புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_m10தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் - பக்தி இலக்கியத்திற்கு பாம்பன் சுவாமிகளின் கொடை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 16, 2013 10:57 pm

முருகப்பெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வழிபட்ட அருளாளர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் (1850-1929). முருகனைக் கனவிலும் நனவிலும் பலமுறை கண்டு தரிசித்தவர். அகத்தியர், அருணகிரிநாதரை அடுத்து முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்ற மகா ஞானி பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் சீடரான "தமிழ்த் தென்றல்' திரு.வி.க., ""வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன்'' என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.

பாம்பன் சுவாமிகள் இயல் தமிழிலும், இசைத் தமிழிலும் சிறந்து விளங்கியவர். தமிழ்பற்று மிக்கவர். தமிழ் பக்தி இலக்கியத்திற்கு இவர் வழங்கிய கொடை ஏராளம்...ஏராளம்... வடமொழியே கலவாத தூய தமிழில் "சேந்தன் செந்தமிழ்' என்ற நூலை இயற்றியுள்ளார். மக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் தமிழ்க்கொடையாக வழங்கியுள்ளார். இவர் இயற்றியவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சிந்தாந்த சாத்திரம், தோத்திரம் முதலியவைகளின் நுட்பங்களை விளக்குபவையாக உள்ளன.

திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் பலவற்றை இயற்றியுள்ளார். சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளையும் பாடுவதில் வித்தகர். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி, இரண்டரைக் கடிகைக்குள் "பஞ்சவிம் சதி அதிக சதிபங்கி'யை அருளினார். இவருடைய பாடல்கள் 20-க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திரசக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலிவும், காவியச் சுவையும் மிக்கவை. தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவத்துக்கும், சாத்திரத்துக்கும் தோத்திரத்துக்குமாக பல பாக்களை இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய "சண்முகக் கவசம்' மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கவசத்தைத் தொடர்ந்து ஓதியதன் மூலம், மயில் வாகனத்தில் வந்த முருகன் தரிசனம் கண்டு, அவன் அருளால் சுவாமிகளின் உடைந்த கால் எலும்புகள் ஒன்று சேர்ந்துள்ளன. அந்நாள் ஆண்டுதோறும் "மயூரவாக சேவன விழா'வாக மார்கழி மாதத்தில் திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் சமாதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் தமிழ்மொழிக்கு அளித்துள்ள கொடைகளாவன: உயிரெழுத்தில் (அ முதல் ஒü வரை) தொடங்கி, மெய்யெழுத்துகள் (க முதல் ன வரை) முடிய அமையப்பெற்ற சண்முகக் கவசம் முப்பது பாடல்கள், பஞ்சாமிர்தவர்ணம், திருவலங்கற்றிரட்டு, திருப்பா, சீவயாதனா வியாசம், அட்டாட்ட விக்கிரகலீலை, பத்து பிரபந்தம், பரிபூரணானந்த போதம், செக்கர்வேள் செம்மாப்பு, செக்கர்வேள் இறுமாப்பு, தகராலய ரகசியம், குமாரவேள் பதிற்றுப்பத்தந்தாதி, சேந்தன் செந்தமிழ், சித்திரக் கவிகள் (ஏகபாதம், மாலைமாற்று, எழுகூற்றிருக்கை, ரதபந்தம், மயூரபந்தம், கமலபந்தம், துவிதநாகபந்தம், சஸ்திர பந்தம், காதை கரப்பு, சதுரங்க பந்தம், கோமூத்திரி, நாற்கூற்றிருக்கை, சருப்பதோ பத்திரம், ஒற்றிலாச் சுழிகுளம் ஆகியவை), ஆனந்தக் களிப்பு, குமாரஸ்தவம், சமாதான சங்கீதம், திருநெல்வேலி கோயில் பதிகம், திருக்கயிலாய திருவிளையாடல், வேற்குழலி வேட்கை, சரவணப் பொய்கை திருவிளையாடல், பகைகடிதல் போன்றவை. இத்தகைய பக்திப் பனுவல்களின் மூலம் தமிழ் மொழிக்குப் பல வகையான பா வகைகளை வழங்கி பக்தி இலக்கியச் செழுமைக்கும் இலக்கண வளமைக்கும் ஏற்றம் தந்தவர். அவர் இயற்றிய சித்திரக் கவிகளில் ஒன்றிரண்டைக் காண்போம்:

கமலபந்தம்
வரவிதி திருவ வருதிபொ னரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.

(எழுத்து 56; சித்தரம் -25)
இப்பாடலைப் பாடுவதால், தியான யோகமும், சிந்தை வலுவும் பெறுவதோடு, இ(ரு)தயம் தொடர்பான நோயும், பதற்றமும் நீங்கப் பெறலாம் என்று பாடலின் பயன் கூறப்பட்டுள்ளது.

மயூரபந்தம்
வரதந திபநக ரசுமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபுர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி.

(எழுத்து 100; சித்திரம் - 64)
இப்பாடலைப் பாடுவதால், வினைப்பகை விலகும், மந்திர, தந்திர, பில்லி சூனிய ஏவல் பிணி நீங்கப் பெறும் என்று பயன் கூறப்பட்டுள்ளது.


இரதபந்தம்
இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ
டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்

இப்பாடலைப் பாடுவதால், உண்டாகும் பயன்: வாகன விபத்துகள், விபத்துகள் பற்றிய பயம் தவிர்க்கவும், பயணத்தின் போது பாராயணம் செய்யவும் ஏற்றது.

இவ்வாறு பாம்பன் சுவாமிகள் தமிழ்மொழிக்கு வழங்கிய இலக்கிய - இலக்கணக் கொடையைத் தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது.

(பாம்பனார்-வாரியார் அடிப்பொடி' செ.வே.சதாநந்தன் நன்றி-தினமணி)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 16, 2013 11:09 pm

உலக மக்கள் அறியாமையிலிருந்தும், விலங்கு உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு பண்பட்ட அன்புள்ளத்தோடு அற வாழ்க்கையைக் கடைப்பிடித்து, சாந்த சீலர்களாய், ஒழுக்கமுள்ள உத்தமர்களாய், மனித நேயம் கொண்டவராய் வாழவும், நாட்டில் ஒற்றுமையுணர்வு மேலோங்கி அமைதி நிலவவும் அறிவுரை வழங்கி, நல்வழி வகுத்து அண்மையில் (1850-1929) வாழ்ந்த அருளாளர்தான் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்.

அவர் அத்தியாச்சிரம, சுத்தாத்வைத, வைதீக சைவ சித்தாந்த ஞானபாநு என்று புகழ்ந்து வணங்கப் படுகின்றார். சுவாமிகளின் சீடரான தமிழ்த்தென்றல் திரு. வி.க. தம் குரு வணக்கத்தில் பாம்பன் சுவாமிகளைத் “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்.

“ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றேயெனவும், தமிழாலும், வடமொழியாலும் அனைத்துக் கடவுட் கொள்கைகளையும் ஐயந்திரிபற உணர வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டும் ஒரு நெறி நோக்கியனவே யெனவும், இல்லறமும், துறவறமும் முரண் பட்டனவல்ல, ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வரும் ஒருமை நிலையினவே என்றும், இவ்வாறு இங்கே கூறப்பெற்ற மூவகை இருமைகளையும் இணைக்கும் திருவருட் பாலமாக நின்று உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டிய அருளாளரே பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்” என்று சித்தாந்த சரபம் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி அவர்கள் எழுதியுள்ளார்.

சுவாமிகள் இசைத் தமிழிலும், இயல் தமிழிலும் சிறந்து விளங்கியவர். இவர் வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன் என்றார் திரு.வி.க.

பலதெய்வ வழிபாட்டினைக் கண்டித்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடையவர். ஆன்ம நெறிக்குத் தடையாய் இருப்பது சாதி அபிமானமே என்று உரைத்தவர். சாதி வேறுபாடுகளை அறவே வெறுத்தவர். பொய்யினில் முனிவு கொண்டவர். சீவகாருண்யத்தைப் பெரிதும் போற்றியவர். ஒரு மூட்டைப் பூச்சி சிறுவனால் கொல்லப் பட்டதைக் கண்டு அவனைக் கண்டித்து மனம் வருந்தி அன்று பூராவும் உணவு உட்கொள்ளாமல் இருந்தார் சுவாமிகள்.

இறைவன் படைப்புகள் அனைத்தும் முக்கியமானவை என்றும், உடல் உருவத்தில் வேறுபட்டாலும் உயிர் அடிப்படையில் சமம் என்றும் கருதியவர். மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவர். வடமொழியே கலவாத தூய தமிழில் சேந்தன் செந்தமிழ் என்ற நூலை இயற்றியவர். சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று அறிவித்தவர். சேந்தன் செந்தமிழ் என்ற நூலுக்குப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் வரைந்த முகவுரையில் கூறியதாவது, “நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும், உரையும் உள்ள அமைப்பு இதுவரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.”

“இரை தேடுவதோடு இறையைத் தேடு” என்று சுவாமிகள் அறிவுறுத்தினார். முருகன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்று துணிபு கொண்டு உள்ளம் உருகி அருளிய பாடல்கள் 6666. வியாசங்கள் 32. இவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சமய சாத்திர தோத்திரம் முதலியவற்றின் நுட்பங்களைக் கொண்டன.

சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளை யாத்தார்கள். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி இரண்டரைக் கடிகைக்குள் “பஞ்சவிம்சதி அதிக சதபங்கியை” அருளினார்கள். இவருடைய பாடல்கள் 20 க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திர சக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலியும் காவியச் சுவை மிக்கவை. இவற்றை உள்ளத் தூய்மையுடன் ஓதி உடற் பிணியிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுபவர் பலர். பக்தர்கள் வழிபாட்டில் ஓதிப் பயன் பெறும் பதிகங்களில் முக்கியமானவை வருமாறு:

குமாரஸ்தவம் : கந்தபுராணச் சுருக்கம். 44 மந்திரங்களால் முருகப் பெருமானை அர்ச்சித்து, அவனுடைய திருவடியை அடைய வழிவகுப்பது.

சண்முக கவசம் : பகை, பயங்கரம், பாவம், வறுமை, நோய் முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறச் செய்வது.

பகை கடிதல் : பகையை வெல்லவும், திருமயிலின் மீது முருகனைத் தரிசிக்கவும் உதவுவது.

அட்டாட்ட விக்கிரக லீலை : உரோக நாசம், பாவ நாசம், சத்துரு நாசம், ஆயுள் விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி, உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும், முக்தியும் வாய்க்கும்.

வேற்குழவி வேட்கை : புத்திர தோட நிவர்த்தி, சந்ததி விருத்தி செய்வது.

திருக்கயிலாயத் திருவிளையாடல்: சிறுவர்களின் உடல் வன்மை, கல்வி அறிவு பெறுதல்.

பஞ்சாமிர்த வண்ணம் : ஆயுள் வளர்த்தல், மோட்சம், சுகம் பெறுதல்.

துக்கரகித பிரார்த்தனை : பல்வேறு துக்கங்களிலிருந்து விடுதலை அடைதல்.

பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப் பட்டவை. ஓர் எடுத்துக் காட்டு. பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணப் பாடலை இரண்டு வேதியர்கள் திருச்செந்தூர் கவுண்ட மண்டபத்தில் நாள்தோறும் பாராயணம் செய்யும்போது ஒரு நாள் அழகான ஓர் இளைஞன் இப்பாராயணத்தைக் கேட்டு மகிழ்ந்ததை அங்குள்ள மூதாட்டியிடம் சொன்னதாகப் பாம்பன் சுவாமிகள் பெருவேண்டுகோள் என்னும் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம்
இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப் பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே
வரிமாமறை இறைவா எனை மறவேல் எனை மறவேல்.”

“நான் பாடும் பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்” என்றும், “எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்” என்றும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைத் துதித்து உலகவர்க்காகவே வேண்டும் அருள்நிலை பரமாசாரியாராகவும், சமுதாய மேம்பாட்டுச் சிற்பியாகவும் திகழ்ந்தவர்.

பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கவை.

நிஷ்டையும், முருகப் பெருமான் தரிசனமும் : முருகப் பெருமானைக் கனவிலும், நினைவிலும் பலமுறை தரிசித்தவர். 1894 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இராமநாதபுரத்தை அடுத்த பிரப்பன் வலசை என்ற சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக் குழியில் 35 நாள்கள் ஊண், உறக்கமின்றித் தொடர்ந்து நிட்டை செய்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரிடம் உபதேசம் பெற்றார் பாம்பன் சுவாமிகள். இந்த தெய்வீக அனுபவத்தைத் தகராலய ரகசியம் (1896-”ஆம் வருடம்) என்ற தம்முடைய நூலில் விவரித்துள்ளார். 35 நாள்காறுந் தனிநிட்டை காத்திருந்த ஞான்று கௌபீனதாரியாய் வெளிப்பட்ட இறைவன், எமக்கொரு மொழியினுணர்த்தியருளினன் என்று இந்நூல் பாயிரத்தில் சுவாமிகள் கூறியுள்ளார்.

“எத்தனையோ தலம் சுற்றி வந்தேன் மனம் எட்டுணையும்
அத்தன் குமாரன் முருகனை நாட அடங்கவில்லை
பக்தர்கள் வாழ் பிரப்பன் வலசைச் செம்பதிதனிலே
சத்தியமாகக் கைகூடினதால் இனித் தாழ்வில்லையே”

மயூரவாகன சேவளம் : சுவாமிகளின் 73 ஆம் வயதில் (27.12.1923) ஓர் அற்புதம் நடந்தது. வட சென்னையிலுள்ள தம்பு செட்டித் தெருவில் சுவாமிகள் சென்றபோது ஒரு குதிரை வண்டி வேகமாக வந்து இவரைக் கீழே தள்ளியதால் இவருடைய கால் எலும்பு முறிந்தது. சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சுவாமிகள் சேர்க்கப்பட்டபோது அங்குள்ள ஆங்கிலேய மருத்துவர்கள் சுவாமிகள் மிகவும் வயதானவர் என்பதாலும், உப்பை அறவே நீக்கிய உணவு உட்கொள்வதாலும் எலும்புகள் இணையாது என்றும், காலின் ஒரு பகுதியை நீக்கிவிட வேண்டும் என்றும் கருதினார்கள். இக்கருத்தை சுவாமிகள் ஏற்க மறுத்து முருகப் பெருமான் கருணையால் இத்துன்பத்திலிருந்து தாம் காப்பாற்றப் படுவது நிச்சயம் என்று எண்ணி உறுதியுடன் வழிபட்டார்கள்.

“வானம் இடிந்து தலையில் விழும்படி
வம்பு வந்தாலும் என்னை- & அந்தக்
கான மயில் முருகையன் திருவருள்
கைவிட மாட்டாதே”

என்பது சுவாமிகளின் துணிபு.

சுவாமிகளின் சீடர்கள் சுவாமிகளால் அருளப் பெற்ற சண்முக கவசத்தை மனமுருகிப் பாராயணம் செய்தார்கள். மருத்துவமனையில் சேர்த்த 11-ஆம் நாள் இரவு (27.12.1923) சுவாமிகள் இரண்டு மயில்கள் மிகுந்த ஒளியோடு நடனம் ஆடுவதைக் கண்டு களித்து பிறகு அம்மயில்கள் மறைந்தபோது அழுது புலம்பினார்.

“விண் மகிழ்ந்திட வேல்விடு வேள்மயில்
கண் மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்
மண் மகிழ்ந்திட மாகம் மகிழ்ந்திட
எண் மகிழ்ந்த பதினொன்றின் இராவிலே”

பிறகு சுவாமிகள் படுத்திருந்த படுக்கையில் ஓர் சிவந்த நிறக் குழந்தை படுத்திருப்பதைச் சுவாமிகள் கண்ணுற்று, குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அக்குழந்தை மறைந்து விட்டது. அரசு மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்து எலும்பு கூடி வருவதைக் கண்டு ஆச்சர்யத்தோடு மகிழ்ந்தார்கள்.

“முன்காலை உதைத்தவன் கால்முளையாய் நின்றாய்
பின்காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என்காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின்காலை எனக்கு அளி என்றான்”

சுவாமிகள் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கிப் பூரண குணம் பெற்று பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடர்கள் இல்லத்தை அடைந்தார். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சுவாமிகள் ‘அசோகசாலவாசம்’ என்ற நூலில் 1924-ஆம் ஆண்டு விளக்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சி முருகப் பெருமான் தன் அடியவர் மீது கொண்டுள்ள கருணையையும், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தின் மகிமையையும் வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல், கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் என்ற உண்மையை வலியுறுத்துகிறது.

பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும், அதன் கீழ் எழுதப்பட்டுள்ள மேற்கண்ட அற்புத நிகழ்ச்சிக் குறிப்பையும் சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் 11-ஆவது வார்டில் (பழைய மன்றோ வார்டு) இன்றும் காணலாம்.

இந்த மயில் காட்சியையும், தெய்வீகச் செயல்களையும் நன்றியுணர்வுடன் போற்றி மயூரவாகன சேவன விழாவாக வருடந்தோறும் பாம்பன் சுவாமிகள் தாம் முக்தியடையும் வரை (1929) சிறப்பாகக் கொண்டாடினார்கள். சுவாமிகளால் நிறுவப்பட்ட மகாதேஜோ மண்டல சபையினர் இவ்விழாவை சுவாமிகளின் வில் சாசனத்தில் (1926) விளக்கியவாறு வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள்.

பாம்பன் சுவாமிகள் செவ்வேட்பரமன் சேவடியை 30.05.1929 தேதியில் அடைந்தார்கள். அவருடைய சமாதி நிலையம் சென்னை திருவான்மியூரில் நிறுவப்பட்டுள்ளது.

(நன்றி - செ.வே. சதாநந்தன் - ஓம்சக்தி ஆன்லைன் .காம் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக