புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_lcapபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_voting_barபொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மொழி ‍ பழமொழிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 10:09 am

First topic message reminder :

01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.


03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.


04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.


05. பிறப்போடு பிறந்தது மரணம்.


06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.


07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.


08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.


09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.


10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.


11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.


12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.


13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.


14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.


15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.


16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.


17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.


18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே


19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.


20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 11:19 am

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 16, 2009 11:21 am

பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 Icon_eek பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 Icon_eek பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 11:30 am

கடமையை மறந்து கவலையென சொல்லித் திரியாதே
அது உன் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.......

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, இறைவன் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்"

ஒரு அறிவாளியின் நாக்கு அவனின் இதயத்திற்கு பின்னாலும், ஒரு முட்டாளின் நாக்கு அவனின் இதயத்திற்கு முன்னாலும் உள்ளது"

உன்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்த கால சம்பவங்களிலும், நிகழ்கால கேள்விக்குறியிலும் நம்மை தொலைக்காவிட்டால், நிகழ்காலத்தை 100 சதவிகிதம் அனுபவிப்போம்.

- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


தயவு செய்து தினசரி 30 நிமிடம் உடற்பயிற்ச்சி செய்யாதீர்கள், அவ்வாறு செய்தால், நம் உடம்பு உறுதியாகி, நீண்ட நாட்கள் ஆரோக்யமாக வாழ்ந்து விடுவோம். (எங்கேயோ படித்தது, ஆனால சிந்திக்க வைத்தது)


உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.

-இயேசுநாதர்


வாழ்க்கை கவிதை வாசிப்போம்...வானம் அளவு யோசிப்போம்.... முயற்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்.

-கவிஞர் பா.விஜயன்


நாளை உலகை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு; உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு.

-கவிஞர் கண்ணதாசன்


மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம் தான் உணர மறுக்கிறது.

-கவிஞர் வைரமுத்தின் வைர வரிகள்


மனிதன், கோபம் வரும்போது தன்னிலை மறந்துவிடுகிறான். அந்த நேரத்தில் "நான் இப்போது கோபமாக இருக்கின்றேன்" என்று மனதில் ஒரு முறை சொன்னாலே அதன் வேகம் பாதியாக குறைந்து விடும்.

-ஞானிகள்



கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன


- எங்கோ படித்தது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 11:31 am

ஏன் சிவா இப்படி பாக்குரிங்க? பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:27 am

பொன்மொழிகள்

உன் அண்டை வீட்டுக்காரனின் வயிறு
பசியோடு இருக்கும் போது
தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன்
என்னை சார்ந்தவனில்லை
இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து வாழ்வது
எல்லாவற்றையும் விட மேன்மையானது
கொடுத்து மகிழ்ந்து அனைத்தும்
பெருவோம்

[நபி மொழி]

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.
(லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
(ஓர் அனுபவசாலி)

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.
(அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.
(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
(எமர்சன்)

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
வாரியார் சுவாமிகள்)

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.
ஜேம்ஸ் ஆலன்)

இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும்.
(சுவாமி ராமதாஸ்)

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.
(ஓர் அறிஞர்)

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.
(மு.வ.)

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
(ஜான்ஸன்)

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
(வில்லியம் ஹாஸ்விட்)

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.
(ஷாம்பர்ட்)

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
அரவிந்தர்)

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.
(சுவாமி விவேகானந்தர்)

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது


கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
(பிளேட்டோ)

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.
(ஹேக்ஸ்பியர்)

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
(மகாத்மா காந்தி)

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்.
(யாரோ)

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.
(மாரியோ போஜியோ)

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்.
(ஹென்றி லீவ்ஸ்)

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.
(ராபர்ட் பிராஸ்ட்)



1. நண்பனை கஷ்ட காலத்திலும் வீரனை போர்க்களத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

2. உழைப்பின் வேர்கள் கசப்பு. அதன் கனிகள் இனிப்பு.

3. எல்லோரும் தீர்க்க வேண்டிய கடன் ஒன்று உள்ளது.அது தான் மரணம்.

4. முயற்சி இல்லாமல் வாழும் வாழ்வு, துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

5. பச்சை குழந்தைகளின் கேள்விக்கு, மகா அறிவாளி கூட பதில் கூற முடியாது.

6. தாமே பெற்றோர்களாக மாறும் வரை, பெற்றோர்களின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாது.

7. கடனோடு காலையில் எழுவதை விட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.

8. மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள். உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.

9.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.

10.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.

11.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிற்து.

12.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.

13.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.

14.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்

15.அகங்காரம் அறிவை வள்ர்க்காது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:32 am

கண்ட கேட்ட தத்துவங்கள் சில...

1.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.
--லியோ டால்ஸ்டாய்

2.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.
-- கண்ணதாசன்

3.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.

4.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.
--சுகி செல்வம்

5.நேற்று,இன்று,நாளை ;

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் - ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்.... ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான்
-- ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.

6.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.

--லேனா தமிழ்வாணன்.

வாருங்கள் முயற்சி செய்வோம்.


படித்தது பிடித்தது ....

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:34 am

மன அமைதி பெற இதை செய்யுங்க...

1.உங்களுக்கு பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும்.

2.நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள்.

3.நீங்கள் எதைஎல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த எல்லாக்காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்

4.ஒவ்வொரு நிலையிலும் நமது பார்வையை தெளிவுபடுத்தி சரியான பாதையை கண்டுபிடிக்க ஆத்மசோதனை தேவைப்படுகிறது.

5.எல்லாவிதத் தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள்.தூண்டுதல்கள் உண்டாக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.தூண்டுதல்களை தவிர்க்க போராடவேண்டியதிருக்கும்.

6.பிறரது மன அமைதியைக்குலைக்கும் ஒருவனுக்கு,மன அமைதியை பெற விழைவதற்கும்தகுதி கிடையாது.

7.எவருடனும் அதிகமாக நெருங்கிப்பழக வேண்டாம்.அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைகெடுக்கிறது.

8.எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள்,நீங்கள் கேட்கப்பட்டாலன்றி,உங்கள் வேலையைப்பாருங்கள்.

9.எப்பொழுதும் அடக்கமாக இருங்கள், மற்றும் தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியைவிட அடக்கம் மேலானது.

10.இறைவனின் நட்பை பெறுங்கள்,அதுவே சிறந்த செல்வம். நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து இருக்கும்பொழுது,மறைநூல்கள் பால் கவனம் செலுத்துங்கள்,மகான்களின் சிறந்த நூல்களை படியுங்கள்.

11.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறைவனின் அருளிருக்கிறது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்வது தான் அறிவுடைமையாகும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:42 am

நற்சிந்தனை சில....

1.சுதந்திரம் என்பது எல்லோரும் விரும்பும் ஒன்று..எனவே தன் காலில் நிற்க முயலுங்கள்.மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் தன் காலில் நிற்க முடியும் என்பதை கண்டு கொள்வீர்கள்.

2.எப்பொழுதும் ஏதாவது நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்க்ள்.இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று அலைந்து திரிவதில் நேரத்தை வீணாக்காதீர்கள்,இதனால் பயனற்ற மனப்போராட்டத்தில் நீங்கள் நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய் விடுவீர்கள்.அதிகமாக திட்டங்களை தீட்ட வேண்டாம்.

3.சோதனைகளையும்,இடுக்கண்களையும் எதிர்நோக்காமல் எந்தத்துறையிலும் எதையும் சாதிக்க முடியாது.ஏதோ காலம் தான் கழியும்,

4.உங்களுடைய கடந்த கால அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்று கொள்ளுங்கள்,அந்தப்பாடங்களை கற்றுக்கொண்டு அதுவே எதிர்காலச் செயல்களுக்கு வழி காட்டியாக அமையட்டும்.நான் அப்படிசெய்திருந்தால் இப்படி ஆயிருப்பேனே,இப்படிச்செய்திருந்தால் ..... என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும்.

5.உங்கள் தேவைகளை பெருக்கிக்கொள்ளாதீர்கள்,பிறகு பிச்சைக்காரனைப்போல் திரியாதீர்கள், உங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல் வாழுங்கள்.

6.வீட்டில் உங்களுக்குத் தேவையான உடைகள் இருக்கும் பொழுது எதற்காக ஒரு துணிக்கடைக்கும் நுழைந்து பல்வேறு ரகங்களைக் காண வேண்டும் ?இல்லையெனில் தேவையற்றதை வாங்குவீர்கள்,ஓ என்னிடம் இது இல்லையே ! இதை நான் வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?என்று மனம் வருந்த வேண்டியிருக்கும்.

7.எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்.அளந்தே பேசுங்கள்.களங்கமற்ற நல்நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ,பிரிவை உண்டாக்குகிறது.

8.விவாதம் செய்யாதீர்கள்.நண்பர்களுக்கிடையே பிளவை உண்டாக்கும்.

9.எனக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றி எனக்கு கவலைஇல்லை ஆனால் பிறரைப்பற்றிதான் கவலை,என்று சிலர் சொல்லுவர்.இது அறியமையாகும்.இவ்வாறு சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

10.இறுதியாக இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

11.பிறரை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களது மகிழ்ச்சியில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

ZARU



வெற்றி, இந்த ரகசிய பெட்டிக்குள் இருக்குது

வாழ்க்கையை நாம் எண்ணுகிறபடி, நாம் அமைக்க முடியும்‍ அதற்கு வேண்டிய மன உறுதி இருந்தால், திட்டங்கள் இருந்தால் உயரலாம். இல்லாவிட்டால், நாம் அது போகிற படி போக வேண்டியதாகவே இருக்கும்.

குறிக்கோள் என்பது வெறும் ஆசையல்ல, ஆசைக்கு மேல் அதிகம் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். நம் குறிக்கோளை நாம் வடிவரூபத்தில் காண வேண்டும். உடலால் உணர வேண்டும்; ருசிக்க வேண்டும்; நுகர வேண்டும்; நாம் அத்துடன் வாழவேண்டும்.

விவேகானந்தர் கூறினார், "நீருக்குள் அமுங்கியிருப்பவன் வெளியே வர எப்படித் துடிக்கிறானோ அத்தகைய வேகம் நமக்கு வேண்டும்" என்று. அத்தகைய துடிப்பை குறிக்கோள் அடையும்போது, எண்ணங்கள் 'சித்தி' யாக, சாதனைகளாக மலர்கின்றன.




வீர சிவாஜி

தாய் தன் மகனோடு உட்கார்ந்து தாயம், சொக்கட்டான் போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவது வழக்கம். எல்லா விளையாட்டுக்களிலும் தாய் தோற்றுக் கொண்டே இருப்பாராம்.

ஒரு நாள் மகன் தாயிடம் கேட்டான், “அம்மா நீங்கள் ஒரு முறை கூட ஜெயிப்பதில்லையே ஏன்?”.”மகனே! ஒரு முறை கூட விளையாட்டாக இருந்தாலும் நீ தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்” என வீரமாகக் கூறினாராம். அந்த வீர உரைகளே பிற்காலத்தில் மராட்டிய வீர சிவாஜியைய் உருவாக்கின.

அன்புடன்
அ.இராமநாதன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 9:58 am

பொன்மொழிகள் அருமையாக இருக்கிறது தாமு, பதிவிற்கு நன்றி!
ஒரே பதிவாக இடாமல் சிறிது சிறிதாக தொகுத்து இட்டால் நன்றாக இருக்கும் வாசிப்பதற்கு.



பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:34 am

விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம், அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் - ஆனால் நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

குறையப் பேசு, நிறையக் கேள்.

மனதில் பகைமையை அடக்கி வைத்தல் நேரடிப் போரைவிடக் கொடியது.

எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.


தோல்வியை - கழியுங்கள்
முயற்சியை - கூட்டுங்கள்
வெற்றியை - பெருக்குங்கள்
பலனை - வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்



பழைய பொன்மொழிகள்


கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.

***

யாருடைய சொல்லும் செயலும் பிறரை துன்புறுத்தவில்லையோ அவனே மனிதன்.

***

மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.

***

மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள்.

***

குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.

***

சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.

***

தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.

***

பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். 'இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் '




காலண்டரில் கண்ட முத்துக்கள்


திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.



நன்றி கதிர்வேல்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக