ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

+2
T.N.Balasubramanian
ரமணி
6 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by T.N.Balasubramanian Sat Jan 24, 2015 11:03 am

நன்றி ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ayyasamy ram Sat Jan 24, 2015 3:13 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 8QkmHiaVQRxN6zpx55e9+paramacharya-01
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ரமணி Sat Feb 14, 2015 8:34 am

ஜகத்குரு தரிசனம்
27. உச்சிட்ட நாதர்!
(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)

காளத்தி நாதரவர் கனிவோடு கொண்டாரே கண்ணப்பர் உச்சிட்டம்
காளமமர் கண்டருக்குக் காணிக்கை யாகநானும் தந்ததெலாம் மிச்சிலையே! ... 1

காளத்தி ஆலயத்தின் குடமுழுக்கு; காஞ்சிமுனி காணிக்கை இவ்விதமே
ஏளனமென் றிலையென்றார் ஏறுடையான் இட்டமுடன் ஏற்றிடுவான் எச்சிலையே. ... 2

பாலுடன்கங் கைநீரும் பட்டாடை யும்தேனும் நீராடற் கனுப்பினாரே
ஆலமர்ந்தான் ஆடலுக்கு அன்றுமுதல் இன்றுவரை ஆகிவந்த பொருளன்றோ? ... 3

தாய்மடியில் வாய்வைத்தே தான்கன்றும் எச்சிலாக்கி னாலொழியப் பால்தருமோ
தாயெனநாம் கொள்பசுவும்? ஆதலினால் தாயுமான வன்கொள்ளும் பாலெச்சில்! ... 4

தேமதுரம் தேடியலைத் தேனீதன் வாயாலே தேனுறிஞ்சிச் சேர்த்திடுமே
நாமதனை இட்டமாக நாடுதல்போல் நாதனவன் கொள்தேனும் எச்சிலாமே! ... 5

மீன்வாழும் கங்கைநீரும் மீன்வாயைத் திறந்துமூடிக் கொப்பளிக்க மிச்சிலாகும்
கூன்பிறையான் குடமுழுக்கும் குளிநீரும் எச்சிலாகக் கொள்ளுவனே இட்டமுடன்! ... 6

பட்டிழையை வாயாற்றான் பட்டுதரும் பூச்சிகளும் நூற்றிடுமே ஆகையினால்
இட்டமுடன் ஈசனனவன் ஏற்றணியும் பட்டாடை மிச்சிலென ஆவதுவே. ... 7

எனவேநான் ஐதீகம் ஏற்பதென ஈசனுக்குக் காணிக்கை எச்சிலாக
அனுப்பிவைத்தேன் என்றாரே அருமுனிதன் இன்முகத்தில் புன்னகையொன் றாடவிட்டே. ... 8

--ரமணி, 13/02/2015

உதவி:
http://periva.proboards.com/thread/8622/

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by T.N.Balasubramanian Sat Feb 14, 2015 9:35 am

அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .


எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக,
இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்,
சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.  
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

ரமணியன்


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Feb 14, 2015 10:29 am; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ரமணி Sat Feb 14, 2015 10:34 am

உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

[quote="T.N.Balasubramanian"]அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .
[quote]
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by M.Saranya Sat Feb 14, 2015 4:59 pm

மிக மிக அருமையான கவிதைகள் ........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by T.N.Balasubramanian Mon Feb 16, 2015 9:08 pm

ரமணி wrote:உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

T.N.Balasubramanian wrote:அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .

மேற்கோள் செய்த பதிவு: 1120508


ரமணியன்

தங்கள் வாழ்த்தால், மனம் நிறைவு பட்டது , திரு ரமணி அவர்களே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ரமணி Thu May 07, 2015 8:46 am

ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by ayyasamy ram Thu May 07, 2015 9:49 am

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 0Oc3pxPR0az81fIsoniQ+p23
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 H5qordR065WPzP6p9p0g+p27
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by T.N.Balasubramanian Thu May 07, 2015 10:24 am

ரமணி wrote:ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****
மேற்கோள் செய்த பதிவு: 1135344

அருமை மிக்க நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Empty Re: ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum