Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters
Page 54 of 84
Page 54 of 84 • 1 ... 28 ... 53, 54, 55 ... 69 ... 84
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பில் தலையின் பங்கு என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தொடத் தொடத் தொல்காப்பியம் (393)
தொடத் தொடத் தொல்காப்பியம் (393)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறையைப் பொதுவாகச் சொன்னார் தொல்காப்பியர் மேலே !
இப்போது , உயிர் எழுத்துகள் எப்படிப் பிறக்கும் எனக் குறிப்பாகக் கூறுகிறார் ! :-
“அவ்வழிப்
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்” (பிறப் . 2)
அஃதாவது , ‘அ’ முதல் ‘ஔ’ வரையான 12 உயிர் எழுத்துகளும் , தொண்டையிலிருந்து தோன்றும் காற்றால் வெளிப்படுகின்றன !
இங்கே நச்சினார்க்கினியர் ஒரு நுணுக்கம் காட்டுகிறார் !
அஃதாவது, நச்சர் உரையை விளக்கிக் கூறுவதானால் , ‘அ’ வுக்கு ஒரு மாத்திரை என்றால், அந்த அளவுக்கே காற்றும் வெளிவரும் ! ‘ஆ’வுக்கு இரண்டு மாத்திரைகள் என்றால் , அந்த அளவிக்குக் கூடுதலாகக் காற்றும் வெளிவிடப்பட்டு ஒலியானது பிறக்கும் !
அடுத்து , ‘அ’ , ‘ஆ’ இரண்டு உயிர்களும் பிறக்கும் வகையைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! –
”அவற்றுள்
அஆ வாயிரண் டங்காந் தியலும்” (பிறப் . 3)
இதன்படி , ‘அ’ , ‘ஆ’ என்ற இரண்டு உயிர்களுமே வாயைத் திறத்தலால் உண்டாகும் !
அங்காத்தல் – திறத்தல் ; பிளத்தல்
அஃதாவது , ‘அ’ , ‘ஆ’ இரண்டின் பிறப்பின்போது நாக்கு அண்ணத்தைத் தொடுவதோ , மேற்பல்லைத் தொடுவதோ இல்லை என்பது பொருள் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறையைப் பொதுவாகச் சொன்னார் தொல்காப்பியர் மேலே !
இப்போது , உயிர் எழுத்துகள் எப்படிப் பிறக்கும் எனக் குறிப்பாகக் கூறுகிறார் ! :-
“அவ்வழிப்
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்” (பிறப் . 2)
அஃதாவது , ‘அ’ முதல் ‘ஔ’ வரையான 12 உயிர் எழுத்துகளும் , தொண்டையிலிருந்து தோன்றும் காற்றால் வெளிப்படுகின்றன !
இங்கே நச்சினார்க்கினியர் ஒரு நுணுக்கம் காட்டுகிறார் !
அஃதாவது, நச்சர் உரையை விளக்கிக் கூறுவதானால் , ‘அ’ வுக்கு ஒரு மாத்திரை என்றால், அந்த அளவுக்கே காற்றும் வெளிவரும் ! ‘ஆ’வுக்கு இரண்டு மாத்திரைகள் என்றால் , அந்த அளவிக்குக் கூடுதலாகக் காற்றும் வெளிவிடப்பட்டு ஒலியானது பிறக்கும் !
அடுத்து , ‘அ’ , ‘ஆ’ இரண்டு உயிர்களும் பிறக்கும் வகையைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! –
”அவற்றுள்
அஆ வாயிரண் டங்காந் தியலும்” (பிறப் . 3)
இதன்படி , ‘அ’ , ‘ஆ’ என்ற இரண்டு உயிர்களுமே வாயைத் திறத்தலால் உண்டாகும் !
அங்காத்தல் – திறத்தல் ; பிளத்தல்
அஃதாவது , ‘அ’ , ‘ஆ’ இரண்டின் பிறப்பின்போது நாக்கு அண்ணத்தைத் தொடுவதோ , மேற்பல்லைத் தொடுவதோ இல்லை என்பது பொருள் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி எம். ஜகதீசன் அவர்களே !
மிடற்றுக்கு மேலே உள்ள உறுப்புகள் தலையைச் சேர்ந்தவை ; இந்தப் பொருளில் ‘தலை’ என்று கூறியிருக்கலாம் ; ‘ட்’ , ‘ண’ ஆகிய ஒலிகளை Cerebral consonants என்றுதான் வடமொழிக்காரர்கள் குறிப்பிடுகிறார்கள் ! தொல்காப்பிய ஆய்வாளர்கள் சிலர் ‘தலை’ என்பதற்கு ‘மூளை’ என்றே பொருள் எழுதியுள்ளமை அறியத்தக்கது !
மிடற்றுக்கு மேலே உள்ள உறுப்புகள் தலையைச் சேர்ந்தவை ; இந்தப் பொருளில் ‘தலை’ என்று கூறியிருக்கலாம் ; ‘ட்’ , ‘ண’ ஆகிய ஒலிகளை Cerebral consonants என்றுதான் வடமொழிக்காரர்கள் குறிப்பிடுகிறார்கள் ! தொல்காப்பிய ஆய்வாளர்கள் சிலர் ‘தலை’ என்பதற்கு ‘மூளை’ என்றே பொருள் எழுதியுள்ளமை அறியத்தக்கது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !
இதோ நான்காவது நூற்பா!-
“இஈ எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)
‘இஈ எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !
இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!
இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை ஒத்தே செல்கின்றன !
ஐ யை, ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !
தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு, ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?
மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !
இதோ நான்காவது நூற்பா!-
“இஈ எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)
‘இஈ எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !
இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!
இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை ஒத்தே செல்கின்றன !
ஐ யை, ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !
தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு, ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?
மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
தொடத் தொடத் தொல்காப்பியம் (394)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !
இதோ நான்காவது நூற்பா!-
“இஈ எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)
‘இஈ எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !
இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!
இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை ஒத்தே செல்கின்றன !
ஐ யை, ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !
தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு, ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?
மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் வரிசையாக முதல் மூன்று நூற்பாக்களைப் பார்த்தோம் !
இதோ நான்காவது நூற்பா!-
“இஈ எஏ ஐயென விசைக்கும்
அப்பா லைந்து மவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பன் முதனா விளிம்புற லுடைய” (பிறப் . 4)
‘இஈ எஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன’ – இ , ஈ. எ, ஏ , ஐ எனும் இந்த ஐந்து எழுத்துகளும் மேலே அ , ஆவுக்குக் கூறியபடி, வாயைத் திறக்கப் பிறக்கும் !
‘அவைதாம்’ – அஃதாவது எப்படியெனில் ,
‘அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய’ – பல்லின் மேற்புறப் பகுதியில் , நாக்கின் அடிப்புறத்து இரு விளிம்புகளும் பொருந்தப் பிறக்கும் !
இன்றைய மொழியியலில் இ , ஈ, எ , ஏ , ஐ இந்த ஐந்து எழுத்துகளில் , இ , ஈ , ஐ ஆகிய மூன்றையும் முன் உயிர்கள் (Front vowels) என்பர்; எ , ஏ ஆகிய இரண்டையும் பின் உயிர்கள் (Back vowels) என்பர்!
இவ்வகையில் , தொல்காப்பியர் கூறியதற்கு மொழியியலார் கூறியவை ஒத்தே செல்கின்றன !
ஐ யை, ஈருயிர் ஒலி (Diphthong) என்பர் மொழியியலில் !
தொல்காப்பியரின் ‘முதல் நா’ என்பதற்கு, ‘நாவின் பின்புறம்’ என்று மிகச் சரியாக உரை எழுதியவர் இளம்பூரணர் ! நாக்கானது முளைத்துக் கிளம்பும் முதல் இடம் பின்பகுதியில்தானே?
மேல் ஒலிப்புச் செய்திகளை எல்லாம் நீங்கள் உச்சரித்துப் பர்த்துப் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இ , ஈ , எ , ஏ , ஐ – இந்த ஐந்தும் ‘அங்காந்து இயலும் ’ என்று தொல்காப்பியர் சொன்னதற்கு இயையவே , மொழிநூலாரும் , ‘Open vowels’ என்று இவற்றைக் குறிக்கின்றனர் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி சசி அவர்களே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (395)
தொடத் தொடத் தொல்காப்பியம் (395)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதழ் குவியாமல் , அங்காந்து , ஒலிக்கும் உயிர்களை மேலே பார்த்தோம் !
இப்போது இதழ் குவிந்து ஒலிக்கும் உயிர்களைப் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“உஊ ஒஓ ஔவென விசைக்கும்
அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்” (பிறப். 5)
’உஊ ஒஓ ஔ என இசைக்கும் ’ - உ , ஊ , ஒ , ஓ என்று ஒலிக்கும்’
‘அப்பால் ஐந்தும்’ - அந்த ஐந்து உயிர்களும்,
‘இதழ்குவிந்து இயலும்’ – உதட்டைக் குவித்து ஒலிக்கப் பிறக்கும் !
இதழைக் குவித்து ஒலிப்பதை மொழியியலார் , ‘Rounded vowels’ என்பர்.
அஃதாவது தொல்காப்பியர் என்றோ சொல்லிவிட்டுப்போனதை, இன்றைய மொழியியலாரும் அப்படியே ஏற்கின்றனர் !
மேல் நூற்பாக்களில் (பிறப் . 3,4,5) உயிர் எழுத்துகளைப் பொதுமைப் படுத்தி , அங்காந்து இயலும் , இதழ் குவிந்து இயலும் என்றெல்லாம் கூறிவிட்டாலும், இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் பிறக்கும்போது சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒரு பிறப்பியல் நுணுக்கத்தை ஓதுகிறார் ! –
“தத்தம் திரிபே சிறிய வென்ப” (பிறப் . 6)
திரிபு – ஓர் எழுத்து ஒருமாதிரி ஒலிக்க, இன்னொரு எழுத்துச் சற்று வேறுபட்டு ஒலித்தல் ; அஃதாவது ஒவ்வொன்றின் பிறப்பிடமும் சற்று வேறுபட்டே அமையும் !
விதிகள் வகுக்கும்போது உண்மை நிலையை மறக்காமல் வகுப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு (Grammatical Theory of Tholkappiyar) !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதழ் குவியாமல் , அங்காந்து , ஒலிக்கும் உயிர்களை மேலே பார்த்தோம் !
இப்போது இதழ் குவிந்து ஒலிக்கும் உயிர்களைப் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“உஊ ஒஓ ஔவென விசைக்கும்
அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்” (பிறப். 5)
’உஊ ஒஓ ஔ என இசைக்கும் ’ - உ , ஊ , ஒ , ஓ என்று ஒலிக்கும்’
‘அப்பால் ஐந்தும்’ - அந்த ஐந்து உயிர்களும்,
‘இதழ்குவிந்து இயலும்’ – உதட்டைக் குவித்து ஒலிக்கப் பிறக்கும் !
இதழைக் குவித்து ஒலிப்பதை மொழியியலார் , ‘Rounded vowels’ என்பர்.
அஃதாவது தொல்காப்பியர் என்றோ சொல்லிவிட்டுப்போனதை, இன்றைய மொழியியலாரும் அப்படியே ஏற்கின்றனர் !
மேல் நூற்பாக்களில் (பிறப் . 3,4,5) உயிர் எழுத்துகளைப் பொதுமைப் படுத்தி , அங்காந்து இயலும் , இதழ் குவிந்து இயலும் என்றெல்லாம் கூறிவிட்டாலும், இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் பிறக்கும்போது சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒரு பிறப்பியல் நுணுக்கத்தை ஓதுகிறார் ! –
“தத்தம் திரிபே சிறிய வென்ப” (பிறப் . 6)
திரிபு – ஓர் எழுத்து ஒருமாதிரி ஒலிக்க, இன்னொரு எழுத்துச் சற்று வேறுபட்டு ஒலித்தல் ; அஃதாவது ஒவ்வொன்றின் பிறப்பிடமும் சற்று வேறுபட்டே அமையும் !
விதிகள் வகுக்கும்போது உண்மை நிலையை மறக்காமல் வகுப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு (Grammatical Theory of Tholkappiyar) !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (395)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதழ் குவியாமல் , அங்காந்து , ஒலிக்கும் உயிர்களை மேலே பார்த்தோம் !
இப்போது இதழ் குவிந்து ஒலிக்கும் உயிர்களைப் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“உஊ ஒஓ ஔவென விசைக்கும்
அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்” (பிறப். 5)
’உஊ ஒஓ ஔ என இசைக்கும் ’ - உ , ஊ , ஒ , ஓ என்று ஒலிக்கும்’
‘அப்பால் ஐந்தும்’ - அந்த ஐந்து உயிர்களும்,
‘இதழ்குவிந்து இயலும்’ – உதட்டைக் குவித்து ஒலிக்கப் பிறக்கும் !
இதழைக் குவித்து ஒலிப்பதை மொழியியலார் , ‘Rounded vowels’ என்பர்.
அஃதாவது தொல்காப்பியர் என்றோ சொல்லிவிட்டுப்போனதை, இன்றைய மொழியியலாரும் அப்படியே ஏற்கின்றனர் !
மேல் நூற்பாக்களில் (பிறப் . 3,4,5) உயிர் எழுத்துகளைப் பொதுமைப் படுத்தி , அங்காந்து இயலும் , இதழ் குவிந்து இயலும் என்றெல்லாம் கூறிவிட்டாலும், இந்த உயிர்கள் ஒவ்வொன்றும் பிறக்கும்போது சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒரு பிறப்பியல் நுணுக்கத்தை ஓதுகிறார் ! –
“தத்தம் திரிபே சிறிய வென்ப” (பிறப் . 6)
திரிபு – ஓர் எழுத்து ஒருமாதிரி ஒலிக்க, இன்னொரு எழுத்துச் சற்று வேறுபட்டு ஒலித்தல் ; அஃதாவது ஒவ்வொன்றின் பிறப்பிடமும் சற்று வேறுபட்டே அமையும் !
விதிகள் வகுக்கும்போது உண்மை நிலையை மறக்காமல் வகுப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு (Grammatical Theory of Tholkappiyar) !
***
![தொடத் தொடத் தொல்காப்பியம் (569) - Page 54 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தொடத் தொடத் தொல்காப்பியம் (569) - Page 54 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தொடத் தொடத் தொல்காப்பியம் (569) - Page 54 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
மிக அருமையான பதிவுகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 54 of 84 • 1 ... 28 ... 53, 54, 55 ... 69 ... 84
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
» பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
» பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்
Page 54 of 84
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|