ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

3 posters

Go down

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Empty தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

Post by Powenraj Sat Jan 12, 2013 7:28 pm

இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை . இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி , வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும் . திரும்பிய இடமெல்லாம் , நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள் . ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள் ... மறுபுறம் , குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள் ... இவைகளுக்கு இடையே , மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள் ... உல்லங்கழிகள் , அதில் மிதந்து செல்லும் கட்டுமரங்கள் ... என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும் , கருத்தையும் கவர்கிறது குமரகம் . இதனால் தானோ என்னவோ , நேஷனல் ஜியோகிராபிக் குழுவை சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை , உலகின் பத்து அழகிய இடங்களில் ஒன்றாக கணித்திருக்கிறார் .
:-
கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி . மீ . தூரம் . அதுவே கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி . மீ . பயணம் தான் . சில நூற்றாண்டுகளுக்கு முன்பு , இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது . பிற்காலத்தில் இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள் . இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம் செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம் .
:-
குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி . இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம் . இதன் பரப்பளவு 205 சதுர மீட்டர் . பம்பா , மீனசில் , மணிமாலா . அச்சன்கோவில் , பெரியார் , மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி என்ற செய்தி மலைக்க வைக்கிறது . பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர் , அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது . இந்த கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம் . கால்வாயில் கரைகளில் குமரகத்தை சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள் . வீடுகளில் இருந்து படி இறங்கினாலே தண்ணீர் தான் . வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது .
:-
மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில் ... மழைக்காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம் . இந்த ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில் , பல நாடுகளில் இருந்து வந்த பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன . இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது . குமரகத்தில் வாழ்பவர்கள் , ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள் . ஒவ்வொரு வீட்டில் முன்னும் கார் , ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர் . இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும் . குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது .
:-
அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன . இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை . சுவை நிறைந்தவை . இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள் . மாலை நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து , படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய அஸ்தமானத்தை காட்டுகிறார்கள் . சிலுசிலு காற்று முகத்தில் அறைய ... அந்த மாலை நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை பார்க்கும் பொழுது , இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது . குறிப்பாக திரைப்படங்களில் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் இங்கு அதிகம் படம்பிடிக்க படுகின்றன.
:-
படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை . இங்குள்ள ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில் தங்கினாலே போதும் . பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா வசதிகளுகளும் இருக்கின்றன. இயற்கை விரும்பிகளுக்கு .... குறிப்பாக தேனிலவு தம்பதியர்களுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கும் சொர்க்க பூமி இந்த குமரகம் .
:-
நன்றி விஸ்வரூபம் முகநூல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Empty Re: தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

Post by Muthumohamed Sun Jan 13, 2013 12:40 am

சூப்பருங்க நன்றி அன்பு மலர்



தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Uதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Tதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Hதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Uதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Oதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Hதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Aதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Mதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Eதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Empty Re: தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

Post by T.N.Balasubramanian Sun Jan 13, 2013 6:38 am

முற்றிலும் உண்மை.இயற்கையின் அழகை குறைந்த செலவில் அனுபவிக்க இதை விட சிறந்த இடம் இருக்காது. வெனிசில் பச்சை மரம் செடி கொடிகள் காணமுடியாது. ஆனால் குமாரகாமில் / வேம்பநாட்டில் அப்படி இல்லை. இருபுறமும் பசுமை.
தனி படகில்2 நாள் / 1 இரவு என்று செல்லும் போது, மீன் பிரியர்களுக்கு ஏரியில் இருந்து பிடித்த மீன் பிடித்து சமைப்பது ஒரு சிறப்பு.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்... Empty Re: தென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum