ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோஷ்ட்டியூர்

+3
krishnaamma
ராஜா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
7 posters

Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty திருக்கோஷ்ட்டியூர்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jan 14, 2013 1:29 pm

திருக்கோஷ்ட்டியூர் 312391_453615231358815_2108124148_n

12/01/2013 ல் திருக்கோஷ்ட்டியூர் தலம் சென்று வந்தேன் !

இங்கு சென்று பிரார்திக்க வேண்டும் என நீண்ட நாளாக ஒரு எண்ணம் !

இதன் தல வரலாறை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் நான் ஏன் இங்கு சென்றிருப்பேன் என்பதை ஊகித்துக்கொள்வீர்கள் !


நான் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த நாள் வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் என்பதை அறிந்துகொண்டேன் ! நான் அங்கு செல்வதன் நோக்கம் இரட்டிப்பாய் ஆக்கிகொடுத்ததற்காய் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன் !!

இந்த கோவிலின் உடையவர் என சொல்லப்படுபவர் நம்பியாண்டார் நம்பி என்னும் ஆழ்வாராவார் ! வைணவம் பிரபலமடைந்து அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது ! அவர் 1025 வருடங்களுக்கு முன்பு இங்கு பிறந்து இக்கோவிலை நிர்வகித்தவர் !!

வைணவத்தின் முத்தாக அத்வைத நெறியை உலகிற்கு முதல்முதலில் எடுத்தியம்பியவரும் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீராமணுஜர் - வைணவத்தை பட்டிதொட்டியெல்லாம் பரவ கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் -- ஸ்ரீரெங்க கோவில் உடையவர் !

அவர் 996 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரிலே பிறந்தவர் ! ஆன்மீக நாட்டமுள்ளவராகி ஸ்ரீரெங்கம் கோவில் வந்து தங்கி தொண்டு செய்து வந்தார் ! ஆனால் அவருக்கு தீட்சை மற்றும் மந்திர உபதேசம் கிடைக்கவில்லை !!

வைணவ நெறி ஓரளவு ஸ்தாபிக்க பட்டு ஆழ்வார்களால் பல கோவில்கள் பிரபலமடைந்திருதாலும் அதில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே பட்டர்களாகவும் ரகசியமாக மந்திரம் உபதேசிக்கபட்டவர்களாகவும் இருந்தனர் ! சாதாரன பொதுமக்கள் கோவிலில் வந்து வழிபடலாம் ; பிரசாதம் வாங்கலாம் அவ்வளவுதான் ஆன்மீக உபதேசம் எள்ளளவும் அவர்களுக்கு கிடையாது !

உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை நீ வெளியில் சொன்னால் கேட்டவரெல்லாம் பரலோகம் - சொர்க்கம் போவார்கள் ஆனால் நீ நரகம் போய்விடுவாய் என சத்தியம் வாங்கிக்கொண்டு அவரவர் பரம்பரைக்கு மட்டும் மந்திரம் சொல்லித்தருவார்கள் !

இப்படிப்பட்ட காலகட்டத்தில் மந்திர உபதேசம் மற்றும் தீட்சையை அவ்வளவு எளிதில் பிராமணகுலத்தில் பிறந்தவர்களுக்கும் கூட சொல்லித்தரமாட்டார்கள் ! வெளியூரிலிருந்து வந்து தங்கி சேவை செய்யும் ராமாணுஜருக்கு யாரும் உபதேசிக்கவில்லை ! அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு கனவில் திருக்கோஷ்ட்டியூர் சென்று நம்பிகளிடம் தீட்சை பெறுமாறு உணர்த்தப்பட்டது !

அதனால் ராமாணுஜர் ஸ்ரீரெங்கத்திலிருந்து திருக்கோஷ்ட்டியூர் நடந்து சென்று நம்பியின் வீட்டு கதவை தட்டுவாராம் ! நம்பி அவர்கள் யாரது எனக்கேட்டால் `` நான் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என்பாராம் ! நம்பி `` நான் செத்து நீ வா `` என்பாராம் ! திரும்பி விடுவாராம் ! இப்படி 18 முறை தீட்சை பெற அவர் வரவேண்டியிருந்தது ! இந்த 18 தடவைகளில் நான் யார் ; நான் எப்படி சாகும் என்ற விசாரம் ராமாணுஜரின் மனக்கண்ணை திறந்திருக்கிறது !

``நான் அதுவாக இருக்கிறேன் `` என்ற அத்வைத தத்துவத்தின் உட்பொருளை அவர் சிந்தித்து உணர்ந்து தாழ்மையடைந்த போது அகம்பாவம் மறைந்து `` அடியேன் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என சொன்னாராம் !

அப்போது நம்பி அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டாராம் !

அவருக்கு மந்திர உபதேசம் செய்ய சம்மதித்து இக்கோவிலின் தரைதளத்தில் வைத்து இம்மந்திரத்தை யாருக்கும் சொல்லமாட்டேன் என சத்தியம் வாங்கிக்கொண்டு `` ஓம் நமோ நாராயணா `` என்ற அஸ்ட்டாங்க மந்திரத்தை உபதேசித்தாராம் !!


இன்று சர்வசாதாரணமாக வைணவ கோவில்களில் எழுதிப்போட்டிருக்கும் `` ஓம் நமோ நாராயணா ` என்ற மந்திரம் கூட அன்றைக்கு யாருக்கும் சொல்லாமால் சிலர் மட்டுமே ஜெபிக்கிற அட்சரமாக இருந்திருக்கிறது !

இப்படித்தான் உண்மைகள் பல மாயைகளால் எப்போதுமே மூடப்பட்டு மறைக்க படுகின்றன ! யாரோ அடுத்தவர் மறைப்பது என்று மட்டும் அதை புரிந்து கொள்ளாதீர்கள் ! நாமே நமக்கு தெரிந்த பல விசயங்களை ஆழத்தை - அதன் மேன்மையை புரிந்து கொள்ளாமல் இருப்போம் ! அதற்கு வேறொரு அர்த்தம் சொல்லி அப்பியாசிப்போம் ! சரியான புரிதலை யாராவது சொன்னாலும் அவருடன் சண்டைக்கு போவோமே தவிர அதனை உள்வாங்கி விசாரம் செய்யாமலே இருப்போம் ! ரெம்ப நாள் கழித்து பட்டறிவால் - கடவுள் பட்டைதீட்டி கொடுக்கும்போது நமக்கு புரியும் ! இப்படி புரியாமலும் இருந்துகொண்டு புரிந்து சொன்னவரையும் இகழ்ந்துகொண்டும் இருந்திருக்கிறோம் என்பது எவ்வளவு விசயங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கிறது ! ஆனாலும் எங்கிருந்து ஒரு விசயம் வந்தாலும் அதனை கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற - அதை கடைபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை - ஆனால் கேட்பது - இப்படியும் இருக்கிறதா என்ற அறிதல் `` கேள்விஞானம்`` நமக்கு வருவதே இல்லை ! ஞானத்திற்கு முன்னோடியே கேட்பதுவே ! அதனால்தான் கேள்விஞானம் என்றார்கள் !

கேள் என்பதிலும் ஒரு மாயை இருக்கிறது ! இப்போது எதை நாம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம் ? எது ஏற்கனவே நமக்கு தெரியுமோ அதை அடுத்தவர் சொன்னால் கேட்டுக்கொள்கிறோம் ! தெரிந்ததையே மீண்டும் மீண்டும் கேட்டு புழகாங்கிதம் அடைவது ஒரு மனித இயல்பு ! தெரியாத ஒன்று வருமானால் உடனே அதனுடன் கத்தியை எடுத்து வீசுவீசென வீசிக்கொண்டிருப்போமே தவிற - நமக்கு எது தெரியுமோ அதை துருத்திக்கொண்டே இருப்பது - நம்மை துருத்திக்கொண்டே இருப்பது - அடுத்தவரை தெரிந்து கொள்வதே இல்லை ! கிணற்று தவளை மனப்பாண்மை ! கூட்டமாக கூடி கத்திக்கொண்டிருப்பது ! அடுத்த சத்தம் காதில் ஏறாது !

தெரிந்ததையே திரும்ப திரும்ப ஓராயிரம் முறை கேட்டாலும் அறிவு விருத்தி ஆகப்போகிறதா ? ஒரு தம்படி கூட நகராது ! எது நமக்கு தெரியாததோ அது நமக்கு தெரிந்தால் அது அறிவு விருத்தி ! ஞானவிருத்தி என்பது நமக்கு புரியாத ஒன்று புதிதாய் புரியும்போது மட்டுமே உண்டாகிறது ! அப்படியானால் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும்போது மட்டுமே நமது பட்டறிவு மற்றும் காலத்தின் போதனையால் அது உண்மை என நம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்னிலையில் நமக்குள் புதிய புரிதல் - ஞானவிருத்தி உண்டாகிறது !

ஞானவிருத்திக்கு அடிப்படையே தெரியாததை கேட்டு வைத்துக்கொள்ளுவதுதான் ! இந்த உண்மை புரியாமல் -- நிதானமில்லாமல் தெரியாத விசயங்களை காதே கொடுக்காமல் கத்தியை வீசிக்கொண்டிருப்பது மனித இயல்பு - மாயையின் பிடி !!

மாயைகள் மனிதனை கட்டிகட்டி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் தடை செய்கின்றன ! சுயம் அழிந்து எதையும் உள்வாங்கி உள்ளே ஏற்கனவே விளைந்த ஞானத்தின் துனையோடு நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் போராடி கடவுளின் கிருபையால் மட்டுமே பூரணஞானம் பெற முடியும் ! நிறை ஞானம் ; இன்னும் இன்னும் என்று போய்க்கொண்டே இருக்கும் ! இன்னும் இன்னும் கற்பதால் தாழ்மையடைந்து கடவுளை சார்ந்து கொள்ளும் ! முழு சரணாகதி - நிறைஞானம் - மெய்பக்தி ஒரு புள்ளியில் சந்திக்கும் ! ஓயாத மாயையை சகஜமாக நிதானிக்கும் தன்மை உண்டாகும் !!

எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழத்தில் ஒரு உண்மை இருக்கும் ! ஆனால் அதன் மீது அளவிடமுடியாத பொய்யை மனிதனும் அசுர ஆவிகளும் மாடமாளிகையாக கட்டிவைத்துவிடும் ! காலப்போக்கில் எல்லா உண்மைகளின் மீதும் பொய்கள் ஏறிக்கொள்ளும் ! வைணவம் வளர்ந்தபோது ஆழ்வார்கள் தங்கள் பக்தியின் திறத்தால் ஞானத்தால் சாதித்தவற்றை அவர்களின் பிறப்பு வாரீசுகள் பலனை அறுக்கிற கூட்டமாக வளர்ந்தார்கள் ! எந்த ஒரு கொள்கையும் அதன் சீடர்களால் சீரழிக்கபாடும் !

`` ஓம் நமோ நாராயணா `` என்ற மந்திரத்தைக்கூட வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உபநயணம் செய்வதாக அது மாறிவிட்டது ! மெல்ல வளர்ந்த விசத்தை யாராலும் அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்கமுடியாது ! ராமாணுஜருக்கு மந்திரம் அறிவிக்க தகுதியுடையவரான நம்பியவர்களாலும் கூட - நான் செத்து நீ வா என்று ஞானமொழி பேசியவரால்கூட பராம்பரியத்தால் வந்த இந்த மாயையை கண்டறியமுடியவில்லை ! சத்தியம் வாங்கிக்கொண்டுதான் ராமாணுஜருக்கு அறிவித்தார் !

மந்திரத்தை தெரிந்துகொள்ளவே இவ்வளவு தடை உண்டாக்கிய மாயை - அசுர சக்திகள் அந்த மந்திரத்தின் உட்பொருளை அவ்வளவு எளிதாகவா புரிந்துகொள்ள விடும் ? இதுதான் இன்றைய நிலைமை !!

திருக்கோஷ்ட்டியூர் 226718_453613524692319_966467877_n

ராமாணுஜர் அடுத்து செய்தது என்ன என அறிந்து கொள்ளும் முன் கோவிலைப்பற்றி சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும் !

இந்த கோவில் கதம்பமுணிவர் என்பவரின் ஆசிரமம் இருந்த இடம் ! இரண்யகசிபு பூமியில் நானே கடவுள் ( நான் அதுவாக இருக்கிறேன் என்பதற்கும் அது நானாக இருக்கிறேன் என்பதற்கும் அழுத்தம் வித்தியாசம் வருகிறது ; முன்னது சுயத்தை விடுவது பின்னது சுயத்தை துருத்துவது ) என அத்வைத நெறியை தவறாக வியாக்கியாணம் செய்து அரக்கணாக - அசுரர்களின் கைப்பாவையாக மாறி விட்ட பிறகு அவனை அழிப்பது எப்படி என தேவர்கள் ஆலோசனை செய்த இடம் ! அதனால் திருக்கோஷ்ட்டியூர் என பெயர் வந்த இடம் !

இக்கோவிலின் உள் நுழைபவர் முதலாவது பார்ப்பது சிவன் அதாவது மனிதன் ! அடுத்து கிருஷ்ணன் அதாவது இறைதூதன் - மனிதனாய் வந்த சற்குரு ! மேலே செளமிய நாராயணன் அதாவது சகலமுமாய் ஜட இயற்கையாய் - அசையும் அசையாதபொருட்களாய் வெளிப்படுகிறவர் ! எல்லா ஜட இயற்கையும் இவருக்குள்ளிருந்து இவரால் வெளிப்படுத்தப்பட்டு செயலற்றவராக அனந்தசயன கோலத்தில் உள்ளார் !

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!

கீதை 9:9 தனஞ்ஜயா ! இருப்பினும் இவ்விவகாரங்கள் எதுவும் என்னை பாதிப்பதேயில்லை ! ஜட இயற்கை செயல்பாடுகளில் பந்தப்படாமல் தனித்தும் சலணமற்றும் ஓய்ந்தும் இருக்கிறேன் !!

கீதை 9:10 ஜட இயற்கையானது எனது சக்திகளில் ஒரு பகுதி மட்டுமே ! எனது வழிகாட்டுதலின் படி அது உயிரற்ற உயிருள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது ! அந்த இயற்கை விதிகளின் படி திரும்பதிரும்ப பிரபஞ்சமானது உருவாக்க பட்டும் அழிக்க பட்டும் வருகிறது !!



இன்னும் மேலே சென்றால் உஜ்ஜயபெருமாள் ! இவர் நின்ற நிலையில் அதாவது செயல்படுகிறவராக - அதாவது முன்னேற உத்வேகம் அளிக்கிறவராக - உந்து சக்தியாக - தெய்வீக சக்தியாக உள்ளார் ! அதாவது அரூபத்தண்மையாக பரலோகத்தில் இருக்கிற விஷ்ணு !!

அதாவது விஷ்ணுவுக்குள் இரண்டு பகுதி இருக்கிறது ! ஒன்று அரூபமான தெய்வீக சக்தி மற்றது ஜட இயற்கையாக ரூபமான வெளிப்பாடு ! நாராயணன் என்றாலேயே நரணாய் வெளிப்பட்டவன் !

இந்த பூமி மற்றும் நட்சத்திர மண்டலம் ; பொருட்கள் மற்றும் உயிரிணங்கள் அனைத்தும் இவருக்குள்ளாக இருந்து வெளிப்படுத்தப்பட்டு ; இவரிலேயே தங்கி முடிவில் இவருக்குள்ளாகவே மறைந்தும் போகின்றன !சகலமும் இவரே !

பரிபாடல் 3:63-68 - சகலமும் அவரே என்பதை சொல்லுகிறது !


தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல், வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புருஷனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்.

காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்னும் பாடலில் பாரதியும் இக்கருத்தையே துதிக்கிறார் !

கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் யுகபுருஷனிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!

கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே யுகபுருஷனின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!

கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் யுகபுருஷனே என்பதை அறிவாய் !!

யுகபுருஷன் இரண்டு நிலைகளில் உள்ளார் ! பரலோகத்தில் அவர் பெருமாள் அல்லது விஷ்ணு ! பூமியிலோ அவர் அசையும் அசையா பொருட்களான நாராயணன் !

இன்னும் மேல் தளத்திற்கு சென்றால் அங்கு பரமபத நாதர் ! இந்த பரமபத நாதர் என்பவர் விஷ்ணுவுக்கும் மேற்பட்டவர் என்பது வைணவ மரபு ! இவரே அரூபமான கடவுள் - ஏக இறைவன் ! அல்லது ஆதிமூலம் !!

கீதை 8:3 உண்ணதமான கடவுளின் தூதர் கூறினார் : எது அழிவற்றதோ ' எல்லாவற்றிர்க்குள்ளூம் உயிரோட்டமாய் இயங்கிக்கொண்டிருப்பது எதுவோ அதுவே பிரம்மம் -- கடவுள் ! அவரின் உள்ளார்ந்த இயல்பே ஆதிமூலம் அல்லது அகம் ! அதுவே புறத்தில் பொருட்களாகவும் ; இயங்கும் படைப்பினங்களாகவும் வெளிப்பட்டு அவைகளின் இடைபடுதலால் உருவாகும் செயல்கள் `` கர்மம் `` அல்லது லோகாயாத செயல்பாடுகளாக அறியப்படுகின்றன !

கீதை 8:4 உடலுள்ளவைகளில் சிறந்தவனே ! பவ்தீகப்பொருட்கள் ஒன்று மற்றொன்றாய் வளர்சிதை மாற்றம் அடைந்துகொண்டே உள்ளன ! இது ஆற்றல் சுளர்ச்சி அல்லது ``ஆதிபுத்தா`` எனப்படும் ! இந்த வளர்சிதை மாற்றமே பொருட்களின் உருவாக்கமாக வெளிப்படுகின்றன ! சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் ! கடவுளின் சர்வவியாபகமோ சகலத்தையும் உள்ளடக்கியது ! வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் ! அவர்களையும் உள்ளடக்கியது !!

ஆதிபுத்தா -- நாரயணன்

ஆதியஜ்னா - பெருமாள்

இரண்டையும் உள்ளடக்கியவர் யுகபுருஷன் அல்லது திருமால் ; விஷ்ணு !

இவர் அல்லாத வானவர்கள் தேவதூதர்கள் , அசுரர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர் ஏக இறைவன் - கடவுள் !

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! :

கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும் அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலக்கமடைகின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

வைணவத்தின் முழுமை இந்த இறங்குவரிசையை உணர்ந்து கொள்வதில் உள்ளது !

1) ஏக இறைவன் - ஆதிமூலம் !

2) யுகபுருஷன் - விஷ்ணு . பெருமாள் - திருமால் !

3) நாராயணன் - படைக்கப்ட்டவைகளின் ஆதாரம் !

4) அவதாரம் - இறைதூதனாய் பூமிக்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுகிறவர் !

5) சிவன் -- மனித இறைதூதர்கள் - மகான்கள் !


இந்த வரிசையே திருக்கோஷ்ட்டியூர் கோவிலில் விளங்கப்பட்டுள்ளது ! அந்த பட்டர் திரும்பதிரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் ! உலகின் முதல் வைணவ கோவில் இதுதான் என்று ! இரண்யகசிபுக்கு முன்பே இந்த கோவில் இருந்துள்ளது ! இந்திய கோவில்கள் என்பவை ஒரு தத்துவத்தை எடுத்தியம்ப உருவாக்கபட்டவையாகத்தான் இருக்கும் ! காலப்போக்கில் தத்துவம் மறைந்து சும்மா கும்பிடுவதாய் மாறிவிட்டிருக்கும் !

அடுத்து பிரச்சினை வேண்டுதல் உள்ளோர் இங்கிருந்து விளக்கு (கார்த்திகை சிட்டி )ஒன்றை வாங்கிக்கொண்டு சென்று வீட்டிலே விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சினை தீரும் ! அப்போது விளக்கையும் கொடையையும் கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என்று !

இந்த கோவிலின் தத்துவம் மனிதன் கிருஷ்ணனாகிய இறைதூதன் வழிகாட்டிய வேத நெறியை கடைபிடித்து சர்வமும் நாரயணன் என்பதை உணரவேண்டும் ! அவரின் அருபத்தண்மையாகிய யுகபுருஷன் என்பதை உணர்ந்து அவர் நாமத்தாலே அவர் மூலமாக கடவுளை - ஏக இறைவனை வழிபடவேண்டும் என்பதுதான் !

இந்த கோவிலிலிருந்து இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் வீட்டிற்கு எடுத்து சென்று கடைபிடித்தால் மோட்சம் அடையலாம் என்பதுவே விளக்கை எடுத்து செல்வதாக மறுவியுள்ளது !


கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:23 யார் பலரை கடவுளுக்கு இணைவைத்து உள்ளார்ந்த பக்தி செலுத்துகிறார்களோ அவர்களின் பக்திதொண்டை நான் மதிக்கிறேன் ! ஆனாலும் அவர்கள் தவறான வழியில் பக்திதொண்டு செய்கிறார்கள் !!

கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

``ஓம் நமோ நாராயணா `` என்ற அஷ்ட்டாங்க மந்திரத்தின் உட்பொருளும் இதுவே !

``ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணனின் நாமத்தினாலே `` என்பதுவே அதன் உட்பொருள் ! நாரயணன் நாமத்தினாலே - அவர் மூலமாக கடவுளை துதிக்கவேண்டும் !!


நாரயணன் அவதாரமாக பூமிக்கு வந்த இறைதூதர்கள் நாமத்தாலும் கடவுளை துதிக்கலாம் !

அது திரேதா யுக ராமன் , துவாபர யுக கிருஷ்ணன் & கலியுக இயேசு மட்டுமே ! இவர்களுக்கு மட்டுமே நாமம் தரிக்கபட்டுள்ளது !

மனிதர்களில் இறைதுதராக உயர்த்தப்பட்டோர் , மாகான்கள் , ஞானிகள் ஆகியோர் மூலமாக பிரார்திக்கலாகாது !

வைணவத்தில் ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் என்று ஆழ்வார்களையும் வழிபடும் தவறான பழக்கம் வந்துவிட்டது ! ஆழ்வார்களை முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு வாழவேண்டுமே தவிற அவர்களை வழிபடுவது தவறு ! அது இணைவைப்பு என கடைசியாக வந்த வேதமான திருக்குரான் மூலமாக வந்த அறிவுரையாகும் !

ஆனால் ராமர் ,கிருஷ்ணர் , இயேசு நாமத்தினால் கடவுளிடம் பிரார்திக்கலாம் !

திருக்கோஷ்ட்டியூர் 185618_453613744692297_1276900106_n

சரி ! மேற்கொண்டு ராமாணுஜரிடம் வருவோம் ! மந்திர உபதேசம் பெற்றுக்கொண்ட அவர் என்ன செய்தார் ?

இந்த மந்திரத்தை அறிய அவர் 18 முறை ஸ்ரீரெங்கத்திற்கும் திருக்கோஷ்ட்டியூருக்கும் நடந்தார் ! ஆனால் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சத்தியம் வாங்கிக்கொண்டு சொல்லித்தந்தார்கள் ! ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து ஸ்ரீரெங்கம் வந்து கோவில் பணி செய்தாலும் பிறப்பால் பிராமணர் என்றாலும்கூட அவருக்கு மந்திரம் சொல்லித்தரவில்லை !

இந்த மகத்துவமான மந்திரத்தை ஜபித்து சகலமேன்மையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் இதை உலகத்தாருக்கு மறைத்து பல ஆத்துமாக்கள் முன்னேற கதியை மறைப்பது எவ்வளவு மாயையானது !

கடவுளை மெய்யாகவே ஓரளவெனும் உணர்ந்த ஆத்மாக்கள் மாயைகளை உடைத்தெறிவர் ! கடவுளை உணர்ந்தால் சகல மனிதர்களும் கடவுளின் சொரூபம் என்பதால் கடவுளின் மீதுள்ள பக்தி - அன்பு மனிதர்களின் மீதும் அன்பாக மலறும் ! மனிதாபிமானம் பக்தியிலிருந்து விளையும் ஒன்று ! அவர்களையே கடவுள் எப்போதும் பயன்படுத்துவார் ! அது பல பிறவி ஞானமுதிர்ச்சியால் வருவது !

அவர்கள் காலாவதியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிவர் ! ராமாணுஜரால் மட்டுமே பிறப்பு ஜாதியை கடந்து சகல மனுக்குலத்திற்கும் வைணவத்தை பரப்ப முடிந்தது ! இந்தியாவில் பட்டிதொட்டி எங்கும் அநேக ஆத்மாக்கள் அந்த உண்ணத நெறியால் மேன்மை அடைந்தார்கள் !

அந்த பக்தி - அன்புப்பெருக்கால் அவர் நான்காவது தளத்திலுள்ள பரமபத நாதர் விமாணத்தில் ; நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து சகலரையும் கூவி அழைத்தார் ! மனிதர்கள் உய்வடைய உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை இதோ கேளுங்கள் :

``ஓம் நமோ நாராயணா ! ஓம் நமோ நாராயணா ! `` மந்திரம் ரகசியம் என்பது உடைக்கபட்டது !

அந்த துவக்கம் இந்தியாவில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது ! ராமானுஜர் சாதித்தவை ஏராளம் ! அவர் பின்னாளில் ஸ்ரீபெரும்புதூரிலும் சகல ஜாதியாரையும் வைணவராக - வைணவ பாகவதம் செய்ய தகுதியுள்ளவர்களாக முத்திரி தரிப்பித்து பூசைக்கு தகுதியுள்ளவராக்கினார் !

பூசை குலத்தொழில் என்பதை மாற்றி பக்குவம் அடைந்த பக்தர்கள் அனைவரும் பூசை செய்யலாம் என்ற புரட்சியை உருவாக்கி சாதித்தும் காட்டினார் ! பட்டிதொட்டியெல்லாம் பெருமாள் கோவில்கள் உருவாக்கி அதில் அவரவர்களே திருப்பாவை திருவெம்பாவை நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடினார்கள் !

நான் பிறந்த குக்கிராமத்தில்கூட என் சிறு வயதில் முத்திரி வாங்கிய பெரியவர்கள் நிறைய இருந்தார்கள் ! எனது தாய்மாமன் ஊரிலும் நிறைய இருந்தார்கள் ! எனது தாயார் ; கவிஞர் காமாராசன் அவர்களது தாயார் இருவரும் ஒரே ஊரிலே பிறந்து ஒரே ஊரிலே வாழ்க்கைபட்டவர்கள் ! இருவரும் முத்திரி வாங்கியவர்களே !

எனது தாயார் ராமயணத்தை தாலாட்டாக பாடியே எங்களை தூங்க வைப்பார்கள் ! வயது முதிர்ந்த காலத்திலும் கூட புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார்கள் ! அவர்களுக்காகவே நான் பெரிய எழுத்து புத்தகங்களை மதுரையில் பழைய புத்தக கடைகளில் தேடிதேடி வாங்குவேன் ! அப்படித்தான் ஆன்மீகப்புத்தகங்கள் பல நானும் வாசித்தேன் ! அவர்கள் இறந்தபோது கண் வழியாகத்தான் ஆவி பிரிந்துவிட்டிருக்கும் என நம்புகிறேன் ! குளிப்பாட்டும்போது கண் திறந்து அவ்வளவு உயிர்ப்பாக - ஒளியோடு இருந்தது ! நல்ல ஆத்துமா ! பிறவாப்பெரு நிலைக்கு பக்குவப்பட்டவரே !

இப்படி அனேகர் உய்வடைய வைணவமார்க்கத்தை பரப்ப ராமாணுஜர் முன்னோடியாக இருந்தவர் ! எனக்கும் அவரது அனுக்கிரகம் உண்டெனவே கருதுகிறேன் ! தியானம் ; அத்வைதம் என அறிந்துகொள்ள தொடங்கிய காலகட்டத்தில் 24 வது வயதில் நானாக ஸ்ரீரெங்கம் சென்றேன் ! அங்கு ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே உடையவர் ராமாணுஜர் சன்னதிக்கு வந்தேன் ! அவர் பூமியின்மீதே ஜீவசமாதியில் இருப்பவர் என்பது எனக்கு தெரியும் ! உண்மையில் அவரை பார்க்கவே ஸ்ரீரெங்கம் சென்றது ! அப்போது அங்கு யாரும் இல்லை மதிய உணவுக்காக கோவில் நடைசாத்திக்கொண்டிருந்தார்கள் ! உடையவர் மூலஸ்தானத்தை சுற்றி குறுகலான நடை ஒன்று இருந்தது ! யாரும் இல்லாததால் அதில் நுழைந்து அவருக்கு பின்னால் அமர்ந்து தியானித்தேன் ! ஒரு பெரிய வெப்பம் என்னை அழுத்தி ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விட்டேன் ! கொஞ்ச நேரம் போனது போல தெரிந்தது ஆனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது திரும்ப ஆட்கள் வரவும் மெதுவாக எழுந்து வந்துவிட்டேன் ! ஆனால் என் உடலில் ஏறிய வெப்பம் நான்கு ஆண்டுகள் வரை என்னால் தாங்கமுடியாமல் இருந்தது ! வெயிலில் நிற்கவே முடியாது ! மார்கழி மாதத்தில் கூட அணலாய் என் உடல் தகிக்கும் ! ஆழமான தியானம் சித்திக்கும் ! லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து ஒரு வழியாக சமாளித்தேன் !!

அவரது அனுக்கிரகம் ; கடவுளின் அருள் நமக்கு வேண்டும் ! ஞானம் நிறைவு பெற வேண்டும் !

இன்றைய காலகட்டம் உலகம் முழுவதிலும் மார்க்க பேதங்கள் வளர்ந்து உண்மைகள் பல பொய்களால் மூடப்பட்டு விட்டன ! கலியின் மாயை உச்சத்தை அடைந்து விட்டது !

கல்கி வருவதற்கு காலம் கணிந்து விட்டது ! ஆனால் அவர் வருமுன் உலகில் சகல மதங்களையும் ஒருங்கினைத்து மக்கள் பலரை நல் வழிப்படுத்தும் வழிகட்டி - இமாம் - மனித இறைதூதர் ஒருவர் வருவார் என்பது அனைத்து மத வெளிப்பாடு ! அப்படிப்பட்ட நபராக மாற காந்தியடிகளுக்கு தகுதி இருந்தது ! அனால் காலம் கணியாததால் அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை !

அவரவர்கள் எங்கள் மதத்தில்தான் அவர் வருவார் என சொல்லிக்கொண்டுள்ளனர் ! ஆனால் அவர் இந்தியாவிலிருந்து மட்டுமே வரமுடியும் என்ற விவேகானந்தரின் முன்னறிவிப்பு நிறைவேறட்டும் என்ற வேண்டுதல் எனக்கு உண்டு ! இன்னும் மறைக்கபட்ட அநேக ஞான ரகசியங்களை கடவுள் வெளிப்படுத்த வேண்டும் ! அப்படிப்பட்ட பலர் உருவாக வேண்டும் என்ற வேண்டுதலுக்கே நான் திருக்கோஷ்ட்டியூர் விமாணத்திற்கு சென்றது !!

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!

ஏக இறைவனின் அன்பும் அருளும் சாந்தியும் நம் அனைவரையும் நிரப்புவதாக ! இந்தியாவில் ஆன்ம உள்ளொளி பெருகுவதாக !!

திருக்கோஷ்ட்டியூர் 555429_453613904692281_2047443821_n


Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jan 14, 2013 2:37 pm; edited 1 time in total
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by ராஜா Mon Jan 14, 2013 1:49 pm

நன்றி பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by krishnaamma Wed Aug 05, 2015 1:19 am

ரொம்ப அருமையான திரி, லிங்க் க்கு நன்றி......நாளை படித்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் போடுகிறேன், இப்போதைக்கு இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by M.Jagadeesan Wed Aug 05, 2015 8:44 am

திருக்கோட்டியூர் என்ற பெயர்தான் திருக்கோஷ்டியூர் என்று மருவிற்று .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by சிவா Wed Aug 05, 2015 11:17 pm

பதிவுக்கு நன்றி, இனிமேல் தான் படிக்க வேண்டும். திருக்கோஷ்ட்டியூர் 1571444738


திருக்கோஷ்ட்டியூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by krishnaamma Fri Aug 07, 2015 2:12 am

ரொம்ப அருமையான பகிர்வு ............... .மிக்க நன்றி ! ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by tnkesaven Thu Aug 13, 2015 1:41 pm

உண்மையிலேயே தேவரீர் ஸ்ரீமத் ராமானுஜருடைய அனுக்ரஹம் பெற்றவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தேவரீரின் ஆன்மிக ஈடுபாட்டை அறிந்து வியப்புற்றேன் .
அடியேன்
திருமலை நம்பாக்கம் கேசவ ராமானுச தாசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஆண்டாள் ஜீயர் திருவடிகளே சரணம்
காரேய் !!!கருணா !! இராமானுசா
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by ayyasamy ram Thu Aug 13, 2015 1:46 pm

திருக்கோஷ்ட்டியூர் 103459460 திருக்கோஷ்ட்டியூர் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருக்கோஷ்ட்டியூர் Empty Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum