ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 14 of 84 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 49 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (92)

Post by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2013 10:17 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (92)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்தது ‘ல்’ ஈறு !

‘ல்’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் என்று புள்ளி மயங்கியலில் 12  நூற்பக்கள் பகர்கின்றன !

முதல் நூற்பா ! :-

“லகார இறுதி னகார இயற்றே”  (புள்ளி மயங்கியல் 71 )

லகர ஈற்றுச் சொற்கள் , னகர ஈற்றுச் சொற்களை போல ப் புணரும் !

அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , ‘ல்’ ஆனது , ‘ற்’ ஆக மாறும் !:-

கல் + குறை = கற்குறை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + சிறை = கற்சிறை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + தலை = கற்றலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + புறம் = கற்புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் நான்கும் வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்ததற்கு உதாரணங்கள் !

அப்படியானால் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்தால் எப்படிப் புணரும் ? :-

“மெல்லெழுத் தியையி  னகார மாகும்” ( புள்ளி மயங்கியல் 72)

இதன்படி ,

கல் + ஞெரி = கன்ஞெரி (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + நுனி = கன்னுனி (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + முறி = கன்முறி (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ்விடத்தில் இளம்பூரணர் ஒரு விதி விலக்கை வைக்கிறார் ! :-

“இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் சிங்க நோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க .”

எப்படிப் பார்த்தீர்களா?

மேல் நூற்பா(71) வேற்றுமை பற்றி எழுதப்பட்டதாம் ! அதனால் அடுத்தது அல்வழி பற்றி எழுதப்படக்கூடிய இடமாம் ! இதைத்தான் ,  ‘அல்வழியது எடுத்துக்கோடற்கண்’ என்றார் இளம்பூரணர் !

இப்படி , முன்னேயும் பின்னேயும் ஒரு தொடர்புபடப் பார்ப்பதுதான்  ‘சிங்க நோக்கு’ !    

சிங்கம் என்ன செய்யுமாம் , நடக்கும்போது நேரே பார்த்தபடி விடுவிடு என்று  நடக்காதாம் ! திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்குமாம் ! இதுதான் சிங்க நோக்கு !

இப்போது , மேல் இளம்பூரணர் விதி விலக்கு உரைப்படி எடுத்துக்காட்டுகளைக் காண்போம்!:-

கல் + ஞெரிந்தது = கன்ஞெரிந்தது  (அல்வழிப் புணர்ச்சி)

கல் + நீண்டது = கன்னீண்டது   (அல்வழிப் புணர்ச்சி)

கல் + மாண்டது = கன்மாண்டது  (அல்வழிப் புணர்ச்சி)

 ஞெரிந்தது -  முறிந்தது

இச் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை ! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (93)

Post by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2013 9:40 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (93)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

லகர ஈற்றுச் சொற்கள் சில அல்வழியில் , மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ‘கல்+நீண்டது= கன்னீண்டது’ என்பதுபோல, ‘ல்’ , ‘ன்’ஆகிப் புணரும் என்று இளம்பூரணரின் உரையால் அறிந்தோம் !

இனி , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் லகர ஈற்றுச் சொற்களோடு வந்து புணரும்போது , இருவகைப்பட்ட முறைகளில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-

 “அல்வழி யெல்லா முறழென மொழிப” (புள்ளி மயங்கியல் 73)

அஃதாவது ,

கல் + குறிது = கல் குறிது √    (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் குறிது √      (   ”  ஜாலி

கல் + சிறிது = கல் சிறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் சிறிது √    (   ”  ஜாலி

கல் + தீது = கல் தீது √      (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் றீது √   (   ”  ஜாலி

கல் + பெரிது = கல் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் பெரிது √         (   ”  ஜாலி
என வரும் !

மேலே பார்த்தவாறு ‘உறழ்’ என்று வருமிடங்களில் கவனமாக இருக்கவேண்டும் !
ஏனெனில் , ஒரு பாட்டில் ‘கல் குறிது’ என்று வந்தால் , “இது தவறு ! கற்குறிது என்று வரவேண்டும்” என்பார் ஒருவர் ! “கல் குறிது என்பது சரிதானே ?” என்பார் இன்னொருவர் ! அப்படிப் பட்ட நேரத்தில் உங்களுக்குக் கைகொடுப்பது இந்த (73)நூற்பாதான் !

இது குறிப்பாகச் சுவடியியலில் (Manuscriptology) இன்றியமைகையாத கருத்து !
ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூலைச் செம்பதிப்பாக (Critical edition) உருவாக்கும்போது மேலே குறிப்பிட்ட சிக்கல் அடிக்கடி எழும் !
அது சரி !
நாம் ‘கல் குறிது’ என்பதை எடுப்பதா, ‘கற் குறிது’ என்பதைக் கொள்வதா ?
‘கற் குறிது’ தான் !
எப்படி ?
‘லகார இறுதி னகார இயற்றே’ (புல்ளி மயங்கியல் 71) என்ற சட்டத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் !  ‘ன்’ , ‘ற்’ ஆகும் என்று வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறினாலும்,  ன் –ற்  போல ல்-ற் ஐயும் கொள்வதே பொருத்தமாகும் !

இங்கே ஒரு விதி விலக்கு !
கூறுபவர் நம் இளம்பூரணர் !

மேல் நான்கு புணர்ச்சிகளும் ( ‘கல் குறிது’ முதல் ‘கற் பெரிது’ வரை மேலே கண்டவை) அல்வழிக்குத்தானே ?
ஆனால் ,  “குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க ” என்பதே அவ் விதி விலக்கு !

இவ் விதிப்படி ,

கல்+ குறுமை = கல் குறுமை √    (வேற்றுமைப் புணர்ச்சி)
= கற் குறுமை  √    (வேற்றுமைப் புணர்ச்சி)
என வரும் !

‘குறுமை’ – பண்புப் பெயர் ; இதனைத்தான் ‘குணம் பற்றிவந்த’ எனக் குறித்தார் இளம்பூரணர் !

மேலே வந்த ‘கல்’ , பெயர்ச் சொல் !

இளம்பூரணர் இதற்கும் ஒரு விதிவிலக்குக் கூறுகிறார் ! :-

“இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க ”.

இதற்கு ‘வந்தானாற் கொற்றன்’ என எடுத்துக்காட்டும் தந்தார் !

இதனை விரித்தால் ,
வந்தானால்  + கொற்றன் = வந்தானாற் கொற்றன்
என வரும் !

ஆல் – அசைநிலை .
வந்தானாற் கொற்றன் – வந்தான் கொற்றன் .

                                மேலும் , இளம்பூரணர் , “உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின்

முடிபும் ஈண்டே கொள்க ” என்கிறார் !

இதற்கு அவர் தந்த எடுத்துக்காட்டுகள் – ‘அக்காற் கொண்டான்’ முதலியன !

அஃதாவது ,
அக்கால் + கொண்டான் = அக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

அக்காற் கொண்டான் – அவ்விடத்துக் கொண்டான் .
அக்கால் – அவ்விடத்து .
அக்கால் – ஒரு சொல் ; பிரிக்கக் கூடாது; இதுவே 7ஆம் வேற்றுமை உருபுப் பொருளில்  ( ‘உருபின் பொருள்பட’)வந்த சொல் !

இதே பாங்கில் , இளம்பூரணர் தந்த பிற எடுத்துக்காட்டுகளை வருமாறு எளிமைப்படுத்தி உணரலாம் !:-

இக்கால் + கொண்டான் = இக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

உக்கால் + கொண்டான் = உக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

எக்கால் + கொண்டான் = எக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)


அக்கால் + சென்றான் = அக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + சென்றான் = இக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + சென்றான் = உக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + சென்றான் = எக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)


அக்கால் + தந்தான் = அக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + தந்தான் = இக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + தந்தான் = உக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + தந்தான் = எக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)

அக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + போயினான் = உக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + போயினான் = எக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (94)

Post by Dr.S.Soundarapandian Thu Jun 27, 2013 9:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (94)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ல்’ ஈற்றுப் புணர்ச்சி தொடர்கிறது !

‘ல்’லை ஈறாக உடைய சொல் முன் , ‘த’வை முதலாகக் கொண்ட  சொல் வந்து புணர்ந்தால், எப்படிப் புணரும் ?

தொல்காப்பியர் விடை ! :-

“தகரம் வரும்வழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே ”  (புள்ளி மயங்கியல் 74)

புகரின்று – குற்றமில்லை .

இதன்படி ,

கல் + தீது = கற்றீது √      (அல்வழிப் புணர்ச்சி)
     = கஃறீது  √    (அல்வழிப் புணர்ச்சி)
என வரும் !

இங்கு கூடுதல் செய்தி ஒன்றை வழங்குகிறார் இளம்பூரணர் !

அஃதாவது , கீழ்வரும் முறைகளிலும் சில ‘ல்’ ஈற்றுச் சொற்கள் புணரும் என்கிறார் இளம்பூரணர் ! : -

வேல் + தீது = வேறீது √                (அல்வழிப் புணர்ச்சி)
            = வேற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)

மேலை எடுத்துக்காட்டில் , ‘வே’ , நெடில்தானே ? அதனை அடுத்தது ‘ல்’தானே ? அப்படியானால் , ‘வேல் + தீது’ புணர்ந்த அதே முறையில்தானே ‘பால் + தீது’ ம்   புணரவேண்டும் ? இரண்டுமே அல்வழிப் புணர்ச்சிகள்தானே ?

“ஏமாறாதீர்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-

“நெடியத  னிறுதி  யியல்புமா ருளவே”  (புள்ளி மயங்கியல் 75)

அஃதாவது , சில சொற்கள் , வேறு மாதிரியாக , இயல்பாகப் , புணரும் என்கிறார் தொல்காப்பியர் !

இதற்கு இளம்பூரணர் தந்த  எடுத்துக்காட்டுகளை வருமாறு வரையலாம்  !:-

பால் + கடிது = பால் கடிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் கடிது ×

பால் + சிறிது = பால் சிறிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் சிறிது ×

பால் + தீது = பால் தீது √             (அல்வழிப் புணர்ச்சி)
= பா றீது ×

பால் + பெரிது = பால் பெரிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் பெரிது ×

சிலர்  ‘பாற் கடிது’ம்  வரலாம் என்று எழுதியுளர் ! இதற்குத் தொல்காப்பிய மூலத்திலும் இளம்பூரணர் உரையிலும் இடமில்லை ! இளம்பூரணர் ‘பால் கடிது’ என்பதை மட்டும் உதாரணம் தந்தாரே தவிர , ‘பாற் கடிது’ என்பதைத் தரவே இல்லை !
‘பாற் கடல்’ என வருகிறதே ?- கேட்கலாம் !

 ‘பாற் கடல்’ – வேற்றுமைப் புணர்ச்சி ! நாம் பேசிக்கொண்டிருப்பது அல்வழிப் புணர்ச்சி !

மேலைச் சூத்திரத்தில் (75) , ‘இயல்புமா ருளவே’ ( = இயல்பும் உள்ளன) என்றாரல்லவா ? அப்படியானால் , ‘இயல்பு’  அல்லாது ‘திரிந்து’ வருவதையும் கொள்ளலா மல்லவா ?

“கொள்ளலாம்” என அனுமதிக்கிறார் இளம்பூரணர் !

அஃதாவது , அல்வழியில் , இயல்பாகவும் , திரிந்தும் ஒரே சொல் புணரும் நிலையும் உண்டு.; இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள்  ! :-

வேல் + கடிது = வேல் கடிது  √   (அல்வழிப் புணர்ச்சி)
= வேற் கடிது  √   (அல்வழிப் புணர்ச்சி)

  ‘ல்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்து என்ன கூறுவாரோ தொல்காப்பியர் ?

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (95)

Post by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2013 9:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (95)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர் இப்போது , ‘நெல்’ , ‘செல்’ ,  ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய லகர ஈற்றுச் சொற்களைக் கையில் எடுக்கிறார் ! :-

“நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல”  (புள்ளி மயங்கியல் 76)

அல்லது – அல்வழிப் புணர்ச்சி .

அஃதாவது , ‘நெல்’ , ‘செல்’ ,  ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய நான்கு சொற்களும் , அல்வழிப் புணர்ச்சியில் இருந்தாலும் , வேற்றுமைப் புணர்ச்சியிற் போல , ‘ல்’ ஆனது ‘ற்’  ஆகும் !

இதற்கு இளம்பூரணரின் உதாரணங்களை  வருமாறு விரித்துரைக்கலாம் !:-

நெல் + கடிது = நெல் கடிது ×
= நெற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + சிறிது = நெல் சிறிது ×
= நெற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + தீது = நெல் தீது ×
= நெற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + பெரிது = நெல் பெரிது ×
= நெற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


செல் + கடிது = செல் கடிது ×
= செற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + சிறிது = செல் சிறிது ×
= செற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + தீது = செல் தீது ×
= செற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + பெரிது = செல் பெரிது ×
= செற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


கொல் + கடிது = கொல் கடிது ×
= கொற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

கொல் + சிறிது = கொல் சிறிது ×
= கொற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + தீது = கொல் தீது ×
= கொற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

கொல் + பெரிது = கொல் பெரிது ×
= கொற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


சொல் + கடிது = சொல் கடிது ×
= சொற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + சிறிது = சொல் சிறிது ×
= சொற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + தீது = சொல் தீது ×
= சொற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + பெரிது = சொல் பெரிது ×
  = சொற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் – மேகம் ; பெயர்ச் சொல் .
கொல் – விசுவகர்மர்தம்  கொல்லுத் தொழில் ; பெயர்ச் சொல் .


இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் எதனையும் ஒட்டவும் இல்லை வெட்டவும் இல்லை !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (96)

Post by Dr.S.Soundarapandian Sat Jun 29, 2013 9:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (96)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


‘இல்’ என்றால் ‘இல்லை’ என்றும் ஒரு பொருள் உண்டு .

இல் – குறிப்பு வினைமுற்று .

ஏன் குறிப்பு ?

காலத்தைத் தெளிவாகக் கூறாததால் !

இந்த ‘இல்’ பற்றிய தொல்காப்பியரின் புணர்ச்சி விதி !:-

“இல்லென்  கிளவி  இன்மை  செப்பின்
வல்லெழுத்து  மிகுதலு  மையிடை  வருதலும்
இயற்கை  யாதலு  மாகாரம் வருதலும்
கொளத்தகு  மரபி  னாகிட   னுடைத்தே”    (புள்ளி மயங்கியல் 77)

‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’ என ஏன் தொடங்கவேண்டும் ?

ஏனெனில் , ‘இல்’ என்பதற்கு ‘வீடு’ என்றொரு பொருளும் உண்டு ! அதனைத் தவிர்ப்பதற்காகத்தான் , “நான்  ‘இல்’லுக்கு இங்கே கொண்ட பொருள் ‘இல்லை’ என்பதாகும்” என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாக்கிவிடுகிறார் !

இதுபோன்ற தொல்காப்பியரின் எழுத்து நுணுக்கங்களைப் பார்த்துக்கொண்டே வாருங்கள் ! இவற்றைத்தான் ஆய்வுநெறிமுறை (Research methodology) என்று இன்று கூறுகிறோம் !  முன்னோடி (Pioneer) யார் என்பது விளங்குகிறதா?

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் மேல் நூற்பாவை இனிதே விளக்குகின்றன ! அவற்றை வருமாறு பிரித்துப் பார்க்கவேண்டும் ! :-  

இல்+ கல் =  இல் + ஐ + கல் = இல்லைக் கல் √
(‘வல்லெழுத்து மிகுதல்’)

இல்+ கல் =  இல் + ஐ + கல் = இல்லை கல் √

(‘ஐ’ இடை  வருதல்)

இல்+ கல் =   இல் கல் √

(‘இயற்கை ஆதல்’)

இல்+ கல் =  இல் + ஆ + கல் = இல்லாக் கல் √

(‘ஆகாரம் வருதல்’ ; க் - சந்தி)

இவற்றைச் சிறிது விலக்கவேண்டும் ! :-

‘வல்லெழுத்து மிகுதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘க்’ ஆகிய வல்லின எழுத்து மிகவேண்டும் என்றால் , ஒரு சாரியை வந்தே ஆகவேண்டும் ! அதுதான் ‘ஐ’
!

‘ஐயிடை வருதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘ஐ’ இடை வரவேண்டுமானால் , புணர்ச்சி , மேலே காட்டியுள்ளதுபோல் , ‘இல்லை கல்’தான் !

‘இயற்கை ஆதல்’ – ‘இல்’லுக்கும் ’கல்’லுக்கும் இடையே ஒன்றும் வரக்கூடாது ! அதுதான் ‘இல் கல்’ !

‘ஆகாரம் வருதல்’ – ஆகாரம் எந்த ஓட்டலிலிருந்து வருகிறது என்று கேட்காதீர்கள் !

‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ஆகாரம் ( ‘ஆ’) வந்தால் , மேலே எழுதியுள்ளபடி , ‘இல்லாக்கால்’ என்றுதான் ஆகும் !

இளம்பூரணர் சொன்ன வேறு உதாரணங்களையும் வருமாறு பிரித்து எழுதலாம் ! :-

இல் + சுனை = இல்லைச் சுனை √

                        இல் + சுனை = இல்லை சுனை √

இல் + சுனை = இல் சுனை √

இல் + சுனை = இல்லாச் சுனை √


இல் + துடி = இல்லைத் துடி √

இல் + துடி = இல்லை துடி √

இல் + துடி = இல் துடி √

இல் + துடி = இல்லாத் துடி √


இல் + பறை = இல்லைப் பறை √

இல் + பறை = இல்லை பறை √

இல் + பறை = இல் பறை √

இல் + பறை = இல்லாப் பறை √


‘இல்’ தொடர்பான மேலைப் புணர்ச்சிகள் யாவுமே அல்வழிப் புணர்ச்சிகளே !

உரை இறுதியில் இளம்பூரணர், “இல் என்பது எதிர்மறை வினைக் குறிப்பு முற்று விரவு வினை” என்றார் !

என்ன பொருள் ?

‘இல்’ என்பது இன்மைப் பொருள் கொண்டதால் , ‘எதிர்மறை’ !

‘வினைக் குறிப்பு முற்று’ என்றாலும் , ‘குறிப்பு வினை முற்று’ என்றாலும் ஒன்றுதான் ! ‘இல்லை’ என்பதில் காலம் பற்றிய செய்தி இல்லை ! ‘இல்லை’ என்று அங்கேயே நின்றுவிடுவதால் , எச்சமும் இல்லை ! எச்சம் ஆகாததால் அது ‘முற்று’ ! ‘இல்லை’ என்பதில் பெயர்த்தன்மை இலாது , வினைத்தன்மை இருப்பதால் , மொத்தத்தில் ‘குறிப்பு வினை முற்று’ !

‘விரவு வினை’  (Common class)– ‘இல்லை’ என்ற சொல்லை உயர் திணைக்கும் (personal class)ஆளலாம்; அஃறிணைக்கும்(Impersonal class) ஆளலாம் !

‘அவள்  இல்லை’ √
‘மாடு இல்லை’  √

எனவே, ‘இல்லை’ என்பதை ‘விரவு வினை’ என்கிறோம் !

இந்த ‘விரவு’ என்ற சொல் நமக்குப் பழக்கமான சொல்தான் !

“தண்ணீர் கொதிக்குது ! பச்சத் தண்ணி விலாவிக் கொண்டு வா” – மாமியர் மருமகளைப் பார்த்து அலறுவாள் !

இந்த ‘விலாவி’ என்பது , ‘விரவி’யிலிருந்து வந்ததுதான் !

விரவி – விலவி – விலாவி !

‘இல்லை’ என்ற சொல் ,செம்பதிப்பு (Critical edition) நோக்கில் இன்றியமையாத சொல் !  

பாடலில், நூற்பாவில் , ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்து ஒற்று வருமா வராதா என்ற குழப்பம் அடிக்கடி வரும் !
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (எச்சவியல் 56)- என்பதில் , ‘இல்லை’ என்றுதான் போடவேண்டும் என்பார் ஒருவர் ; ‘இல்லைக் ’ என்பதுதான் சரி என்பார் இன்னொருவர் !

எது சரி ?

இங்கேதான் மேலை ஆய்வு நமக்குக் கைகொடுக்கிறது !

தொல்காப்பியர்தான் ‘க்’ வரலாம், வராமலும் இருக்கலாம் எனக் கூறிவிட்டாரே ?

எனவே ,
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” √
“கடிசொல் இல்லை காலத்துப் படினே”   √

ஆனால், நூற்பாவுக்கு ஏற்ற ‘கிண்’ணென்ற ஓசையை ‘க்’ தருவதால் ,‘இல்லைக்’ என்று போடுவதே சிறந்தது என்பது என் கருத்து !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (97)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 06, 2013 7:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (97)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியத்து எழுத்ததிகாரத்துப் புல்ளிமயங்கியலின்அடுத்த  லகர ஈற்றுச் சொல்  ‘வல்’ !

“ வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே” (புள்ளி மயங்கியல் 78)

‘தொழிற்பெய ரியற்றே’ – தொழிற்பெயர் போல .

எந்தத் தொழிற்பெயர் ?

அந்தத் தொழிற் பெயர் , இளம்பூரணர் உரையால் , ‘ஞ்’ஈற்றுத் தொழிற் பெயர் என அறிகிறோம் !
அது எங்கே கூறப்பட்டது ?

“ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே
உகரம் வருத லாவயி னான”                (புள்ளி மயங்கியல் 1)
என வந்தது !

இதில் , ‘உரிஞுக் கடிது’ (அல்வழி) , ‘உரிஞுக் கடுமை’ (வேற்றுமை) என இரு வழிகளிலும் தொழிற்பெயர் புணர்வது கூறப்பட்டது !

அதைப் போன்றே , ‘வல்’லும் வரும் என்பதே மேலை நூற்பாவின் (புள்.78) கருத்து !
ஆனால் , ‘உரிஞ்’ தொழிற்பெயர் ; ‘வல்’ , சூதாடு கருவியைக் குறிக்கும் ஒரு பெயர்ச் சொல் !

மேல் நூற்பாவுக்கு (புள் 78) இளம்பூரணர் தரும் உதாரணங்களை வருமாறு பிரித்துக் காணலாம் !:-

வல் + கடிது = வல்லுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + சிறிது = வல்லுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + தீது = வல்லுத் தீது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + பெரிது = வல்லுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

மேல் நான்கும் வல்லெழுத்தை (வன்கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் !

இனி , மெல்லெழுத்தை (மென்கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-

வல் + ஞான்றது = வல்லு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

வல் + நீண்டது = வல்லு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

வல் + மாண்டது = வல்லு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

இடையினத்தை (இடைக் கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்று ! :-

வல் + வலிது = வல்லு வலிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

மேலே  ‘வல்’லின் அல்வழிப் புணர்ச்சிகளுக்கான சான்றுகளைப் பார்த்தோம் ! இனி , வேற்றுமைப் புணர்ச்சிகளுக்கான சான்றுகளைக் காண்போம் ! :-

வல் + கடுமை = வல்லுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + சிறுமை = வல்லுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + தீமை = வல்லுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + பெருமை = வல்லுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

இப்போது பார்த்த நான்கும் வன்கணத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் !

மென்கணத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்த சான்றுகள் ! :-

வல் + ஞாற்சி = வல்லு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + நீட்சி = வல்லு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + மாட்சி = வல்லு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

இடைக் கணத்துச் சொல்லான ‘வ’வை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்வதற்குச் சான்று!:-

வல் + வலிமை = வல்லு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

‘வல்’ , ஒரு சூதாடு கருவி என்று முன்பே பார்த்தோம் !

சூதாட்டத்திலும் தமிழகம் முன்னணியில் இருந்தது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் !

இன்றும் , தழகத்தில் எங்காவது அகழ்வாய்வு (Excavation) நடத்தினால் , நிச்சயம்  ‘வல்’ காணக்கிடைக்கிறது !இது மண்ணால் ஆகியிருக்கும் ; மரம் , தந்தம், உலோக வல்லுகளும் பயன்பட்டிருக்கவேண்டும் !  தொல்காப்பியம் பேசும் ‘வல்’ , சங்ககாலத்திலும் குறிப்பிடப்படுகிறது ! பெண்ணின் முலைக்கு உவமையாகச் சங்க இலக்கியங்களில் ‘வல்’ வருகிறது !

‘வல் + கடிது = வற் கடிது’ என்று எழுதத்தான் யாரும் முனைவர் ! “அது தவறு” என்று காட்டத்தான் , தொல்காப்பியருக்கு நூற்பா எழுதும் தேவை ஏற்பட்டது !  

இதில் ஒரு மொழி நுட்பம் உளது ! –

‘வற்கடிது’ என்றால் , அதில் ‘வல்’ மறைந்துபோகிறது ! ‘கடிது’ என்பது குறிப்பு வினைமுற்று ! எனவே அக்குறிப்பு வினைமுற்றுதான் சொல்லில் மேலோங்குகிறதே தவிர , ‘வல்’ காணாமல் போகிறது ! ‘வல்’லை இழுத்து வெளியே நீட்டவேண்டியுள்ளது ! அதனால்தான், உகரச் சாரியையைப் பயன்படுத்தி , ‘வல்லுக் கடிது’ , ‘வல்லுக் கடுமை’ என்ற வடிவங்கள் வரலாயின !

இதே வல்லுக்காக இன்னொரு நூற்பாவையும் செலவிடுகிறார் தொல்காப்பியர் ! :-

“நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே
உகரங் கெடுவழி யகர நிலையும்”  (புள்ளி மயங்கியல் 79)

‘உகரம் கெடுதலும் உரிதே’ என்பதில் உள்ள உம்மை எதிர்மறை உம்மை ! இதனால் ‘உகரம் கெடாமையும் உரித்தே ’என்ற பொருளைக் கொள்ளவேண்டும் !இப்படித்தான் நச்சினார்க்கினியர் கொண்டுள்ளார் !
எனவே இளம்பூரணர் , நச்சினார்க்கினியர்தம் உரைகளின்படியான
எடுத்துக்கட்டுகளை வருமாறு வருமாறு விளக்கலாம் ! :-

வல் + நாய் = வல்லு நாய் √     (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

= வல்ல நாய் √   (வேற்றுமைப் புணர்ச்சி) (அ - சாரியை)

வல் + பலகை = வல்லுப் பலகை √     (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

= வல்லப் பலகை √   (வேற்றுமைப் புணர்ச்சி) (அ - சாரியை)

இளம்பூரணர் இந்த நூற்பா (79) ,மற்றும் சென்ற (78)நூற்பாக்களுக்குத் தந்த  வேறு எடுத்துக்காட்டுகளை வருமாறு தொகுத்துக் காட்டலாம் !:-

வல் + கடுமை = வல்லுக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + சிறுமை = வல்லுச் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லச் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + தீமை = வல்லுத் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லத் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + பெருமை = வல்லுப் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லப் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

இந்த நான்கு எடுத்துக்காட்டுகளில் உகரமும் அகரமும் தம்முள் பகிர்ந்துகொள்ளும் பாங்கினவாக உள்ளன ! இதைத்தான் மொழியியலில் ( Linguistics), தடையிலா மாற்றம் (Free variation) என்கின்றனர் !

மேலை எடுத்துக்காட்டுகளில் வந்த  ‘நாய் ’ , நாலுகால் நாயல்ல !

சூதாட்டக் கட்டங்களில் வைத்து நகற்றும் காய் ! ‘காய்’ என்பது மரத்துக்காய் அல்ல ! கல் , சோழி , மரத்துண்டு இப்படி ஏதாவது நகர்த்தக்கூடிய சிறு பொருள் ! இதுதான் ‘நாய்’ !
‘வல் ’ என்பது இந்தக் காய்தான் !
வலுவாக இருப்பதால் ‘வல்’ ; ‘வல்லுட்டி’ என்று வழக்கிலும் வரக்காண்கிறோம் !
இறுகிக் காய்த்து இருப்பதால் ‘காய்’ ! ‘கை காய்த்துவிட்டது’ – சொல்கிறோமல்லவா?
கட்டங்களில் அங்குமிங்கும் நகர்த்தப்படுவதால் (அலைவதால்) காயை ‘நாய்’ என்றனர் !
சூதாட்டக் கட்டங்களில் வைத்து நகர்த்தப்படும் காயைத்தான் தொல்காப்பியம் ‘வல்’ என்றது !  “இதற்கு என்ன பொருள் ?” என்று மற்றவர்களிடம் நீங்கள் கேட்டு அவர் வல்லென்று விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !
‘வல் – சூதாடு கருவி’ என எழுதி , ‘Dice’ என்று ஆங்கிலத்தில் தந்துள்ளனர்; ‘Dice’ என்பது பகடை ஆகும். ‘தாயப் பசு’ , ‘தாயக் கட்டை’ என்றெல்லாம் கூறப்படுவதுதான் ‘Dice’; ‘Die’ என்பது ஒருமை; Dice – பன்மை. ஆனால் ‘வல்’ என்பது உருட்டப்படுவது அல்ல! கட்டங்களில் நகர்த்தப்படுவது; ‘வல்’லை முலைக்கு உவமிக்கின்றன இலக்கியங்கள்; படத்தில் உள்ள காய்களைப் பார்த்தால் முலை நுனியைத்தான் அப்படி உவமித்துள்ளனர் என்பது விளங்குகிறது!

‘வல்லப் பலகை’ எனபது வேறு ஒன்றுமில்லை ! சூதாட்டத்தில்  காய் உருட்டப் பயன்படும் அடிப்பலகை !
தொல்காப்பியம் பேசிய ‘வல்’ஐப் பார்க்க ஆசையாக இருக்கிறதா ?
[You must be registered and logged in to see this link.]
(K. ashok vardhan shetty,Editor, Excavations at Mangudi, Dept.of Archaeology, Chennai,2003, p.ix ).

மொஹஞ்சதோராவில் கிடைத்த ‘காய்’களைக் கீழே காணலாம் .
[You must be registered and logged in to see this link.]
Chess pieces from Mohenjo-daro. Photo: bennylin0724, Flickr .
pasthorizonspr.com
நல்ல வளர்ச்சி அடைந்தவை இவை; தமிழர்கள்  வடக்கே பரவி வாழ்ந்ததற்கான தடயம் இது !  
இவ்வாறு , தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் மட்டுமல்லாது பழந்தமிழர் விளையாட்டு , பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் முதலியவற்றைத் தெரிவிக்கும் அரிய கருவூலமாக மிளிர்கிறது !


Last edited by Dr.S.Soundarapandian on Sat Jul 06, 2013 7:49 pm; edited 1 time in total (Reason for editing : Courtesy not incised)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (98)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 08, 2013 8:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (98)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

லகர ஈற்றுச் சொற்புணர்ச்சி தொடர்கிறது !

இப்போது தொல்காப்பியர் எடுத்துக்கொள்ளும் சொற்கள் – ‘பூல்’, ‘வேல்’ , ‘ஆல்’ !

இம் மூன்றும் மரங்கள் !

வேற்றுமைப் பொருளில் , இவை கீழ் வருமாறு புணரும் என்பதை இளம்பூரணரின் சான்றுகளால் உணர்கிறோம் ! :-

பூல் + கோடு = பூலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + செதிள் = பூலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + தோல் = பூலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + பூ = பூலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)


வேல் + கோடு = வேலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

வேல் + செதிள் = வேலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
வேல் + தோல் = வேலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

வேல் + பூ = வேலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)


ஆல் + கோடு = ஆலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + செதிள் = ஆலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + தோல் = ஆலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + பூ = ஆலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

மேல் புணர்வுகளுக்குத் தொல்காப்பிய விதி ! :-

“பூல்வே லென்றா வாலென் கிளவியோ
டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே”  (புள்ளி மயங்கியல் 80)

இந் நூற்பாவில் ‘பூல்வேல் என்றா’ என வந்ததல்லவா ? இந்த ‘என்றா’வை  ‘எண்ணிடைச் சொல்’ (Middling word used to counting) என்பர் !
‘இராமனும் சோமனும் கந்தனும்’ – என்று அடுக்கிக்கொண்டே (எண்ணிக் கொண்டே) போகும்போது ‘உம்’மானது அடுக்குவதற்குப்(என்ணுவதற்கு) பயன்படுகிறது அல்லவா ? அதனால் அது எண்ணும்மை ! இதுவும் ஒரு எண்ணிடைச்சொல்தான் !
தொல்காப்பியர் நாளையில் பயன்பட்ட ஓர் எண்ணிடைச்சொல் ‘என்றா’!

தொல்காப்பியர் கூறிய ‘பூல்’ மரத்தைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]

(Courtesy- thelovelyplants.com )
இதுதான் ‘பூல்’ மரம் ! பூலா மரம் என்பதும் இதுவே !
இதன் ஆங்கிலப் பெயர் -  Red silk-cotton tree .
இதன் தாவரவியல் பெயர் – Bombax malabaricum .

தொல்காப்பியர் கூறிய ‘வேல்’ மரத்தைப் பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
(Courtesy -holistic-herbalist.com)
இதுதான் ‘வேல்’ மரம் ! ‘ஆலும் வேலும் பல்லுக் குறுதி ’ என்பார்களே , அந்த வேல் இதுதான் !

இதன் ஆங்கிலப் பெயர் – Babul  .
இதன் தாவரவியல் பெயர் -  Gens acacia  .
ஓலைக் கொட்டைகளில் வெள்ளைத் துணியை இணைப்பதற்கு அந்தக்காலத்தில் குண்டூசியாக வேலம் முள்ளைத்தான் பயன்படுத்துவர் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by sivarasan Mon Jul 08, 2013 8:40 pm

:afro: தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 745155 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (99)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 08, 2013 8:46 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (99)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளிமயங்கியலில் , ‘ல்’ ஈற்றுச் சொற் புணர்ச்சியில் ,
“தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 81)
என்கிறார் தொல்காப்பியர் !

அஃதாவது , அல்வழி , வேற்றுமைகளில் , ‘கல்’ என்ற முதனிலைத் தொழிற்பெயரை எடுத்துக்கொண்டால் , இத் தொழிற்பெயர் ,முன்புகூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர்போலப் புணரும் என்பது நூற்பாக் கருத்து !

புள்ளி மயங்கியல் நூற்பா 1இல் , ‘உரிஞ்’ என்ற தொழிற்பெயர் , ‘உ’ , ‘க்’ பெற்று , ‘உரிஞுக் கடிது’ என்று அல்வழியிலும் , ‘உருஞுக் கடுமை’ என வேற்றுமையிலும் புணரும் என்று தான் சொன்னதை இங்கு இணைத்துக் கூறுகிறார் தொல்காப்பியர்!

இதன் அடிப்படையில் , இளம்பூரணர் தந்த சான்றுகளை வருமாறு பிரித்தறியலாம் ! :-

கல் + கடிது = கல்லுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + சிறிது = கல்லுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + தீது = கல்லுத் தீது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + பெரிது = கல்லுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + ஞான்றது = கல்லு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + நீண்டது = கல்லு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + மாண்டது = கல்லு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + வலது = கல்லு வலது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + கடுமை = கல்லுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + சிறுமை = கல்லுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + தீமை = கல்லுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + பெருமை = கல்லுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + ஞாற்சி = கல்லு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + நீட்சி = கல்லு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + மாட்சி = கல்லு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + வலிமை = கல்லு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல்       -   முதனிலைத் தொழிற்பெயர் .
கல்லுதல் –  விகுதி பெற்ற தொழிற் பெயர் .
கல்லுதல் – தோண்டுதல் .

‘மலையைக் கல்லி எலியைப் பிடித்தானாம் !’ – தமிழ்ப் பழமொழி (Proverb)!

மேலை நூற்பாவிற்கு விதி விலக்கும் உண்டு !

உகரச் சாரியை பெறாது , சில தொழிற்பெயர்கள் , கிழ்வருமாறும்  புணரும் என்று காட்டுகிறார் இளம்பூரணர் ! :-

பின்னல் + கடிது = பின்னல் கடிது (அல்வழிப் புணர்ச்சி)

துன்னல் + கடிது = துன்னல் கடிது (அல்வழிப் புணர்ச்சி)

பின்னல் + கடுமை = பின்னற் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

துன்னல் + கடுமை = துன்னற் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)


மென்கணம் வந்து புணர்ந்தால் , வருமாறு அமையும் என்கிறார் இளம்பூரணர் ! :-

பின்னல் + ஞான்றது = பின்னன் ஞான்றது √ (அல்வழிப் புணர்ச்சி)
                = பின்னல் ஞன்றது ×

பின்னல் + ஞாற்சி = பின்னன் ஞாற்சி √ (அல்வழிப் புணர்ச்சி)    
                    = பின்னல் ஞாற்சி ×



இப் புள்ளி மயங்கியலில் லகர ஈற்றுப் புணர்ச்சியின் ஈற்று நூற்பா ! :-

“வெயிலென் கிளவி மழையிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 82)

தொல்காப்பியரைக் கரடுமுரடான மனிதர் எனப் பார்க்காதீர் ! நூற்பாவில் எவ்வளவு நகைச் சுவை போட்டிருக்கிறார் பாருங்கள் !

‘வெயில்’ எப்படிப் புணரும் ? – என்று கேட்டால் , ‘மழை போலப் புணரும் !’ என்கிறார் !

மழையைப் பற்றி எங்கே சொன்னார் ?

உயிர் மயங்கியலில் (எழுத்ததிகாரம்தான்) சொன்னார் ! (நூற்பா 85)

அஃதாவது , அத்துச் சாரியையும் , இன் சாரியையும் புணர்ச்சியில் வரும் என்று அங்கே (நூ. 85) சொன்னார் !

அதன்படி , ‘வெயில்’ புணரும் முறை ! :-

வெயில் + கொண்டான் = வெயிலத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + சென்றான் = வெயிலத்துச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + தந்தான் = வெயிலத்துத் தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + போயினான் = வெயிலத்துப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + கொண்டான் = வெயிலிற் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + சென்றான் = வெயிலிற் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + தந்தான் = வெயிலிற் றந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + போயினான் = வெயிலிற் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)


மேலே வந்த ‘அத்து’ என்பதைச் ‘ சாரியை’என்று எழுதினால் பலர் அஞ்சுகின்றனர் !

அத்துச் சாரியையை நாம் பேச்சில் , எழுத்தில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் !

‘உள்ளத் துணர்ச்சி’
‘பள்ளத்து நீர்’

- இங்கெல்லாம் வந்துள்ளது ‘அத்து’ச் சாரியைதான் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (100)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 08, 2013 8:55 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (100)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளி மயங்கியலில் இப்போது புது ஈறு !

அது ‘வ்’ ஈறு !

ஐந்து நூற்பாக்கள் இதற்காக நிற்கின்றன !

முதல் நூற்பா !:-

“சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த வுருபிய னிலையும்”  (புள்ளி மயங்கியல் 83)

சுட்டு   -    அ  , இ  ,  உ
சுட்டு முதலாகிய வகர இறுதி – அவ், இவ் , உவ் ஆகிய மூன்றும் !

முற்படக் கிளந்த உருபியல் – உருபியல் நூற்பா 11இல்  ‘அவை + ஐ = அவற்றை ’என்று காட்டியபடி!

நிலையும் – புணரும் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரிக்கலாம் !:-

அவ் + கோடு = அ + வற்று + கோடு (வற்று - சாரியை)
அ + வற்று + கோடு = அவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + கோடு = இ + வற்று + கோடு (வற்று - சாரியை)
இ + வற்று + கோடு = இவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + கோடு = உ + வற்று + கோடு (வற்று - சாரியை)
உ + வற்று + கோடு = உவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)



அவ் + செவி = அ + வற்று + செவி (வற்று - சாரியை)
அ + வற்று + செவி = அவற்றுச் செவி (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + செவி = இ + வற்று + செவி (வற்று - சாரியை)
இ + வற்று + செவி = இவற்றுச் செவி  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + செவி = உ + வற்று + செவி (வற்று - சாரியை)
உ + வற்று + செவி = உவற்றுச் செவி  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவ் + தலை = அ + வற்று + தலை (வற்று - சாரியை)
அ + வற்று + தலை = அவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + தலை = இ + வற்று + தலை(வற்று - சாரியை)
இ + வற்று + தலை = இவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + தலை = உ + வற்று + தலை(வற்று - சாரியை)
உ + வற்று + தலை = உவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவ் + புறம் = அ + வற்று + புறம்(வற்று - சாரியை)
அ + வற்று + புறம் = அவற்றுப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + புறம் = இ + வற்று + புறம் (வற்று - சாரியை)
இ + வற்று + புறம் = இவற்றுப் புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + புறம் = உ + வற்று + புறம் (வற்று - சாரியை)
உ + வற்று + புறம் = உவற்றுப் புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

கோடு – கொம்பு .
புறம் – முதுகு .
இந்த வற்றுச் சாரியை நாம் நாள்தோறும் பயன்படுத்துவதுதான் !

‘பலவற்றை’
‘அரியவற்றை’
‘தெரிந்தவற்றை’
- இங்கெல்லாம் வந்துள்ளது ‘வற்று’ச் சாரியைதான் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 14 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 84 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 49 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum