புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
62 Posts - 41%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
6 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
3 Posts - 2%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
21 Posts - 5%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
7 Posts - 2%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 51 of 84 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 67 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 18, 2015 7:48 pm

ஈகரைச் செல்வி அவர்களே,
நன்றி !

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 51 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 18, 2015 7:59 pm

எம். ஜகதீசன் அவர்களே !
தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள் !

தொல்காப்பிய இலக்கணத்தின் நேர் பொருளைக் கொண்டு கூறினால் ‘யோகம்’ என்று தமிழில் வராதுதான் !
ஆனால் , ‘வடமொழி’ என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிகொள்ளவேண்டுமாயின் எனது ஆய்வுகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் ! எனது புராண ஆய்வுகள் பலவற்றில் இந்த விளக்கம் உள்ளது !
சுருக்கமாக, உங்கள் கேள்வியை ஒட்டிக் கூறுகிறேன் !
சில தமிழ்ச் சொற்களுடன் ‘ய்’ சேர்ந்தால் , ‘வடமொழி’ எனப் பலரும் குறிக்கும் சொல் வந்துவிடும் !
‘ஊகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூகம்’
‘ஊபத் தம்பம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூபத் தம்ப்கம்’
இப்படித்தான் , ‘ஓகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யோகம்’ !

இன்றைக்கு உங்களுக்கு ‘யோகம்’அடித்தது போங்கள் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 18, 2015 8:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !

இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !

இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன  தம்பெயர் முதலும்”  (மொழி . 33)

‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!

இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
     1 . க
     2 .த
     3 . ந
     4 . ப
      5 . ம
     6 .வ
    7 . ச
   8 .ஞ
   9 . ய

‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-

1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன

‘ங’  முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?

இளம்பூரணர் விடை-
          1 .ஙக்களைந்தார்  (ங – வை நீக்கினார்)
          2 .டப்பெரிது  (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
         3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
                                                                                       
                                                                  ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 18, 2015 8:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !

இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !

இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன  தம்பெயர் முதலும்”  (மொழி . 33)

‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!

இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
     1 . க
     2 .த
     3 . ந
     4 . ப
      5 . ம
     6 .வ
    7 . ச
   8 .ஞ
   9 . ய

‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-

1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன

‘ங’  முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?

இளம்பூரணர் விடை-
          1 .ஙக்களைந்தார்  (ங – வை நீக்கினார்)
          2 .டப்பெரிது  (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
         3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
                                                                                       
                                                                  ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 3:55 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 3:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 3:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 25, 2015 6:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (382)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“உயிரௌ வெஞ்சிய இறுதி யாகும்” (மொழி. 36)

‘உயிர் ஔ எஞ்சிய’ – 12 உயிர் எழுத்துகளில் ‘ஔ’ தவிர ஏனைய 11 உயிர் எழுத்துகளும்,
‘இறுதி ஆகும்’ -  சொல்லின் ஈற்றிலே வரும் !

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ  - இந்த  ஆறு நெடில் உயிர்களும் தனித் தனிச் சொற்கள் ; எனவே இவற்றுக்கு ஈறு இவையே !

ஆ= பசு
ஈ = இது எங்கும் மொய்க்கிறதே ?
ஊ = தசை
ஏ = அம்பு
ஐ = வியப்பு
ஓ= மதகுநீர் தாங்கும் பலகை

1 .ஆஅ -  ‘அ’ எனும் குறில் உயிர் , அளபெடை வகையால் ஈறானது .

2 .ஈஇ -  ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

3 .ஊஉ -  ‘உ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

4 .ஏஎ -  ‘எ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

5 .ஐஇ -  ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

6 .ஓஒ -  ‘ஒ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

இத் தொல்காப்பிய விதி , “உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது” என்பதே இளம்பூரணர் மற்றும் நச்சர்தம் கருத்து.

இதற்கு இணங்க நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் –

1 .கா - ‘ஆ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

2 .தீ - ‘ஈ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

3 .பூ - ‘ஊ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

4 .சே - ‘ஏ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

5 .கை - ‘ஐ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

6 .கோ - ‘ஓ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

கா = சோலை
தீ = நெருப்பு
பூ = ஏமாந்தவர் காதில் வைப்பது.
சே = காளை
கை = உறுப்பாகிய கை
கோ = அரசன்

இனி , குறில் உயிர்கள், உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாக வரல், நச்சர் காட்டியபடி:

1 .விள- இதில் , ‘அ’எனும்  குறில் உயிர் , ‘ள’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

2 .கிளி -  இதில் , ‘இ’எனும் குறில் உயிர் , ‘ளி’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

3 .மழு -  இதில் , ‘உ’எனும் குறில் உயிர் , ‘ழு’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

                                                                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 7:00 pm

நன்றி ,அய்யா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 29, 2015 1:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (383)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொல்லுக்கு ஈறாக வரக்கூடிய எழுத்துகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

மேல் நூற்பாவில் ‘ஔ’ சொல்லுக்கு ஈறாக வராது என்றார் தொல்காப்பியர் !

இப்போது , ‘க்’குடனும் ‘வ்’வுடனும் சேர்ந்தால் , ‘ஔ’வும் சொல்லுக்கு ஈற்றிலே நிற்கலாம் என்கிறார் !-
“கவவோ டியையி னௌவு மாகும் ” (மொழி . 37)

‘கவவோடு இயையின்’ -  ‘க்’ , ‘வ்’ ஆகிய எழுத்துகளுடன் சேர்ந்த நிலையில்,

‘ஔவும் ஆகும்’ – ‘ஔ’வும் சொல்லின் ஈறாகும் !

1 . கௌ
இதில் , ‘க்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
கௌ = கொள்ளு

2 . வௌ
இதில் , ‘வ்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
வௌ = கைப்பற்று

‘ஔ’வானது , ‘க்’ ‘வ்’  ஆகிய மெய்களோடு சேர்ந்த நிலையில் சொல்லின் ஈறாவதை இப்போது பார்த்தோம் !

ஆனால் , இதைப்போல ‘எ’ எனும் உயிரானது எந்த மெய்யோடும் சேர்ந்து சொல்லுக்கு ஈறாகாது என அடுத்துத்  தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! –

“எஎன வருமுயிர் மெய்யீ றாகாது ” (மொழி . 38)

தனி எகரம் , அளபெடைமுறையில் , சொல்லுக்கு ஈறாகும் என்று நூற்பா 36இல் பார்த்தோம் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 51 of 84 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 67 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக