புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
88 Posts - 42%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
88 Posts - 42%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 65 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 65 of 84 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 74 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 09, 2016 12:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (430)
         -- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதனால்’ – இதற்கு என்ன இலக்கணக் குறிப்பு எழுதுவீர்கள்?

‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ – இது தொல்காப்பியர் விடை !

இதில் , ‘அது’ எனும் சுட்டும் உள்ளது;  ‘அது காரணமாக’   என்று விரிவதால்  ‘காரணச் சொல்லும்’ உள்ளது ! எனவேதான் ‘காரணக் கிளவி’ !  காரணமில்லாமல் தொல்காப்பியர் சொல்வரா?

முன் ஆய்வில் , ‘இயற் பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு தொடரில் வந்தால் , இயற் பெயரை முன்னே எழுதிவிட்டுப் பிறகு சுட்டுப் பெயரை எழுதவேண்டும் ’ என்ற தொல்காப்பிய விதியைப்  (கிளவி. 38) பார்த்தோமல்லவா?

இதே முறையில்தான் , காரணக்கிளவியைப் பின்னே எழுதி , அதற்கு முன்னே இக் காரணக் கிளவி எதனைச்  சுட்டுகிறதோ அதனை முன்னே எழுத வேண்டும் என்கிறார் தொல்காப்பியர் ! –

“சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய  ரியற்கையிற்  செறியத் தோன்றும்” (கிளவி. 40)

சேனாவரையர் உரைப்படி –
1. சாத்தன் கையெழுதுமாறு வல்லன் ; அதனால் தந்தை உவக்கும் √
   அதனால் தந்தை உவக்கும் ; சாத்தன் கையெழுதுமாறு வல்லன் ×
(கையெழுதுமாறு வல்லன் – ஓலையில் கையால் எழுதுவதில் வல்லவன் ; தந்தை                 உவக்கும் – தந்தை மகிழ்வார்)

2. சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ; அதனால் கொண்டான் உவக்கும் √
அதனால் கொண்டான் உவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ×
(சாந்தரைக்குமாறு வல்லள் – சந்தனம் அரைப்பதில் வல்லவள் ; கொண்டான் உவக்கும் –  கணவன் மகிழ்வார்)

தெய்வச்சிலையார் உரைப்படி –
1. மழை பெய்தது ; அதனால் யாறு பெருகும் √
அதனால் யாறு பெருகும் , மழை பெய்தது ×
(யாறு – ஆறு ; பெருகும் - நிறையும்)

இந்த ‘அதனால்’ ஒரு சிக்கலான சொல் !

இலக்கணிகளைக் குழப்பிவிட்ட சொல் !

‘அதனால்’ – இதனைப் பிரிக்கவேண்டுமா?  பிரிக்கக் கூடாதா?

அதனால் = அது +அன் +ஆல்

- இப்படிப் பிரிக்கப் பலருக்கும் தெரியும்தான் !

ஆனால் , ‘பிரிக்கக் கூடாது ; ஒரு சொல்போல  நிற்கும்  இடைச்சொல்தான்  ‘அதனால்’   ’  என்பது நச்சர் கருத்து !

இக் குழப்பத்திற்கு  முடிவு ?

கத்தி இருந்தது ; அதனால் அவனைக் குத்திவிட்டான் !
- இங்கே பிரிக்கவேண்டும் ! (அது +அன் +ஆல்) ; இங்கே , அதனால்= அதைக்கொண்டு !

கத்தி இருந்தது; அதனால் பயம் இல்லை !
- இங்கே பிரிக்கக் கூடாது ! இங்கே , அதனால் = அது காரணமாக !

‘அதனால்’  இங்கு   இடைச்சொல் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 09, 2016 12:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (430)
         -- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதனால்’ – இதற்கு என்ன இலக்கணக் குறிப்பு எழுதுவீர்கள்?

‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ – இது தொல்காப்பியர் விடை !

இதில் , ‘அது’ எனும் சுட்டும் உள்ளது;  ‘அது காரணமாக’   என்று விரிவதால்  ‘காரணச் சொல்லும்’ உள்ளது ! எனவேதான் ‘காரணக் கிளவி’ !  காரணமில்லாமல் தொல்காப்பியர் சொல்வரா?

முன் ஆய்வில் , ‘இயற் பெயரும் சுட்டுப் பெயரும் ஒரு தொடரில் வந்தால் , இயற் பெயரை முன்னே எழுதிவிட்டுப் பிறகு சுட்டுப் பெயரை எழுதவேண்டும் ’ என்ற தொல்காப்பிய விதியைப்  (கிளவி. 38) பார்த்தோமல்லவா?

இதே முறையில்தான் , காரணக்கிளவியைப் பின்னே எழுதி , அதற்கு முன்னே இக் காரணக் கிளவி எதனைச்  சுட்டுகிறதோ அதனை முன்னே எழுத வேண்டும் என்கிறார் தொல்காப்பியர் ! –

“சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய  ரியற்கையிற்  செறியத் தோன்றும்” (கிளவி. 40)

சேனாவரையர் உரைப்படி –
1. சாத்தன் கையெழுதுமாறு வல்லன் ; அதனால் தந்தை உவக்கும் √
   அதனால் தந்தை உவக்கும் ; சாத்தன் கையெழுதுமாறு வல்லன் ×
(கையெழுதுமாறு வல்லன் – ஓலையில் கையால் எழுதுவதில் வல்லவன் ; தந்தை                 உவக்கும் – தந்தை மகிழ்வார்)

2. சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ; அதனால் கொண்டான் உவக்கும் √
அதனால் கொண்டான் உவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ×
(சாந்தரைக்குமாறு வல்லள் – சந்தனம் அரைப்பதில் வல்லவள் ; கொண்டான் உவக்கும் –  கணவன் மகிழ்வார்)

தெய்வச்சிலையார் உரைப்படி –
1. மழை பெய்தது ; அதனால் யாறு பெருகும் √
அதனால் யாறு பெருகும் , மழை பெய்தது ×
(யாறு – ஆறு ; பெருகும் - நிறையும்)

இந்த ‘அதனால்’ ஒரு சிக்கலான சொல் !

இலக்கணிகளைக் குழப்பிவிட்ட சொல் !

‘அதனால்’ – இதனைப் பிரிக்கவேண்டுமா?  பிரிக்கக் கூடாதா?

அதனால் = அது +அன் +ஆல்

- இப்படிப் பிரிக்கப் பலருக்கும் தெரியும்தான் !

ஆனால் , ‘பிரிக்கக் கூடாது ; ஒரு சொல்போல  நிற்கும்  இடைச்சொல்தான்  ‘அதனால்’   ’  என்பது நச்சர் கருத்து !

இக் குழப்பத்திற்கு  முடிவு ?

கத்தி இருந்தது ; அதனால் அவனைக் குத்திவிட்டான் !
- இங்கே பிரிக்கவேண்டும் ! (அது +அன் +ஆல்) ; இங்கே , அதனால்= அதைக்கொண்டு !

கத்தி இருந்தது; அதனால் பயம் இல்லை !
- இங்கே பிரிக்கக் கூடாது ! இங்கே , அதனால் = அது காரணமாக !

‘அதனால்’  இங்கு   இடைச்சொல் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 14, 2016 9:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (431)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்லின்செல்வன் அனுமன்  பறந்தான் .
அனுமன் சொல்லின்செலவன் பறந்தான்.
- இவற்றில் எது சரி?

- இதுபோன்ற தொடர்களுக்குத் தொல்காப்பியத்தில் விதி ஏதும் உள்ளதா?

உள்ளது ! –
“சிறப்பி  னாகிய பெயர்நிலைக்  கிளவிக்கும்
இயற்பெயர்க்  கிளவி முற்படக்  கிளவார் ”  (கிலவி. 41)

‘சிறப்பின் ஆகிய பெயர்நிலைக்  கிளவிக்கும்’ – சிறப்பால் பெற்ற பெயருக்கும்,
‘இயற்பெயர்க்  கிளவி முற்படக்  கிளவார்’ – முன்னதாக , ஒருவரின் இயற்பெயரைக் கூறக்கூடாது !

இதன்படி -
சொல்லின்செல்வன் அனுமன்  பறந்தான் .√
அனுமன் சொல்லின்செல்வன் பறந்தான்.×

இங்கே –
சொல்லின்செல்வன்   - ‘சிறப்பின் ஆகிய பெயர்நிலைக்  கிளவி’; அஃதாவது , பட்டப் பெயர் .
அனுமன்   - ‘இயற்பெயர்க்  கிளவி’; அஃதாவது , இயற் பெயர்.

சேனாவரையர் எடுத்துக்காட்டின்படி –
1.   நல்லுதடன்   ஏனாதி  ×
      ஏனாதி  நல்லுதடன் √
2.. கண்ணந்தை காவிதி ×
காவிதி கண்ணந்தை √

இங்கே –
‘ஏனாதி’ ,  ‘காவிதி’ –  பட்டப் பெயர்கள் .
‘நல்லுதடன்’ , ‘கண்ணந்தை ’ – இயற் பெயர்கள்.
(ஏனாதி -  படைத் தலைவன்; காவிதி - அமைச்சன்)

தொல்காப்பிய நூற்பாவின்படி , சிறப்புக் குரிய பெயர்களையே பட்டப்பெயர்களாகக் கொண்டு , அதனை இயற்பெயருக்கு முன்னே எழுதவேண்டும் ! இல்லையா?

தொல்காப்பிய நூற்பாவுக்கு முதலில் நேர் பொருளை எழுதும்போது சேனாவரையர் , “ஈண்டுச் சிறப்பாவது மன்னர் முதலாயினாராற் பெறும் வரிசை” என்றார் !  ‘ஏனாதி’ , ‘காவிதி’ ஆகியன அந்தக் காலத்து மன்னரால் தரப்பட்ட பட்டங்கள்தாம் !

ஆனால் இளம்பூரணர், சேனாவரையர் , நச்சர் முதலிய  உரையாசிரியர்கள் , அவர்கள் கால வழக்கப்படி , சாதிப்பெயர் , உறுப்புக் குறைபாட்டுப் பெயர், தொழிலால் வந்த பெயர்  போன்ற பெயர்களையும் ‘பட்டப் பெயர்களாக’க் கொண்டு , இயற்பெயருக்கு முன்னால் இவற்றை எழுதலாம் என உரை வகுத்தனர் !

இளம்பூரணரின் இத்தகு உரைப்படி –
1.   கண்ணன்  பார்ப்பான் ×
         பார்ப்பான்  கண்ணன் √

2.   சாத்தன்  வண்ணான் ×
  வண்ணான்  சாத்தன் √

சேனாவரையரின் இத்தகு உரைப்படி –
1.   அகத்தியன்  முனிவன் ×
  முனிவன்  அகத்தியன் √

2.   திருவள்ளுவன்   தெய்வப் புலவன் ×
  தெய்வப்  புலவன்  திருவள்ளுவன் √

3. கொற்றன் குருடன் ×
       குருடன் கொற்றன் √

     உரையாசிரியர்தம் உரைகளின்படியேதான் நமது  மேலை ‘அனுமன்’ எடுத்துக்காட்டுத் தொடர்களும் தரப்பட்டன !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 23, 2016 12:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (432)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கம் தொடர்கிறது !-
“ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி
தொழில்வேறு  கிளப்பின்  ஒன்றிட  னிலவே”  (கிளவி. 42)

‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி’ – ஒரே பொருளைச் சொல்லவந்த பல பெயர்ச் சொற்கள்,
‘தொழில்வேறு  கிளப்பின்  ’ – ஒரே பொருளைச் சொல்லாது , வேறு வேறு தொழில்களைத் தெரிவித்து முடிந்தால்,
‘ஒன்றிடன்  இலவே’ -  ஒருபொருளாக ஒன்றாமல் பிழையாகும் !

சேனாவரையர் எடுத்துக்காட்டின்படி –
1. ஆசிரியன் பேரூர்க் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் √
          ஆசிரியன் வந்தான் பேரூர்க் கிழான் உண்டான் செயிற்றியன் சென்றான் ×

2. எந்தை எம்பெருமான் மைந்தன் மணாளன்  வருக √
எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன்  வருக √

முதல் எடுத்துக்காட்டில் , ‘வந்தான்’ , ‘உண்டான்’ , ’சென்றான்’ – மூன்றும்  வேறு வேறு  தொழில்கள் !

இரண்டாம் எடுத்துக்காட்டில் , ‘வருக’ என்ற ஒரு தொழிலே தொடர் முழுதும் வருகிறது !

இங்கே ‘தொழில்’ என்றதும் , அதற்கு வரி கட்டுகிறார்களா? எனக் கேட்காதீர்கள் !

தொழில் = வினை ; செயல் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 23, 2016 12:26 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (432)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கம் தொடர்கிறது !-
“ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி
தொழில்வேறு  கிளப்பின்  ஒன்றிட  னிலவே”  (கிளவி. 42)

‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி’ – ஒரே பொருளைச் சொல்லவந்த பல பெயர்ச் சொற்கள்,
‘தொழில்வேறு  கிளப்பின்  ’ – ஒரே பொருளைச் சொல்லாது , வேறு வேறு தொழில்களைத் தெரிவித்து முடிந்தால்,
‘ஒன்றிடன்  இலவே’ -  ஒருபொருளாக ஒன்றாமல் பிழையாகும் !

சேனாவரையர் எடுத்துக்காட்டின்படி –
1. ஆசிரியன் பேரூர்க் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் √
          ஆசிரியன் வந்தான் பேரூர்க் கிழான் உண்டான் செயிற்றியன் சென்றான் ×

2. எந்தை எம்பெருமான் மைந்தன் மணாளன்  வருக √
எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன்  வருக √

முதல் எடுத்துக்காட்டில் , ‘வந்தான்’ , ‘உண்டான்’ , ’சென்றான்’ – மூன்றும்  வேறு வேறு  தொழில்கள் !

இரண்டாம் எடுத்துக்காட்டில் , ‘வருக’ என்ற ஒரு தொழிலே தொடர் முழுதும் வருகிறது !

இங்கே ‘தொழில்’ என்றதும் , அதற்கு வரி கட்டுகிறார்களா? எனக் கேட்காதீர்கள் !

தொழில் = வினை ; செயல் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 02, 2016 6:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (433)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நானும் என் ஆடும் செல்வோம் !
- இந்தத் தொடர் சரியா?

சரிதான் என்கிறார் தொல்காப்பியர் ! :-
“தன்மைச்  சொல்லே யஃறிணைக் கிளவியென்று
எண்ணுவழி  மருங்கின் விரவுதல் வரையார் ”  (கிளவி. 43)

தன்மைச்  சொல்லே  -  தன்மை இடத்தில் வரும் தன்மைச் சொல்லும்,
அஃறிணைக் கிளவி என்று – அஃறிணைச் சொல்லும்,
எண்ணுவழி மருங்கின் -  அடுத்தடுத்து எண்ணிக் கூறி ,
விரவுதல் வரையார் – வருவதை நீக்கார் !

சேனாவரையரின் உரைப்படி –
‘யானும் என் எஃகமும் சாறும்’ √
(எஃகம் – படைக் கருவிகள் ; சாறும் - செல்வோம்)

இதே முறையில் நாம் கூறலாம் –
நானும் எனது ஆடும் போவோம் √
நானும் என் குதிரையும் சென்றோம் √

அடுத்த நூற்பா –
“ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
 ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது” (கிளவி. 44)

அஃதாவது-
‘ஒருவன்’ – இதன் எண் ‘ஒருமை’  

‘ஒருவன்’ – இதன் பால் ‘பொதுப்பிரிபால்’ ( ‘அவன்’ என்றோ , ‘மகன்’ என்றோ குறிப்பிட்டு வராது  

‘ஒருவன்’ எனப் பொதுவாய் , பெண்பாலிலிருந்து வேறுபட்டு வந்ததைக் கவனிக்க!)  

‘ஒருத்தி’ – இதன் எண் ‘ஒருமை’  

‘ஒருத்தி’ – இதன் பால் ‘பொதுப்பிரிபால்’ ( ‘அவள்’ என்றோ , ‘மகள்’ என்றோ குறிப்பிட்டு வராது  

‘ஒருத்தி’ எனப் பொதுவாய் , ஆண்பாலிலிருந்து வேறுபட்டு வந்ததைக் கவனிக்க!)  

ஒருவன் , ஒருத்தி – என்று குறிப்பதோடு நிற்கவேண்டுமே அல்லாமல் , ‘இருவன்’ , ‘இருத்தி’ என்று சொல்லக்கூடாது !

இதற்கான தொல்காப்பியர் ஆணை ! –
“ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
 ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது”  (கிளவி. 44)

‘ஒருவர்’ , ‘இருவர்’ – என வரிசையாக எண்ணுகிறோமல்லவா?

இதுதான் ‘எண்ணுமுறை’ !

‘இருவன்’ , ‘இருத்தி’ , வரக்கூடாது என்கிறீர்கள் , ஆனால் ‘ஒருவர்’ , ‘இருவர்’ என்றுமட்டும் வரலாமா?

வரலாம் !

ஏனெனில், ’ஒருவர்’ , ‘இருவர்’ என எண்ணும்போது , பாலானது ஆண்பால் , பெண்பால் என்று பிரிந்து நிற்கவில்லை ! இந்த நுட்பத்தைச் சொன்னவர் இளம்பூரணர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 05, 2016 7:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (434)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குமரனும்  மாடும் செல்க !
- இத் தொடர் சரியா ?

‘சரி’ என்கிறார் தொல்காப்பியர் ! –

“வியங்கோ  ளெண்ணுப்பெயர்  திணைவிரவு வரையார் ” (கிளவி. 45)

செல்க -  வியங்கோள் வினைமுற்று .

மேலைத் தொடரில் , வியங்கோள்  வினைமுற்று வந்துள்ளதால், அதற்கு முன் ’குமரன்’ எனும் உயர்திணைச் சொல்லும் , ‘மாடு’  எனும் அஃறிணைச் சொல்லும் கலந்து வரலாம் என்பது இச் சூத்திரத்தின் பொருள் !

நச்சினார்க்கினியர் , இதே தொல்காப்பியச் சூத்திரத்தை வைத்துக்  கீழ் வரும் தொடர்களையும் நாம் கொள்ளலாம் என்கிறார்! –

1. ஆவும் ஆயனும் சென்ற  கானம் √
2. ஆவும் ஆயனும் செல்லும் கானம் √

 (கானம் - காடு)

இந்த எடுத்துக்காட்டுகளில் ,  ‘சென்ற’ , ‘செல்லும்’  ஆகியன விரவுத் திணைச் சொற்கள் !

அஃதாவது இவை இரண்டும்  உயர்திணைக்கும் வரும் , அஃறிணைக்கும் வரும் !

காட்டாக –
வேலன் சென்ற வீடு √
வேலன் செல்லும் வீடு √

குதிரை சென்ற வீடு √
குதிரை செல்லும் வீடு √

இங்கே ‘வேலன்’ –  உயர்திணைப்  பெயர்ச்  சொல் .
‘குதிரை’ –  அஃறிணைப்  பெயர்ச்  சொல்.

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 09, 2016 6:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (435)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

1 . உணவு கிண்டினாள்
2. அணிகலனைக் கட்டிக்கொண்டாள்
3. இசைக் கருவியை அடித்தார்

-  இத் தொடர்கள் சரியா?

அல்ல!

தொல்காப்பியத்திற்கு முரணான தொடர்கள் இவை !

இதுதான் தொல்காப்பிய விதி –
“வேறுவினைப்  பொதுச்சொல்  ஒருவினை  கிளவார்”  (கிளவி. 46)

‘வேறுவினைப்  பொதுச்சொல்  ’ – சில வினைகளை உள்ளடக்கிக் கூறத்தக்க பொதுவான சொல்லை வைத்து,
’ ஒருவினை  கிளவார்’ – ஒரு குறிப்பிட்ட வினைக்குப் பொருத்திக் கூறக்கூடாது !

மேலை நம் எடுத்துக்காட்டுகளுக்கு வருவோம் ! –

1 .  ‘உணவு’  என்பது சொல் பொதுச் சொல் !  காய்ச்சித் தயாரிப்பதற்கும், அவித்துத் தயாரிப்பதற்கும், பொரித்துத் தயாரிப்பதற்கும் என்று பல  செயல்கள் (வினைகள்) செய்து தயாரிக்கக் கூடிய பொருளுக்கான பொதுச் சொல் உணவு ! இத்தகைய சொல்லான ‘உணவு’ என்ற சொல்லை , ஒரு வினைக்கு மட்டும் பொருத்திக் ‘கிண்டினார்’ என்றால் அது பிழை !

உணவு சமைத்தாள் √

சமைத்தல் – பொதுவினை

2. அணிகலன்களை அணிந்தாள் √

அணிதல் – பொதுவினை

தொங்கவிடுதல் , மாட்டுதல் , செருகுதல் , குத்துதல் – சிறப்பு வினைகள்(தனி வினைகள்)

3.  இசைக் கருவியை  இசைத்தார் √

இசைத்தல் – பொதுவினை

ஊதுதல் , அடித்தல் , தட்டுதல் , கொட்டுதல்  - சிறப்பு வினைகள் .

சரி !

உணவு , அணிகலன், இசைக்கருவி – இவை தனிச் சொற்கள் !

இப்படி இல்லாமல் , சொற்கள் அடுக்கி வந்தால்?

எடுத்துக்காட்டாகச் , சேனாவரையர் உரைப்படி,

‘சோறும் கறியும்’ என அடுக்கி வந்தால் , எப்படிப்பட்ட வினை கொடுத்து முடிக்கவேண்டும் ?

சோறும் கறியும் வேக வைத்தாள் ×
சோறும் கறியும் சமைத்தாள் √

சேனாவரையர் தந்தபடி –
யாழுங் குழலும் ஊதினாள் ×
யாழுங் குழலும் இசைத்தாள் √

இதே பாங்கில் –

1. வீடும் கட்டிலும் துணியும்  வெளுக்கப்பட்டன ×
வீடும் கட்டிலும் துணியும் தூய்மை செய்யப்பட்டன √

2. கடையும் மருத்துவ மனையும் கல்லூரியும் போடப்பட்டன ×
கடையும் மருத்துவ மனையும் கல்லூரியும் போடப்பட்டன √

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 65 of 84 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 74 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக