Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters
Page 51 of 84
Page 51 of 84 • 1 ... 27 ... 50, 51, 52 ... 67 ... 84
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
ஈகரைச் செல்வி அவர்களே,
நன்றி !
நன்றி !
![தொடத் தொடத் தொல்காப்பியம் (569) - Page 51 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
எம். ஜகதீசன் அவர்களே !
தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள் !
தொல்காப்பிய இலக்கணத்தின் நேர் பொருளைக் கொண்டு கூறினால் ‘யோகம்’ என்று தமிழில் வராதுதான் !
ஆனால் , ‘வடமொழி’ என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிகொள்ளவேண்டுமாயின் எனது ஆய்வுகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் ! எனது புராண ஆய்வுகள் பலவற்றில் இந்த விளக்கம் உள்ளது !
சுருக்கமாக, உங்கள் கேள்வியை ஒட்டிக் கூறுகிறேன் !
சில தமிழ்ச் சொற்களுடன் ‘ய்’ சேர்ந்தால் , ‘வடமொழி’ எனப் பலரும் குறிக்கும் சொல் வந்துவிடும் !
‘ஊகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூகம்’
‘ஊபத் தம்பம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூபத் தம்ப்கம்’
இப்படித்தான் , ‘ஓகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யோகம்’ !
இன்றைக்கு உங்களுக்கு ‘யோகம்’அடித்தது போங்கள் !
தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள் !
தொல்காப்பிய இலக்கணத்தின் நேர் பொருளைக் கொண்டு கூறினால் ‘யோகம்’ என்று தமிழில் வராதுதான் !
ஆனால் , ‘வடமொழி’ என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிகொள்ளவேண்டுமாயின் எனது ஆய்வுகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் ! எனது புராண ஆய்வுகள் பலவற்றில் இந்த விளக்கம் உள்ளது !
சுருக்கமாக, உங்கள் கேள்வியை ஒட்டிக் கூறுகிறேன் !
சில தமிழ்ச் சொற்களுடன் ‘ய்’ சேர்ந்தால் , ‘வடமொழி’ எனப் பலரும் குறிக்கும் சொல் வந்துவிடும் !
‘ஊகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூகம்’
‘ஊபத் தம்பம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூபத் தம்ப்கம்’
இப்படித்தான் , ‘ஓகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யோகம்’ !
இன்றைக்கு உங்களுக்கு ‘யோகம்’அடித்தது போங்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !
இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !
இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன தம்பெயர் முதலும்” (மொழி . 33)
‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!
இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
1 . க
2 .த
3 . ந
4 . ப
5 . ம
6 .வ
7 . ச
8 .ஞ
9 . ய
‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-
1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன
‘ங’ முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?
இளம்பூரணர் விடை-
1 .ஙக்களைந்தார் (ங – வை நீக்கினார்)
2 .டப்பெரிது (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !
இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !
இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன தம்பெயர் முதலும்” (மொழி . 33)
‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!
இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
1 . க
2 .த
3 . ந
4 . ப
5 . ம
6 .வ
7 . ச
8 .ஞ
9 . ய
‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-
1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன
‘ங’ முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?
இளம்பூரணர் விடை-
1 .ஙக்களைந்தார் (ங – வை நீக்கினார்)
2 .டப்பெரிது (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !
இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !
இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன தம்பெயர் முதலும்” (மொழி . 33)
‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!
இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
1 . க
2 .த
3 . ந
4 . ப
5 . ம
6 .வ
7 . ச
8 .ஞ
9 . ய
‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-
1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன
‘ங’ முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?
இளம்பூரணர் விடை-
1 .ஙக்களைந்தார் (ங – வை நீக்கினார்)
2 .டப்பெரிது (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !
இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !
இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன தம்பெயர் முதலும்” (மொழி . 33)
‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!
இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
1 . க
2 .த
3 . ந
4 . ப
5 . ம
6 .வ
7 . ச
8 .ஞ
9 . ய
‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-
1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன
‘ங’ முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?
இளம்பூரணர் விடை-
1 .ஙக்களைந்தார் (ங – வை நீக்கினார்)
2 .டப்பெரிது (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ” (மொழி. 34)
‘குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ - முதலில் நிற்கக்கூடிய ‘நு’விலுள்ள உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !
‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்; அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !
நுந்தை = உனது தந்தை.
முறைப் பெயர் = ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.
இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை நமக்குக் காட்டுகிறார் ! –
“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய லான” (மொழி . 35)
‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,
‘அப்பெயர் மருங்கின் நிலையியல் ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (382)
தொடத் தொடத் தொல்காப்பியம் (382)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் அடுத்தது –
“உயிரௌ வெஞ்சிய இறுதி யாகும்” (மொழி. 36)
‘உயிர் ஔ எஞ்சிய’ – 12 உயிர் எழுத்துகளில் ‘ஔ’ தவிர ஏனைய 11 உயிர் எழுத்துகளும்,
‘இறுதி ஆகும்’ - சொல்லின் ஈற்றிலே வரும் !
ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ - இந்த ஆறு நெடில் உயிர்களும் தனித் தனிச் சொற்கள் ; எனவே இவற்றுக்கு ஈறு இவையே !
ஆ= பசு
ஈ = இது எங்கும் மொய்க்கிறதே ?
ஊ = தசை
ஏ = அம்பு
ஐ = வியப்பு
ஓ= மதகுநீர் தாங்கும் பலகை
1 .ஆஅ - ‘அ’ எனும் குறில் உயிர் , அளபெடை வகையால் ஈறானது .
2 .ஈஇ - ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
3 .ஊஉ - ‘உ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
4 .ஏஎ - ‘எ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
5 .ஐஇ - ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
6 .ஓஒ - ‘ஒ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
இத் தொல்காப்பிய விதி , “உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது” என்பதே இளம்பூரணர் மற்றும் நச்சர்தம் கருத்து.
இதற்கு இணங்க நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 .கா - ‘ஆ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
2 .தீ - ‘ஈ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
3 .பூ - ‘ஊ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
4 .சே - ‘ஏ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
5 .கை - ‘ஐ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
6 .கோ - ‘ஓ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
கா = சோலை
தீ = நெருப்பு
பூ = ஏமாந்தவர் காதில் வைப்பது.
சே = காளை
கை = உறுப்பாகிய கை
கோ = அரசன்
இனி , குறில் உயிர்கள், உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாக வரல், நச்சர் காட்டியபடி:
1 .விள- இதில் , ‘அ’எனும் குறில் உயிர் , ‘ள’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
2 .கிளி - இதில் , ‘இ’எனும் குறில் உயிர் , ‘ளி’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
3 .மழு - இதில் , ‘உ’எனும் குறில் உயிர் , ‘ழு’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் அடுத்தது –
“உயிரௌ வெஞ்சிய இறுதி யாகும்” (மொழி. 36)
‘உயிர் ஔ எஞ்சிய’ – 12 உயிர் எழுத்துகளில் ‘ஔ’ தவிர ஏனைய 11 உயிர் எழுத்துகளும்,
‘இறுதி ஆகும்’ - சொல்லின் ஈற்றிலே வரும் !
ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ - இந்த ஆறு நெடில் உயிர்களும் தனித் தனிச் சொற்கள் ; எனவே இவற்றுக்கு ஈறு இவையே !
ஆ= பசு
ஈ = இது எங்கும் மொய்க்கிறதே ?
ஊ = தசை
ஏ = அம்பு
ஐ = வியப்பு
ஓ= மதகுநீர் தாங்கும் பலகை
1 .ஆஅ - ‘அ’ எனும் குறில் உயிர் , அளபெடை வகையால் ஈறானது .
2 .ஈஇ - ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
3 .ஊஉ - ‘உ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
4 .ஏஎ - ‘எ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
5 .ஐஇ - ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
6 .ஓஒ - ‘ஒ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .
இத் தொல்காப்பிய விதி , “உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது” என்பதே இளம்பூரணர் மற்றும் நச்சர்தம் கருத்து.
இதற்கு இணங்க நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 .கா - ‘ஆ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
2 .தீ - ‘ஈ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
3 .பூ - ‘ஊ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
4 .சே - ‘ஏ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
5 .கை - ‘ஐ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
6 .கோ - ‘ஓ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.
கா = சோலை
தீ = நெருப்பு
பூ = ஏமாந்தவர் காதில் வைப்பது.
சே = காளை
கை = உறுப்பாகிய கை
கோ = அரசன்
இனி , குறில் உயிர்கள், உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாக வரல், நச்சர் காட்டியபடி:
1 .விள- இதில் , ‘அ’எனும் குறில் உயிர் , ‘ள’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
2 .கிளி - இதில் , ‘இ’எனும் குறில் உயிர் , ‘ளி’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
3 .மழு - இதில் , ‘உ’எனும் குறில் உயிர் , ‘ழு’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி ,அய்யா !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
தொடத் தொடத் தொல்காப்பியம் (383)
தொடத் தொடத் தொல்காப்பியம் (383)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொல்லுக்கு ஈறாக வரக்கூடிய எழுத்துகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
மேல் நூற்பாவில் ‘ஔ’ சொல்லுக்கு ஈறாக வராது என்றார் தொல்காப்பியர் !
இப்போது , ‘க்’குடனும் ‘வ்’வுடனும் சேர்ந்தால் , ‘ஔ’வும் சொல்லுக்கு ஈற்றிலே நிற்கலாம் என்கிறார் !-
“கவவோ டியையி னௌவு மாகும் ” (மொழி . 37)
‘கவவோடு இயையின்’ - ‘க்’ , ‘வ்’ ஆகிய எழுத்துகளுடன் சேர்ந்த நிலையில்,
‘ஔவும் ஆகும்’ – ‘ஔ’வும் சொல்லின் ஈறாகும் !
1 . கௌ
இதில் , ‘க்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
கௌ = கொள்ளு
2 . வௌ
இதில் , ‘வ்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
வௌ = கைப்பற்று
‘ஔ’வானது , ‘க்’ ‘வ்’ ஆகிய மெய்களோடு சேர்ந்த நிலையில் சொல்லின் ஈறாவதை இப்போது பார்த்தோம் !
ஆனால் , இதைப்போல ‘எ’ எனும் உயிரானது எந்த மெய்யோடும் சேர்ந்து சொல்லுக்கு ஈறாகாது என அடுத்துத் தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! –
“எஎன வருமுயிர் மெய்யீ றாகாது ” (மொழி . 38)
தனி எகரம் , அளபெடைமுறையில் , சொல்லுக்கு ஈறாகும் என்று நூற்பா 36இல் பார்த்தோம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொல்லுக்கு ஈறாக வரக்கூடிய எழுத்துகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
மேல் நூற்பாவில் ‘ஔ’ சொல்லுக்கு ஈறாக வராது என்றார் தொல்காப்பியர் !
இப்போது , ‘க்’குடனும் ‘வ்’வுடனும் சேர்ந்தால் , ‘ஔ’வும் சொல்லுக்கு ஈற்றிலே நிற்கலாம் என்கிறார் !-
“கவவோ டியையி னௌவு மாகும் ” (மொழி . 37)
‘கவவோடு இயையின்’ - ‘க்’ , ‘வ்’ ஆகிய எழுத்துகளுடன் சேர்ந்த நிலையில்,
‘ஔவும் ஆகும்’ – ‘ஔ’வும் சொல்லின் ஈறாகும் !
1 . கௌ
இதில் , ‘க்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
கௌ = கொள்ளு
2 . வௌ
இதில் , ‘வ்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
வௌ = கைப்பற்று
‘ஔ’வானது , ‘க்’ ‘வ்’ ஆகிய மெய்களோடு சேர்ந்த நிலையில் சொல்லின் ஈறாவதை இப்போது பார்த்தோம் !
ஆனால் , இதைப்போல ‘எ’ எனும் உயிரானது எந்த மெய்யோடும் சேர்ந்து சொல்லுக்கு ஈறாகாது என அடுத்துத் தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! –
“எஎன வருமுயிர் மெய்யீ றாகாது ” (மொழி . 38)
தனி எகரம் , அளபெடைமுறையில் , சொல்லுக்கு ஈறாகும் என்று நூற்பா 36இல் பார்த்தோம் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Page 51 of 84 • 1 ... 27 ... 50, 51, 52 ... 67 ... 84
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
» பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
» பல்கலை வெப்சைட்டில் தொல்காப்பியம்
Page 51 of 84
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|