ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன்

2 posters

Go down

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Empty கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன்

Post by nandhtiha Fri Oct 16, 2009 3:07 pm

வணக்கம்
திரு ஜெயபாரதன் - பாரதம் பெற்ற தவப்புதல்வர்களுள் ஒருவர். ஒரு மறக்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாவார், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இங்குள்ள தமிழர் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கின்ற காலத்தில் அந்நிய நாட்டில் இருந்தும் தம் மக்களுக்குத் தமிழைப் போதித்தவர், வானியல் விஞ்ஞானி, தமிழர்களால் போற்றப் படவேண்டியவர், கடமையில் தவறுபவர்கள் தமிழர்கள் தானே. இவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவருக்கு என்னுடைய வணக்கங்கள்
அவருடைய ஆக்கங்கள் திண்ணையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன, ஆர்வமுள்ளவர்கள் www.thinnai.com க்குள் சென்றால் ஓவ்வொரு வெள்ளியும் இவரிடமிருந்து ஒரு வெண் முத்துப் பிறக்கும். இவர் கலீல் கிப்ரானின கவிதைகளைத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறார், மூலத்தில் சுவை குறையாமல் எழுதுவது இவருடைய சிறப்பு, அதில் ஒன்று இன்றைய ஈழத்து நிலையை ஒத்திருப்பதனால் இங்கே தருகிறேன்
அன்புடன்
நந்திதா
***

Friday October 9, 2009

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் WomensDream
Fig. 1
Kahlil Gibran Paintings
“Women’s Dream”

"பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த மனித இனம்
கந்தைகளை அணிந்து நிர்வாணத்தை மூடி எலும்புக் கன்னங்களில் கண்ணீர் வடித்த
வண்ணம் தமது குழந்தைகளைப் பரிதாபமாய் விளித்துத் சிதைந்து போன இடங்களில்
நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பிள்ளைகள் அன்னையர் அழுகை அரவங்களைக்
கேட்க விடாமல் வாள் கத்திகளைத் தீட்டிக் கொண்டு தமது தேசீய கீதத்தைப்
பாடுவதில் தீவிரமாய் முனைந்துள்ளார்."
கலில் கிப்ரான்
"நான் என் பிறந்த தேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன். சிறுவனாய் நான்
வசித்த வீட்டைக் காண விரும்புகிறேன். ஆனால் அந்த இல்லத்தில் மக்கள்
பயணிகளுக்குத் தேவையாக உணவு கொடுத்துத் தங்கியிருக்க மறுத்தால் எனது
புகழ்ப் பாக்களை இரங்கற் பாக்களாய் மாற்றி வீட்டை மறக்க வேட்கை அடைவேன்.
அப்போது என்னுள்ளக் குரல் சொல்லும், "தேவையுள்ளோருக்கு ஆறுதல் அளிக்காத
அந்த வீட்டைத் தகர்த்து அழி." என்று.
கலில் கிப்ரான்
+++++++++
<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>
கவிதை -16 பாகம் -3
இன்னலில், துயரில்
எனக்கு ஆறுதல் அளிக்கும்
மெய்யான தோழன்
எனது ஆத்மாவே !
தனது சொந்த ஆத்மாவை
நேசிக்காதவன்
மனிதப் பகையாளி !
சுய வழி காட்ட
உள்ளத்தின் உள்ளே ஒன்றில்லாது
மரணம் அடைவான்
மனமுடைந்து !
வாழ்வு மலர்வது
ஒருவன்
உள்ளத்தின் உள்ளே தான்
வெளிப் புறத்தி லன்று !
+++++++++++++
நானொரு வார்த்தை
சொல்ல வந்தேன்
நானதைச் சொல்வேன்
இப்போது !
என் மரணம் உரைப்பதைத்
தடுத்தால்
நாளைக்குச் சொல்லப் படும்
அந்த வார்த்தை !
ஏனெனினில்
நீடிக்கும் சரித்திர நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிக் காது
ஓர் இரகசியத்தை !
+++++++++++++
அன்பின் மகிமை,
அழகு மயத்தின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
வாழப் பிறந்தேன் அவற்றில் !
அவ்விதத்தில்
வசிக்கிறேன் நானிங்கு !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
++++++++++++
எனது கண்களை
நீ பறித்துக் கொண்டால்
காதல் முணு முணுப்புகள்
கேட்கும் எனக்கு !
எழில் மயக் கீதங்கள்
செவியில் விழும் !
நீ செவிகளை அடைத்தால்
காதல் நறுமணம்
கலந்து
தென்றல் தொடும்
இன்பத்தை உணர்வேன் !
அழகத் துவத்தின்
வாசனை நுகர்வேன் !
++++++++++
நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
+++++++++++
வெற்றிடத்தில் என்னை
விட்டு விட்டால்
வாழ்திடுவேன் நான்
என் ஆத்மா வோடு
இணைந்து !
அழகத் துவமும் காதலும்
பெற்றெடுத்த
குழந்தை என் ஆன்மா !
நானோர் இதயத்தின் மூலம்
ஓதுவ தெல்லாம்
நாளை
ஆயிரம் இதயங்கள்
வாயசைக்கும் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]




Copyright:thinnai.com






****
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Empty Re: கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன்

Post by Tamilzhan Fri Oct 16, 2009 3:12 pm

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196 கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்
» கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்
» களில் கிப்ரான் தமிழ் கவிதைகள் வேண்டும்
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum