புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
எல்லையில்லாத் தொல்லை! I_vote_lcapஎல்லையில்லாத் தொல்லை! I_voting_barஎல்லையில்லாத் தொல்லை! I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையில்லாத் தொல்லை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 8:18 am

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதில் இதுநாள்வரை இந்திய ராணுவத்தினர்தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திலும் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமான முறையில், முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல பாகிஸ்தான்,"இதை எங்கள் ராணுவம் செய்யவில்லை' என்று கூறியுள்ளது.
:-
இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்க, ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் இந்தியா, பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு விசாரிக்கலாம் என்று பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது.
:-
காஷ்மீர் பிரச்னையில் எப்படியும் சர்வதேசத் தலையீட்டை ஏற்படுத்துவது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோள். ஆனால், இந்தப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை என்பது இந்திய அரசின் பெருந்தன்மை.
:-
இத்தகைய அத்துமீறல்கள், தாக்குதல்களைப் பாகிஸ்தான்ராணுவம் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கக் காரணம், பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் உள்ளே நுழைந்து குட்டையை மேலும் குழப்பச் செய்ய வேண்டும் என்பதுதான். தனக்குக் கிடைக்காத காஷ்மீர் பகுதியில் அன்னிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தினாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு அங்கே உரிமை இருக்கக்கூடாது என்பதுதான்பாகிஸ்தானின் எண்ணம். அதனால்தான், நல்லுறவு ஏற்படும் சாத்தியங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அசிங்கங்கள் எல்லையில் நடைபெறுவது சகஜமாக இருக்கிறது.
:-
கார்கில் பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை முன் வைத்தது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து கார்கில் செல்லும் பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டு, முப்பதுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இறந்தனர். ஆகவே, இரு தரப்பும் ராணுவத்தை விலக்கிக்கொள்ளலாம் என்று இந்தியாவுக்கு ஆலோசனை சொன்னார்கள். அதை இந்திய அரசு ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான்சொல்வது எதையும் கேட்கக்கூடாது என்கின்ற எண்ணம் அல்ல. நாம் இருவரும் இல்லாத இடத்தில் தீவிரவாதிகள் வந்து நிற்கலாம் என்ற ஏற்புடைய அச்சம்தான் காரணம். இதை இந்தியா வெளிப்படையாகச் சொல்லவும் செய்தது.
:-
இப்போது பூஞ்ச் பகுதியில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திலும், இந்தச் செயலை வேறு யாராவது செய்திருக்கலாம் என்ற கருத்தையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது. அதாவது தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்று பொருள். அப்படியானால் இந்த எல்லையில் தீவிரவாதிகள் வரும் நிலைக்கு யார் காரணம்? பாகிஸ்தான் அரசுதானே?
:-
சில மாதங்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில், மூன்று கம்பி வேலிகளுக்கு அடியில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை இருப்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். ஏணிகளுடன்அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை வழியாக எத்தனைத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்பதைக் கணக்கிடவே முடியாது. இருப்பினும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், சுரங்கப்பாதையை மூடியது இந்திய ராணுவம்.
:-
இந்திய எல்லையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. பூஞ்ச் சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது இந்திய அரசுக்கு உறுதிபடத் தெரியும். பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிகூறினாலும், இந்த விவகாரத்தை மேலும்மேலும் பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான், வெறும் கண்டிப்புடன் இந்திய அரசு முடித்துக்கொண்டிருக்கிறது.
:-
இந்த ஆதாரங்களை வெளிப்படுத்தினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியா பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு, பாகிஸ்தான்தான் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது என்று அம்பலப்படுத்தினாலோ, அதனால் மீண்டும் இந்தியாவில் சில நகரங்களில் குண்டுகள் வெடிப்பது நடக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும். இப்போது இந்தியாவுக்கு வந்து சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் அமைச்சர்கள் வருகை முற்றிலுமாக நின்றுவிடும். அப்படி ஒரு சூழலுக்காகத்தான் தீவிரவாதஅமைப்புகள் பிணந்தின்னிக் கழுகுகள்போல காத்திருக்கின்றன.
:-
எல்லையில் சில வீரர்களை நாம் அநியாயமாக இழந்தபோதிலும் பெருநலன் கருதி, பொதுநன்மை கருதி அமைதி காக்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதைவிட, பகைத்துக்கொள்ளாமல் சும்மாஇருப்பதே மேலானது.
:-
சிறையில் உள்ள இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் விடுவிக்காது. எல்லையில் தாக்குதல் நடத்தினால் நாங்கள் நடத்தவில்லை என்று சொல்லும். அல்லது நிரூபித்தால், இந்திய ராணுவவீரர்கள் தூண்டினார்கள் என்றும்கூடப் பழி சொல்லும்.
:-
பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு பல ஆயிரம் கோடிபணத்தைச் சும்மாவே கொட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. குறைந்த மக்கள்தொகையும் சிறிய பரப்பும் உள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் டாலர்கள், அவர்களது பட்ஜெட்டில் பாதியைச் சரிக்கட்டும். போதாக்குறைக்கு உதவச் சீனா தயாராகவே இருக்கிறது.
:-
நமக்கு அப்படியல்ல. பாகிஸ்தானுடன், ஒரு கார்கில் போர்போல மற்றொன்று நடந்தாலும் பேரிழப்பு நமக்குத்தான். வெற்றி பெறுவோம் என்றாலும்,அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். நமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று எல்லையில் எல்லைமீறும் பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நாம் எல்லைமீற வேண்டும் என்று பாகிஸ்தானை வழிநடத்துகிற தீவிரவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்ற முற்படுகிறது.
:-
அண்டை நாட்டை அகற்றியா நிறுத்த முடியும்? இல்லை நாம்தான் விலகிப் போக முடியுமா? சகித்துக் கொள்வதுதான் ஒரே வழி!
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக