ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் இடியாப்ப சிக்கலா?

Go down

மீண்டும் இடியாப்ப சிக்கலா? Empty மீண்டும் இடியாப்ப சிக்கலா?

Post by Powenraj Fri Jan 18, 2013 10:00 am

கடலிலே நீர் வற்றினாலும் வற்றுமே தவிர, காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வே காண முடியாதோ? என்ற சந்தேகம் விவசாயிகள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தில் இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் விவசாயிகளுக்கு வருவது நல்லதல்ல. காவிரியைபொறுத்தமட்டில், 4 மாநிலங்கள், அதாவது கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நீரை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. இயற்கையின் அருட்கொடை அது. இது ஒருவருக்கு மட்டும் சொந்தம் அல்ல. 4 மாநிலங்களுக்கும் பொதுவானது. காவிரியில் பல பல ஆண்டுகளுக்கு முன்பே நீர்ப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தது..... நடந்தது..... நடந்துகொண்டே இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே முதல்-அமைச்சர்கள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் 26 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வியில் முடிந்தது. இனி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால், நீதிமன்றத்தின் ஆணைதான் வழிகாட்டும் என்பதற்கிணங்க உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
:-
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப 1990-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, இந்த நடுவர்மன்றத்தில் தனக்கு 562 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று உரிமை கொண்டாடியது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இந்த நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலதீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். அதை எந்தெந்த மாதங்களில் எவ்வளவு அளவு திறந்துவிடவேண்டும் என்றுதெளிவாக வகுத்து கொடுத்திருந்தது. ஆனால், இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்படாத நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதித்தீர்ப்பும் காவிரிநடுவர் மன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்படவேண்டும் என்று அறுதியிட்டு கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இந்த இறுதித்தீர்ப்பை அமல்படுத்தினால் காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால்தான் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட வேண்டிய கட்டாயம் இருக்கும். என்ன காரணமோ தெரியவில்லை, மத்திய அரசாங்கம் காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தது. மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தாவாக்கள் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு தடையல்ல என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-12-12 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் இறுதி தீர்ப்பை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? என்று, உச்சநீதிமன்றமே அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டதையும், வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே இடைக்கால உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
:-
காவிரி நடுவர்மன்றம் தனதுபணிகளை முடித்துவிட்டது. அரசிதழில் வெளியிட்டு விட்டால் அதன் பணிகளுக்கு தேவையே இல்லாதநிலை உருவாகிவிடும். இந்த நிலையில், பிரச்சினைகளை இடியாப்ப சிக்கல் போல மீண்டும் ஒரு நிலையை உருவாக்கும் வேலையை மத்திய அரசாங்கம் செய்து வருகிறது. காவிரி நடுவர்மன்றம் போல மேலும் பல மாநிலங்களுக்கு இடையேயுள்ள தண்ணீர் தாவாக்களை விசாரிக்க பல நடுவர் மன்றங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாகஒரே நடுவர்மன்றத்தை அமைத்து, அதன்கீழ் ஒவ்வொருபிரச்சினைக்கும் ஒரு பெஞ்சு அமைப்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரும் வகையில் மத்திய அரசாங்கம் முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், இந்த ஒரே நடுவர்மன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்தாமல், அமைக்கப்போகும் இந்த ஒரே நடுவர்மன்றத்தின் முன்பு இந்த பிரச்சினையை கொண்டுவந்தால் இந்த ஜென்மத்தில் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.எனவே, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, அரசியல் ரீதியாகவும், நீதிமன்றங்கள் வழியாகவும்நல்ல முடிவுகாண அரசு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே பொங்கியெழ வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.
:-
தினந்தந்தி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum