புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 12 of 84 •
Page 12 of 84 • 1 ... 7 ... 11, 12, 13 ... 48 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (74)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்களை அடுத்து எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !
முதனிலைத் தொழிற்பெயர் என்றால் ?
விகுதி பெறாத தொழிற் பெயரையே முதனிலைத் தொழிற்பெயர்(Verbal roots without suffix) என்கிறோம் !
முதல் + நிலை = முதனிலை
சில எடுத்துக்காட்டுகள் :-
முதனிலைத் தொழிற்பெயர் ------------- விகுதி பெற்ற தொழிற் பெயர்
பம் ----------------------------------- பம்மல்
செம் ------------------------------------ செம்மல்
தும் ----------------------------------- தும்மல்
விம் ----------------------------------- விம்மல்
கம் ----------------------------------- கம்மல்
மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்கள் அல்வழியில் எப்படிப் புணரும், வேற்றுமையில் எப்படிப் புணரும் என்பதைத் தொல்காப்பியர் –
“தொழிற் பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 32)
என்றார் !
இதில் என்ன விளங்குகிறது ?
ஒன்றும் விளங்கவில்லை !
“தொழிற் பெயர் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , “தொழிற் பெயர் போலப் புணரும் ” என்றால் என்ன செய்வது ?
இங்கேதான் உரையாசிரியர் (Commentator) தேவைப்படுகிறார்!
மனப்பாட நோக்கத்திற்காகத் தொல்காப்பியர் அவ்வாறு சுருக்கமாக நூற்பா எழுதினார் ! நாம் இளம்பூரணர் முதலியோர் உரைகொண்டு பொருளைத் துலக்கி அறியவேண்டும் !
இளம்பூரணர் உரைப்படி , ‘செம்’ என்ற முதனிலைத் தொழிற் பெயரானது , அல்வழிப் புணர்ச்சியில் , கீழ்வருமாறு புணரும் ! :-
செம் + கடிது = செம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
செம்+ சிறிது = செம்முச் சிறிது (உ-சாரியை ; க்-சந்தி)
செம்+ தீது = செம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
செம் + பெரிது = செம்முப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
செம் + ஞான்றது = செம்மு ஞான்றது (உ-சாரியை)
செம் + நீண்டது = செம்மு நீண்டது (உ - சாரியை)
செம் + மாண்டது = செம்மு மாண்டது (உ- சாரியை)
செம் + வலிது = செம்மு வலிது (உ- சாரியை)
இளம்பூரணர் காடிய வழியில் நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளைத் தரலாம் !:-
தூக்கம் + கடிது = தூக்கங் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
தூக்கம் + கடுமை = தூக்கக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆக்கம் + சிறிது = ஆக்கஞ் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
ஆக்கம் + சிறுமை = ஆக்கச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
தாக்கம் + பெரிது = தாக்கம் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
தாக்கம் + பெருமை = தாக்கப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
‘நாட்டம்’ என்பதைப் போலவே , இங்கே வந்துள்ள ‘தாக்கம்’ , ‘ஆக்கம்’ ஆகியனவும் ‘அம்’ எனும் தொழிற் பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர்களே !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (75)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உகரச் சாரியை (Expletive particle ‘U’) முதலியன பெற்றுப் புணர்ந்ததை முன் கட்டுரையில் பார்த்தோம் !
அடுத்ததாகத் , தொழிற்பெயர் மட்டுமல்லாது , சில பொருட் பெயர்களும் அதே பாங்கில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-
“ஈமுங் கம்மு முருமென் கிளவியும்
ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன” (புள்ளி மயங்கியல் 33)
இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விவரிக்கலாம் !:-
ஈம் + கடிது = ஈமுக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
கம் + கடிது = கம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடிது = உருமுக் கடிது (உ – சாரியை ; க்- சந்தி)
ஈம் + சிறிது = ஈமுச் சிறிது (உ- சாரியை ; ச்-சந்தி)
கம் + சிறிது = கம்முச் சிறிது (உ- சாரியை ; ச்- சந்தி)
உரும் + சிறிது = உருமுச் சிறிது (உ- சாரியை ;ச் - சந்தி)
ஈம் + தீது = ஈமுத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
கம் +தீது = கம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீது = உருமுத் தீது (உ-சாரியை ; த்- சந்தி)
ஈம் + பெரிது = ஈமுப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
கம் + பெரிது = கம்முப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெரிது = உருமுப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)
- இப் பன்னிரண்டும் அல்வழிப் புணர்ச்சிகளே !
மேலே வந்தவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் , ஈம் ,கம் , உரும் ஆகிய பெயர்கள் கொண்ட புணர்ச்சி !
இதே பெயர்கள் , மெல்லெழுத்து இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணர்வதையும் சுருக்கமாகக் குறிக்கிறார் இளம்பூரணர் !இதனை வருமாறு விரிக்கலாம் !:-
ஈம்+ ஞான்றது = ஈமு ஞான்றது (உ-சாரியை)
கம் + ஞான்றது = கம்மு ஞான்றது (உ-சாரியை)
உரும் + ஞான்றது = உருமு ஞான்றது (உ- சாரியை)
ஈம் + நீண்டது = ஈமு நீண்டது (உ- சாரியை)
கம் + நீண்டது = கம்மு நீண்டது (உ- சாரியை)
உரும் +நீண்டது = உருமு நீண்டது (உ- சாரியை)
ஈம் + வலிது = ஈமு வலிது (உ- சாரியை)
கம் + வலிது = கம்மு வலிது (உ- சாரியை)
உரும் + வலிது = உருமு வலிது ( உ- சாரியை)
-இவ் வொன்பதும் அல்வழிப் புணர்ச்சிகளே !
இனி, வேற்றுமைப் புணர்ச்சியில் , இதே மூன்று பெயர்களும் புணர்வதை வருமாறு குறித்தார் இளம்பூரணர் ! :-
ஈம் + கடுமை = ஈமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
கம்+ கடுமை = கம்முக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடுமை = உருமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
ஈம் + சிறுமை = ஈமுச் சிறுமை (உ – சாரியை; ச் - சந்தி)
கம் + சிறுமை = கம்முச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)
உரும் + சிறுமை = உருமுச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)
ஈம் + தீமை = ஈமுத் தீமை (உ-சாரியை; த்- சந்தி)
கம் + தீமை = கம்முத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீமை = உருமுத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)
ஈம்+ பெருமை = ஈமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
கம் + பெருமை = கம்முப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெருமை = உருமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததை மேலே பார்த்தோம் !
இதைப் போன்றே , மெல்லெழுத்து,இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் ஈம், கம் , உரும் ஆகிய பெயர்களுடன் வந்து புணருமாற்றை , இளம்பூரணர் வழியில் , வருமாறு காட்டலாம் ! :-
ஈம் + ஞாற்சி = ஈமு ஞாற்சி(உ- சாரியை )
கம் + ஞாற்சி = கம்மு ஞாற்சி (உ- சாரியை )
உரும் + ஞாற்சி = உருமு ஞாற்சி (உ- சரியை)
ஈம் + நீட்சி = ஈமு நீட்சி (உ- சாரியை)
கம் + நீட்சி = கம்மு நீட்சி (உ- சாரியை)
உரும் + நீட்சி = உருமு நீட்சி (உ - சாரியை)
ஈம் + வலிமை = ஈமு வலிமை (உ- சாரியை)
கம் + வலிமை = கம்மு வலிமை (உ- சாரியை)
உரும் + வலிமை = உருமு வலிமை ( உ- சாரியை)
- இவ் வொன்பதும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
மேலே வந்த மூன்று பெயர்களின் பொருள்தான் என்ன ?
ஈம்- சுடுகாடு .
கம் - ‘கம்மியர்’ எனப்படும் விசுவகர்மர்களின் தொழில்களைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்.
உரும்- இடி .
இவற்றில் , ‘ஈம்’ என்பது அருஞ்சொல் போலத் தோன்றும் ! ஆனால் , இது நமக்குப் பழக்கமான சொல்தான் !
‘ஈமச் சடங்கு’ – சொல்கிறோ மல்லவா? இதில் வரும் ‘ஈம்’தான் !
விசுவகர்மர்கள் சிலை செய்தாலும் , நகை செய்தாலும் , மரவேலை செய்தாலும் வெட்டிக் குறைக்கும் பணிதான் அவர்களின் முதற் பணி ! ‘கம்மி ரேட்டுக்கு வாங்கினேன்’ – சொல்கிறோ மல்லவா? கம்மி – குறைந்த .
ஆகவே , ‘கம்’ என்ற அடி நமக்குப் பழக்கமான அடி (Stem) அல்லவா?
ஈம், கம், உரும் – ஆகிய பெயர்களை இளம்பூரணர் குறிக்குப்போது , ‘பொருட் பெயர்கள்’ என்ற ஒரு கலைச் சொல்லால் (Technical term) அவற்றைக் குறிக்கிறார் !
பொருட் பெயர் என்றால் என்ன ?
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர் !
ஒரு பொருளைக் குறிக்கும் பெயரும் பொருட் பெயர்தான் ; ஒரு பொருளின் அடியாகப் பிறக்கும் பெயரும் பொருட் பெயர்தான் !
மாங்காய் – ஒரு பொருளைக் குறிப்பது ; பொருட் பெயர் .
பொன்னன் – ‘பொன்’ என்ற பெயர் அடியாகப் பிறந்த பெயர் ; பொருட் பெயர்.
‘மாங்காய் ’ – ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட் பெயரென்று பார்த்தோம் ! அதுவும் பொருட் பெயர்தான் , ‘தோப்பு’ என்றாலும் அதுவும் பொருட் பெயர்தான் ! இதனால்தான் சுடுகாட்டைக் குறிக்கும் ‘ஈம்’ பொருட் பெயரானது !
தொழிற் பெயரிலிருந்து வேறுபடுத்தவே ‘பொருட் பெயர்’ என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தினார் இளம்பூரணர் !
ஈம், கம், உரும் – இந்த உதாரணங்களைத்தான் பொருட் பெயருக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேறு சொற்களை எடுத்துக்கொள்ளக் கூடாதா?
நிலம் - இஃது ஒரு பொருட் பெயர்தான்; இதனை சோதித்துப் பார்ப்போமே!
நிலம் + கடுமை = நிலக் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலம் + கடுமை = நிலமுக் கடுமை ×
பார்த்தீர்களா? வேற்றுமைப் புணர்ச்சியில் ,உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !
அல்வழியில் சோதிப்போமே !
நிலம் + நீண்டது = நில நீண்டது√ (அல்வழிப் புணர்ச்சி)
நிலம் + நீண்டது = நிலமு நீண்டது ×
இங்கும் உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !
தொழிற் பெயர்களைப்போன்றே சில பொருட் பெயர்களும் உகரச் சாரியை பெறும் என்ற தொல்காப்பியர் விதிக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டுகளைத்தான் இளம்பூரணர் தந்துள்ளார் என்பது நமது மொழிச் சோதனைச் சாலையில் (Language lab) தெளிவாகிவிட்டதல்லவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (76)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்றுச் சொற்களில் வரும் ஈற்று மகரம் அரை மாத்திரை கொண்டது !
கலம் – இதில் ‘ம்’க்கு மாத்திரை - ½
ஆனால், மகர இறுதிச் சொற்களின் முன்னே ‘வ’வை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால் , அப்போது , மகர மாத்திரை அரையிலிருந்து கால் ஆகும் ! இதற்கு மகரக் குறுக்கம் (Shortening of ‘m’) என்று பெயர் !
இதற்கு விதி ! :-
“வகார மிசையு மகாரம் குறுகும்” (புள்ளி மயங்கியல் 35)
இளம்பூரணர் , இதற்கு உரை எழுதும்போது தொல்காப்பியர் ஏற்கனவே இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிய இடங்களை நமக்கு நினைப்பூட்டுகிறார் ! (இதுதான் இளம்பூரணர் உரைத்திறன் என்பது) :-
1. ‘நூன் மரபு’ப் பகுதியில் சூத்திரம் 13
2. ‘மொழி மரபு’ப் பகுதியில் சூத்திரம் 19
1. நூன் மரபுச் சூத்திரம் 13 –
“அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிட னருகுந் தெரியுங் காலை”
அஃதாவது , வேறு ஓர் ஓசையுடன் இணைந்து ‘ம்’வரும்போது , ‘ம்’மின் அரை மாத்திரை ஒலி அளபு , கால் மாத்திரை அளபாகக் குறைந்து ஒலிக்கும் !
இதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் , ‘போன்ம்’ என்ற சொல்லைக் காட்டுகிறார் !
இதில் , ஈற்று ‘ம்’க்கு மாத்திரை ¼ ஆகும் ! இதுவே மகரக் குறுக்கம் என்பது !
2. மொழி மரபுச் சூத்திரம் 19 –
“ னகார முன்னர் மகாரங் குறுகும்”
இதற்கும் எடுத்துக்காட்டாக இளம்பூரணர் ‘போன்ம்’ என்ற சொல்லையே காட்டுகிறார் ! இங்கும் , மேலே கூறியபடி , ‘ம்’மின் மாத்திரை ¼தான் !
இந்த இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிவிட்ட பிறகும் , மகர ஈற்றுச் சொற்களைப் பேசும் புள்ளி மயங்கியலிலும் , நாம் தொடக்கத்தில் காட்டியபடி , மகரக் குறுக்கம் பேசுகிறார் தொல்காப்பியர் !
இவ்வாறு , ஓரிடத்தில் கூறிய செய்தியைத் திடீரென்று இன்னோர் இடத்தில் இணைத்துப் பேசுவதைத்தான் இளம்பூரணர் , ‘பருந்து விழுக்காடாய்’ என்றார் !
பருந்து வானில் எங்கோ தூரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ! திடீரென்று தரையில் பாய்ந்து ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடும் !
இதுதான் பருந்து விழுக்காடு !
தொல்காப்பியரின் செய்கையை இதனோடு ஒப்பிட்டு இரசியுங்கள் !
உரைநடைதான் எழுதுகிறார் தொல்காப்பியர் ! ஆனால் , அதனைத் தெளிவாக்க எப்படிப்பட்ட அருமையான – சுவையான- உவமையைத் (Simile) தருகிறார் பார்த்தீர்களா?
‘நிலம் வலிது’ – என்ற இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் போல மேலும் சில மகரக் குறுக்க எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம் ! :-
கயம் வந்தது
படம் வரைந்தான்
சூடம் வழங்கினான்
பட்டம் வலிது
‘ம்’ என்பது மூக்கொலி (Nasal) ஆகும் !
‘வ’ என்பது பல்லிதழ் ஒலி (Labio dental) ஆகும்!
இந்த இரண்டும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, திணறல் ஏற்படுகிறது ; இதனால் , ஒன்று பணிந்துபோகவேண்டியுள்ளது ! இதுதான் மகரக் குறுக்கத்தின் இரகசியம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்றுச் சொற்களில் வரும் ஈற்று மகரம் அரை மாத்திரை கொண்டது !
கலம் – இதில் ‘ம்’க்கு மாத்திரை - ½
ஆனால், மகர இறுதிச் சொற்களின் முன்னே ‘வ’வை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால் , அப்போது , மகர மாத்திரை அரையிலிருந்து கால் ஆகும் ! இதற்கு மகரக் குறுக்கம் (Shortening of ‘m’) என்று பெயர் !
இதற்கு விதி ! :-
“வகார மிசையு மகாரம் குறுகும்” (புள்ளி மயங்கியல் 35)
இளம்பூரணர் , இதற்கு உரை எழுதும்போது தொல்காப்பியர் ஏற்கனவே இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிய இடங்களை நமக்கு நினைப்பூட்டுகிறார் ! (இதுதான் இளம்பூரணர் உரைத்திறன் என்பது) :-
1. ‘நூன் மரபு’ப் பகுதியில் சூத்திரம் 13
2. ‘மொழி மரபு’ப் பகுதியில் சூத்திரம் 19
1. நூன் மரபுச் சூத்திரம் 13 –
“அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிட னருகுந் தெரியுங் காலை”
அஃதாவது , வேறு ஓர் ஓசையுடன் இணைந்து ‘ம்’வரும்போது , ‘ம்’மின் அரை மாத்திரை ஒலி அளபு , கால் மாத்திரை அளபாகக் குறைந்து ஒலிக்கும் !
இதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் , ‘போன்ம்’ என்ற சொல்லைக் காட்டுகிறார் !
இதில் , ஈற்று ‘ம்’க்கு மாத்திரை ¼ ஆகும் ! இதுவே மகரக் குறுக்கம் என்பது !
2. மொழி மரபுச் சூத்திரம் 19 –
“ னகார முன்னர் மகாரங் குறுகும்”
இதற்கும் எடுத்துக்காட்டாக இளம்பூரணர் ‘போன்ம்’ என்ற சொல்லையே காட்டுகிறார் ! இங்கும் , மேலே கூறியபடி , ‘ம்’மின் மாத்திரை ¼தான் !
இந்த இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிவிட்ட பிறகும் , மகர ஈற்றுச் சொற்களைப் பேசும் புள்ளி மயங்கியலிலும் , நாம் தொடக்கத்தில் காட்டியபடி , மகரக் குறுக்கம் பேசுகிறார் தொல்காப்பியர் !
இவ்வாறு , ஓரிடத்தில் கூறிய செய்தியைத் திடீரென்று இன்னோர் இடத்தில் இணைத்துப் பேசுவதைத்தான் இளம்பூரணர் , ‘பருந்து விழுக்காடாய்’ என்றார் !
பருந்து வானில் எங்கோ தூரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ! திடீரென்று தரையில் பாய்ந்து ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடும் !
இதுதான் பருந்து விழுக்காடு !
தொல்காப்பியரின் செய்கையை இதனோடு ஒப்பிட்டு இரசியுங்கள் !
உரைநடைதான் எழுதுகிறார் தொல்காப்பியர் ! ஆனால் , அதனைத் தெளிவாக்க எப்படிப்பட்ட அருமையான – சுவையான- உவமையைத் (Simile) தருகிறார் பார்த்தீர்களா?
‘நிலம் வலிது’ – என்ற இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் போல மேலும் சில மகரக் குறுக்க எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம் ! :-
கயம் வந்தது
படம் வரைந்தான்
சூடம் வழங்கினான்
பட்டம் வலிது
‘ம்’ என்பது மூக்கொலி (Nasal) ஆகும் !
‘வ’ என்பது பல்லிதழ் ஒலி (Labio dental) ஆகும்!
இந்த இரண்டும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, திணறல் ஏற்படுகிறது ; இதனால் , ஒன்று பணிந்துபோகவேண்டியுள்ளது ! இதுதான் மகரக் குறுக்கத்தின் இரகசியம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (77)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்றுப் புணர்ச்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம் !
மகர ஈற்றில் முடியும் நாட்பெயர்ச் சொல் வேற்றுமையில் எப்படிப் புணரும் என்று பேசுகிறார் தொல்காப்பியர் ! :-
“நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்து மான்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர்” (புள்ளி மயங்கியல் 36)
‘மகம்’ – இது ‘ம்’ ஈற்று நாட்பெயர்க் கிளவி ! ‘மக நட்சத்திரம்’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள் !
இஃது எப்படி வேற்றுமைப் பொருளில் புணருமாம் ?
மகம் நட்சத்திரத்தன்று ஒரு பொருளை வாங்கினால் , அப்போது , ‘மகத்தாற் கொண்டான்’ எனலாம் !
மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஆன் + கொண்டான்
= மகத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.
இது போன்றே ,
மகம் + சென்றான் = மகம் + அத்து + ஆன் + சென்றான்
= மகத்தாற் சென்றான்
மகம் + தந்தான் = மகம் + அத்து + ஆன் + தந்தான்
= மகத்தாற் றந்தான்
மகம் + போயினான் = மகம் + அத்து + ஆன் + போயினான்
= மகத்தாற் போயினான்
என வரும்!
இங்கு ‘ஆன்’ சாரியை வந்தது போன்றே , ‘ஞான்று’ என்ற ஒரு சாரியையும் வரும் என்கிறார் இளம்பூரணர் ! :-
மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஞான்று +கொண்டான்
= மகத்து ஞான்று கொண்டான் .
அத்து – சாரியை; ஞான்று -சாரியை.
இது போன்றே ,
மகம் + சென்றான் = மகம் + அத்து + ஞான்று +சென்றான்
= மகத்து ஞான்று சென்றான் .
மகம் + தந்தான் = மகம் + அத்து + ஞான்று + தந்தான்
= மகத்து ஞான்று தந்தான் .
மகம் + போயினான் = மகம் + அத்து + ஞான்று + போயினான்
= மகத்து ஞான்று போயினான் .
என வரும்!
‘ஞான்று’ எனும் சாரியையைத் தொல்காப்பியர் கூறவில்லை ! ‘அத்து’, ‘ஆன்’ ஆகிய இரு சாரியைகளை மட்டுமே அவர் கூறினார் ! இளம்பூரணராகச் சேர்த்துக் கொண்டதுதான் ‘ஞான்று’ !
தொல்காப்பியர் கூறாத வேறு ஒரு முடிபையும் இளம்பூரணர் உரைக்கிறார் !
அஃதாவது , “நாட் பெயர்தான் , வேற்றுமையில், இப்படிப் புணரும் என எண்ணவேண்டாம் ! சில பொருட் பெயர்களும் அதே முறையில் புணரும் ” என்கிறார் இளம்பூரணர்!
அவர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் !:-
மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.
மரம் + சென்றான் = மரம் + அத்து + ஆன் +சென்றான்
= மகத்தாற் சென்றான் .
மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்
மரம் + போயினான் = மரம் + அத்து + ஆன் + போயினான்
= மரத்தாற் போயினான்
- இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
மரம் – பொருட் பெயர்;அஃதாவது பொருளின் பெயர் .
மரத்தாற் கொண்டான் - மரத்தினால் கொண்டான் ; இதில் வேற்றுமைப் பொருள் இருப்பதை நோக்கலாம் .
மேல் தொல்காப்பிய நூற்பாவில், ‘முந்து கிளந்தன்ன’ என்பதை நோக்கலாம் !
‘முன்னே சொன்னது போல ’ என்பது இதன் பொருள் !
முன்னே எங்கே சொன்னார் ?
உயிர் மயங்கியலில் சொன்னார் !
உயிர் மயங்கியலில்,
“திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” (உயிர் மயங்கியல் 84)
என்றார் !
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் :-
சித்திரை + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் .
இக்கு – சாரியை .
கேட்டை + கொண்டான் = கேட்டையாற் கொண்டான் .
ஆன் – சாரியை .
- இவ்விரண்டும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
ஒரு நூற்பாவை எழுதும்போது , அதற்கு முன் கூறிய ஒரு நூற்பாவோடு இணைத்து உரைத்தால் அதனை ‘மாட்டேறு’ என்பர் !
நாம் பார்த்த புள்ளி மயங்கியல் சூத்திரம் 36க்கு மாட்டேற்றுச் சூத்திரம் 84 ஆகும் ! சூத்திரம் 84இல் நாளின் பெயர்களும் , சாரியைகளும் வந்துள்ளதை நோக்கலாம் !
மாட்டி , ஏற்றிக் கூறுவதால் , அது மாட்டேறு ! மாட்டின் மீது ஏறுவதல்ல !
இத்துடன் புள்ளி மயங்கியலில் தொல்காப்பியர் கூறிய மகர ஈற்றுப் புணர்ச்சிகள் முடிவடைந்துள்ளன !
அடுத்ததாக எந்த ஈற்றுப் புணர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார் எனப் பார்ப்போம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (78)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
மகர ஈற்றுச் சொற்களை அடுத்துத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்வது , னகர ஈற்றுச் சொற்களை !
பல னகர ஈற்றுச் சொற்கள் புணருமாற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் !
பார்த்தவை போக மீதியை இப்போது காணலாம் !
“மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல்50)
மின், பின், பன்,கன் – இந்த நான்கு தொழிற்பெயர்களுடன் வேற்றுமையிலும் அல்வழியிலும் எப்படிச் சொற்களோடு புணரும் என்று இதில் கூறுகிறார் !
அஃதாவது , வேற்றுமையில், கீழ்வருமாறு இவை புணரும் :-
மின்+ கடுமை = மின்னுக் கடுமை (உ- சாரியை;க்-சந்தி)
பின் + கடுமை = பின்னுக் கடுமை (”)
பன் + கடுமை = பன்னுக் கடுமை (”)
கன் + கடுமை = கன்னுக் கடுமை (”)
மின்+ சிறுமை = மின்னுச் சிறுமை (உ- சாரியை;ச்-சந்தி)
பின் + சிறுமை = பின்னுச் சிறுமை (”)
பன் + சிறுமை = பன்னுச் சிறுமை (”)
கன் + சிறுமை = கன்னுச் சிறுமை (”)
மின்+ தீமை = மின்னுத் தீமை (உ- சாரியை;த்-சந்தி)
பின் + தீமை = பின்னுத் தீமை (”)
பன் + தீமை = பன்னுத் தீமை (”)
கன் + தீமை = கன்னுத் தீமை (”)
மின்+பெருமை = மின்னுப் பெருமை (உ- சாரியை;ப்-சந்தி)
பின் + பெருமை = பின்னுப் பெருமை (”)
பன் + பெருமை = பன்னுப் பெருமை (”)
கன் + பெருமை = கன்னுப் பெருமை (”)
வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்கே மேலை எடுத்துக்காட்டுகள் பொருந்தும் !
மெல்லெழுத்து, இடையெழுத்துகள் வந்தால் ?
கீழே காண்போம் !: -
மின்+ஞாற்சி = மின்னு ஞாற்சி (உ- சாரியை)
பின் + ஞாற்சி= பின்னு ஞாற்சி (”)
பன் + ஞாற்சி = பன்னு ஞாற்சி (”)
கன் + ஞாற்சி = கன்னு ஞாற்சி (”)
மின்+நீட்சி = மின்னு நீட்சி (உ- சாரியை)
பின் + நீட்சி = பின்னு நீட்சி (”)
பன் + நீட்சி = பன்னு நீட்சி (”)
கன் + நீட்சி = கன்னு நீட்சி (”)
மின்+மாட்சி = மின்னு மாட்சி (உ- சாரியை)
பின் + மாட்சி = பின்னு மாட்சி (”)
பன் + மாட்சி = பன்னு மாட்சி (”)
கன் + மாட்சி = கன்னு மாட்சி (”)
மின்+வலிமை = மின்னு வலிமை (உ- சாரியை)
பின் + வலிமை = பின்னு வலிமை (”)
பன் + வலிமை = பன்னு வலிமை (”)
கன் + வலிமை = கன்னு வலிமை (”)
மின்+யாப்பு = மின்னு யாப்பு (உ- சாரியை)
பின் + யாப்பு = பின்னு யாப்பு (”)
பன் + யாப்பு = பன்னு யாப்பு (”)
கன் + யாப்பு = கன்னு யாப்பு (”)
- இதுவரை பார்த்த 40 புணர்ச்சிகளும் , வேற்றுமைப் புணர்ச்சிகளே !
அல்வழியில் ?
வருமாறு அமையும் !:-
மின்+கடிது= மின்னுக் கடிது (உ- சாரியை; க்- சந்தி)
பின் + கடிது= பின்னுக் கடிது (”)
பன் + கடிது= பன்னுக் கடிது (”)
கன் + கடிது= கன்னுக் கடிது (”)
மின்+சிறிது= மின்னுச் சிறிது (உ- சாரியை; ச்- சந்தி)
பின் + சிறிது= பின்னுச் சிறிது (”)
பன் + சிறிது= பன்னுச் சிறிது (”)
கன் + சிறிது= கன்னுச் சிறிது (”)
மின்+தீது= மின்னுத் தீது (உ- சாரியை; த்- சந்தி)
பின் + தீது= பின்னுத் தீது (”)
பன் + தீது= பன்னுத் தீது (”)
கன் + தீது= கன்னுத் தீது (”)
மின்+பெரிது= மின்னுப் பெரிது (உ- சாரியை; ப்- சந்தி)
பின் + பெரிது = பின்னுப் பெரிது (”)
பன் + பெரிது = பன்னுப் பெரிது (”)
கன் + பெரிது = கன்னுப் பெரிது (”)
மேலைப் 16 இடங்களிலும் வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே வந்து புணர்ந்தன !
இனி , மெல்லின (மென் கணம்) , இடையின (இடைக் கணம்) எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும் நிலையைக் காணலாம் !:-
மின்+ஞான்றது= மின்னு ஞான்றது (உ- சாரியை)
பின் + ஞான்றது=பின்னு ஞான்றது (”)
பன் + ஞான்றது= பன்னு ஞான்றது (”)
கன் + ஞான்றது= கன்னு ஞான்றது (”)
மின்+நீண்டது= மின்னு நீண்டது (உ- சாரியை)
பின் + நீண்டது= பின்னு நீண்டது (”)
பன் + நீண்டது= பன்னு நீண்டது (”)
கன் + நீண்டது= கன்னு நீண்டது (”)
மின்+மாண்டது= மின்னு மாண்டது (உ- சாரியை)
பின் + மாண்டது= பின்னு மாண்டது (”)
பன் + மாண்டது= பன்னு மாண்டது (”)
கன் + மாண்டது= கன்னு மாண்டது (”)
மின்+வலிது= மின்னு வலிது (உ- சாரியை)
பின் + வலிது= பின்னு வலிது (”)
பன் + வலிது= பன்னு வலிது (”)
கன் + வலிது= கன்னு வலிது (”)
மின்+யாது= மின்னு யாது (உ- சாரியை)
பின் + யாது= பின்னு யாது (”)
பன் + யாது= பன்னு யாது (”)
கன் + யாது= கன்னு யாது (”)
- இதுவரை காட்டிய உதாரணங்கள் இளம்பூரணர் சுருக்கமாகக் குறித்தவை !
இவைதாம் தொல்காப்பியர் குறித்தவை !
கடைசியில் இளம்பூரணர் உள்ளே நுழைகிறார் !
நுழைந்து , “தொழிற் பெயருக்கு மட்டுமல்ல ! பொருட் பெயருக்கும் இந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !” என்று ஒரு விதியைத் தூக்கிப் போடுகிறார் ! ஆனால் எடுத்துக்காட்டு எதனையும் தரவில்லை !
“மின், பின், பன்,கன் ஆகிய நான்குமே தொழிற் பெயர்கள்தாம் ! இந்த நான்கையும் பொருட் பெயர்களாகவும் கொள்ளலாம் !
ஏனெனில் , “மின் என்பது ஒரு தொழில் ! அப்போது அது தொழிற் பெயர்! அதே ‘மின்’என்பது ஒரு பொருளின் பெயர் ! அப்போது அது பொருட் பெயர் !
மின் ,பின் , பன், கன் ஆகிய நான்குமே இப்படித்தான் தொழிற் பெயர்களாகவும் பொருட் பெயர்களாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அவருக்கே உரிய சுருக்க உரைநடையில் தருகிறார் !
அஃதாவது,
மின் – முதனிலைத் தொழிற் பெயர் (மின்னுதலைக் குறிக்கும்)
மின் – பொருட் பெயர் (மின்னலைக் குறிக்கும்)
பின் _ தொழிற்பெயர் (பின்னும் தொழிலைக் குறிக்கும்)
பின் – பொருட் பெயர் (பின்னிய கூந்தலைக் குறிக்கும்)
பன் – தொழிற் பெயர் (சொல்லுதலைக் குறிக்கும்)
பன் – பொருட் பெயர் ( ‘சொல்’ என்ற பொருளில் வரும்)
கன் – தொழிற் பெயர் (கன்னார் தொழிலைக் குறிக்கும்)
கன் – பொருட் பெயர் (கன்னாரைக் குறிக்கும்)
(கன்னார் – உலோகப் பாத்திரங்கள் செய்யும் விசுவகர்மர்கள்)
இந்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றிக் கண் , மண், புண் முதலிய சொற்களுக்கும் புணர்ச்சிகள் அமைக்கலாமா ?
முடியாது !
னகர ஈற்றுச் சொற்களுக்கு உரிய இலக்கணம் ணகர ஈற்றுச் சொற்களுக்குப் பொருந்தாது!
தொல்காப்பியரின் ‘மின்’ முதலாய சொற்களைப் பார்த்தாலே தொல்காப்பியத்தின் பழமையை விளங்கிக் கொள்ளலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (79)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘கன்னார்’ எனும் விசுவகர்மர்களையும் அவர்தம் தொழிலையும் குறிக்கும் ‘கன்’ எனும் சொற்புணர்ச்சிகளை முன் கட்டுரையில் பார்த்தோம் !
அதே ‘கன்’ எனும் சொல்லுக்கு ஒரு விதி விலக்கைத் தொல்காப்பியர் தொடர்ந்து கூறுகிறார் !:-
“வேற்றுமை யாயின் ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும் கன்னென் கிளவி ” (புள்ளி மயங்கியல் 51)
‘எகின்’ எனும் மரப்பெயர் , அகரச் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று ,
எகின் + கால் = எகினக்கால்
என்று புணரும் என இதே புள்ளிமயங்கியலில் (நூற்பா 42) , முன்பு காட்டினார் தொல்காப்பியர்!
அதை ஏன் இங்கு நினைவுபடுத்துகிறார் ?
ஏனெனில் , மனப்பாடம் செய்பவர்களுக்கு ஏதுவாக !
அந்தக் காலத்தில் தொல்காப்பியம் படித்தவர் என்றால் 1610 நூற்பாக்களையும் மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர் என்று பொருள் !
“இது உண்மையா ?” என்று யாரும் புருவத்தை நெளிக்க வேண்டாம் !
தி.ம. நடராசன் ஆச்சாரி என்று ஒருவர் சென்னையில் இருந்தார் ! அவரை நான் சந்தித்திருக்கிறேன்! அவர் சிலப்பதிகாரம் முழுவதையும் , முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை, மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் !
1980களிலேயே இந்த நிலை இருந்தது என்றால் , கி.மு.1000த்தில் ? நிச்சயமாகத் தொல்காப்பியத்தை மாணவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருப்பர் என்று உறுதியாக் கூறிவிடலாம் !
‘கன்’ எனும் சொல் , வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் , அகரச் சாரியையும் , வல்லெழுத்தையும் பெற்றுப் புணரும் என்பதே மேல் நூற்பாவின்(புள்ளி மயங்கியல் 51) பொருள் !
இளம்பூரணர் தந்த உதாரணங்களை நாம் வருமாறு பரப்பிக் காணலாம் !:-
கன் + குடம் = கன் + அ+க்+ குடம்= கன்னக் குடம் (அ- சாரியை; க்-சந்தி)
கன் + சாடி = கன் + அ+ ச்+ சாடி =கன்னச் சாடி (அ- சாரியை ; ச்- சந்தி)
கன் + தூதை = கன் + அ+த்+தூதை=கன்னத் தூதை (அ- சாரியை ; த்- சந்தி) கன் +பானை=கன்+அ+ப்+பானை=கன்னப் பானை (அ-சாரியை;ப்-சந்தி)
இதே ‘கன்’ , இதே வேற்றுமைப் புணர்ச்சியில் , மென்கணத்தோடும் (மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடும் ), இடைக்கணத்தோடும் (இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடும் ) புணரும்போது வருமாறு புணரும் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளால் அறிகிறோம் ! :-
கன் + ஞாற்சி = கன் + அ+ ஞாற்சி = கன்ன ஞாற்சி (அ- சாரியை ; சந்தி வராது)
கன் + நீட்சி = கன் + அ+நீட்சி=கன்ன நீட்சி (”)
கன்+மாட்சி= கன் +அ+மாட்சி=கன்ன மாட்சி(”)
கன்+வலிமை = கன் +அ+ வலிமை =கன்ன வலிமை (”)
சாடி , தூதை,, பானை ஆகிய சொற்களோடு புணர்ந்த புணர்ச்சி- பொருட் புணர்ச்சி !
ஞாற்சி , நீட்சி ,மாட்சி, வலிமை ஆகிய சொற்களோடு புணர்ந்த புணர்ச்சி – குணவேற்றுமைப் புணர்ச்சி !
வேறுபாடு யாது ?
‘சாடி’ என்பது ஒரு பொருள் ! (இன்று, ‘ஜாடி’!) ; அதனால் அது பொருட் புணர்ச்சி !
‘மாட்சி’ என்பது ஒரு குணம் (பண்பு )!; அதனால் அது குண வேற்றுமைப் புணர்ச்சி !
குணவேற்றுமைப் புணர்ச்சியிலும் , அரிதாக , அகரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தியும் வரும் என்று காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
கன் + கடுமை = கன் +அ+ க்+கடுமை= கன்னக் கடுமை
மேலே ‘கன்’ தொடர்பாகக் கண்ட புணர்ச்சிகள் யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகள்!
இனி, அல்வழிக்கண் எவ்வாறு வரும் என்று இளம்பூரணர் காட்டுகிறார் !:-
கன் +கடிது= கன்+அ+ங்+கடிது=கன்னங் கடிது(அ-சாரியை;ங்-சந்தி)
கன்+சிறிது= கன்+அ+ஞ்+சிறிது=கன்னஞ் சிறிது(அ-சாரியை;ஞ்-சந்தி)
கன்+தீது= கன்+அ+ந்+தீது=கன்னந் தீது (அ-சாரியை;ந்-சந்தி)
கன்+பெரிது= கன்+அ+ம்+பெரிது=கன்னம்பெரிது (அ-சாரியை;ம்-சந்தி)
இவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் புணர்ந்ததற்குச் சான்றுகள் !
இனி, இதே ‘கன்’ ,இதே அல்வழியில் , மெல், இடை எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணருமாறு !:-
கன்+ ஞான்றது = கன்ன ஞான்றது (அ-சாரியை)
கன்+நீண்டது= கன்ன நீண்டது(அ- சாரியை)
கன்+மாண்டது = கன்ன மாண்டது (அ-சாரியை)
கன் +யாது= கன்ன யாது (அ-சாரியை)
கன்+வலிது= கன்ன வலிது (அ-சாரியை)
இவ் வைந்தில் , முதல் மூன்றும் மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுக்கு உதாரணங்கள் !
‘கன்’ என்பது வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் , வேற்றுமையில் , குணவேற்றுமைப் புணர்ச்சி புணர்ந்தபோது , ஆகாரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் மேலே கண்டோம் ( ‘கன்னக் கடுமை’)! இதற்கும் ஒரு விதி விலக்கைக் காட்டுகிறார் இளம்பூரணர் !
அஃதாவது, “அகரச் சாரியையுடன் , சிறுபான்மை , மெல்லெழுத்துச் சந்தி வரலும் உண்டு ! ” என்கிறார் அவர் !:-
கன்+கடுமை = கன்னக் கடுமை √(வல்லெழுத்துச் சந்தி)
கன்+கடுமை=கன்னங் கடுமை √(மெல்லெழுத்துச் சந்தி)
கன்+ தீமை = கன்னந் தீமை √ (மெல்லெழுத்துச் சந்தி) கன்+பெருமை= கன்னம் பெருமை√ (மெல்லெழுத்துச் சந்தி)
கன்+சிறுமை = கன்னஞ் சிறுமை √ (மெல்லெழுத்துச் சந்தி)
அப்பாடா !
இஃது என்ன தொல்காப்பியர் ‘கன்’னா , ஆயுதக் ‘கன்’(gun)னா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த பதிவில் வரும் சொற்களை வார்க்கும், அழைக்கும் இலக்கண விதிகளை விவரமாக விளக்கமாக எடுத்து வைக்கும் உங்கள் தொடர் பதிவு நிச்சயம் தமிழை பற்றி ஆழமாக நாங்கள் தெரிந்து கொள்ள பயன்படும் பாடம்.
தொடருங்கள்.
தொடர்கிறோம்
தொடருங்கள்.
தொடர்கிறோம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (80)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘சாத்தனுக்குத் தந்தை’ என்ற பொருளில் ,
‘சாத்தன் + தந்தை ’ என்பதை எப்படிப் புணர்ப்பீர்கள் ?
சாத்தன் + தந்தை = சாத்தன் றந்தை
என்போம் !
இதற்கு விதி யாது ?
தொகை மரபு நூற்பா 7இல் உள்ளது !
அவ் விதி !:-
“லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தநவெ னவரிற் றனவா கும்மே ” (தொகை மரபு 7)
ஆனால், தொல்காப்பியர் காலத்திற்கு முன் பின்னாக இதே சொற்கள் வேறு விதமாகவும் புணர்ந்துள ! :-
சாத்தன் + தந்தை = சாத்தந்தை
கொற்றன் + தந்தை = கொற்றந்தை
‘சாத்தந்தை’, ‘கொற்றந்தை’ – இவற்றுக்கு விதி எங்கே உள்ளது ?
இங்கே !:-
“ இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகர நிலையும்
மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே ” (புள்ளி மயங்கியல் 52)
‘இயற்பெயர்’ என்றால் , பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயர் ! ‘சுரேஷ்’, ‘ரீத்து’, ‘ஹர்ஷிணி’ எல்லாம் இயற்பெயர்களே ! (இவை தமிழ்ப்பெயர்களா என்பது வேறு செய்தி !).
மேல் நூற்பாப்படி,
‘முதற்கண் மெய்கெட அகர நிலையும்’-
சாத்தன் + தந்தை = சாத்தன் + அந்தை (‘தந்தை ’ என்பதன் முதல் ‘த்’
கெட்டது ; ‘த’வின் ‘அ’ நிலைத்தது)
‘மெய்யொழித்து அன் கெடும் ’ –
சாத்தன் + அந்தை = சாத்+ த்+ அன்+அந்தை = சாத் + த்+ அந்தை ( ‘தன்’-இல் ‘த்’ தனித்து விடப்பட்டது; ‘அன்’ கெட்டது)
சாத் + த் + அந்தை = சாத்தந்தை
‘சாத்தன் றந்தை’ என்றே எழுதிவிட்டுப் போகவேண்டியதுதானே ? ‘சாத்தந்தைக்கு’ என்ன தேவை ஏற்பட்டது ? ஏன் குழப்ப வேண்டும் ?
நல்ல கேள்வி !
குழப்பத்தைத் தொல்காப்பியர் ஏற்படுத்திவிட்டதாகப் பலர் நினைக்கின்றனர் !
தவறு !
தொல்காப்பியர் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை !
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ‘சாத்தன் றந்தை’ என்றும் ‘சாத்தந்தை’ என்றும் எழுதும் இரு வகைகள் இருந்தன !
தொல்காப்பியர், அவரது ஆசிரியரிடம் (அகத்தியர்தான் தொல்காப்பியரின் ஆசிரியர்) இலக்கணம் படிக்கும்போதே இரண்டுவகைப் புணர்ச்சிகளையும் படித்திருப்பார் ! அவர் படித்ததைத்தான் நம்மிடம் கூறுகிறார் ! அவ்வளவுதான் !
அஃதாவது , ‘இன்னாருக்குத் தந்தை இவர்’ என்று ஓலைச் சுவடிகளில் எழுதியபோது , ஒரு சுருக்கம் தேவைப்பட்டது !
சாத்தன் றந்தை – விரிவு
சாத்தந்தை – சுருக்கம்
விரிவைச் சுருக்கமாகக் கூறும் மரபு பழங்காலத்தில்தான் இருந்தது என எண்ணவேண்டாம் !
இன்றும் உண்டு !
செட்டி நாட்டில் (காரைக்குடி வட்டாரம்) ‘கண்ணப்பச் செட்டியார்’ என்று கூறமாட்டார்கள் ! ‘கண்ணப்பெட்டியார்’ என்றுதான் பேச்சில் கூறுவார்கள் ! “கண்ணப்பெட்டியார் வீட்டுக் கல்யாணத்தில போட்டாக பாரு அதுதான் சாப்பாடு !” என்று அப்பகுதியில் பேசிக்கொள்வார்கள்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
செட்டி நாட்டில் (காரைக்குடி வட்டாரம்) ‘கண்ணப்பச் செட்டியார்’ என்று கூறமாட்டார்கள் ! ‘கண்ணப்பெட்டியார்’ என்றுதான் பேச்சில் கூறுவார்கள்
அய்யா இது போல் விளையாட்டு [வினை (செயல்) + ஆடு(ஆட்டம்)] என்ற சொல்லும் உருவானதோ?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (81)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சரி !
‘சாத்தன் + தந்தை = சாத்தந்தை’ என்பதற்குத் தொல்காப்பிய விதியைப் பார்த்தோம் !
அப்படியானால் ,
ஆதன் + தந்தை = ஆத்தந்தை
என்று வருமா?
வராது !
தொல்காப்பியர் நம்மை ஒழுங்குபடுத்துகிறார் ! :-
“ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு
பெயரொற் ரகரந் துவரக் கெடுமே” (புள்ளி மயங்கியல் 53)
‘கூறிய இயல்பொடு’ – முன் புள்ளிமயங்கியல் 52இல் (பார்க்க- கட்டுரை எண்.80)கூறியபடி-
ஆதன் + தந்தை = ஆதன் + அந்தை ( த்- கெட்டது)
ஆதன் + அந்தை = ஆத் + அன் + அந்தை
= ஆத் + அந்தை (அன் - கெட்டது)
‘பெயர் ஒற்று அகரம் துவரக் கெடும்’ என்பதன்படி –
ஆத் + அந்தை = ஆந்தை ( ‘ஆத்’தில் ‘த்’ கெடும்; ‘அந்தை’யில் ‘அ’ கெடும்)
முடிவில் , ஆதன் + தந்தை = ஆந்தை !
இதே முறையில்,
பூதன் + தந்தை = பூந்தை !
இங்கே ஒரு விதி விலக்கு ! தருபவர் இளம்பூரணர் ! :-
ஆதன் + தந்தை = ஆந்தை √
ஆதன் + தந்தை = ஆதந்தை √
பூதன் + தந்தை = பூந்தை √
பூதன் + தந்தை = பூதந்தை √
இளம்பூரணரின் கருத்துப்படி ,
ஆதன் + தந்தை = ஆ + த் +அன் + தந்தை
= ஆ+ தந்தை (த் , அன் - கெட்டன)
= ஆதந்தை
இதே முறையில் , ‘அழான்’ , ‘புழான்’ (பழந் தமிழர்களின் இயற்பெயர்கள் (Proper names) இவை; தொல்காப்பியம் வெறும் இலக்கணக் கருவூலம் மட்டுமல்ல; ஒரு வரலாற்றுக் கருவூலமும்கூட என்பதற்கு இந்த இடம் சான்று !) என்பன ,
அழான் + தந்தை = அழாந்தை
புழான் +தந்தை = புழாந்தை
என வரும் என்கிறார் இளம்பூரணர் தமது உரையில்!
சரி !
‘சாத்தன்’ என்றில்லாமல் , புகழ் அடையுடன் ‘பெருஞ் சாத்தன்’என்று பெயர் இருந்தால் , அவருக்குத் ‘தந்தை ‘யை எப்படிச் சேர்ப்பது?
இதற்குத் தொல்காப்பிய விதி !:-
“சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்” (புள்ளி மயங்கியல் 54)
அஃதாவது ,
பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத்தன் றந்தை √
பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத் தந்தை ×
பெருங்கொற்றன் + தந்தை = பெருங்கொற்றன் றந்தை √
பெருங்கொற்றன் + தந்தை = பெருங்கொற்றந்தை ×
என வரும் !
இந் நேரத்தில், தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த விசுவகர்மரின் பெயர் ‘பெருந்தச்சன்’ என்று கல்வெட்டுகளில் (Inscriptions) அடையொடு வருவதைக் நினைக்கலாம்!
‘சாத்தனுக்குத் தந்தை ’ , ‘ஆதனுக்குத் தந்தை’ – தொடர்பான புணர்ச்சிகளைப் பார்த்தோம் !
‘சாத்தனுக்கு மகன்’ , ‘ஆதனுக்கு மகன்’ – இவை எப்படிப் புணரும் ?
சாத்தனுக்கு மகன் கொற்றன் ஆயின்,
சாத்தன் + கொற்றன் = சாத்தங் கொற்றன்
என ஆகுமாம் !
எப்படி ? அதற்கு விதி?
“அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியே
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை
மக்கண் முறைதொகூஉ மருங்கி னான” ! (புள்ளி மயங்கியல் 55)
‘அப் பெயர் மெய்யொழித்து அன் கெடு வழி’ –
சாத்தன் + கொற்றன் = சாத் + த் + அன் + கொற்றன்
= சாத் + த் + கொற்றன் ( ‘த்’ஐ நிற்கவிட்டு ,
‘அன்’ கெட்டது)
‘நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை’ –
சாத் + த் + கொற்றன் = சாத் +த் +அம் +கொற்றன்(அம் – சாரியை
சேர்ந்தது)
= சாத்தங் கொற்றன்
இதே முறையில்,
‘கொற்றனின் மகன் கொற்றன்’ (சில தமிழ்ப் பகுதிகளில் தந்தை பெயரையே மகனுக்கும் வைப்பர் !) என்பதை வருமாறு புணர்க்கலாம் !:-
கொற்றன் + கொற்றன் = கொற்றங் கொற்றன் (அம்-சாரியை)
‘சாத்தனின் மகன்’ , ‘கொற்றனின் மகன்’ என்பவற்றுக்குக் கூறிய புணர்ச்சிகளைப் போலவே, ‘சாத்தனின் குடி’ , ‘கொற்றனின் குடி’ என்பனவும் புணரும் என்று இளம்பூரணர் காட்டுகளால் அறிகிறோம் !
சாத்தன் + குடி = சாத்தங் குடி (அம்- சாரியை)
கொற்றன் + குடி = கொற்றங் குடி (”)
என வரும் !
‘குடி’ என முடியும் பல தமிழக இடப்பெயர்கள் (Place names ) உள்ளன! அவற்றை இந் நோக்கில் ஆயலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 12 of 84 • 1 ... 7 ... 11, 12, 13 ... 48 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 84
|
|