சாட்சிகளே இல்லாமல், நீதிமன்றத்தில் இளங்கோ தரப்பில் ஒருவரும் இல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் சுமதிக்குத் துணை நிற்க, இளங்கோ குற்றவாளியானான்.


சிறுகதை - சட்டம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by யினியவன் Sat Jan 19, 2013 5:23 am

ஆணுக்கு இதுபோல் வழக்குகளில் நிச்சயம் பாதிப்புகள் அதிகம் தான். சாட்சிகள், ஆவணங்கள் வேண்டும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க.

சரி அதேபோல் அந்தப் பெண்ணுக்கும் சாட்சிகள் வேண்டுமே குற்றத்தை நிரூபிக்க - எப்படி நிரூபித்தாள்???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by பாலாஜி Sat Jan 19, 2013 11:37 am

சரிதான் சந்திரசேகரன் அவர்களே ...

இன்னும் சில பெண்கள் ஆண்களை பழிவாங்க வரதட்சணை கொடுமை என்று நிறைய குடும்பங்களை பழிவாங்கி உள்ளனர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 19, 2013 3:24 pm

யினியவன் wrote:ஆணுக்கு இதுபோல் வழக்குகளில் நிச்சயம் பாதிப்புகள் அதிகம் தான். சாட்சிகள், ஆவணங்கள் வேண்டும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க.

சரி அதேபோல் அந்தப் பெண்ணுக்கும் சாட்சிகள் வேண்டுமே குற்றத்தை நிரூபிக்க - எப்படி நிரூபித்தாள்???
பெண்ணுக்கு குற்றத்தை நிரூபிக்க, ஆணைப் போல அத்தனை கஷ்டங்கள் இல்லை என்பதாக உள்ளது கதையின் போக்கு.


சிறுகதை - சட்டம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 19, 2013 3:26 pm

பாலாஜி wrote:சரிதான் சந்திரசேகரன் அவர்களே ...

இன்னும் சில பெண்கள் ஆண்களை பழிவாங்க வரதட்சணை கொடுமை என்று நிறைய குடும்பங்களை பழிவாங்கி உள்ளனர்
மிக்க சரி. என் மிக நல்ல நண்பரே, தன் மனைவியால் வரதட்சணை கொடுமை புகாரில் மாட்டி அவஸ்தைப்படுகிறார்.


சிறுகதை - சட்டம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by Muthumohamed Sun Jan 20, 2013 12:49 am

நல்லவனா இருந்தாலும் ஷைத்தான் தேடி வந்து தொல்லை கொடுக்கும்கறது இது தானோ?


பதிவு சூப்பருங்க



சிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Uசிறுகதை - சட்டம் Tசிறுகதை - சட்டம் Hசிறுகதை - சட்டம் Uசிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Oசிறுகதை - சட்டம் Hசிறுகதை - சட்டம் Aசிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Eசிறுகதை - சட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 8:19 am

Muthumohamed wrote:நல்லவனா இருந்தாலும் ஷைத்தான் தேடி வந்து தொல்லை கொடுக்கும்கறது இது தானோ?


பதிவு சூப்பருங்க
நன்றி முத்து. நாம் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு சட்டம் பற்றிய அறிவும் ஓரளவு தேவைப்படுகிறது.


சிறுகதை - சட்டம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by Muthumohamed Mon Jan 21, 2013 11:26 pm

ச. சந்திரசேகரன் wrote:
Muthumohamed wrote:நல்லவனா இருந்தாலும் ஷைத்தான் தேடி வந்து தொல்லை கொடுக்கும்கறது இது தானோ?


பதிவு சூப்பருங்க
நன்றி முத்து. நாம் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு சட்டம் பற்றிய அறிவும் ஓரளவு தேவைப்படுகிறது.


கண்டிப்பாக தேவைப்படுகிறது



சிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Uசிறுகதை - சட்டம் Tசிறுகதை - சட்டம் Hசிறுகதை - சட்டம் Uசிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Oசிறுகதை - சட்டம் Hசிறுகதை - சட்டம் Aசிறுகதை - சட்டம் Mசிறுகதை - சட்டம் Eசிறுகதை - சட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 3:03 am

Muthumohamed wrote:
ச. சந்திரசேகரன் wrote:
Muthumohamed wrote:நல்லவனா இருந்தாலும் ஷைத்தான் தேடி வந்து தொல்லை கொடுக்கும்கறது இது தானோ?


பதிவு சூப்பருங்க
நன்றி முத்து. நாம் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு சட்டம் பற்றிய அறிவும் ஓரளவு தேவைப்படுகிறது.


கண்டிப்பாக தேவைப்படுகிறது
ஆமோதித்தல்


சிறுகதை - சட்டம் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - சட்டம் Empty Re: சிறுகதை - சட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum