ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதனால் ஆவது என்ன?

Go down

இதனால் ஆவது என்ன? Empty இதனால் ஆவது என்ன?

Post by Powenraj Fri Jan 11, 2013 9:40 am

ரயில் பயணிகளுக்கான கட்டணத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது குறித்து அரசியல் கட்சிகளிடையே வழக்கமான முணுமுணுப்பு இருந்தாலும், பொதுமக்களிடம் எந்தவித எதிர்ப்பும் இருக்க வழியில்லை. ஏனென்றால், பேருந்து மற்றும் ரயில் இரண்டிலும் மாறிமாறிப் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு, ரயில் பயணக் கட்டணம் குறைவு என்பது தெரியும்.
:-
இப்போது உயர்த்தப்பட்டுள்ளகட்டணமும்கூட, பல மாநிலங்களைப் பொருத்தவரை பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான். குறிப்பாக, பெருநகரங்களில் நகர்ப் பேருந்துகள் கட்டணத்தையும்ரயில்வே கட்டணத்தையும் ஒப்பிட்டால், அப்போதும்கூட ரயில்வே கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது.
:-
ஆகவே, கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.ஆனால், ரயில் பயணிகள் பிரிவில் மட்டும்தான் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் கூறியிருப்பதும், பட்ஜெட்டுக்கு முன்னதாகவே இதை நிறைவேற்றியிருப்பதும்தான்சரியில்லை.
:-
கடந்த பட்ஜெட்டில் 2012-ஆம் ஆண்டு அன்றைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி 10% கட்டணம் உயர்த்தியபோது, மம்தா பானர்ஜி ஒருவர் மட்டுமே எதிர்த்தார். பொதுமக்கள்கூடஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்தக் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. அமைச்சர் மாற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர் முகுல்ராய், வேறுவழியின்றி,ரகசியமாக சரக்குக் கட்டணத்தை உயர்த்தினார்.
:-
இக் கட்டண உயர்வை, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்காமல், தற்போது அறிவிக்க வேண்டிய தேவை என்ன? இதுபோன்ற நடைமுறைகளை ஏன் புகுத்த வேண்டும்? இதுபோன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகள் நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம் அல்ல. இதுபோன்ற கட்டண உயர்வுகளை பட்ஜெட்டின்போது அறிவிப்பதுதான் சரி.
:-
பயணிகள் பிரிவில் 2004-05 நிதியாண்டில் ரூ.1,059 கோடியாக இருந்த நஷ்டம், தற்போது 19,984 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது மேலும் ரூ.25,000 கோடியாக உயரக்கூடும் என்பதால் கட்டண உயர்வு அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தக்கட்டண உயர்வால் அரசுக்கு ஆண்டுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் வருவாய் ரூ.6,600 கோடி. இந்தக் கூடுதல் வருவாய் பயணிகள் மூலம் கிடைத்தாலும், பயணிகளுக்கு ரயில்வே தரப்போகும் நன்மை என்ன என்பது இருக்கட்டும். உண்மையிலேயே பயணிகள் பிரிவில்தான் நஷ்டம் ஏற்படுகிறதா என்பதற்கு ரயில்வே அமைச்சரிடம் என்ன பதில் இருக்கிறது?
:-
ரயில்வே, அரசுத் துறை நிறுவனம் என்றாலும், இதனால்பிழைப்பு நடத்துபவர்கள் அரசியல்வாதிகளும், கட்டுநர்களும், தொழில் ஒப்பந்ததாரர்களும்தான். இந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்தாமலும், ரயில்வே சொத்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் பாழாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட நஷ்டமும்தான் இன்று பல்கிப் பெருகிக்கொண்டிருக்கிறதே தவிர, பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதால் அல்ல.
:-
ரயில்வே துறையின் 65% வருவாய் சரக்குப் போக்குவரத்து மூலம்தான் கிடைக்கிறது. சரக்குப் போக்குவரத்தை முறையாகப் பயன்படுத்தாமல், வாடிக்கையாளர்களுக்கு நல்லசேவை வழங்காமல், தான்தோன்றித்தனமாக ரயில்வேநிர்வாகம் நடந்துகொள்வதால், பல வியாபாரத் துறையினர் லாரிப் போக்குவரத்துக்கு மாறிவிட்டார்கள்.
:-
நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோலியப்பொருள்கள் மூலம்தான் இவர்களுக்கு மேலதிகமான சரக்குக் கட்டணம் கிடைக்கிறது. மற்றபடி, தானியம் மற்றும் சிமென்ட் போன்ற பொருள்களை ரயில்வே மூலம் அனுப்பத் தயங்குகின்றனர். பெரும்பாலும் தவிர்த்துவிடுகின்றனர். ரயில்வே துறையின் பொறுப்பின்மையால், நெல், கோதுமை மூட்டைகள், சிமென்ட்மூட்டைகள் எண்ணிக்கை குறையாவிட்டாலும், பல நேரங்களில் மெலிந்து போகின்றன என்ற கசப்பான உண்மைதான் இதற்குக் காரணம்.
:-
ரயில்வேதுறை சரக்குகளைக் கையாளும் பிற்போக்கான பழைய நடைமுறைகளால், கணினி சார்ந்த கருவிகள் எதையும் அனுப்புவதற்கு ரயில்வே உகந்ததல்ல என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. இப்போது கணினி இல்லாத தொழிற்கருவிகள் இல்லை என்ற நிலையில், சரக்கு ரயிலைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர்.
:-
வருவாய்க்கு வாய்ப்புகள் இருக்கும் சரக்குப் பிரிவை,சீரழியவிட்டு, சேவை அளிக்க வேண்டிய பிரிவினால்தான் நஷ்டம் என்று சொல்வது முறையல்ல.
ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருவாயில் 37% ஊழியர்களின் சம்பளம் மற்றும் போனசுக்குச் செலவாகிறது. 19% ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. இதனால்தான் ரயில்வேக்கு நஷ்டம் என்று சொல்லிவிட முடியுமா?
:-
பயணிகள் ஓய்வெடுக்கவும், நல்ல குடிநீர் வழங்கவும், நடைமேடையில் அமர்ந்து காத்திருக்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தச் செலவுகள், ரயில்வே செலவிடும் மற்ற செலவினங்களை ஒப்பிட்டால் மிகமிகக் குறைவு. பயணிகளுக்கான இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் இவர்கள் முழு வெற்றியடையவில்லை. ஏனென்றால், எல்லாவற்றையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை வழங்கி வருவதுதான்.
:-
ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்க ஏ.சி. வாடகை அறை, கட்டணக் கழிப்பறை, உணவுக்கூடம் இவற்றால் பயன்பெறுவோர் தனியார்தான், ரயில்வே அல்ல. பிறகு ஏன் ரயில்வேதுறை, பயணிகள் பிரிவைக் குறை சொல்ல வேண்டும்? இந்தக் கட்டண உயர்வால் நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டிவிடப் போகிறார்களாஎன்றால் அதுவும் இல்லை. சராசரி சாமானிய இந்தியனுக்குத் தரப்பட்டு வந்த ஒரு சலுகையும் இந்தக் கட்டண உயர்வால் மறுக்கப்பட்டு விட்டதுதான்மிச்சம்.
கட்டண உயர்வு சரி. சொல்லும் காரணங்களில்தான் பிழை!
:-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum