புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 80 of 84 •
Page 80 of 84 • 1 ... 41 ... 79, 80, 81, 82, 83, 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (540)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது தொல்காப்பியர் பேசுவது அஃறிணை வினைச்சொற்கள் பற்றி!
முதற்கண், பன்மை வினைமுற்றுப் பற்றி ஓதுகிறார்:-
“அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை” (வினையியல் 19)
அஃதாவது- ’அ’, ‘ஆ’, ‘வ’ என்ற மூன்று ஈறுகளையும் கொண்டு பலவின்பால் வினைமுற்றுகள் அமையும்!
நச்சர் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு பட்டியலிடலாம்!:-
1. தொக்கன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்கன- எஞ்சிநின்றன)
2. தொக்க – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்க- எஞ்சிநின்றன)
3. தொக்கில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(தொக்கில- எஞ்சிநில்லாதன)
4. உண்டன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
5. உண்ட – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
6. உண்டில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. வந்தன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
8. வந்த – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
9. வந்தில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
10. சென்றன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
11. சென்ற – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
12. சென்றில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
13. அஞ்சின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
14. தப்பின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
15. உரிஞின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (உரிஞின- உரிஞ்சின)
16. பொருநின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (பொருநின - பொருந்தின)
17. நண்ணின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (நண்ணின – நெருங்கின)
18. செருமின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (செருமின – நிரம்பின)
19. துன்னின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (துன்னின – அணுகின)
20. போயின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
21. சேரின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
22. சொல்லின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
23. மேவின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
24. துள்ளின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
25. போயன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
26. போய - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
27. உண்ணாநின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
28. உண்ணாநின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
29. உண்ணாநின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
30. உண்கின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
31. உண்கின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
32. உண்கின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
33. உண்பன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
34. உண்ப - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
35. உண்ணல - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
36. வருவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
37. வருவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
38. உரிஞுவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
39. உரிஞுவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
40. உண்ணா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
41. தின்னா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
42. உண்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
43. தின்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
44. உண்ணுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
45. ஓடுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
46. தாவுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
47. உரிஞுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
48. செருமுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது தொல்காப்பியர் பேசுவது அஃறிணை வினைச்சொற்கள் பற்றி!
முதற்கண், பன்மை வினைமுற்றுப் பற்றி ஓதுகிறார்:-
“அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை” (வினையியல் 19)
அஃதாவது- ’அ’, ‘ஆ’, ‘வ’ என்ற மூன்று ஈறுகளையும் கொண்டு பலவின்பால் வினைமுற்றுகள் அமையும்!
நச்சர் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு பட்டியலிடலாம்!:-
1. தொக்கன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்கன- எஞ்சிநின்றன)
2. தொக்க – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்க- எஞ்சிநின்றன)
3. தொக்கில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(தொக்கில- எஞ்சிநில்லாதன)
4. உண்டன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
5. உண்ட – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
6. உண்டில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. வந்தன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
8. வந்த – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
9. வந்தில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
10. சென்றன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
11. சென்ற – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
12. சென்றில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
13. அஞ்சின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
14. தப்பின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
15. உரிஞின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (உரிஞின- உரிஞ்சின)
16. பொருநின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (பொருநின - பொருந்தின)
17. நண்ணின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (நண்ணின – நெருங்கின)
18. செருமின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (செருமின – நிரம்பின)
19. துன்னின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (துன்னின – அணுகின)
20. போயின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
21. சேரின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
22. சொல்லின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
23. மேவின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
24. துள்ளின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
25. போயன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
26. போய - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
27. உண்ணாநின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
28. உண்ணாநின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
29. உண்ணாநின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
30. உண்கின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
31. உண்கின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
32. உண்கின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
33. உண்பன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
34. உண்ப - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
35. உண்ணல - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
36. வருவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
37. வருவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
38. உரிஞுவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
39. உரிஞுவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
40. உண்ணா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
41. தின்னா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
42. உண்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
43. தின்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
44. உண்ணுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
45. ஓடுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
46. தாவுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
47. உரிஞுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
48. செருமுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வினையியலில், இப்போது படர்க்கை ஒன்றன்பால் வினைபற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர் :-
“ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்” (வினையியல் 20)
இதன் கருத்தாவது – ‘து’, ‘று’, ‘டு’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்றே படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று அமையும்!
இதற்கு நச்சரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை , நாம் விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:-
1. புக்கது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கது- புகுந்தது)
2. புக்கிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று (புக்கிலது- புகவில்லை)
3. உண்டது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
4. உண்டிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
5. வந்தது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
6. வந்திலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. சென்றது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
8. சென்றிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
9. எஞ்சியது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
10. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
11. உரிஞியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உரிஞியது- உரிஞ்சியது)
12. கண்ணியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
13. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
14. பொருநியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருநியது- பொருந்தியது)
15. பொருமியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருமியது- துன்புற்றது)
16. துன்னியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (துன்னியது- நெருங்கியது)
17. போயது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
18. கூரியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
19. சொல்லியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
20. மேவியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
21. துள்ளியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
22. நடவாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று (நடவாநின்றது- நடக்கின்றது)
23. நடவாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று(நடவாநின்றிலது- நடக்கவில்லை)
24. நடக்கின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
25. நடக்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிமறை வினைமுற்று
26. உண்ணாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
27. உண்ணாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
28. உண்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
29. உண்பது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
30. செல்வது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
31. புக்கன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கன்று - புகுந்தது)
32. புக்கின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(புக்கின்று - புகவில்லை)
33. உண்டன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உண்டன்று -சாப்பிட்டது)
34. உண்டின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(உண்டின்று - சாப்பிடவில்லை)
35. வந்தன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(வந்தன்று - வரவில்லை)
36. சென்றன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(சென்றன்று - சென்றது)
37. சென்றின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(சென்றின்று - செல்லவில்லை)
38. கூயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(கூயிற்று - கூவியது)
39. கூயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(கூயின்று - கூவவில்லை)
40. போயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(போயிற்று - போனது)
41. போயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(போயின்று - போகவில்லை)
42. குண்டுகட்டு – ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குண்டுகட்டு – குண்டான கண்ணையுடையது)
43. குறுந்தாட்டு - ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குறுந்தாட்டு – குறுகிய தாளை உடையது)
எடுத்துக்கட்டுகள் 1 முதல் 30 வரையானவை, உயிர்த்தொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 31 முதல் 37 வரையானவை மற்றும் 39,41 ஆகியவை மென்றொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 38 , 40, 42,43 ஆகியன வன்றொடர்க் குற்றியலுகர ஈறு கொண்டவை. 42,43 ஆகியவை மூன்று காலங்களுக்கும் பொருந்துவன.
இதுவரை ஆறு ஈறுகளைப் பார்த்துள்ளோம்!
அ, ஆ,வ, து, று, டு – ஆகியனவே இவை!
இந்த ஆறு ஈறுகளைக் கொண்டே படர்க்கைப் பலவின்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும், படர்க்கை ஒன்றன்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும் அமைகின்றன என்று மேலே பார்த்தோம்! இதனைத்தான், மீண்டும் ஒரு தொகுப்புரைபோலச் சொல்லுகிறார் தொல்காப்பியர்:-
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே” (வினையியல் 21)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வினையியலில், இப்போது படர்க்கை ஒன்றன்பால் வினைபற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர் :-
“ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்” (வினையியல் 20)
இதன் கருத்தாவது – ‘து’, ‘று’, ‘டு’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்றே படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று அமையும்!
இதற்கு நச்சரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை , நாம் விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:-
1. புக்கது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கது- புகுந்தது)
2. புக்கிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று (புக்கிலது- புகவில்லை)
3. உண்டது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
4. உண்டிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
5. வந்தது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
6. வந்திலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. சென்றது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
8. சென்றிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
9. எஞ்சியது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
10. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
11. உரிஞியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உரிஞியது- உரிஞ்சியது)
12. கண்ணியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
13. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
14. பொருநியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருநியது- பொருந்தியது)
15. பொருமியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருமியது- துன்புற்றது)
16. துன்னியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (துன்னியது- நெருங்கியது)
17. போயது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
18. கூரியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
19. சொல்லியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
20. மேவியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
21. துள்ளியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
22. நடவாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று (நடவாநின்றது- நடக்கின்றது)
23. நடவாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று(நடவாநின்றிலது- நடக்கவில்லை)
24. நடக்கின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
25. நடக்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிமறை வினைமுற்று
26. உண்ணாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
27. உண்ணாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
28. உண்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
29. உண்பது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
30. செல்வது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
31. புக்கன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கன்று - புகுந்தது)
32. புக்கின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(புக்கின்று - புகவில்லை)
33. உண்டன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உண்டன்று -சாப்பிட்டது)
34. உண்டின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(உண்டின்று - சாப்பிடவில்லை)
35. வந்தன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(வந்தன்று - வரவில்லை)
36. சென்றன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(சென்றன்று - சென்றது)
37. சென்றின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(சென்றின்று - செல்லவில்லை)
38. கூயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(கூயிற்று - கூவியது)
39. கூயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(கூயின்று - கூவவில்லை)
40. போயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(போயிற்று - போனது)
41. போயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(போயின்று - போகவில்லை)
42. குண்டுகட்டு – ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குண்டுகட்டு – குண்டான கண்ணையுடையது)
43. குறுந்தாட்டு - ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குறுந்தாட்டு – குறுகிய தாளை உடையது)
எடுத்துக்கட்டுகள் 1 முதல் 30 வரையானவை, உயிர்த்தொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 31 முதல் 37 வரையானவை மற்றும் 39,41 ஆகியவை மென்றொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 38 , 40, 42,43 ஆகியன வன்றொடர்க் குற்றியலுகர ஈறு கொண்டவை. 42,43 ஆகியவை மூன்று காலங்களுக்கும் பொருந்துவன.
இதுவரை ஆறு ஈறுகளைப் பார்த்துள்ளோம்!
அ, ஆ,வ, து, று, டு – ஆகியனவே இவை!
இந்த ஆறு ஈறுகளைக் கொண்டே படர்க்கைப் பலவின்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும், படர்க்கை ஒன்றன்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும் அமைகின்றன என்று மேலே பார்த்தோம்! இதனைத்தான், மீண்டும் ஒரு தொகுப்புரைபோலச் சொல்லுகிறார் தொல்காப்பியர்:-
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே” (வினையியல் 21)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடத் தொடத் தொல்காப்பியம் (542)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயர்திணை வினைகளைப் பார்த்தபோது, உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுகளைக் கண்டோம்! அதைப்போன்றே இப்போது அஃறிணை வினைமுற்றுகளைப் பார்த்துள்ள நாம் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளைப் பார்க்கப் போகிறோம்!
முதலாவதாக ‘எவன்’ என்னும் குறிப்பு வினைமுற்று:-
“அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே” (வினையியல் 22)
‘எவன்’ எனும் வினாவானது, அஃறிணைச் சொல்லாய், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொருந்தி வரும்!
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள்- ‘அஃது எவன்?’ ; ‘அவை எவன்?’
‘அஃது எவன்?’ – என்பதில், ‘அஃது’ என்ற அஃறிணை ஒருமைக்கு இயைய ‘எவன்’ வந்துள்ளது.
‘அவை எவன்?’ – என்பதில், ‘அவை’ என்ற அஃறிணைப் பன்மைக்கு ஏற்ப அதே ‘எவன்’ வந்துள்ளது.
இந்த ‘எவன்’ எனும் வினாச் சொல், ‘குறிப்பு வினைமுற்று’ என்று மேல் தொல்காப்பியர் நூற்பாவில் கூறப்படவில்லை; சேனாவரையர் உரையில்,’எவன்’, குறிப்பு வினைமுற்றாகக் கூறப்பட்டுள்ளது.நன்னூலிலும் (சூத்தி. 350) ‘எவன்’ , குறிப்பு வினைமுற்றாகவே வருகிறது.
சேனாவரையர் இந்த ‘எவன்’ பற்றிச் சிறிது ஆய்ந்துள்ளார். ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக் காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும்’.
ஆகவே, ‘எவன்’ எனும் வினாச் சொல், குறிப்பு வினைமுற்று மற்றும் பெயர்ச்சொல் ஆகிய இரு வகைகளில் வரும் என்பது தெளிவாகிறது.
இங்கே சிறிது விளக்கம் தேவைப்படுகிறது!
தொல்காப்பியம் கிளவியாக்கம் நூற்பா 31இல் ‘எவன்’ பேசப்பட்டுள்ளது. அங்கே, அறியாப் பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைப் பெயர்ச்சொல் என்று கருதலாம் என விதி கூறப்பட்டுள்ளது.
ஆகவே அறிந்த பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைக் குறிப்பு வினைமுற்றாகக் கருத இடம் ஏற்படுகிறது!
பூட்டிய பெட்டிக்குள் இருப்பது எவன்? – இங்கு வந்துள்ள ‘எவன்’, பெயர்ச் சொல். ஏனெனில், அந்தப் பொருள் இன்னது என்று கேட்டவனுக்குத் தெரியாது; அவன் பொருளைப் பார்க்கவில்லை!
ஓரிடத்தில் கொட்டிவைத்துள்ள பொருளைக் காட்டி, ‘இஃது எவன்?’ என்று கேட்டால்,
இங்கு வந்துள்ள ‘எவன்’, குறிப்பு வினைமுற்று! ஏனெனில், அந்தப் பொருளை அவன் பார்த்துத்தான் மேல் விளக்கத்திற்காகக் கேட்கிறான்.இந்த ‘எவன்’ என்பதில் ஒரு வினைத் தன்மை உள்ளது!
எவன் – என்னவாக இருக்கிறது ; இந்த ‘இருத்த’லே வினைத்தன்மை.
ஒரு பொருள் பற்றி, ‘இஃது எவன்?’ எனவும் கேட்கலாம்; பல பொருட்கள் பற்றியும் ‘இவை எவன்?’ என்றும் கேட்கலாம்!
’நீ இப்படிப் பேசுவதால் பயன் எவன்?’ – இதில் வந்துள்ள ‘எவன்’ , பெயர்ச்சொல்!
ஏனெனில், ‘நீ இப்படிப் பேசுவதால் பயன் இல்லை’ என்பதே தொடர்க் கருத்து; ஆகவே, பார்க்காத பொருள் பற்றி ‘எவன்’ வந்துள்ளதால், அது வினாப் பெயர்! இந்த ‘எவன்’ என்பதில் வினைத்தன்மை இல்லை! இங்கே எவன் – என்ன என்பது மட்டுமே. உரையாசிரியன்மார் நடைகளில் அடிக்கடி ‘என்னை?’என்ற வினாவைப் பார்த்திருப்பீர்கள்; இந்த ‘என்னை’ , பெயர்ச்சொல்லான ‘எவன்’ என்பதன் மரூஉ.
இந்த ‘எவன்’ என்ற வினா, இப்போது வழக்கில் இல்லை! தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்திலேயே அருகிவிட்டது!
இன்றைய இலக்கணத்தில்,
‘எவன்’ – பிரதிப் பெயர்ச்சொல் (interrogative pronoun)
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயர்திணை வினைகளைப் பார்த்தபோது, உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுகளைக் கண்டோம்! அதைப்போன்றே இப்போது அஃறிணை வினைமுற்றுகளைப் பார்த்துள்ள நாம் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளைப் பார்க்கப் போகிறோம்!
முதலாவதாக ‘எவன்’ என்னும் குறிப்பு வினைமுற்று:-
“அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே” (வினையியல் 22)
‘எவன்’ எனும் வினாவானது, அஃறிணைச் சொல்லாய், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொருந்தி வரும்!
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள்- ‘அஃது எவன்?’ ; ‘அவை எவன்?’
‘அஃது எவன்?’ – என்பதில், ‘அஃது’ என்ற அஃறிணை ஒருமைக்கு இயைய ‘எவன்’ வந்துள்ளது.
‘அவை எவன்?’ – என்பதில், ‘அவை’ என்ற அஃறிணைப் பன்மைக்கு ஏற்ப அதே ‘எவன்’ வந்துள்ளது.
இந்த ‘எவன்’ எனும் வினாச் சொல், ‘குறிப்பு வினைமுற்று’ என்று மேல் தொல்காப்பியர் நூற்பாவில் கூறப்படவில்லை; சேனாவரையர் உரையில்,’எவன்’, குறிப்பு வினைமுற்றாகக் கூறப்பட்டுள்ளது.நன்னூலிலும் (சூத்தி. 350) ‘எவன்’ , குறிப்பு வினைமுற்றாகவே வருகிறது.
சேனாவரையர் இந்த ‘எவன்’ பற்றிச் சிறிது ஆய்ந்துள்ளார். ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக் காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும்’.
ஆகவே, ‘எவன்’ எனும் வினாச் சொல், குறிப்பு வினைமுற்று மற்றும் பெயர்ச்சொல் ஆகிய இரு வகைகளில் வரும் என்பது தெளிவாகிறது.
இங்கே சிறிது விளக்கம் தேவைப்படுகிறது!
தொல்காப்பியம் கிளவியாக்கம் நூற்பா 31இல் ‘எவன்’ பேசப்பட்டுள்ளது. அங்கே, அறியாப் பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைப் பெயர்ச்சொல் என்று கருதலாம் என விதி கூறப்பட்டுள்ளது.
ஆகவே அறிந்த பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைக் குறிப்பு வினைமுற்றாகக் கருத இடம் ஏற்படுகிறது!
பூட்டிய பெட்டிக்குள் இருப்பது எவன்? – இங்கு வந்துள்ள ‘எவன்’, பெயர்ச் சொல். ஏனெனில், அந்தப் பொருள் இன்னது என்று கேட்டவனுக்குத் தெரியாது; அவன் பொருளைப் பார்க்கவில்லை!
ஓரிடத்தில் கொட்டிவைத்துள்ள பொருளைக் காட்டி, ‘இஃது எவன்?’ என்று கேட்டால்,
இங்கு வந்துள்ள ‘எவன்’, குறிப்பு வினைமுற்று! ஏனெனில், அந்தப் பொருளை அவன் பார்த்துத்தான் மேல் விளக்கத்திற்காகக் கேட்கிறான்.இந்த ‘எவன்’ என்பதில் ஒரு வினைத் தன்மை உள்ளது!
எவன் – என்னவாக இருக்கிறது ; இந்த ‘இருத்த’லே வினைத்தன்மை.
ஒரு பொருள் பற்றி, ‘இஃது எவன்?’ எனவும் கேட்கலாம்; பல பொருட்கள் பற்றியும் ‘இவை எவன்?’ என்றும் கேட்கலாம்!
’நீ இப்படிப் பேசுவதால் பயன் எவன்?’ – இதில் வந்துள்ள ‘எவன்’ , பெயர்ச்சொல்!
ஏனெனில், ‘நீ இப்படிப் பேசுவதால் பயன் இல்லை’ என்பதே தொடர்க் கருத்து; ஆகவே, பார்க்காத பொருள் பற்றி ‘எவன்’ வந்துள்ளதால், அது வினாப் பெயர்! இந்த ‘எவன்’ என்பதில் வினைத்தன்மை இல்லை! இங்கே எவன் – என்ன என்பது மட்டுமே. உரையாசிரியன்மார் நடைகளில் அடிக்கடி ‘என்னை?’என்ற வினாவைப் பார்த்திருப்பீர்கள்; இந்த ‘என்னை’ , பெயர்ச்சொல்லான ‘எவன்’ என்பதன் மரூஉ.
இந்த ‘எவன்’ என்ற வினா, இப்போது வழக்கில் இல்லை! தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்திலேயே அருகிவிட்டது!
இன்றைய இலக்கணத்தில்,
‘எவன்’ – பிரதிப் பெயர்ச்சொல் (interrogative pronoun)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (542)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயர்திணை வினைகளைப் பார்த்தபோது, உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுகளைக் கண்டோம்! அதைப்போன்றே இப்போது அஃறிணை வினைமுற்றுகளைப் பார்த்துள்ள நாம் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளைப் பார்க்கப் போகிறோம்!
முதலாவதாக ‘எவன்’ என்னும் குறிப்பு வினைமுற்று:-
“அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே” (வினையியல் 22)
‘எவன்’ எனும் வினாவானது, அஃறிணைச் சொல்லாய், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொருந்தி வரும்!
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள்- ‘அஃது எவன்?’ ; ‘அவை எவன்?’
‘அஃது எவன்?’ – என்பதில், ‘அஃது’ என்ற அஃறிணை ஒருமைக்கு இயைய ‘எவன்’ வந்துள்ளது.
‘அவை எவன்?’ – என்பதில், ‘அவை’ என்ற அஃறிணைப் பன்மைக்கு ஏற்ப அதே ‘எவன்’ வந்துள்ளது.
இந்த ‘எவன்’ எனும் வினாச் சொல், ‘குறிப்பு வினைமுற்று’ என்று மேல் தொல்காப்பியர் நூற்பாவில் கூறப்படவில்லை; சேனாவரையர் உரையில்,’எவன்’, குறிப்பு வினைமுற்றாகக் கூறப்பட்டுள்ளது.நன்னூலிலும் (சூத்தி. 350) ‘எவன்’ , குறிப்பு வினைமுற்றாகவே வருகிறது.
சேனாவரையர் இந்த ‘எவன்’ பற்றிச் சிறிது ஆய்ந்துள்ளார். ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக் காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும்’.
ஆகவே, ‘எவன்’ எனும் வினாச் சொல், குறிப்பு வினைமுற்று மற்றும் பெயர்ச்சொல் ஆகிய இரு வகைகளில் வரும் என்பது தெளிவாகிறது.
இங்கே சிறிது விளக்கம் தேவைப்படுகிறது!
தொல்காப்பியம் கிளவியாக்கம் நூற்பா 31இல் ‘எவன்’ பேசப்பட்டுள்ளது. அங்கே, அறியாப் பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைப் பெயர்ச்சொல் என்று கருதலாம் என விதி கூறப்பட்டுள்ளது.
ஆகவே அறிந்த பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைக் குறிப்பு வினைமுற்றாகக் கருத இடம் ஏற்படுகிறது!
பூட்டிய பெட்டிக்குள் இருப்பது எவன்? – இங்கு வந்துள்ள ‘எவன்’, பெயர்ச் சொல். ஏனெனில், அந்தப் பொருள் இன்னது என்று கேட்டவனுக்குத் தெரியாது; அவன் பொருளைப் பார்க்கவில்லை!
ஓரிடத்தில் கொட்டிவைத்துள்ள பொருளைக் காட்டி, ‘இஃது எவன்?’ என்று கேட்டால்,
இங்கு வந்துள்ள ‘எவன்’, குறிப்பு வினைமுற்று! ஏனெனில், அந்தப் பொருளை அவன் பார்த்துத்தான் மேல் விளக்கத்திற்காகக் கேட்கிறான்.இந்த ‘எவன்’ என்பதில் ஒரு வினைத் தன்மை உள்ளது!
எவன் – என்னவாக இருக்கிறது ; இந்த ‘இருத்த’லே வினைத்தன்மை.
ஒரு பொருள் பற்றி, ‘இஃது எவன்?’ எனவும் கேட்கலாம்; பல பொருட்கள் பற்றியும் ‘இவை எவன்?’ என்றும் கேட்கலாம்!
’நீ இப்படிப் பேசுவதால் பயன் எவன்?’ – இதில் வந்துள்ள ‘எவன்’ , பெயர்ச்சொல்!
ஏனெனில், ‘நீ இப்படிப் பேசுவதால் பயன் இல்லை’ என்பதே தொடர்க் கருத்து; ஆகவே, பார்க்காத பொருள் பற்றி ‘எவன்’ வந்துள்ளதால், அது வினாப் பெயர்! இந்த ‘எவன்’ என்பதில் வினைத்தன்மை இல்லை! இங்கே எவன் – என்ன என்பது மட்டுமே. உரையாசிரியன்மார் நடைகளில் அடிக்கடி ‘என்னை?’என்ற வினாவைப் பார்த்திருப்பீர்கள்; இந்த ‘என்னை’ , பெயர்ச்சொல்லான ‘எவன்’ என்பதன் மரூஉ.
இந்த ‘எவன்’ என்ற வினா, இப்போது வழக்கில் இல்லை! தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்திலேயே அருகிவிட்டது!
இன்றைய இலக்கணத்தில்,
‘எவன்’ – பிரதிப் பெயர்ச்சொல் (interrogative pronoun)
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயர்திணை வினைகளைப் பார்த்தபோது, உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுகளைக் கண்டோம்! அதைப்போன்றே இப்போது அஃறிணை வினைமுற்றுகளைப் பார்த்துள்ள நாம் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளைப் பார்க்கப் போகிறோம்!
முதலாவதாக ‘எவன்’ என்னும் குறிப்பு வினைமுற்று:-
“அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே” (வினையியல் 22)
‘எவன்’ எனும் வினாவானது, அஃறிணைச் சொல்லாய், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொருந்தி வரும்!
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள்- ‘அஃது எவன்?’ ; ‘அவை எவன்?’
‘அஃது எவன்?’ – என்பதில், ‘அஃது’ என்ற அஃறிணை ஒருமைக்கு இயைய ‘எவன்’ வந்துள்ளது.
‘அவை எவன்?’ – என்பதில், ‘அவை’ என்ற அஃறிணைப் பன்மைக்கு ஏற்ப அதே ‘எவன்’ வந்துள்ளது.
இந்த ‘எவன்’ எனும் வினாச் சொல், ‘குறிப்பு வினைமுற்று’ என்று மேல் தொல்காப்பியர் நூற்பாவில் கூறப்படவில்லை; சேனாவரையர் உரையில்,’எவன்’, குறிப்பு வினைமுற்றாகக் கூறப்பட்டுள்ளது.நன்னூலிலும் (சூத்தி. 350) ‘எவன்’ , குறிப்பு வினைமுற்றாகவே வருகிறது.
சேனாவரையர் இந்த ‘எவன்’ பற்றிச் சிறிது ஆய்ந்துள்ளார். ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக் காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும்’.
ஆகவே, ‘எவன்’ எனும் வினாச் சொல், குறிப்பு வினைமுற்று மற்றும் பெயர்ச்சொல் ஆகிய இரு வகைகளில் வரும் என்பது தெளிவாகிறது.
இங்கே சிறிது விளக்கம் தேவைப்படுகிறது!
தொல்காப்பியம் கிளவியாக்கம் நூற்பா 31இல் ‘எவன்’ பேசப்பட்டுள்ளது. அங்கே, அறியாப் பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைப் பெயர்ச்சொல் என்று கருதலாம் என விதி கூறப்பட்டுள்ளது.
ஆகவே அறிந்த பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைக் குறிப்பு வினைமுற்றாகக் கருத இடம் ஏற்படுகிறது!
பூட்டிய பெட்டிக்குள் இருப்பது எவன்? – இங்கு வந்துள்ள ‘எவன்’, பெயர்ச் சொல். ஏனெனில், அந்தப் பொருள் இன்னது என்று கேட்டவனுக்குத் தெரியாது; அவன் பொருளைப் பார்க்கவில்லை!
ஓரிடத்தில் கொட்டிவைத்துள்ள பொருளைக் காட்டி, ‘இஃது எவன்?’ என்று கேட்டால்,
இங்கு வந்துள்ள ‘எவன்’, குறிப்பு வினைமுற்று! ஏனெனில், அந்தப் பொருளை அவன் பார்த்துத்தான் மேல் விளக்கத்திற்காகக் கேட்கிறான்.இந்த ‘எவன்’ என்பதில் ஒரு வினைத் தன்மை உள்ளது!
எவன் – என்னவாக இருக்கிறது ; இந்த ‘இருத்த’லே வினைத்தன்மை.
ஒரு பொருள் பற்றி, ‘இஃது எவன்?’ எனவும் கேட்கலாம்; பல பொருட்கள் பற்றியும் ‘இவை எவன்?’ என்றும் கேட்கலாம்!
’நீ இப்படிப் பேசுவதால் பயன் எவன்?’ – இதில் வந்துள்ள ‘எவன்’ , பெயர்ச்சொல்!
ஏனெனில், ‘நீ இப்படிப் பேசுவதால் பயன் இல்லை’ என்பதே தொடர்க் கருத்து; ஆகவே, பார்க்காத பொருள் பற்றி ‘எவன்’ வந்துள்ளதால், அது வினாப் பெயர்! இந்த ‘எவன்’ என்பதில் வினைத்தன்மை இல்லை! இங்கே எவன் – என்ன என்பது மட்டுமே. உரையாசிரியன்மார் நடைகளில் அடிக்கடி ‘என்னை?’என்ற வினாவைப் பார்த்திருப்பீர்கள்; இந்த ‘என்னை’ , பெயர்ச்சொல்லான ‘எவன்’ என்பதன் மரூஉ.
இந்த ‘எவன்’ என்ற வினா, இப்போது வழக்கில் இல்லை! தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்திலேயே அருகிவிட்டது!
இன்றைய இலக்கணத்தில்,
‘எவன்’ – பிரதிப் பெயர்ச்சொல் (interrogative pronoun)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘எவன்’ எனும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றை ஓதிய தொல்காப்பியர், அடுத்துச் சில அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளை அடுக்கிக் காட்டுகிறார்!:-
“இன்றில உடைய என்னுங் கிளவியும்
அன்றுடைத் தல்ல வென்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ
அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்” (வினையியல் 23)
தொல்காப்பியர் இந் நூற்பாவில் 10 அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளுக்கான பொருள் அடிப்படைகளைத் தெரிவித்து, இப் பத்துப் பொருள் அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் பிறக்கும் என்கிகிறார். இவற்றையும், இவற்றுக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளையும் கீழ்வருமாறு பட்டியலாக விளக்கலாம்!:
1. ‘இன்று’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடின்று; செவியின்று
கோடின்று – கொம்பிலது
செவியின்று - செவியிலது
2. ‘இல’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடில; செவியில
(கோடு - கொம்பு)
3. ‘உடைய’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடுடைய; செவியுடைய
4. ‘அன்று’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: நாயன்று; நரியன்று
5. ‘உடைத்து’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடுடைத்து; செவியுடைத்து
6. ‘அல்ல’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: உழுந்தல்ல; பயறல்ல
7. ‘பண்புகொள் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கரியது; கரிய
8. ‘உள’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: உழுந்துள; பயறுள
9. ‘பண்பின் ஆகிய சினைமுதற் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: குறுங்கோட்டது; குறுங்கோட்டன
குறுங்கோட்டது(ஒருமை) – குறுகிய கொம்பைப் பெற்றது
குறுங்கோட்டன (பன்மை)– குறுகிய கொம்பைப் பெற்றவை
10. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: பொன்னன்னது; பொன்னன்ன
பொன்னன்னது(ஒருமை) – பொன் போன்றது
பொன்னன்ன(பன்மை) – பொன் போன்றவை
எடுத்துக்காட்டு அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் யாவுமே காலத்தை வெளிப்படையாகக் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் என்பதைக் கவனிக்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடத் தொடத் தொல்காப்பியம் (544)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றியது அடுத்த நூற்பா!;
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே” (வினையியல் 24)
அஃதாவது ஒன்றன் பாலிலும் , பலவின் பாலிலும் வரும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் யாவும் , முன் சொன்னபடி, அஃறிணை வினைமுற்றுகள் பெற்ற ஈறுகளையே பெறும்!
இவற்றுக்குக் கல்லாடனார் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:
1. ’து’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.உடைத்து
2. சிறிது
3. கருங்கோட்டது
4.குறுங்கோட்டது 5.பொன்னன்னது
6.வடாஅது
7.மூவாட்டையது
8.உண்டிலது
(கருங்கோட்டது – கரிய கொம்புடையது; குறுங்கோட்டது –
குறுகிய கொம்புடையது;வடாஅது – வடக்குத் திசையது;
மூவாட்டையது – மூன்று ஆண்டுகள் வயதுடையது;
உண்டிலது – உண்ணவில்லை; உண்டிலது – அஃறிணை
ஒருமை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
2. ‘று’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் –
1.செம்மற்று
2.அன்று
3.குறுங்கோடிற்று
4.மேற்று
5.வைகற்று
6.செலவிற்று
(செம்மற்று – சிறப்பினை யுடையது; அன்று –
இல்லை;குறுங் கோடிற்று – குறுகிய கொம்புடையது;
மேற்று – குறித்தது; வைகற்று- கழிந்த நாளது;செலவிற்று- தன்மையது)
3. ‘டு’ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.குண்டுகட்டு
2.குறுதாட்டு
(குண்டுகட்டு – குழிந்த கண்ணுடைத்து;குறுந்தாட்டு-
குறுகிய தாளுடைத்து)
4. ‘அ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.பொருள
2.அல்ல
3.கரிய
4.கோட்ட
5.பொன்னன்ன
6.வடக்கண்ண
7.மூவாட்டைய
(பொருள – பொருளுடையவை; கோட்ட – கொம்புடையவை; வடக்கண்ண;
வடக்குக்குச் சார்ந்தவை; மூவாட்டையது – மூன்று ஆண்டுகள்
வயதுடையவை)
5. ‘ஆ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.இம் மணி நல்ல
2.இம் மணி பொல்லா
(இம் மணி நல்ல- இதில், ‘நல்ல’ என்பதே குறிப்பு வினைமுற்று; இம் மணி பொல்லா – இதில், ‘பொல்லா’ என்பதே குறிப்பு வினைமுற்று; ‘பொல்லா’, எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
6.‘வ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்று- 1.கதவ (கதவ – கோபம் உடைய)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றியது அடுத்த நூற்பா!;
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே” (வினையியல் 24)
அஃதாவது ஒன்றன் பாலிலும் , பலவின் பாலிலும் வரும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் யாவும் , முன் சொன்னபடி, அஃறிணை வினைமுற்றுகள் பெற்ற ஈறுகளையே பெறும்!
இவற்றுக்குக் கல்லாடனார் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:
1. ’து’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.உடைத்து
2. சிறிது
3. கருங்கோட்டது
4.குறுங்கோட்டது 5.பொன்னன்னது
6.வடாஅது
7.மூவாட்டையது
8.உண்டிலது
(கருங்கோட்டது – கரிய கொம்புடையது; குறுங்கோட்டது –
குறுகிய கொம்புடையது;வடாஅது – வடக்குத் திசையது;
மூவாட்டையது – மூன்று ஆண்டுகள் வயதுடையது;
உண்டிலது – உண்ணவில்லை; உண்டிலது – அஃறிணை
ஒருமை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
2. ‘று’ ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் –
1.செம்மற்று
2.அன்று
3.குறுங்கோடிற்று
4.மேற்று
5.வைகற்று
6.செலவிற்று
(செம்மற்று – சிறப்பினை யுடையது; அன்று –
இல்லை;குறுங் கோடிற்று – குறுகிய கொம்புடையது;
மேற்று – குறித்தது; வைகற்று- கழிந்த நாளது;செலவிற்று- தன்மையது)
3. ‘டு’ஈறு பெற்ற படர்க்கை ஒன்றன்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் – 1.குண்டுகட்டு
2.குறுதாட்டு
(குண்டுகட்டு – குழிந்த கண்ணுடைத்து;குறுந்தாட்டு-
குறுகிய தாளுடைத்து)
4. ‘அ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.பொருள
2.அல்ல
3.கரிய
4.கோட்ட
5.பொன்னன்ன
6.வடக்கண்ண
7.மூவாட்டைய
(பொருள – பொருளுடையவை; கோட்ட – கொம்புடையவை; வடக்கண்ண;
வடக்குக்குச் சார்ந்தவை; மூவாட்டையது – மூன்று ஆண்டுகள்
வயதுடையவை)
5. ‘ஆ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள்- 1.இம் மணி நல்ல
2.இம் மணி பொல்லா
(இம் மணி நல்ல- இதில், ‘நல்ல’ என்பதே குறிப்பு வினைமுற்று; இம் மணி பொல்லா – இதில், ‘பொல்லா’ என்பதே குறிப்பு வினைமுற்று; ‘பொல்லா’, எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று)
6.‘வ’ ஈறு பெற்ற படர்க்கைப் பலவின்பால் அஃறிணைக் குறிப்பு வினைமுற்று- 1.கதவ (கதவ – கோபம் உடைய)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடத் தொடத் தொல்காப்பியம் (545)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குறிப்பு வினைமுற்றுகளை அடுத்து, விரவு வினைகளை எடுக்கிறார் தொல்காப்பியர்.
விரவு வினைகளின் தன்மை, வருமுறை,தொகை பற்றிய அவரது நூற்பா!:
“முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி
இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய” (வினையியல் 25)
1. ‘முன்னிலை’ – நம் முன்னே இருப்பவனிடம் அல்லது இருப்பதனிடம் சொல்லும் விரவு வினைமுற்றுச் சொல்:
1. சோறு உண்பாய்
2. புல் உண்பாய்
2. ‘வியங்கோள்’ – ஏவல் பொருளைக் கொள்ளக்கூடிய விரவு வினைமுற்றுகள்:
1.பசு வாழ்க
2.நண்பன் வாழ்க
2.பால் அருளுக
3.பொருள் அருளுக
4. கூடுவிட்டு ஒழிக
5. வீட்டை விட்டு ஒழிக
3. ‘வினையெஞ்சு கிளவி’ – விரவு வினையெச்சங்கள்:
1.எழுந்து கொம்பை அசைத்தது
2.எழுந்து நின்றான்
3.வந்து பேசினாள்
4.வந்து தின்றது
4.‘இன்மை செப்பல்’ – ‘இல்லை’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.குருவி இல்லை
2. அவள் இல்லை
6.‘வேறு என் கிளவி’ – ‘வேறு’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.அவன் வேறு
2. அது வேறு
7.‘செய்ம்மன’ என் கிளவி – ‘செய்ம்மன’ எனும் விரவு வினைமுற்று:
1.குழந்தைகள் உண்டன
2. ஆடுகள் உண்டன
8.‘செய்யும்’ என் கிளவி – ‘செய்யும்’ எனும் விரவு வினைமுற்று:
1. அவள் ஆடும்
2. மயில் ஆடும்
9.‘செய்த’ என் கிளவி – ‘செய்த’ எனும் விரவுப் பெயரெச்சம்:
1.அவள் கடித்த பழம்
2. குரங்கு கடித்த பழம்
மேல் எடுத்துக்காட்டுகளே , உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வரக்கூடிய விரவு வினை, எச்சங்களைத் தெளிவாக்கும்!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குறிப்பு வினைமுற்றுகளை அடுத்து, விரவு வினைகளை எடுக்கிறார் தொல்காப்பியர்.
விரவு வினைகளின் தன்மை, வருமுறை,தொகை பற்றிய அவரது நூற்பா!:
“முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி
இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய” (வினையியல் 25)
1. ‘முன்னிலை’ – நம் முன்னே இருப்பவனிடம் அல்லது இருப்பதனிடம் சொல்லும் விரவு வினைமுற்றுச் சொல்:
1. சோறு உண்பாய்
2. புல் உண்பாய்
2. ‘வியங்கோள்’ – ஏவல் பொருளைக் கொள்ளக்கூடிய விரவு வினைமுற்றுகள்:
1.பசு வாழ்க
2.நண்பன் வாழ்க
2.பால் அருளுக
3.பொருள் அருளுக
4. கூடுவிட்டு ஒழிக
5. வீட்டை விட்டு ஒழிக
3. ‘வினையெஞ்சு கிளவி’ – விரவு வினையெச்சங்கள்:
1.எழுந்து கொம்பை அசைத்தது
2.எழுந்து நின்றான்
3.வந்து பேசினாள்
4.வந்து தின்றது
4.‘இன்மை செப்பல்’ – ‘இல்லை’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.குருவி இல்லை
2. அவள் இல்லை
6.‘வேறு என் கிளவி’ – ‘வேறு’எனும் விரவுக் குறிப்பு வினைமுற்று:
1.அவன் வேறு
2. அது வேறு
7.‘செய்ம்மன’ என் கிளவி – ‘செய்ம்மன’ எனும் விரவு வினைமுற்று:
1.குழந்தைகள் உண்டன
2. ஆடுகள் உண்டன
8.‘செய்யும்’ என் கிளவி – ‘செய்யும்’ எனும் விரவு வினைமுற்று:
1. அவள் ஆடும்
2. மயில் ஆடும்
9.‘செய்த’ என் கிளவி – ‘செய்த’ எனும் விரவுப் பெயரெச்சம்:
1.அவள் கடித்த பழம்
2. குரங்கு கடித்த பழம்
மேல் எடுத்துக்காட்டுகளே , உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வரக்கூடிய விரவு வினை, எச்சங்களைத் தெளிவாக்கும்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (546)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுத்து, முன்னிலைச் சொல்லாக வரக்கூடிய ஆண்பால், பெண்பால்,ஒன்றன்பால் விரவு வினைமுற்றுகளின் ஈறுகளைப் பேசுகிறார்!:-
“அவற்றுள்
முன்னிலைக் கிளவி
இஐ ஆயென வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்” (வினையியல் 26)
இந் நூற்பாவில் கூறும் ஈறுகள்- ‘இ’, ‘ஐ’, ‘ஆய்’
இம் மூன்று ஈறுகள் பெற்ற முன்னிலை விரவு வினைகளுக்கு நச்சர் எடுத்துக்காட்டுகள் தருகிறார். சுருக்கமாக நச்சர் தரும் இவற்றைக், கீழ்வருமாறு விளக்கமாக ,ஆண்பால் ஒருமைக்கும்,பெண்பால் ஒருமைக்கும், அஃறிணை ஒருமைக்கும் இயையுமாறு நாம் காணலாம்!:
(அ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்டி’ – (i) குமணா நாளை உண்டி
(ii) குமுதா நாளை உண்டி
(iii) கிளியே நாளை உண்டி
(உண்டி = உண்பை = உண்பாய்)
2.‘உரைத்தி’ – (i) குமணா நாளை உரை
(ii) குமுதா நாளை உரை
(iii) கிளியே நாளை உரை
(உரைத்தி =உரைப்பை = உரைப்பாய்)
3.‘தின்றி’ – (i) குமணா நாளை தின்றி
(ii) குமுதா நாளை தின்றி
(iii) கிளியே நாளை தின்றி
(தின்றி =தின்பை = தின்பாய்)
4. ‘ஊக்கி’ – (i) குமணா நாளை ஊக்கி
(ii) குமுதா நாளை ஊக்கி
(iii) கிளியே நாளை ஊக்கி
(ஊக்கி = ஊக்குவாய்)
5.‘ஒத்தி’ – (i) குமணா நாளை ஒத்தி
(ii) குமுதா நாளை ஒத்தி
(iii) கிளியே நாளை ஒத்தி
( ஒத்தி = ஒப்பாய்)
6.‘சூழாதி’ – (i) குமணா நாளை சூழாதி
(ii) குமுதா நாளை சூழாதி
(iii) கிளியே நாளை சூழாதி
(சூழாதி = சூழாதே)
(ஆ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1. ‘உரைக்கிற்றி’ – (i) குமணா இப்போது உரைக்கிற்றி
(ii) குமுதா இப்போது உரைக்கிற்றி
(iii) கிளியே இப்போது உரைக்கிற்றி
(உரைக்கிற்றி =உரைக்கின்றாய்)
2. ‘கூறி’ – (i) குமணா இப்போது கூறி
(ii) குமுதா இப்போது கூறி
(iii) கிளியே இப்போது கூறி
(கூறி = கூறுகின்றாய்)
(இ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டனை’ – (i) குமணா நேற்று உண்டனை
(ii) குமுதா நேற்று உண்டனை
(iii) கிளியே நேற்று உண்டனை
2. ‘கரியை’– (i) குமணா நேற்றுக் கரியை
(ii) குமுதா நேற்றுக் கரியை
(iii) கிளியே நேற்றுக் கரியை
(கரியை – கரிய நிறமுடையாய்)
(ஈ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றனை’ – (i) குமணா இன்று
உண்ணாநின்றனை
(ii) குமுதா இன்று உண்ணாநின்றனை
(iii) கிளியே இன்று உண்ணாநின்றனை
(உண்ணாநின்றனை= உண்கின்றாய்)
2. ‘கரியை’– (i) குமணா இன்று கரியை
(ii) குமுதா இன்று கரியை
(iii) கிளியே இன்று கரியை
(உ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்பை’ – (i) குமணா நாளை உண்பை
(ii) குமுதா நாளை உண்பை
(iii) கிளியே நாளை உண்பை
(உண்பை = உண்பாய்)
2. ‘உண்குவை’ – (i) குமணா நாளை உண்குவை
(ii) குமுதா நாளை உண்குவை
(iii) கிளியே நாளை உண்குவை
(உண்குவை = உண்பாய்)
3. ‘கரியை’– (i) குமணா நாளை கரியை
(ii) குமுதா நாளை கரியை
(iii) கிளியே நாளை கரியை
(ஊ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டாய்’ – (i) குமணா நேற்று உண்டாய்
(ii) குமுதா நேற்று உண்டாய்
(iii) கிளியே நேற்று உண்டாய்
(உண்பை = உண்பாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா நேற்றுக் கரியாய்
(ii) குமுதா நேற்றுக் கரியாய்
(iii) கிளியே நேற்றுக் கரியாய்
(எ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றாய்’–(i)குமணா இன்று உண்ணாநின்றாய்
(ii) குமுதா இன்று உண்ணாநின்றாய்
(iii) கிளியே இன்று உண்ணாநின்றாய்
(உண்ணாநின்றாய் = உண்கின்றாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா இன்று கரியாய்
(ii) குமுதா இன்று கரியாய்
(iii) கிளியே இன்று கரியாய்
(ஏ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1.‘உண்பாய்’– (i) குமணா நாளை உண்பாய்
(ii) குமுதா நாளை உண்பாய்
(iii) கிளியே நாளை உண்பாய்
2. ‘கரியாய்’ – (i) குமணா நாளை கரியாய்
(ii) குமுதா நாளை கரியாய்
(iii) கிளியே நாளை கரியாய்
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுத்து, முன்னிலைச் சொல்லாக வரக்கூடிய ஆண்பால், பெண்பால்,ஒன்றன்பால் விரவு வினைமுற்றுகளின் ஈறுகளைப் பேசுகிறார்!:-
“அவற்றுள்
முன்னிலைக் கிளவி
இஐ ஆயென வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்” (வினையியல் 26)
இந் நூற்பாவில் கூறும் ஈறுகள்- ‘இ’, ‘ஐ’, ‘ஆய்’
இம் மூன்று ஈறுகள் பெற்ற முன்னிலை விரவு வினைகளுக்கு நச்சர் எடுத்துக்காட்டுகள் தருகிறார். சுருக்கமாக நச்சர் தரும் இவற்றைக், கீழ்வருமாறு விளக்கமாக ,ஆண்பால் ஒருமைக்கும்,பெண்பால் ஒருமைக்கும், அஃறிணை ஒருமைக்கும் இயையுமாறு நாம் காணலாம்!:
(அ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்டி’ – (i) குமணா நாளை உண்டி
(ii) குமுதா நாளை உண்டி
(iii) கிளியே நாளை உண்டி
(உண்டி = உண்பை = உண்பாய்)
2.‘உரைத்தி’ – (i) குமணா நாளை உரை
(ii) குமுதா நாளை உரை
(iii) கிளியே நாளை உரை
(உரைத்தி =உரைப்பை = உரைப்பாய்)
3.‘தின்றி’ – (i) குமணா நாளை தின்றி
(ii) குமுதா நாளை தின்றி
(iii) கிளியே நாளை தின்றி
(தின்றி =தின்பை = தின்பாய்)
4. ‘ஊக்கி’ – (i) குமணா நாளை ஊக்கி
(ii) குமுதா நாளை ஊக்கி
(iii) கிளியே நாளை ஊக்கி
(ஊக்கி = ஊக்குவாய்)
5.‘ஒத்தி’ – (i) குமணா நாளை ஒத்தி
(ii) குமுதா நாளை ஒத்தி
(iii) கிளியே நாளை ஒத்தி
( ஒத்தி = ஒப்பாய்)
6.‘சூழாதி’ – (i) குமணா நாளை சூழாதி
(ii) குமுதா நாளை சூழாதி
(iii) கிளியே நாளை சூழாதி
(சூழாதி = சூழாதே)
(ஆ) ‘இ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1. ‘உரைக்கிற்றி’ – (i) குமணா இப்போது உரைக்கிற்றி
(ii) குமுதா இப்போது உரைக்கிற்றி
(iii) கிளியே இப்போது உரைக்கிற்றி
(உரைக்கிற்றி =உரைக்கின்றாய்)
2. ‘கூறி’ – (i) குமணா இப்போது கூறி
(ii) குமுதா இப்போது கூறி
(iii) கிளியே இப்போது கூறி
(கூறி = கூறுகின்றாய்)
(இ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டனை’ – (i) குமணா நேற்று உண்டனை
(ii) குமுதா நேற்று உண்டனை
(iii) கிளியே நேற்று உண்டனை
2. ‘கரியை’– (i) குமணா நேற்றுக் கரியை
(ii) குமுதா நேற்றுக் கரியை
(iii) கிளியே நேற்றுக் கரியை
(கரியை – கரிய நிறமுடையாய்)
(ஈ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றனை’ – (i) குமணா இன்று
உண்ணாநின்றனை
(ii) குமுதா இன்று உண்ணாநின்றனை
(iii) கிளியே இன்று உண்ணாநின்றனை
(உண்ணாநின்றனை= உண்கின்றாய்)
2. ‘கரியை’– (i) குமணா இன்று கரியை
(ii) குமுதா இன்று கரியை
(iii) கிளியே இன்று கரியை
(உ) ‘ஐ’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1. ‘உண்பை’ – (i) குமணா நாளை உண்பை
(ii) குமுதா நாளை உண்பை
(iii) கிளியே நாளை உண்பை
(உண்பை = உண்பாய்)
2. ‘உண்குவை’ – (i) குமணா நாளை உண்குவை
(ii) குமுதா நாளை உண்குவை
(iii) கிளியே நாளை உண்குவை
(உண்குவை = உண்பாய்)
3. ‘கரியை’– (i) குமணா நாளை கரியை
(ii) குமுதா நாளை கரியை
(iii) கிளியே நாளை கரியை
(ஊ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை இறந்தகால விரவு வினைகள்-
1. ‘உண்டாய்’ – (i) குமணா நேற்று உண்டாய்
(ii) குமுதா நேற்று உண்டாய்
(iii) கிளியே நேற்று உண்டாய்
(உண்பை = உண்பாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா நேற்றுக் கரியாய்
(ii) குமுதா நேற்றுக் கரியாய்
(iii) கிளியே நேற்றுக் கரியாய்
(எ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை நிகழ்கால விரவு வினைகள்-
1.‘உண்ணாநின்றாய்’–(i)குமணா இன்று உண்ணாநின்றாய்
(ii) குமுதா இன்று உண்ணாநின்றாய்
(iii) கிளியே இன்று உண்ணாநின்றாய்
(உண்ணாநின்றாய் = உண்கின்றாய்)
2. ‘கரியாய்’ – (i) குமணா இன்று கரியாய்
(ii) குமுதா இன்று கரியாய்
(iii) கிளியே இன்று கரியாய்
(ஏ) ‘ஆய்’ ஈறு பெற்ற முன்னிலை எதிர்கால விரவு வினைகள்-
1.‘உண்பாய்’– (i) குமணா நாளை உண்பாய்
(ii) குமுதா நாளை உண்பாய்
(iii) கிளியே நாளை உண்பாய்
2. ‘கரியாய்’ – (i) குமணா நாளை கரியாய்
(ii) குமுதா நாளை கரியாய்
(iii) கிளியே நாளை கரியாய்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (547)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, முன்னிலைப் பலர்பாலிலும் பலவின்பாலிலும் வரக்கூடிய விரவு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர்!:-
“இர்ஈர் மின்னென வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்” (வினையியல் 27)
இந் நூற்பாப்படி, ‘இர்’, ‘ஈர்’, ‘மின்’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்று, முன்னிலை விரவு வினைகளாகப் பலர்பாலிலும், பலவின் பாலிலும் நடக்கும்!
இவற்றுக்கு நச்சர் சுருக்கமாகத் தந்த எடுத்துக்காட்டுகளை, நாம் விளக்கமாக வருமாறு வரையலாம்!:
1. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டனிர்
2. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டனிர்
3. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே இன்று உண்ணாநின்றனிர்
4. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே இன்று உண்ணாநின்றனிர்
5. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்பிர்
6. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பிர்
7. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவிர்
8. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவிர்
9. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டீர்
10. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டீர்
11. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்ணாநின்றீர்
12. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்ணாநின்றீர்
13. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று.
(எ-டு) மக்களே நாளை உண்பீர்
14. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பீர்
15. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவீர்
16. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவீர்
17. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்மின்
18. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்மின்
19. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்ணன்மின்
20. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்ணன்மின்
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, முன்னிலைப் பலர்பாலிலும் பலவின்பாலிலும் வரக்கூடிய விரவு வினைமுற்றுகளின் ஈறுகள் பற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர்!:-
“இர்ஈர் மின்னென வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்” (வினையியல் 27)
இந் நூற்பாப்படி, ‘இர்’, ‘ஈர்’, ‘மின்’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்று, முன்னிலை விரவு வினைகளாகப் பலர்பாலிலும், பலவின் பாலிலும் நடக்கும்!
இவற்றுக்கு நச்சர் சுருக்கமாகத் தந்த எடுத்துக்காட்டுகளை, நாம் விளக்கமாக வருமாறு வரையலாம்!:
1. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டனிர்
2. உண்டனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டனிர்
3. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே இன்று உண்ணாநின்றனிர்
4. உண்ணாநின்றனிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே இன்று உண்ணாநின்றனிர்
5. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்பிர்
6. உண்பிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பிர்
7. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவிர்
8. உண்குவிர் -‘இர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவிர்
9. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்டீர்
10. உண்டீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் இறந்தகால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்டீர்
11. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நேற்று உண்ணாநின்றீர்
12. உண்ணாநின்றீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் நிகழ்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நேற்று உண்ணாநின்றீர்
13. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று.
(எ-டு) மக்களே நாளை உண்பீர்
14. உண்பீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்பீர்
15. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மக்களே நாளை உண்குவீர்
16. உண்குவீர் -‘ஈர்’ ஈறு பெற்ற, முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று. (எ-டு) மயில்களே நாளை உண்குவீர்
17. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்மின்
18. உண்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்மின்
19. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலர்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மக்களே நாளை உண்ணன்மின்
20. உண்ணன்மின் – ‘மின்’ ஈறு பெற்ற , முன்னிலைப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை விரவு வினைமுற்று (எ-டு) மயில்களே நாளை உண்ணன்மின்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (548)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் , எட்டு வழிகளில் விரவு வினைகள் ஏற்படும் என்றார்(வினை.25). இந்த எட்டுவழிகளில், ‘முன்னிலை’ பற்றிச் சற்றுமுன் பார்த்தோம் (வினை.26,27).; மீதி ஏழு வழிகள் உள்ளன அல்லவா? இவை பற்றியதே கீழ்வரும் நூற்பா:
“எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே” (வினையியல் 28)
எஞ்சிய கிளவி – 1.வியங்கோள்
2. வினையெச்சம் (’வினையெஞ்சு கிளவி’)
3.இல்லை (’இன்மை செப்பல்’)
4.வேறு (’வேறென் கிளவி’)
5.செய்ம்மன
6.செய்யும்
7.செய்த
-இந்த ஏழுமே தன்மை,முன்னிலை,படர்க்கை, ஆண்பால் ஒருமை , பெண்பால் ஒருமை, பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றுக்கு உரிய , அவ்வப் பொருளிடத்துப் பயிலும்போது என்கிறார் சேனாவரையர்.
கீழ்வரும் நம் விளக்கப் பட்டியல் சேனாவரையரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை மேலும் விளக்கும்:
1.வியங்கோள்- (அ) அவன் செல்க (படர்க்கை ஆண்பால்)
(ஆ)அவள் செல்க(படர்க்கைப் பெண்பால்)
(இ) அவர் செல்க (படர்க்கைப் பலர்பால்)
(ஈ) அது செல்க (படர்க்கை ஒன்றன்பால்)
(உ) அவை செல்க (படர்க்கைப் பலவின்பால்)
2.வினையெச்சம் - (அ) உழுது வந்தேன் (தன்மை ஒருமை)
(ஆ) உழுது வந்தேம்(தன்மைப் பன்மை)
(இ) உழுது வந்தாய் (முன்னிலை ஒருமை)
(ஈ) உழுது வந்தீர் (முன்னிலைப் பலர்பால்)
(உ) உழுது வந்தாள் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) உழுது வந்தான் (படர்க்கை ஆண்பால்)
(எ) உழுது வந்தது (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) உழுது வந்தார் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) உழுது வந்தன (படர்க்கைப் பலவின்பால்)
3. இல்லை - (அ) யா னில்லை (தன்மை ஒருமை)
(ஆ) யா மில்லை (தன்மைப் பன்மை)
(இ)நீ யில்லை (முன்னிலை ஒருமை)
(ஈ)நீ ரில்லை (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளில்லை (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னில்லை (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வில்லை (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ரில்லை (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யில்லை (படர்க்கைப் பலவின்பால்)
4.வேறு - (அ) யான் வேறு (தன்மை ஒருமை)
(ஆ) யாம் வேறு (தன்மைப் பன்மை)
(இ) நீ வேறு (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் வேறு (முன்னிலைப் பலர்பால்)
(உ) அவள் வேறு (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் வேறு (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வேறு (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் வேறு (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை வேறு (படர்க்கைப் பலவின்பால்)
5. செய்ம்மன - (அ) யா னுண்மன (தன்மை ஒருமை)
(ஆ) யா முண்மன (தன்மைப் பன்மை)
(இ) நீ யுண்மன (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயி ருண்மன (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளுண்மன (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னுண்மன (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வுண்மன (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ருண்மன (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யுண்மன (படர்க்கைப் பலவின்பால்)
6. செய்யும் - (அ) யான் உண்ணும் ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ணும் ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ணும் ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ணும் ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ணும் ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ணும் ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ணும் ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ணும் ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ணும் ஊண் (படர்க்கைப் பலவின்பால்)
7. செய்யும் - (அ) அவள் வரும் (படர்க்கைப் பெண்பால்)
(வினைமுற்று) (ஆ) அவன் வரும் (படர்க்கை ஆண்பால்)
(இ) அது வரும் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஈ) அவை வரும் (படர்க்கைப் பலவின்பால்)
8. செய்த - (அ) யான் உண்ட ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ட ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ட ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ட ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ட ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ட ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ட ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ட ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ட ஊண் (படர்க்கைப் பலவின்பால்)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் , எட்டு வழிகளில் விரவு வினைகள் ஏற்படும் என்றார்(வினை.25). இந்த எட்டுவழிகளில், ‘முன்னிலை’ பற்றிச் சற்றுமுன் பார்த்தோம் (வினை.26,27).; மீதி ஏழு வழிகள் உள்ளன அல்லவா? இவை பற்றியதே கீழ்வரும் நூற்பா:
“எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே” (வினையியல் 28)
எஞ்சிய கிளவி – 1.வியங்கோள்
2. வினையெச்சம் (’வினையெஞ்சு கிளவி’)
3.இல்லை (’இன்மை செப்பல்’)
4.வேறு (’வேறென் கிளவி’)
5.செய்ம்மன
6.செய்யும்
7.செய்த
-இந்த ஏழுமே தன்மை,முன்னிலை,படர்க்கை, ஆண்பால் ஒருமை , பெண்பால் ஒருமை, பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றுக்கு உரிய , அவ்வப் பொருளிடத்துப் பயிலும்போது என்கிறார் சேனாவரையர்.
கீழ்வரும் நம் விளக்கப் பட்டியல் சேனாவரையரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை மேலும் விளக்கும்:
1.வியங்கோள்- (அ) அவன் செல்க (படர்க்கை ஆண்பால்)
(ஆ)அவள் செல்க(படர்க்கைப் பெண்பால்)
(இ) அவர் செல்க (படர்க்கைப் பலர்பால்)
(ஈ) அது செல்க (படர்க்கை ஒன்றன்பால்)
(உ) அவை செல்க (படர்க்கைப் பலவின்பால்)
2.வினையெச்சம் - (அ) உழுது வந்தேன் (தன்மை ஒருமை)
(ஆ) உழுது வந்தேம்(தன்மைப் பன்மை)
(இ) உழுது வந்தாய் (முன்னிலை ஒருமை)
(ஈ) உழுது வந்தீர் (முன்னிலைப் பலர்பால்)
(உ) உழுது வந்தாள் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) உழுது வந்தான் (படர்க்கை ஆண்பால்)
(எ) உழுது வந்தது (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) உழுது வந்தார் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) உழுது வந்தன (படர்க்கைப் பலவின்பால்)
3. இல்லை - (அ) யா னில்லை (தன்மை ஒருமை)
(ஆ) யா மில்லை (தன்மைப் பன்மை)
(இ)நீ யில்லை (முன்னிலை ஒருமை)
(ஈ)நீ ரில்லை (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளில்லை (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னில்லை (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வில்லை (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ரில்லை (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யில்லை (படர்க்கைப் பலவின்பால்)
4.வேறு - (அ) யான் வேறு (தன்மை ஒருமை)
(ஆ) யாம் வேறு (தன்மைப் பன்மை)
(இ) நீ வேறு (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் வேறு (முன்னிலைப் பலர்பால்)
(உ) அவள் வேறு (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் வேறு (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வேறு (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் வேறு (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை வேறு (படர்க்கைப் பலவின்பால்)
5. செய்ம்மன - (அ) யா னுண்மன (தன்மை ஒருமை)
(ஆ) யா முண்மன (தன்மைப் பன்மை)
(இ) நீ யுண்மன (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயி ருண்மன (முன்னிலைப் பன்மை)
(உ) அவ ளுண்மன (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவ னுண்மன (படர்க்கை ஆண்பால்)
(எ) அது வுண்மன (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவ ருண்மன (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை யுண்மன (படர்க்கைப் பலவின்பால்)
6. செய்யும் - (அ) யான் உண்ணும் ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ணும் ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ணும் ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ணும் ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ணும் ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ணும் ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ணும் ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ணும் ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ணும் ஊண் (படர்க்கைப் பலவின்பால்)
7. செய்யும் - (அ) அவள் வரும் (படர்க்கைப் பெண்பால்)
(வினைமுற்று) (ஆ) அவன் வரும் (படர்க்கை ஆண்பால்)
(இ) அது வரும் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஈ) அவை வரும் (படர்க்கைப் பலவின்பால்)
8. செய்த - (அ) யான் உண்ட ஊண் (தன்மை ஒருமை)
(பெயரெச்சம்) (ஆ) யாம் உண்ட ஊண் (தன்மைப் பன்மை)
(இ) நீ உண்ட ஊண் (முன்னிலை ஒருமை)
(ஈ) நீயிர் உண்ட ஊண் (முன்னிலைப் பன்மை)
(உ) அவள் உண்ட ஊண் (படர்க்கைப் பெண்பால்)
(ஊ) அவன் உண்ட ஊண் (படர்க்கை ஆண்பால்)
(எ) அது உண்ட ஊண் (படர்க்கை ஒன்றன்பால்)
(ஏ) அவர் உண்ட ஊண் (படர்க்கைப் பலர்பால்)
(ஐ) அவை உண்ட ஊண் (படர்க்கைப் பலவின்பால்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 80 of 84 • 1 ... 41 ... 79, 80, 81, 82, 83, 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 80 of 84
|
|