புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 69 of 84 •
Page 69 of 84 • 1 ... 36 ... 68, 69, 70 ... 76 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (450)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேல் வேற்றுமையியல் நூற்பா 4ஐ அடுத்து , ‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள்’ , பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.5) , ‘தொகைகள் ஏற்கும் பயனிலைகள்’ பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.6) , ‘எழுவாயும் தோன்றா எழுவாயும்’ பற்றிய நூற்பாவும் (வேற்.7) வருகின்றன; இவற்றை முன்பே நாம் ஆய்ந்துள்ளதால், நாம் அடுத்த நூற்பாவுக்குச் செல்லலாம் !:-
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (வேற்.8)
’
கூறிய முறையின் உருபு நிலை’- வேற்றுமையியல் நூற்பா3இல் கூறிய உருபுகளின் நிலை என்னவென்றால்,
‘ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனப’ – பெயர்க்கு ஈறாகும் தன்மையாகும் என்பார்கள்!
1.சாத்தனை – ‘ஐ’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
2.சாத்தனொடு- ‘ஒடு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
3. சாத்தற்கு – ‘கு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
4. சாத்தனின் – ‘இன்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
5. சாத்தனது – ‘அது’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
6. சாத்தன்கண் – ‘கண்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
மேல் நூற்பாப்படி ‘பெயர்க்கு ஈறாகும் வேற்றுமை உருபு’ என்பதை ஒரு வரையறையாகக் கொள்ளலாம் !
அப்படியானால் வினைக்கு ஈறு?
இவ் வினாவிற்கு விடை தருகிறார் சேனாவரையர் !-
“வினைச் சொலிறுதி நிற்கு மிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே. இவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப் பட் டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது ’ என்றார் !”
என்ன பொருள்?
வினைச்சொல்லின் இறுதியிலே நிற்பது ‘ வேற்றுமை உருபு’ அல்ல; அது ‘இடைச்சொல்’!
அந்த இடைச்சொல்லும் , வினையின் உறுப்பாய், வினையோடு சேர்ந்துதான் வரும்!
வந்தான் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆன்’ ; இஃது ஓர் இடைச்சொல் (Particle) !
வந்தாய் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆய்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
வந்தாள் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆள்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
மேலே வந்த இடைசொற்கள் , சொல்லைவிட்டுப் நீங்கிநில்லாமல் , பொருள் நிலையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கவனியுங்கள் !
சாத்தனது – இதிலுள்ள ‘அது’வைப் பிரித்தால், ‘சாத்தன்’ என்ற , பொருள் தரக்கூடிய ஒரு சொல் நிற்கிறது !
வந்தாள் – இதிலுள்ள ‘ஆள்’ என்பதைப் பிரித்தால், ‘வந்த்’ என்பதுதான் நிற்கிறது ; ‘வந்த்’ என்பது பொருளற்றது !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேல் வேற்றுமையியல் நூற்பா 4ஐ அடுத்து , ‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள்’ , பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.5) , ‘தொகைகள் ஏற்கும் பயனிலைகள்’ பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.6) , ‘எழுவாயும் தோன்றா எழுவாயும்’ பற்றிய நூற்பாவும் (வேற்.7) வருகின்றன; இவற்றை முன்பே நாம் ஆய்ந்துள்ளதால், நாம் அடுத்த நூற்பாவுக்குச் செல்லலாம் !:-
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (வேற்.8)
’
கூறிய முறையின் உருபு நிலை’- வேற்றுமையியல் நூற்பா3இல் கூறிய உருபுகளின் நிலை என்னவென்றால்,
‘ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனப’ – பெயர்க்கு ஈறாகும் தன்மையாகும் என்பார்கள்!
1.சாத்தனை – ‘ஐ’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
2.சாத்தனொடு- ‘ஒடு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
3. சாத்தற்கு – ‘கு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
4. சாத்தனின் – ‘இன்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
5. சாத்தனது – ‘அது’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
6. சாத்தன்கண் – ‘கண்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
மேல் நூற்பாப்படி ‘பெயர்க்கு ஈறாகும் வேற்றுமை உருபு’ என்பதை ஒரு வரையறையாகக் கொள்ளலாம் !
அப்படியானால் வினைக்கு ஈறு?
இவ் வினாவிற்கு விடை தருகிறார் சேனாவரையர் !-
“வினைச் சொலிறுதி நிற்கு மிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே. இவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப் பட் டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது ’ என்றார் !”
என்ன பொருள்?
வினைச்சொல்லின் இறுதியிலே நிற்பது ‘ வேற்றுமை உருபு’ அல்ல; அது ‘இடைச்சொல்’!
அந்த இடைச்சொல்லும் , வினையின் உறுப்பாய், வினையோடு சேர்ந்துதான் வரும்!
வந்தான் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆன்’ ; இஃது ஓர் இடைச்சொல் (Particle) !
வந்தாய் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆய்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
வந்தாள் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆள்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
மேலே வந்த இடைசொற்கள் , சொல்லைவிட்டுப் நீங்கிநில்லாமல் , பொருள் நிலையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கவனியுங்கள் !
சாத்தனது – இதிலுள்ள ‘அது’வைப் பிரித்தால், ‘சாத்தன்’ என்ற , பொருள் தரக்கூடிய ஒரு சொல் நிற்கிறது !
வந்தாள் – இதிலுள்ள ‘ஆள்’ என்பதைப் பிரித்தால், ‘வந்த்’ என்பதுதான் நிற்கிறது ; ‘வந்த்’ என்பது பொருளற்றது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (451)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமை இயலில் அடுத்துப் பெயரின் இலக்கணம் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே” (வேற்.9)
‘பெயர்நிலைக் கிளவி’ – பெயர்ச்சொல்,
‘காலம் தோன்றா’ – காலம் காட்டாது;
‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ – வினையாலணையும் பெயர்,
‘ஒன்று அலங்கடையே’- ஒன்று அல்லாதபோது!
அல்லி , இளவரசி , செல்வி , கந்தன் , அருணாசலம் – பெயர்ச் சொற்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !)
வந்தவன் , வந்தவள் , அடித்தவன் , சென்றோன் , பாடினவள் – விணையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டுவதைக் கவனிக்க; காட்டப்படும் காலம், இறந்த காலம்).
ஆனால் , ‘குறிப்பு வினையாலணையும் பெயர்’ , காலம் காட்டாது !
பொய்யன் , நாடன் , நுதலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க!)
சேனாவரையர் , ‘பெயர்’ என்பதில் தொழிற்பெயரையும் (Verbal nouns) சேர்க்கிறார் !
அதன்படி –
உண்டல் , தின்னல் , ஆடல் , மகிழ்தல் – தொழிற்பெயர்கள் ( இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !).
சேனாவரையர் , இரத்தினச் சுருக்கமாகப் ‘பெயர்’ என்றால் அதற்கு இலக்கணம் இதுதான் எனக் கூறுகிறார் - “பெரும்பான்மை பற்றிக் காலந் தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று !”
அப்படியானால் ‘சிறுபான்மை’ ?
‘சிறுபான்மை’ நாம் மேலே பார்த்த ‘வினையாலணையும் பெயர்’ (Participial noun)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமை இயலில் அடுத்துப் பெயரின் இலக்கணம் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே” (வேற்.9)
‘பெயர்நிலைக் கிளவி’ – பெயர்ச்சொல்,
‘காலம் தோன்றா’ – காலம் காட்டாது;
‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ – வினையாலணையும் பெயர்,
‘ஒன்று அலங்கடையே’- ஒன்று அல்லாதபோது!
அல்லி , இளவரசி , செல்வி , கந்தன் , அருணாசலம் – பெயர்ச் சொற்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !)
வந்தவன் , வந்தவள் , அடித்தவன் , சென்றோன் , பாடினவள் – விணையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டுவதைக் கவனிக்க; காட்டப்படும் காலம், இறந்த காலம்).
ஆனால் , ‘குறிப்பு வினையாலணையும் பெயர்’ , காலம் காட்டாது !
பொய்யன் , நாடன் , நுதலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க!)
சேனாவரையர் , ‘பெயர்’ என்பதில் தொழிற்பெயரையும் (Verbal nouns) சேர்க்கிறார் !
அதன்படி –
உண்டல் , தின்னல் , ஆடல் , மகிழ்தல் – தொழிற்பெயர்கள் ( இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !).
சேனாவரையர் , இரத்தினச் சுருக்கமாகப் ‘பெயர்’ என்றால் அதற்கு இலக்கணம் இதுதான் எனக் கூறுகிறார் - “பெரும்பான்மை பற்றிக் காலந் தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று !”
அப்படியானால் ‘சிறுபான்மை’ ?
‘சிறுபான்மை’ நாம் மேலே பார்த்த ‘வினையாலணையும் பெயர்’ (Participial noun)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (452)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முதல் வேற்றுமை எனப்படும் ‘எழுவாய் வேற்றுமை’ பற்றிய தொல்கப்பிய நூற்பாக்களை அடுத்து ,நாம் பார்க்கப்போவது ’இரண்டாம் வேற்றுமை’!-
“இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே” (வேற். 10)
‘இரண்டு ஆகுவதே’- இரண்டாம் வேற்றுமை என்பது,
‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஐ’ என்று பெயர் பெறும் வேற்றுமைச் சொல் ;
‘எவ்வழி வரினும்’ – எந்த இடத்தில் வந்தாலும்,
‘வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலில் தோன்றும் அதுவே’ – வினை , வினைக் குறிப்பு ஆகிய இந்த இரண்டின் செயப்படுபொருளாகத் தோன்றும் அது !
முதல் - செயப்படுபொருள் (Object)
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் ! –
1 . குடத்தை வனைந்தான்
2 . குழையை உடையன்
1. ‘வனைந்தான்’ என்ற வினை முற்றுக்குச் செயப்படுபொருள், ‘குடம்’.
2. ‘உடையன்’ என்ற குறிப்பு வினை முற்றுக்குச்(Appellative finite verb) செயப்படுபொருள் , ‘குழை’.
-இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , செயப்படுபொருளை ஒட்டிக்கொண்டு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு நிற்பதைக் காணலாம் !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முதல் வேற்றுமை எனப்படும் ‘எழுவாய் வேற்றுமை’ பற்றிய தொல்கப்பிய நூற்பாக்களை அடுத்து ,நாம் பார்க்கப்போவது ’இரண்டாம் வேற்றுமை’!-
“இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே” (வேற். 10)
‘இரண்டு ஆகுவதே’- இரண்டாம் வேற்றுமை என்பது,
‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஐ’ என்று பெயர் பெறும் வேற்றுமைச் சொல் ;
‘எவ்வழி வரினும்’ – எந்த இடத்தில் வந்தாலும்,
‘வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலில் தோன்றும் அதுவே’ – வினை , வினைக் குறிப்பு ஆகிய இந்த இரண்டின் செயப்படுபொருளாகத் தோன்றும் அது !
முதல் - செயப்படுபொருள் (Object)
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் ! –
1 . குடத்தை வனைந்தான்
2 . குழையை உடையன்
1. ‘வனைந்தான்’ என்ற வினை முற்றுக்குச் செயப்படுபொருள், ‘குடம்’.
2. ‘உடையன்’ என்ற குறிப்பு வினை முற்றுக்குச்(Appellative finite verb) செயப்படுபொருள் , ‘குழை’.
-இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , செயப்படுபொருளை ஒட்டிக்கொண்டு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு நிற்பதைக் காணலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா, நிறைய இருக்கிறது படித்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் போடுகிறேன் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
தங்களின் எளிய விளக்கங்களைத் தொகுத்து நூலாக்குங்கள். வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும்.
நன்றி.
தங்களின் எளிய விளக்கங்களைத் தொகுத்து நூலாக்குங்கள். வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும்.
நன்றி.
நன்றி கிருஷ்ணாம்மா !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி முனைவர் குணசுந்தரி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (453)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமையியல் நூற்பா 10ஐ அடுத்து இரண்டாம் வேற்றுமை உருபின் பொருட் பாகுபாடுகள் பற்றிய நூற்பா அமைந்துள்ளது ; இதனை முன்பே நாம் பார்த்துள்ளதால் , அதற்கடுத்த நூற்பா 12க்குச் செல்வோம் !-
“மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே” (வேற்.12)
ஆம் ! மூன்றாம் வேற்றுமை உருபு பற்றிய நூற்பா இது !
இதன் பொருள் –
‘மூன்றாகுவதே’ - மூன்றாம் வேற்றுமை உருபு என்பது,
‘ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஒடு’ என்று சொல்லப்படும் வேற்றுமைச் சொல் !
‘வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே’- வினையைச் செய்யும் காரணக்கருத்தாவையும் , கருவியையும் அடிப்படையாகக் கொண்டுவரும் !
விளக்க எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் ! -
1 . மனத்தொடு வாய்மை சொன்னான் = மனத்தால் வாய்மை சொன்னான்.
இங்கே , மனத்தொடு – மனத்தால்
மனம் - வினைமுதல் (கருத்தா; வினை செய்யக் காரணமாக இருப்பது)
மனத்தொடு – இதுதான் தொல்காப்பியர் காலத் தமிழ் !
மனத்தால் – இது பிற்காலத் தமிழ்!
2 . வாளொடு என்ன பயன்?
இங்கே , வாள் – கருவி (tool)
வாளொடு என்ன பயன்?- இது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்!
வாளால் என்ன பயன்?- இது பிற்காலத்துத் தமிழ்!
கருத்தா – agent
கருவி – instrument
நேமிநாதம் , நன்னூல் , தொன்னூல் விளக்கம் , முத்துவீரியம் ஆகிய இலக்கண நூற்கள் , ‘ஆல்,ஆன் , ஓடு , ஒடு’ ஆகிய நான்கு உருபுகளை மூன்றாம் வேற்றுமை உருபுகளாகக் கூறினாலும் , தொல்காப்பியத்தின் அடுத்த நூற்பாவாலும் , நூ12க்குத் தெய்வச்சிலையார் வரைந்த உரையாலும் , இந்த நான்கு உருபுகளும் தொல்காப்பிய இலக்கணத்தில் கூறப்பட்டவையே எனக் கருதலாம்.
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமையியல் நூற்பா 10ஐ அடுத்து இரண்டாம் வேற்றுமை உருபின் பொருட் பாகுபாடுகள் பற்றிய நூற்பா அமைந்துள்ளது ; இதனை முன்பே நாம் பார்த்துள்ளதால் , அதற்கடுத்த நூற்பா 12க்குச் செல்வோம் !-
“மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே” (வேற்.12)
ஆம் ! மூன்றாம் வேற்றுமை உருபு பற்றிய நூற்பா இது !
இதன் பொருள் –
‘மூன்றாகுவதே’ - மூன்றாம் வேற்றுமை உருபு என்பது,
‘ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஒடு’ என்று சொல்லப்படும் வேற்றுமைச் சொல் !
‘வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே’- வினையைச் செய்யும் காரணக்கருத்தாவையும் , கருவியையும் அடிப்படையாகக் கொண்டுவரும் !
விளக்க எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் ! -
1 . மனத்தொடு வாய்மை சொன்னான் = மனத்தால் வாய்மை சொன்னான்.
இங்கே , மனத்தொடு – மனத்தால்
மனம் - வினைமுதல் (கருத்தா; வினை செய்யக் காரணமாக இருப்பது)
மனத்தொடு – இதுதான் தொல்காப்பியர் காலத் தமிழ் !
மனத்தால் – இது பிற்காலத் தமிழ்!
2 . வாளொடு என்ன பயன்?
இங்கே , வாள் – கருவி (tool)
வாளொடு என்ன பயன்?- இது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்!
வாளால் என்ன பயன்?- இது பிற்காலத்துத் தமிழ்!
கருத்தா – agent
கருவி – instrument
நேமிநாதம் , நன்னூல் , தொன்னூல் விளக்கம் , முத்துவீரியம் ஆகிய இலக்கண நூற்கள் , ‘ஆல்,ஆன் , ஓடு , ஒடு’ ஆகிய நான்கு உருபுகளை மூன்றாம் வேற்றுமை உருபுகளாகக் கூறினாலும் , தொல்காப்பியத்தின் அடுத்த நூற்பாவாலும் , நூ12க்குத் தெய்வச்சிலையார் வரைந்த உரையாலும் , இந்த நான்கு உருபுகளும் தொல்காப்பிய இலக்கணத்தில் கூறப்பட்டவையே எனக் கருதலாம்.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (454)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஒடு’ வேற்றுமை என்று மூன்றாம் வேற்றுமை கூறப்பட்டாலும் , ’ஆன்’என்ற உருபும் இந்த மூன்றாம் வேற்றுமைக்கு உண்டு !
இதைத்தான் கீழ்வரும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர் :-
“அதனி னியறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னா னேது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ” (வேற். 13)
1. ‘மண்ணான் இயன்ற குடம்’ என்ற எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். மண்ணே குடமாக ஆவதை இங்கு நோக்கலாம். இதனால்தான் ‘அதனின் இயறல்’ என்ற வாய்பாடு (Formula) கூறப்பட்டது ! இயறல் – செய்தல். அதனின் இயறல் = அதனைக் கொண்டு செய்தல். இந்த எடுத்துக்காட்டில் , மண் , ’முதற்காரணம்’ எனப்படும். (மண்+ ஆன் = மண்ணான்).இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’).
( கருவி , காரணம் , ஏது, நிமித்தம் என்பன ஏறக்குறைய ஒரே பொருள் கொண்டவை என்பது நச்சரின் விளக்கம்! ‘எதன் நிமித்தம்?’ என்றால், ‘எதன் பொருட்டு?’ என்பது பொருள்.)
2. அடுத்த வாய்பாடு , “அதன் தகு கிளவி”. ‘எதனால் இது தக்கது?’ என்ற வினாவை நீங்கள் கேட்கவேண்டும்; அதற்கு கூறும் விடை இந்த உருபு பெற்றுவரும். ‘வாயாற் றக்கது வாய்ச்சி’ ; (வாய்ச்சி - சொல்) ; வாயான் + தக்கது = வாயாற்றக்கது. தக்கது = தகுதிப்பாடு உடையது.இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
3 . ‘அதன் வினைப்படுதல்’ - எழுவாயின் செயற்பாட்டைக் குறித்து வரும் இது. உரையாசிரியன்மார் தரும் ‘நாயாற் கோட்பட்டான்’ என்பதன் பொருள் , ‘நாயான் கொல்லப்பட்டான்’ என்பதே. இதனை இன்றைய நடையில் சொல்வதானால் , ‘நாயால் கொல்லப்பட்டான்’ எனல் வேண்டும் ! இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’); வினை முதல் – எழுவாய் (கருத்தா; Subject).
4 . ‘அதனின் ஆதல்’ – ‘எதனால் ஆவது?’ என்ற வினாவுக்கு விடையாக வருவது. ‘வாணிகத்தான் ஆயினான்’ என்றால் , ’வணிகம் செய்து செல்வன் ஆனான்’ என்பது பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
5 . ‘அதனிற் கோடல்’ – ‘எதைக் கொண்டு பெறப்பட்டது?’ என்ற வினாவுக்கு விடையாக வரும் தொடரில் இவ் வுருபு வரும். ‘காணத்தாற் கொண்ட அரிசி’ என்றால் , ’கொள்ளைக் கொடுத்து வாங்கிய அரிசி’ என்பது பொருள் . (காணம் = கொள்ளு). இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
6 . ‘அதனொடு மயங்கல்’ – ஒன்றோடு ஒன்று கலந்து வருவதைப்பேசும்போது ‘ஒடு’ உருபு வரும் என்பது கருத்து. ‘எண்ணொடு விராய அரிசி ’ என்றால் , ‘எள்ளோடு கலந்த அரிசி’ என்பது பொருள். ( எள் + ஒடு = எண்ணொடு) . இங்கே வந்த உருபு , ‘ஒடு’. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
7 . ‘அதனொடியைந்த ஒருவினைக் கிளவி’ – ‘சாத்தனொடு வந்தான்’ என்பதில் , வினையானது ‘வருதல்’ ; சாத்தனும் இன்னொருவனும் வருதல் வினையைச் செய்கிறார்கள் ; இவ்வாறு இணைந்து வினை நடப்பதால் ‘ஒருவினைக் கிளவி’ என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’ . (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
8 . ‘அதனொடியைந்த வேறுவினைக் கிளவி’ - இதற்கு எடுத்துக்காட்டு ‘ மலையொடு பொருத யானை’ ; மலை அங்கேதான் இருக்கிறது ; யானைதான் வினை செய்கிறது; அஃதாவது, மோதுகிறது. இரண்டும் வினை செய்யாமல் ஒன்றுமட்டும் வினை செய்வதால் ‘வேறு வினை’என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’.. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
9 . ‘அதனொடியைந்த ஒப்பல் ஒப்புரை’ – இதற்கு எடுத்துக்காட்டு , ‘நூலோடு நார் இயைந்தது போல’ ; நூலும் நாரும் ஒப்பிடத் தக்க இரு பொருட்கள் அல்ல ; எனினும் வேறு ஒரு காரணத்திற்காக ஒப்பிடப்படுகிறது; இவ்வாறு ஒப்புமை இல்லாத இரண்டைச் சேர்த்து ஒப்புமை கூறினால் , அதுவே ‘ஒப்பல் ஒப்புரை’ . இங்கே வந்த உருபு , ‘ஒடு’. . (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
10 . ‘இன்னான்’ வாய்பாடு – ’இப்படிப்பட்டவன்’ என்று கூறும்போது இந்த உருபு வரும். ‘காலான் முடவன்’ என்றால் , அவன் கால் ஊனம் ; அதனால் அவன் ‘முடவன்’ என்பது பொருள். (காl+ ஆன்= காலான்)இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
11 . ‘ஏது’ - ஏது= காரணம். ‘தவத்தாற் பெற்றான் வீடு’ என்பது எடுத்துக்காட்டு. (தவத்தான் + பெற்றான்= தவத்தாற் பெற்றான்); ‘தவம் காரணமாகப் பெற்றான் வீடு பேறு’ என்பதே பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
தொல்காப்பியருக்கு முன்பு ‘ஒடு’ மட்டுமே மூன்றாம் வேற்றுமை உருபாக இருந்தது என்றும் ,தொல்காப்பியர் காலத்தில் ‘ஆன்’ உருபும் மூன்றாம் வேற்றுமை உருபாகக் கொள்ளப்பட்டது என்றும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்!
சரி! ‘ஒடு’ , ‘ஆன்’ என்ற இந்த இரு உருபுகள்(Case markers) மட்டும்தான் மூன்றாம் வேற்றுமைக்கு வருமா?
நல்ல வினா!
இதற்குத் தெய்வச்சிலையார் விடை கூறுகிறார் !:-
“இன்னும் ‘அன்ன பிறவும் என்றதனான் ‘ஓடு, ‘ஆல்’என வரும் உருபும் கொள்க’’ என்கிறார் தெய்வச்சிலையார் !.
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஒடு’ வேற்றுமை என்று மூன்றாம் வேற்றுமை கூறப்பட்டாலும் , ’ஆன்’என்ற உருபும் இந்த மூன்றாம் வேற்றுமைக்கு உண்டு !
இதைத்தான் கீழ்வரும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர் :-
“அதனி னியறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னா னேது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ” (வேற். 13)
1. ‘மண்ணான் இயன்ற குடம்’ என்ற எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். மண்ணே குடமாக ஆவதை இங்கு நோக்கலாம். இதனால்தான் ‘அதனின் இயறல்’ என்ற வாய்பாடு (Formula) கூறப்பட்டது ! இயறல் – செய்தல். அதனின் இயறல் = அதனைக் கொண்டு செய்தல். இந்த எடுத்துக்காட்டில் , மண் , ’முதற்காரணம்’ எனப்படும். (மண்+ ஆன் = மண்ணான்).இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’).
( கருவி , காரணம் , ஏது, நிமித்தம் என்பன ஏறக்குறைய ஒரே பொருள் கொண்டவை என்பது நச்சரின் விளக்கம்! ‘எதன் நிமித்தம்?’ என்றால், ‘எதன் பொருட்டு?’ என்பது பொருள்.)
2. அடுத்த வாய்பாடு , “அதன் தகு கிளவி”. ‘எதனால் இது தக்கது?’ என்ற வினாவை நீங்கள் கேட்கவேண்டும்; அதற்கு கூறும் விடை இந்த உருபு பெற்றுவரும். ‘வாயாற் றக்கது வாய்ச்சி’ ; (வாய்ச்சி - சொல்) ; வாயான் + தக்கது = வாயாற்றக்கது. தக்கது = தகுதிப்பாடு உடையது.இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
3 . ‘அதன் வினைப்படுதல்’ - எழுவாயின் செயற்பாட்டைக் குறித்து வரும் இது. உரையாசிரியன்மார் தரும் ‘நாயாற் கோட்பட்டான்’ என்பதன் பொருள் , ‘நாயான் கொல்லப்பட்டான்’ என்பதே. இதனை இன்றைய நடையில் சொல்வதானால் , ‘நாயால் கொல்லப்பட்டான்’ எனல் வேண்டும் ! இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’); வினை முதல் – எழுவாய் (கருத்தா; Subject).
4 . ‘அதனின் ஆதல்’ – ‘எதனால் ஆவது?’ என்ற வினாவுக்கு விடையாக வருவது. ‘வாணிகத்தான் ஆயினான்’ என்றால் , ’வணிகம் செய்து செல்வன் ஆனான்’ என்பது பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
5 . ‘அதனிற் கோடல்’ – ‘எதைக் கொண்டு பெறப்பட்டது?’ என்ற வினாவுக்கு விடையாக வரும் தொடரில் இவ் வுருபு வரும். ‘காணத்தாற் கொண்ட அரிசி’ என்றால் , ’கொள்ளைக் கொடுத்து வாங்கிய அரிசி’ என்பது பொருள் . (காணம் = கொள்ளு). இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
6 . ‘அதனொடு மயங்கல்’ – ஒன்றோடு ஒன்று கலந்து வருவதைப்பேசும்போது ‘ஒடு’ உருபு வரும் என்பது கருத்து. ‘எண்ணொடு விராய அரிசி ’ என்றால் , ‘எள்ளோடு கலந்த அரிசி’ என்பது பொருள். ( எள் + ஒடு = எண்ணொடு) . இங்கே வந்த உருபு , ‘ஒடு’. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
7 . ‘அதனொடியைந்த ஒருவினைக் கிளவி’ – ‘சாத்தனொடு வந்தான்’ என்பதில் , வினையானது ‘வருதல்’ ; சாத்தனும் இன்னொருவனும் வருதல் வினையைச் செய்கிறார்கள் ; இவ்வாறு இணைந்து வினை நடப்பதால் ‘ஒருவினைக் கிளவி’ என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’ . (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
8 . ‘அதனொடியைந்த வேறுவினைக் கிளவி’ - இதற்கு எடுத்துக்காட்டு ‘ மலையொடு பொருத யானை’ ; மலை அங்கேதான் இருக்கிறது ; யானைதான் வினை செய்கிறது; அஃதாவது, மோதுகிறது. இரண்டும் வினை செய்யாமல் ஒன்றுமட்டும் வினை செய்வதால் ‘வேறு வினை’என்றனர். இங்கே வந்த உருபு , ‘ஒடு’.. (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
9 . ‘அதனொடியைந்த ஒப்பல் ஒப்புரை’ – இதற்கு எடுத்துக்காட்டு , ‘நூலோடு நார் இயைந்தது போல’ ; நூலும் நாரும் ஒப்பிடத் தக்க இரு பொருட்கள் அல்ல ; எனினும் வேறு ஒரு காரணத்திற்காக ஒப்பிடப்படுகிறது; இவ்வாறு ஒப்புமை இல்லாத இரண்டைச் சேர்த்து ஒப்புமை கூறினால் , அதுவே ‘ஒப்பல் ஒப்புரை’ . இங்கே வந்த உருபு , ‘ஒடு’. . (இங்கே வந்த பொருண்மை, ‘வினைமுதற் பொருண்மை’)
10 . ‘இன்னான்’ வாய்பாடு – ’இப்படிப்பட்டவன்’ என்று கூறும்போது இந்த உருபு வரும். ‘காலான் முடவன்’ என்றால் , அவன் கால் ஊனம் ; அதனால் அவன் ‘முடவன்’ என்பது பொருள். (காl+ ஆன்= காலான்)இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
11 . ‘ஏது’ - ஏது= காரணம். ‘தவத்தாற் பெற்றான் வீடு’ என்பது எடுத்துக்காட்டு. (தவத்தான் + பெற்றான்= தவத்தாற் பெற்றான்); ‘தவம் காரணமாகப் பெற்றான் வீடு பேறு’ என்பதே பொருள். இங்கே வந்த உருபு , ‘ஆன்’. (இங்கே வந்த பொருண்மை, ‘கருவிப் பொருண்மை’)
தொல்காப்பியருக்கு முன்பு ‘ஒடு’ மட்டுமே மூன்றாம் வேற்றுமை உருபாக இருந்தது என்றும் ,தொல்காப்பியர் காலத்தில் ‘ஆன்’ உருபும் மூன்றாம் வேற்றுமை உருபாகக் கொள்ளப்பட்டது என்றும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்!
சரி! ‘ஒடு’ , ‘ஆன்’ என்ற இந்த இரு உருபுகள்(Case markers) மட்டும்தான் மூன்றாம் வேற்றுமைக்கு வருமா?
நல்ல வினா!
இதற்குத் தெய்வச்சிலையார் விடை கூறுகிறார் !:-
“இன்னும் ‘அன்ன பிறவும் என்றதனான் ‘ஓடு, ‘ஆல்’என வரும் உருபும் கொள்க’’ என்கிறார் தெய்வச்சிலையார் !.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (455)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நான்காம் வேற்றுமை உருபுகள் தொடர்பான நூற்பாக்கள் 14, 15 ஆகியவற்றை முன்பே நம் வரிசையில் ஆய்ந்துள்ளதால் இப்போது ஐந்தாம் வேற்றுமை பற்றிய நூற்பா 16க்குச் செல்லலாம் !:-
“ஐந்தாகுவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது என்னு மதுவே ” (வேற். 16)
‘இன் எனப் பெயரிய’ – ‘இன்’ என்ற பெயர் உடைய,
‘வேற்றுமைக் கிளவி’ - வேற்றுமை உருபாகிய சொல்,
‘இதனின்’ – இந்தப் பொருளைவிட
‘இற்று இது’ – இந்தத் தன்மைத்து இது என்பதை உணர்த்த வரும்!
இற்று – குறிப்பு வினை முற்று (Appellative finite verb)
‘இதனின் இற்று இது’ – என்பதை வாய்பாடாகக் (Formula)கொள்ளவேண்டும் !
அடுத்த நூற்பாவில் , ‘இன்’ எனும் ஐந்தாம் வேற்றுமை உருபின் பொருட்பாகுபாடுகளை உணர்த்துகிறார் தொல்காப்பியர்!:-
”வண்ணம் படிவே யளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யிளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை ஆக்க மென்றா
இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்று
அன்ன பிறவும் அதன்பால் என்மனார்” (வேற்.17)
கல்லாடனார் உரையின் அடிப்படையில், மேலே கூறப்பட்ட 28 வகைப் பொருள் வகையங்களை (Patterns) வருமாறு விளக்கலாம் !:-
1 . வண்ணம் – காக்கையிற் கரிது களாம்பழம் ( காக்கையைவிடக் களாம் பழம் கருமையானது; காக்கையின் + கரிது= காக்கையிற் கரிது; ‘இன்’ வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க)
2 . வடிவு – உள்ளங்கையின் வட்டம் சக்கரம் (உள்ளங்கையை விடச் சக்கரம் வட்டமானது)
3 . அளவு – புத்தகத்தின் நெடிது குடை (புத்தகத்தைவிடக் குடை நீளமானது)
4 . சுவை – மாங்காயிற் புளிப்பு புளி (மாங்காயைவிடப் புளிப்பு மிக்கது புளி)
5 . தண்மை - சித்திரையிற் தண்ணிது மாசி மாதம் (தண்ணிது - குளிரானது)
6 . வெம்மை - மாசியின் வெம்மை சித்திரை (வெம்மை - வெட்பம்)
7 . அச்சம் – கள்ளரின் அஞ்சும் (கள்ளரைக்கண்டு அஞ்சுவான்)
8 . நன்மை – தேநீரிற் பால் நன்று (தேநீரைவிடப் பால் நல்லது)
9 . தீமை – பொய்மையிற் கொலை தீது
10 . சிறுமை – புலியிற் சிறிது புலிக்குட்டி
11 . பெருமை - புலிக்குட்டியிற் பெரிது புலி
12 . வன்மை – எருமையின் வலிது யானை
13 . மென்மை – மலரின் மென்மை காதல்
14 . கடுமை - மரத்தின் கடுமை பாறை
15 . முதுமை – கண்ணகியின் மூத்தோன் கோவலன்
16 . இளமை – கோவலனின் இளையோள் கண்ணகி
17 – சிறத்தல் – கொடுங்கோலனின் சிறந்தவன் செங்கோலன்
18 . இழித்தல் – செங்கோலனின் இழிந்தவன் கொடுங்கோலன்
19 . புதுமை – பழம்பானையிற் புதிது, குயவன் இன்று செய்த பானை
20 . பழமை – இன்று கடையில் வாங்கிய ஆடையிற் பழயது , கட்டியிருந்த ஆடை
21 . ஆக்கம் - தொண்டரின் செல்வனாயினான் தலைவன்
22 . இன்மை – முதலாளியிற் பொருளிலன் தொழிலாளி
23 . உடைமை – தொழிலாளியிற் பொருளுடையன் முதலாளி
24 . நாற்றம் – தாமரையின் நாறும் மல்லிகை (தாமரையைவிட மல்லிகை மணக்கும்)
25 . தீர்தல் – காட்டிற் றீர்ந்து ஊருக்குள் வந்தது சிறுத்தை (காட்டிலிருந்து நீங்கிச் சிறுத்தை
ஊருக்குள் வந்தது)
26 . பன்மை - கொடையாளரிற் பலர் கஞ்சர்கள் (கொடையாளிகளைவிடக் கஞ்சர்களே பலராக உள்ளனர்)
27 . சின்மை – கஞ்சர்களிற் சிலர் கொடையாளர் (கஞ்சர்களைவிடக் கொடையாளிகள் சிலர்)
28 . பற்றுவிடுதல் – காமத்திற் பற்றுவிட்டான் (காமத்தின் மீதிருந்த பிணைப்பை நீக்கினான் )
மேல் 28இல் , அடைப்புக் குறிக்குள் தரப்பட்டவை இன்றைய நடையில் அமைந்தவை ஆகும்.
எடுத்துக்காட்டுகளில் ‘இன்’பயின்றது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்! அவற்றை நாம் விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் ‘விட’ , ‘இல் இருந்து’ என்றெல்லாம் போட்டுத்தான் விளங்கிக் கொள்ளவேண்டும் ! இந்தக் காரணத்தால்தான் இளம்பூரணர் முதலிய பழைய உரையாசிரியர்கள், ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்றோ , ‘இதிலிருந்து’ என்றோ உரை எழுதவில்லை ! ‘இதனின்’ என்றே பொறுலும் எழுதினர் ! உரையாசிரியர்தம் எழுத்தை நாம் எப்படி அணுக வேண்டும் (How to approach the commentators of Tholkappiyam) என்பதற்கு இந்த ஆய்வே சான்று !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெரும்பான்மையானவை ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள்கொள்வதை ஆதரிக்கின்றன என்பதை நோக்குவீர்! இதனால்தான் , மேல் நூற்பாப் (வேற். 16) பொருளில் ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள் எழுதப்பட்டுள்ளது !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நான்காம் வேற்றுமை உருபுகள் தொடர்பான நூற்பாக்கள் 14, 15 ஆகியவற்றை முன்பே நம் வரிசையில் ஆய்ந்துள்ளதால் இப்போது ஐந்தாம் வேற்றுமை பற்றிய நூற்பா 16க்குச் செல்லலாம் !:-
“ஐந்தாகுவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது என்னு மதுவே ” (வேற். 16)
‘இன் எனப் பெயரிய’ – ‘இன்’ என்ற பெயர் உடைய,
‘வேற்றுமைக் கிளவி’ - வேற்றுமை உருபாகிய சொல்,
‘இதனின்’ – இந்தப் பொருளைவிட
‘இற்று இது’ – இந்தத் தன்மைத்து இது என்பதை உணர்த்த வரும்!
இற்று – குறிப்பு வினை முற்று (Appellative finite verb)
‘இதனின் இற்று இது’ – என்பதை வாய்பாடாகக் (Formula)கொள்ளவேண்டும் !
அடுத்த நூற்பாவில் , ‘இன்’ எனும் ஐந்தாம் வேற்றுமை உருபின் பொருட்பாகுபாடுகளை உணர்த்துகிறார் தொல்காப்பியர்!:-
”வண்ணம் படிவே யளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யிளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை ஆக்க மென்றா
இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்று
அன்ன பிறவும் அதன்பால் என்மனார்” (வேற்.17)
கல்லாடனார் உரையின் அடிப்படையில், மேலே கூறப்பட்ட 28 வகைப் பொருள் வகையங்களை (Patterns) வருமாறு விளக்கலாம் !:-
1 . வண்ணம் – காக்கையிற் கரிது களாம்பழம் ( காக்கையைவிடக் களாம் பழம் கருமையானது; காக்கையின் + கரிது= காக்கையிற் கரிது; ‘இன்’ வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க)
2 . வடிவு – உள்ளங்கையின் வட்டம் சக்கரம் (உள்ளங்கையை விடச் சக்கரம் வட்டமானது)
3 . அளவு – புத்தகத்தின் நெடிது குடை (புத்தகத்தைவிடக் குடை நீளமானது)
4 . சுவை – மாங்காயிற் புளிப்பு புளி (மாங்காயைவிடப் புளிப்பு மிக்கது புளி)
5 . தண்மை - சித்திரையிற் தண்ணிது மாசி மாதம் (தண்ணிது - குளிரானது)
6 . வெம்மை - மாசியின் வெம்மை சித்திரை (வெம்மை - வெட்பம்)
7 . அச்சம் – கள்ளரின் அஞ்சும் (கள்ளரைக்கண்டு அஞ்சுவான்)
8 . நன்மை – தேநீரிற் பால் நன்று (தேநீரைவிடப் பால் நல்லது)
9 . தீமை – பொய்மையிற் கொலை தீது
10 . சிறுமை – புலியிற் சிறிது புலிக்குட்டி
11 . பெருமை - புலிக்குட்டியிற் பெரிது புலி
12 . வன்மை – எருமையின் வலிது யானை
13 . மென்மை – மலரின் மென்மை காதல்
14 . கடுமை - மரத்தின் கடுமை பாறை
15 . முதுமை – கண்ணகியின் மூத்தோன் கோவலன்
16 . இளமை – கோவலனின் இளையோள் கண்ணகி
17 – சிறத்தல் – கொடுங்கோலனின் சிறந்தவன் செங்கோலன்
18 . இழித்தல் – செங்கோலனின் இழிந்தவன் கொடுங்கோலன்
19 . புதுமை – பழம்பானையிற் புதிது, குயவன் இன்று செய்த பானை
20 . பழமை – இன்று கடையில் வாங்கிய ஆடையிற் பழயது , கட்டியிருந்த ஆடை
21 . ஆக்கம் - தொண்டரின் செல்வனாயினான் தலைவன்
22 . இன்மை – முதலாளியிற் பொருளிலன் தொழிலாளி
23 . உடைமை – தொழிலாளியிற் பொருளுடையன் முதலாளி
24 . நாற்றம் – தாமரையின் நாறும் மல்லிகை (தாமரையைவிட மல்லிகை மணக்கும்)
25 . தீர்தல் – காட்டிற் றீர்ந்து ஊருக்குள் வந்தது சிறுத்தை (காட்டிலிருந்து நீங்கிச் சிறுத்தை
ஊருக்குள் வந்தது)
26 . பன்மை - கொடையாளரிற் பலர் கஞ்சர்கள் (கொடையாளிகளைவிடக் கஞ்சர்களே பலராக உள்ளனர்)
27 . சின்மை – கஞ்சர்களிற் சிலர் கொடையாளர் (கஞ்சர்களைவிடக் கொடையாளிகள் சிலர்)
28 . பற்றுவிடுதல் – காமத்திற் பற்றுவிட்டான் (காமத்தின் மீதிருந்த பிணைப்பை நீக்கினான் )
மேல் 28இல் , அடைப்புக் குறிக்குள் தரப்பட்டவை இன்றைய நடையில் அமைந்தவை ஆகும்.
எடுத்துக்காட்டுகளில் ‘இன்’பயின்றது தொல்காப்பியர் காலத்துத் தமிழ்! அவற்றை நாம் விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் ‘விட’ , ‘இல் இருந்து’ என்றெல்லாம் போட்டுத்தான் விளங்கிக் கொள்ளவேண்டும் ! இந்தக் காரணத்தால்தான் இளம்பூரணர் முதலிய பழைய உரையாசிரியர்கள், ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்றோ , ‘இதிலிருந்து’ என்றோ உரை எழுதவில்லை ! ‘இதனின்’ என்றே பொறுலும் எழுதினர் ! உரையாசிரியர்தம் எழுத்தை நாம் எப்படி அணுக வேண்டும் (How to approach the commentators of Tholkappiyam) என்பதற்கு இந்த ஆய்வே சான்று !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெரும்பான்மையானவை ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள்கொள்வதை ஆதரிக்கின்றன என்பதை நோக்குவீர்! இதனால்தான் , மேல் நூற்பாப் (வேற். 16) பொருளில் ‘இதனின்’ என்பதற்கு ‘இதனைவிட’ என்று பொருள் எழுதப்பட்டுள்ளது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 69 of 84 • 1 ... 36 ... 68, 69, 70 ... 76 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 69 of 84
|
|