புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 5 of 84 •
Page 5 of 84 • 1, 2, 3, 4, 5, 6 ... 44 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (31)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“அவன்சோர்பு காத்தல் கடன்எனப் படுதலின்
மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாக லான” (கற்பியல் 33)
-இந் நூற்பாச் சொற்களுக்கு , இளம்பூரணர் உரைப்படி , இவையே பொருள் :-
அவன் சோர்பு = கணவனின் குறைகள்
கடன் = கடமை
மகன் தாய் = காமக் கிழத்தி
செல்வன் = தலைவன் (கணவன்)
பணிமொழி = கணவன் இடும் ஆணைகள்
இயல்பாக லான = முறை மனைவியும் காமக் கிழத்தியும் இருவருமே தலைவன் சொல்லைத் தட்டாமலிருப்பது இயல்பாதலால் .
அஃதாவது , முறை மனைவியானவள் , கணவனின் காமக் கிழத்தியை இழிவுபடுத்த நினைக்கமாட்டாள் ! – இதுதான் சுருக்கம் !
தலைவனின் காமத்திற்குத் தீனி போட அமைந்தவளே ‘காமக் கிழத்தி’! ஆனால் இவள் பரத்தை அல்லள் ! காமக் கிழத்தி வேறு , பரத்தை வேறு! பரத்தைக்குப் பலருடன் ‘தொடர்பு’ இருக்கும் ;காமக் கிழத்திக்கு ஒருவனுடன் மட்டும்தான் !
காமக் கிழத்திக்குச் சரியான எடுத்துக் காட்டு மாதவி !
தலைவனுக்கும் முறை மனைவிக்கும் பிறந்த மகனுக்கு, ஒரு வகையில் தாயாகவே காமக்கிழத்தி நடந்துகொண்டுள்ளாள் அந்தக் காலத்தில் ! இதற்குச் சான்று இத் தொல்காப்பிய நூற்பாவே !
சரி ! கணவனுக்கு ஒரு காமக் கிழத்தி இருக்கிறாள் என்று தெரிந்தும் மனைவி ஏன் பேசாது இருக்கிறாள் ?
‘அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்’ – என்பது தொல்காப்பியர் விடை !
காமக்கிழத்தியை இழிவுபடுத்தினால் அது தன் கணவை இழிவுபடுத்தியது போல ஆகுமாம் !
என்னதான் கணவன் மீது குறைகள் இருந்தாலும் , அவனை விட்டுக்கொடுக்காதவள் மனைவி ! கணவனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது மனைவியின் கடமையாகப் பழந்தமிழகத்தில் கருதப்பட்டது ! சமுதாயத்தின் முன் கணவனைத் தாழ்வானவனாக நிறுத்தக் கூடாது என்பது மனைவியின் கோட்பாடு !
இஃது ஏதோ நடந்து முடிந்துபோன வரலாறு என எண்ணவேண்டாம் ! இன்றும் பல வீடுகளில் மனைவி இந்தக் ‘கடமையை’ச் செய்துகொண்டுதான் இருக்கிறாள் !
இன்றுகூடக் கள்ள நோட்டு அடித்தவனாக இருந்தாலும் , பல கொலைகள் செய்தவனாக இருந்தாலும் மனைவியானவள் கணவனை ஆதரிக்கத்தானே செய்கிறாள் ? சிறையிலிருந்து வந்த கணவனை வீட்டில் அமர்த்திச் சோறுபோட்டுச் , சாப்பிடும்போது விசிறிவிடுகிறாளே மனைவி இன்றும் ?
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த இப்பழக்கம் இன்றும் தொடர்வதைத்தானே இது காட்டுகிறது?
இது சரியா தவறா என்பது வேறு ஆய்வு !
.............................
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“அவன்சோர்பு காத்தல் கடன்எனப் படுதலின்
மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாக லான” (கற்பியல் 33)
-இந் நூற்பாச் சொற்களுக்கு , இளம்பூரணர் உரைப்படி , இவையே பொருள் :-
அவன் சோர்பு = கணவனின் குறைகள்
கடன் = கடமை
மகன் தாய் = காமக் கிழத்தி
செல்வன் = தலைவன் (கணவன்)
பணிமொழி = கணவன் இடும் ஆணைகள்
இயல்பாக லான = முறை மனைவியும் காமக் கிழத்தியும் இருவருமே தலைவன் சொல்லைத் தட்டாமலிருப்பது இயல்பாதலால் .
அஃதாவது , முறை மனைவியானவள் , கணவனின் காமக் கிழத்தியை இழிவுபடுத்த நினைக்கமாட்டாள் ! – இதுதான் சுருக்கம் !
தலைவனின் காமத்திற்குத் தீனி போட அமைந்தவளே ‘காமக் கிழத்தி’! ஆனால் இவள் பரத்தை அல்லள் ! காமக் கிழத்தி வேறு , பரத்தை வேறு! பரத்தைக்குப் பலருடன் ‘தொடர்பு’ இருக்கும் ;காமக் கிழத்திக்கு ஒருவனுடன் மட்டும்தான் !
காமக் கிழத்திக்குச் சரியான எடுத்துக் காட்டு மாதவி !
தலைவனுக்கும் முறை மனைவிக்கும் பிறந்த மகனுக்கு, ஒரு வகையில் தாயாகவே காமக்கிழத்தி நடந்துகொண்டுள்ளாள் அந்தக் காலத்தில் ! இதற்குச் சான்று இத் தொல்காப்பிய நூற்பாவே !
சரி ! கணவனுக்கு ஒரு காமக் கிழத்தி இருக்கிறாள் என்று தெரிந்தும் மனைவி ஏன் பேசாது இருக்கிறாள் ?
‘அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்’ – என்பது தொல்காப்பியர் விடை !
காமக்கிழத்தியை இழிவுபடுத்தினால் அது தன் கணவை இழிவுபடுத்தியது போல ஆகுமாம் !
என்னதான் கணவன் மீது குறைகள் இருந்தாலும் , அவனை விட்டுக்கொடுக்காதவள் மனைவி ! கணவனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது மனைவியின் கடமையாகப் பழந்தமிழகத்தில் கருதப்பட்டது ! சமுதாயத்தின் முன் கணவனைத் தாழ்வானவனாக நிறுத்தக் கூடாது என்பது மனைவியின் கோட்பாடு !
இஃது ஏதோ நடந்து முடிந்துபோன வரலாறு என எண்ணவேண்டாம் ! இன்றும் பல வீடுகளில் மனைவி இந்தக் ‘கடமையை’ச் செய்துகொண்டுதான் இருக்கிறாள் !
இன்றுகூடக் கள்ள நோட்டு அடித்தவனாக இருந்தாலும் , பல கொலைகள் செய்தவனாக இருந்தாலும் மனைவியானவள் கணவனை ஆதரிக்கத்தானே செய்கிறாள் ? சிறையிலிருந்து வந்த கணவனை வீட்டில் அமர்த்திச் சோறுபோட்டுச் , சாப்பிடும்போது விசிறிவிடுகிறாளே மனைவி இன்றும் ?
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த இப்பழக்கம் இன்றும் தொடர்வதைத்தானே இது காட்டுகிறது?
இது சரியா தவறா என்பது வேறு ஆய்வு !
.............................
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (32)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிபுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (மரபியல் 90)
-பன்னெடுங் காலத்திற்கு முன்பே உலகத்துப் பொருட்களை அறிவியல் முறைப்படி பகுத்துக் கண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு இந்த நூற்பா சான்று !
அஃதாவது, “உலகத்திலுள்ள எதை எடுங்கள் !அவற்றைப் பிரித்து ஆராயுங்கள் ! உங்களுக்கு மிஞ்சுவது ஐந்துதான் ! நிலம் ,தீ, நீர் , காற்று ,ஆகாயம் ஆகிய ஐந்து பொருட்களின் சேர்க்கையாகத்தான் எந்தப் பொருளும் இருக்கும் ! அப்படிப்பட்ட தன்மைதான் மனிதர்கள் உட்பட எல்லாப் பொருட்களுக்கும் !அப்படி உருவான பொருட்களைத்தான் உயர்திணை , அஃறிணை , ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் என்றெல்லாம் பிரித்துள்ளோம் ! அவை அனைத்தையுமே ஒரு மரபுப்படிப் பெயர் கூறிக், குழப்பம் நேராதபடி வழங்கவேண்டும் !” – என்பதே தொல்காப்பியர் கருத்தாகும் !
விசும்பு = ஆகாயம் ; வெட்ட வெளி (space)
“சரி ! அனைத்துமே இந்த ஐந்துக்குள் அடங்கும் என்கிறீர்களே , இதோ ஒரு பிளேட் இட்லி இருக்கிறது , இதற்குள் எங்கே ஐந்து உள்ளன ?” – கேட்கிறீர்களா?
சொல்கிறேன் !
இட்டலி எங்கிருந்து வந்தது ?
மாவிலிருந்து !
மாவு எங்கிருந்து வந்தது ?
அரிசியிலிருந்து !
அரிசி ?
அரிசி , மண்ணில் விளைந்ததுதானே !
வித்து மண்ணில் (நிலத்தில்) நீருடன் சேர்ந்து நாற்றை உருவாக்க , அது சூரிய வெப்பம் ( தீ) முதலியவற்றின் சேர்க்கையால் சத்துக்களைப் பெற்று வளர்ந்து ,காற்று (வளி)மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தித் ,தேவையான இடைவெளிகளுடன் (ஆகாயம்) உள் அணுக்களை உருவாக்கிப் பின் நெல் மணியை உருவாக்குகிறது!
இப்போது தொல்காப்பியர் கூறிய ஐந்து ஆதாரப் பொருட்களும் வந்துவிட்டனவா இல்லையா ?
“ சரி ! இரும்பு ? அது தனி உலோகம்தானே ? அது எப்படி ஐந்தின் சேர்க்கை ?” – கேட்கலாம் !
இரும்புத் தாது நிலத்திலிருந்து வருகிறது ; உருக்குவதற்குத் தீ வருகிறது ;குளிர்விக்க நீரும் , காற்றும் (வளியும்) வருகின்றன ; இரும்பு அணுக்களுக்குள் இடைவெளி (ஆகாயம்) அமைகிறது !
மூலங்கள் (Elements) எல்லாம் சேர்ந்ததுதான் நிலம் ! மூலங்கள் சேராது எந்தப் பொருளும் உருவாகாது ! ‘நிலம்’ என்பதை இப்படித்தான் பார்க்கவேண்டும் ! ஒவ்வொரு பொருளிலும் புல் பூண்டு உள்ள மண்ணைத் தேடிக்கொண்டிருக்கக் கூடாது !
இதனைப் போலவே ‘வளி’ என்பதையும் காற்று மட்டும்தான் என்பதுபோல எடுத்துக்கொள்ளக் கூடாது ! ‘இயங்கு சக்தி ’ (Motional force)என்று எடுத்துக்கொள்ள வேண்டும் !
இப்படிப் பார்த்தால்தான் கண்ணாடி , பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் தொல்காப்பியர் கூறிய ஐந்து பொருட்களால் ஆனவையே என்பது நமக்கு விளங்கும் !
ஐந்து ! – சரிதானா ?
.............................
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (33)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே ” (மெய்ப்பாட்டியல் 10)
- ‘வெகுளி’ எனும் மெய்ப்பாடு இந்த நான்கு காரணங்களால் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர் !
வெகுளி = சினம் ; சீற்றம்
என்னென்ன நான்கு காரணங்கள் ?
1. உறுப்பறை - கை , கால் முதலிய உறுப்புகளுக்கு ஊறு விளைவித்தல் .
2. குடிகோள் – குடிகளை வருத்தல் .
3. அலை – தடியால் அடித்தல் .
4. கொலை – கொல்லுதல் .
1. உறுப்பறை = உறுப்பு + அறை
அறை = அறு + ஐ ; அறு – முதனிலைத் தொழிற்பெயர் ; ஐ – உடைமைப் பொருள் விகுதி .
மூக்கு அறுபட்டவனை ‘மூக்கறையன்’ என்பதுண்டு .
2. குடிகோள் – ஒருவனது குடிக்குக் கேடு விளைவித்தல்.
பேராசிரியர் என்ற உரையாசிரியர் இதனை விளக்குகிறார் –“தாரமுஞ் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்”
தாரம் – மனைவி ; சுற்றம் –உறவினர்.
‘குடி ’ என்ற குழுக் கட்டுக்கோப்பு இன்று மெதுவாக மறைந்து வருகிறது;‘உலகமய மாக்கல் (globalisation)’ இதற்குக் காரணம் ; தவிர்க்க முடியாதது !
குடிக்குக் ‘கோள்’ செய்வது ‘குடி கோள்’ .
‘கோள்’ – என்ற அடிச் சொல்லிற்கு , ‘ஒழுங்கின்மை’ ,‘சரியின்மை’, ‘சீர்கேடு’ என்றெல்லாம் பொருள் உண்டு !
‘அவள் வயிற்றில் ஏதோ கோளாறு’- சொல்கிறார்கள் அல்லவா ? ‘கோள்’இங்கு அடிச்சொல் .
‘அவன் கோள்மூட்டுகிறான் ’ = அவன் ஏதோ தீங்கை மூட்டுகிறான் .
இவற்றில் வந்த ‘கோள்’தான் தொல்காப்பியரின் ‘குடிகோள்’ என்பதில் வந்துள்ளது !
3.அலை – கழி முதலியன கொண்டு தாக்குதல் ; கையால் நம்மைத் தள்ளி அடிப்பதினும் கோலால் (கழியால்) அடிப்பது மிகுந்த சீற்றத்தைத் தரும் !வெளிப்படையான ,தூக்கலான ‘வெகுளி’மெய்ப்பாடு அப்போதுதான் வெளிவரும் !
4.கொலை – ‘ஒருவனைக் கொன்றால் அவனுக்கு வெகுளி பிறக்கும்’ என்று பொருள் கொள்ள இயலாது ; அவன்தான் இறந்துவிட்டானே? இறந்தவனுக்கு எப்படி வெகுளி பிறக்கும் ?
இதற்கும் பேராசிரியர் உரையையே நாடவேண்டும் - “கொலையென்பது ,அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்”.
புகழைக் கொன்றால் வெகுளி வருமா ?
இந்தக் கேள்விக்கு ‘Defamation’ பிரிவில் வழக்குத் தொடுக்கிறார்களே,அவர்களைக் கேட்டால் தக்க விடை கூறுவார்கள் !
“சரி ! என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி ஒருவன் திட்டிவிட்டான் ! அப்போ எனக்குச் சீற்றம் வராதா ? அதைச் சொன்னாரா தொல்காப்பியர் ?” –வினா !
பேராசிரியர் சொன்ன விளக்கப்படி இது ‘கொலை’யில் அடங்கும் !
இதுவரை நாம் பார்த்த ‘வெகுளி’க்கு நேர் மாறான பொருளும் இச் சொல்லுக்கு இருக்கிறது !
“அந்தப் பெண் சுத்த வெகுளியாக இருக்கிறாள்; அடுத்தவீட்டுப் பையனுடன் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் !” – சொல்கிறார்கள் அல்லவா ?
இந்த ‘வெகுளி’க்கு, வெள்ளை மனம் ( plain-hearted) என்பது பொருள் !
வெகுளி – வெ + கு +ளி
கு – எழுத்துப் பேறு ; ‘வெளி’ என்பதே சொல் !
ஏதோ , படிக்கும் உங்களுக்கு வெகுளி வராமல் இருந்தால் சரிதான் !
.............................
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே ” (மெய்ப்பாட்டியல் 10)
- ‘வெகுளி’ எனும் மெய்ப்பாடு இந்த நான்கு காரணங்களால் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர் !
வெகுளி = சினம் ; சீற்றம்
என்னென்ன நான்கு காரணங்கள் ?
1. உறுப்பறை - கை , கால் முதலிய உறுப்புகளுக்கு ஊறு விளைவித்தல் .
2. குடிகோள் – குடிகளை வருத்தல் .
3. அலை – தடியால் அடித்தல் .
4. கொலை – கொல்லுதல் .
1. உறுப்பறை = உறுப்பு + அறை
அறை = அறு + ஐ ; அறு – முதனிலைத் தொழிற்பெயர் ; ஐ – உடைமைப் பொருள் விகுதி .
மூக்கு அறுபட்டவனை ‘மூக்கறையன்’ என்பதுண்டு .
2. குடிகோள் – ஒருவனது குடிக்குக் கேடு விளைவித்தல்.
பேராசிரியர் என்ற உரையாசிரியர் இதனை விளக்குகிறார் –“தாரமுஞ் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்”
தாரம் – மனைவி ; சுற்றம் –உறவினர்.
‘குடி ’ என்ற குழுக் கட்டுக்கோப்பு இன்று மெதுவாக மறைந்து வருகிறது;‘உலகமய மாக்கல் (globalisation)’ இதற்குக் காரணம் ; தவிர்க்க முடியாதது !
குடிக்குக் ‘கோள்’ செய்வது ‘குடி கோள்’ .
‘கோள்’ – என்ற அடிச் சொல்லிற்கு , ‘ஒழுங்கின்மை’ ,‘சரியின்மை’, ‘சீர்கேடு’ என்றெல்லாம் பொருள் உண்டு !
‘அவள் வயிற்றில் ஏதோ கோளாறு’- சொல்கிறார்கள் அல்லவா ? ‘கோள்’இங்கு அடிச்சொல் .
‘அவன் கோள்மூட்டுகிறான் ’ = அவன் ஏதோ தீங்கை மூட்டுகிறான் .
இவற்றில் வந்த ‘கோள்’தான் தொல்காப்பியரின் ‘குடிகோள்’ என்பதில் வந்துள்ளது !
3.அலை – கழி முதலியன கொண்டு தாக்குதல் ; கையால் நம்மைத் தள்ளி அடிப்பதினும் கோலால் (கழியால்) அடிப்பது மிகுந்த சீற்றத்தைத் தரும் !வெளிப்படையான ,தூக்கலான ‘வெகுளி’மெய்ப்பாடு அப்போதுதான் வெளிவரும் !
4.கொலை – ‘ஒருவனைக் கொன்றால் அவனுக்கு வெகுளி பிறக்கும்’ என்று பொருள் கொள்ள இயலாது ; அவன்தான் இறந்துவிட்டானே? இறந்தவனுக்கு எப்படி வெகுளி பிறக்கும் ?
இதற்கும் பேராசிரியர் உரையையே நாடவேண்டும் - “கொலையென்பது ,அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்”.
புகழைக் கொன்றால் வெகுளி வருமா ?
இந்தக் கேள்விக்கு ‘Defamation’ பிரிவில் வழக்குத் தொடுக்கிறார்களே,அவர்களைக் கேட்டால் தக்க விடை கூறுவார்கள் !
“சரி ! என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி ஒருவன் திட்டிவிட்டான் ! அப்போ எனக்குச் சீற்றம் வராதா ? அதைச் சொன்னாரா தொல்காப்பியர் ?” –வினா !
பேராசிரியர் சொன்ன விளக்கப்படி இது ‘கொலை’யில் அடங்கும் !
இதுவரை நாம் பார்த்த ‘வெகுளி’க்கு நேர் மாறான பொருளும் இச் சொல்லுக்கு இருக்கிறது !
“அந்தப் பெண் சுத்த வெகுளியாக இருக்கிறாள்; அடுத்தவீட்டுப் பையனுடன் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் !” – சொல்கிறார்கள் அல்லவா ?
இந்த ‘வெகுளி’க்கு, வெள்ளை மனம் ( plain-hearted) என்பது பொருள் !
வெகுளி – வெ + கு +ளி
கு – எழுத்துப் பேறு ; ‘வெளி’ என்பதே சொல் !
ஏதோ , படிக்கும் உங்களுக்கு வெகுளி வராமல் இருந்தால் சரிதான் !
.............................
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
31. மனைவியின் மாண்பு,
32. பஞ்ச பூதம்
33. வெகுளி
மூன்றும் படித்தேன். முக்கனியாய் சுவைத்தன.
மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள். நாங்கள் பின்தொடர்கிறோம்.
32. பஞ்ச பூதம்
33. வெகுளி
மூன்றும் படித்தேன். முக்கனியாய் சுவைத்தன.
மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள். நாங்கள் பின்தொடர்கிறோம்.
தொடத் தொடத் தொல்காப்பியம் (34)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியர் , ஆறாம் வேற்றுமை எத்தகையது என்பதை ,
“ஆறா குவதே
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுஎனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற்றுமையியல் 18)
-என விளக்குகிறார் .
‘இதனது இது’ என்ற கட்டமைப்பில் (pattern) ஆறாம் வேற்றுமை வரும் என்கிறார் !
அஃதாவது,
‘எனது வீடு ’
ஊரது அமைதி’
- இவைகள் ‘இதனது இது’ என்ற அமைப்பில் ( வாய்பாட்டில்) உள்ளதைக் காணலாம் !
ஏதாவது ஒன்றைக் கூறி , ‘இதனது ’ என்று கூறத் தொடங்கி ‘இது’என்று இன்னொன்றை வைத்து முடிக்கிறோமல்லவா ? அதுவே ‘இதனது இது’!
இதில் இரு வகைகள் :-
1. தற்கிழமை
2.பிறிதின் கிழமை
‘எங்கே ஞாயிறு, திங்கள் கிழமைகள் ?எனக் கேட்காதீர்கள் !
தற்கிழமை – அந்தப் பொருளுக்கு உரியது
பிறிதின் கிழமை – அந்தப் பொருளினும் வேறானது
பாரியது இளமை – தற்கிழமை
பாரியது தேர் – பிறிதின் கிழமை
வீட்டது அகலம் – தற்கிழமை
வீட்டது காவலன் – பிறிதின் கிழமை
செல்வியின் உயரம் –தற்கிழமை
செல்வியின் சங்கிலி – பிறிதின் கிழமை
“சரி ! இப்படி யெல்லாம் அடுக்குகிறீர்களே , இவற்றை ‘இத்தனை’ என்று வரையறுக்கக் கூடாதா ?” – கேள்வி !
தொல்காப்பியர் வரையறுத்துள்ளார் !
அவர் 17 வகைகளுக்குள் பெருமளவுக்கு அடக்கிவிடலாம் என்கிறார் ! :-
1.இயற்கை – ‘மரத்தது பச்சை நிறம்’ (தற்கிழமை)
2. உடைமை – ‘அவளது மெட்டி’ (பிறிதின் கிழமை)
3. முறைமை – ‘ஆட்டது குட்டி’ (பிறிதின் கிழமை)
4. கிழமை (உரிமை) – ‘சோமனது நிலம்’ (பிறிதின் கிழமை)
5. செயற்கை – ‘மண்ணது உருண்டை’ (தற்கிழமை)
6. முதுமை - ‘பேச்சது முதிர்ச்சி’ (தற்கிழமை)
7. வினை – ‘சுந்தராம்பாளது பாட்டு’ (தற்கிழமை)
8. கருவி – ‘எனது கணினி’ (பிறிதின் கிழமை)
9. துணை – ‘ கந்தனது மனைவி’ (பிறிதின் கிழமை)
10 . கலம் – ‘வீட்டது பத்திரம்’ (பிறிதின் கிழமை)
11. முதல் – ‘சாந்தியது ஆடு’ (பிறிதின் கிழமை)
12. ஒருவழி உறுப்பு – ‘ஆட்டது வால்’ (பிறிதின் கிழமை)
13. குழு – ‘மானது கூட்டம்’ (தற்கிழமை)
14. தெரிந்துமொழிச் செய்தி – ‘வள்ளுவரது குறள்’ (பிறிதின் கிழமை)
15. நிலை – ‘குசேலரது வறுமை’ (தற்கிழமை)
16. வாழ்ச்சி - ‘கடலது ஆமை’ (பிறிதின் கிழமை)
17. திரிந்து வேறுபடுவது – கடலையது மாவு (தற்கிழமை)
அப்பாடா ! நமக்கு மூச்சு முட்டுகிறது !
எவ்வளவு நுணுக்கமாகப் பொருட்களையும் அவற்றின் பல்வேறு உறவுகளையும் அலசி ஆராய்ந்துள்ளார் தொல்காப்பியர் பார்த்தீர்களா?
இதன் இரகசியம் என்ன ?
இரகசியம் – தமிழின் தொன்மைதான் !
.............................
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
என்னது புத்தி - தற்கிழமை34. ஆறாம் வேற்றுமை
என்னது மூளை - பிறிதின் கிழமை
சரிதானே ஐயா?
ஐயா தொல்காப்பியத்தில் இறை வழிபாடு பற்றி கூறப்பட்டதை எழுதுங்களேன் ?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (35)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவியாக்கம் 34)
அஃதாவது , இல்லாத பொருளைத் தெரிவிக்கும்போது , ‘உம்’மை சேர்த்துக் கொள்ளவேண்டும் !
‘மன்னா’ –இல்லாத ; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .
1. ‘மாட்டைத் தேடினேன் ; எங்கு இல்லை’ ×
‘மாட்டைத் தேடினேன்; எங்கும் இல்லை’ √
2. ‘அறை திறந்துதான் இருந்தது ; யார் வரவில்லை’ ×
‘அறை திறந்துதான் இருந்தது ; யாரும் வரவில்லை’ √
3. ‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவர் பார்க்கவில்லை’ ×
‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவரும் பார்க்கவில்லை’ √
மேல் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் ‘இல்லை’ப் பொருளில் ‘உம்’மை வந்து பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம் .
இதே அமைப்பில் ,வேற்றுமை பற்றியும் நம் ஐயத்தைப் போக்க ஒரு நூற்பா வரைந்துள்ளார் தொல்காப்பியர்.
“எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே ” (வேற்றுமை மயங்கியல் 46)
அஃதாவது ,
‘மரத்தை அறுத்தான் ’-இரண்டாம் வேற்றுமைத் தொடர்.
‘மரத்தை அறுக்கவில்லை’ –இதுவும் இரண்டாம் வேற்றுமைத் தொடர்தான் !
(அறுப்பதும் அறுக்காததும் அவன்விருப்பம்;
நமக்கு என்ன வந்தது?)
‘வாளால் வெட்டினான்’ – மூன்றாம் வேற்றுமைத் தொடர் .
‘வாளால் வெட்டவில்லை’- இதுவும் மூன்றாம் வேற்றுமைத் தொடர்தான் !
மேலே நாம் பார்த்த இரு நூற்பாக்களிலும் மிக நுட்பமான ஐயங்களைக் கூடத் தொல்கப்பியர் போக்கியுள்ளாரே ,அஃது எப்படி முடிந்தது ?
அதன் பின்னணி என்ன ?
தொல்காப்பியர் மாணவர்களுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்! அதுதான் பின்னணி !
தன் மாணவர்களின் ஐயத்தைப் போக்க முயன்றுள்ளார் தொல்காப்பியர் !
சில ஓலைச் சுவடிகளில் , “இது அண்ணாசாமி உபாத்தியாயர் எழுதியது” என்று எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன் !
நான் சொல்லும் ஓலைச் சுவடியின் காலம் கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது!
ஆனால் தொல்காப்பியரின் கைச்சுவடி கி.மு. 3000க்கும் முற்பட்டது !
அதனுடைய வழிவழிப் படிகளே (copies) இப்போது நம்மிடம் இருக்கின்றன !
…………………
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன் ,கிருபானந்தன் பழனிவேலுச்சா ஆகியோர்க்கு நன்றி! ஈகரை நல்ல சமுதாயத்தை வளர்த்துவருகிறது !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (36)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” (கற்பியல் 53)
கணவன் வேற்றூர் சென்றான் ; போன வேலை முடிந்தது ; திரும்புகிறான் ! அப்படித் திரும்பும்போது எங்குமே தங்கமாட்டானாம் ! (தவிர்தல் - தங்குதல்)
ஏனாம் ?
அவனது உள்ளம் முழுவதும் எப்போது மனைவியைப் பார்ப்போம் என்ற ஆசை உள்ளதுதான் !
அந்த நேரத்தில் அவனுக்கு உற்ற நண்பனாக அவனை இல்லாளிடத்தே கொண்டு சேர்ப்பது அவனது குதிரை !
அக் குதிரையை வருணிக்க இரண்டு வரிகளைச் செலவிடுகிறார் தொல்காப்பியர் ! :-
“உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” !
அக் குதிரை , ‘சும்மா சிட்டய்ப் பறக்கு’மாம்!
புள் இயல் – பறவை போலப் பறக்கும் இயல்புள்ள அவனது உள்ளம் அவனுக்கு எவ்வாறு உதவுமோ அதைப் போல அக் குதிரையும் உதவுமாம் !
இந்த உவமை நம் சிந்தனைக் குதிரையைத் தட்டி எழுப்புகிறது !
‘காற்று வேகம் மனோ வேகம்’ - என்றொரு சொல் உண்டு !
மனமானது எங்கும் நொடிப் பொழுதில் பறந்து வரும் !
இது நமக்குத் தெரிந்ததுதான் !
ஆனால் , தொல்காப்பியர் இப் பொருளில் கூறியதாகத் தெரியவில்லை !
‘உள்ளம் போல உற்றுழி உதவும் ’ –என்றல்லவா கூறுகிறார் ! ‘உள்ளம் போலப் பறக்கும் ’ என்று கூறவில்லையே ?
ஒரு மனிதன் தொய்ந்துபோகும் போது அவனுக்குப் புத்துயிர் கொடுப்பது அவனது உள்ளம்தான் ! இதைத்தான் தொல்காப்பியர் ‘உற்றுழி உதவுதல்’என்றார் !
ஒரு போர் வீரன் குதிரை மீது அமர்ந்திருந்தான் ! அப்போது எதிரிகளின் பலம் காரணமாக அவன் கால் நடுங்கியதாம் ! அப்போது அவன் என்ன சொன்னான் ? “ஏய் , காலே ! என்ன நடுங்குகிறாய்? நீ நடுங்குவதால் நான் ஒன்றும் பின்வாங்கப் போவதில்லை ! நான் சென்று தொடர்ந்து போரிடத்தான் போகிறேன் !” என்றானாம் !
அவனது உள்ளம்தான் ‘உற்றுழி உதவும்’ உள்ளம் !
…………………
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 5 of 84 • 1, 2, 3, 4, 5, 6 ... 44 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 84
|
|