ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 63 of 84 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by M.Jagadeesan Tue Apr 12, 2016 5:30 pm

ஐயா !

நாடு + யாது = நாடியாது ? என்பது புணர்ச்சி விதிப்படி சரியா ? புணர்ச்சி விதி என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:34 pm

நன்றி ச. சந்திரசேகரன் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:53 pm

நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
இதே வரிசையில் ,தொடத் தொடத் தொல்காப்பியம் (121)இல் விடை எடுத்துக்காட்டுகளுடன் உள்ளது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (425)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (425)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீங்கள் மூன்றுபேர்கள் சென்று ஒருவரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்தீர்கள் !

இதை எப்படிச் சொல்லவேண்டுமாம்?
‘நாங்கள் மூன்று பேர்கள் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ ×
‘நாங்கள் மூன்று பேர்களும் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ √

ஏனெனில் , சென்றது மூன்றுபேர்கள்தாம் என்பது கூறுவானுக்கும் கேட்பானுக்கும் தெரியும் ! அப்படித் தெரிந்த பிறகு , ‘உம்’ கொடுத்துக் கூறுவதுதான் சரியான உரைநடை! அழுத்தமான உரைநடை !

தொல்காப்பியர் இலக்கணம் இதற்கு உள்ளது !:-
“இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
 வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்” (கிளவி. 33)

‘இனைத்து என அறிந்த’ – ‘இத்தனை’ என்று அறிந்த,
‘சினை , முதல் கிளவிக்கு ’ -  சினைக்கிளவி , முதற்கிளவிகளுக்கு,
‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு,
‘உம்மை வேண்டும்’ – ‘உம்’ கொடுத்துக் கூறவேண்டும் !

முதற் கிளவி என்றால்? சினைக் கிளவி என்றால்?

ஆளைக் குறிப்பிட்டால் அது ‘முதற் கிளவி’ !
ஆளின் உறுப்பைக் குறிப்பிட்டால் அது ‘சினைக்கிளவி’ !
(கிளவி - சொல்)

மரத்தைச்சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
பழத்தைச்சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

கிளியைச் சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
கிளிமூக்கைச் சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

தோப்பில் நான்கு மரங்கள் மட்டுமே இருக்கின்றன என்று கேட்போனுக்குத் தெரிந்திருந்தால் , தோப்புக்காரன் கூறவேண்டியது –
‘நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கின்றன’ ×
‘நான்கு மரங்களும் பூத்துக் குலுங்கின்றன’ √  (‘மரங்களும்’என வந்துள்ளதைக் காண்க)

மேலை உரையில் , - ‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு, -  எனப் பார்த்தோமல்லவா?

இதை முதன் முதலில் சொன்னவர் சேனாவரையர்தான் ! சேனாவரையர் உரை இதுதான் –
“கண்ணிரண்டும் குருடு …எனப் பெயர்கொண்டவழி,உம்மை பெறுமாறு என்னையெனின்,பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியாம் என்க ! ”

சேனாவரையர் தனது உரைக்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார் -

‘கண்ணிரண்டும் குருடு’!

மனிதனுக்கு இரண்டு கண்கள்தாம் என்பது கேட்போனுக்குத் தெரியும் ! ஆகவே ‘உம்’ கொடுத்து ‘இரண்டும்’ என்று கூறவேண்டும் !-

கண்ணிரண்டு குருடு×
கண்ணிரண்டும் குருடு√

- இங்கே ‘குருடு’ , பெயர்ச் சொல் என்பதைக் கவனிக்க!

இன்னொரு தெளிவையும் சேனாவரையர் நமக்குத் தருகிறார் !

அஃதாவது , ‘இருதோள் தோழர் பற்ற ’ என்று பாடலில் வருகிறதே, இங்கே ‘இருதோளும்’ என்றல்லவா வரவேண்டும் ? என ஐயம் வந்தால் அதற்கு விடை சேனாவரையர் உரையில்தான் உள்ளது !-

பாட்டில் இப்படி வந்தால் ,  ‘உம்மை’யானது செய்யுள் விகாரத்தால் தொக்கது என எடுத்துக்கொள்ள வேண்டுமாம் !

தொக்கது – மறைந்துநின்றது.

தொல்காப்பிய இலக்கணம் செய்யுளுக்கு மட்டும்தான் என யாராவது தவறாக நினைத்திருந்தால், அவர்   உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) விதி கூறியிருப்பதிலிருந்து தம் கருத்தை மாற்றிகொள்ளவேண்டும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (425)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:58 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (425)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீங்கள் மூன்றுபேர்கள் சென்று ஒருவரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்தீர்கள் !

இதை எப்படிச் சொல்லவேண்டுமாம்?
‘நாங்கள் மூன்று பேர்கள் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ ×
‘நாங்கள் மூன்று பேர்களும் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ √

ஏனெனில் , சென்றது மூன்றுபேர்கள்தாம் என்பது கூறுவானுக்கும் கேட்பானுக்கும் தெரியும் ! அப்படித் தெரிந்த பிறகு , ‘உம்’ கொடுத்துக் கூறுவதுதான் சரியான உரைநடை! அழுத்தமான உரைநடை !

தொல்காப்பியர் இலக்கணம் இதற்கு உள்ளது !:-
“இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
 வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்” (கிளவி. 33)

‘இனைத்து என அறிந்த’ – ‘இத்தனை’ என்று அறிந்த,
‘சினை , முதல் கிளவிக்கு ’ -  சினைக்கிளவி , முதற்கிளவிகளுக்கு,
‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு,
‘உம்மை வேண்டும்’ – ‘உம்’ கொடுத்துக் கூறவேண்டும் !

முதற் கிளவி என்றால்? சினைக் கிளவி என்றால்?

ஆளைக் குறிப்பிட்டால் அது ‘முதற் கிளவி’ !
ஆளின் உறுப்பைக் குறிப்பிட்டால் அது ‘சினைக்கிளவி’ !
(கிளவி - சொல்)

மரத்தைச்சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
பழத்தைச்சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

கிளியைச் சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
கிளிமூக்கைச் சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

தோப்பில் நான்கு மரங்கள் மட்டுமே இருக்கின்றன என்று கேட்போனுக்குத் தெரிந்திருந்தால் , தோப்புக்காரன் கூறவேண்டியது –
‘நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கின்றன’ ×
‘நான்கு மரங்களும் பூத்துக் குலுங்கின்றன’ √  (‘மரங்களும்’என வந்துள்ளதைக் காண்க)

மேலை உரையில் , - ‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு, -  எனப் பார்த்தோமல்லவா?

இதை முதன் முதலில் சொன்னவர் சேனாவரையர்தான் ! சேனாவரையர் உரை இதுதான் –
“கண்ணிரண்டும் குருடு …எனப் பெயர்கொண்டவழி,உம்மை பெறுமாறு என்னையெனின்,பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியாம் என்க ! ”

சேனாவரையர் தனது உரைக்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார் -

‘கண்ணிரண்டும் குருடு’!

மனிதனுக்கு இரண்டு கண்கள்தாம் என்பது கேட்போனுக்குத் தெரியும் ! ஆகவே ‘உம்’ கொடுத்து ‘இரண்டும்’ என்று கூறவேண்டும் !-

கண்ணிரண்டு குருடு×
கண்ணிரண்டும் குருடு√

- இங்கே ‘குருடு’ , பெயர்ச் சொல் என்பதைக் கவனிக்க!

இன்னொரு தெளிவையும் சேனாவரையர் நமக்குத் தருகிறார் !

அஃதாவது , ‘இருதோள் தோழர் பற்ற ’ என்று பாடலில் வருகிறதே, இங்கே ‘இருதோளும்’ என்றல்லவா வரவேண்டும் ? என ஐயம் வந்தால் அதற்கு விடை சேனாவரையர் உரையில்தான் உள்ளது !-

பாட்டில் இப்படி வந்தால் ,  ‘உம்மை’யானது செய்யுள் விகாரத்தால் தொக்கது என எடுத்துக்கொள்ள வேண்டுமாம் !

தொக்கது – மறைந்துநின்றது.

தொல்காப்பிய இலக்கணம் செய்யுளுக்கு மட்டும்தான் என யாராவது தவறாக நினைத்திருந்தால், அவர்   உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) விதி கூறியிருப்பதிலிருந்து தம் கருத்தை மாற்றிகொள்ளவேண்டும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by சசி Sat Apr 16, 2016 9:53 pm

ஐயா மிகவும் அருமையாக உள்ளது. ஆசையாக இருக்கிறது உங்கள் பதிவை படிப்பதற்கு. நன்றி ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by krishnaamma Sat Apr 16, 2016 11:17 pm

கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா உங்களின் இந்த திரியை..மிகவும் அருமையாக இருக்கு !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sat May 14, 2016 10:34 am

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (426)

Post by Dr.S.Soundarapandian Sat May 14, 2016 10:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !

பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !

இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?

நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !

1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
   பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)

2 . பவளத் தந்த யானை இல்லை ×
    பவளத் தந்த யானை எங்கும் இல்லை √

3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √

4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √

5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √

தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்

‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (426)

Post by Dr.S.Soundarapandian Sat May 14, 2016 10:36 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !

பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !

இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?

நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !

1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
   பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)

2 . பவளத் தந்த யானை இல்லை ×
    பவளத் தந்த யானை எங்கும் இல்லை √

3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √

4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √

5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √

தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்

‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 63 of 84 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum