புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
3 Posts - 7%
heezulia
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந் "தீ'


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 9 Jan 2013 - 2:42

அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது.

"நான் இன்று இரவு அரசருக்குத் தெரியாமல் பஞ்ச கல்யாணியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்லப் போகிறேன்..'' என்றான்.

அதற்கு மற்றொருவன் ""அரசனுக்குத் தெரிந்தால் உன் நிலை என்னாகும் தெரியுமா? மரண தண்டனைதான்!'' என்றான்.

அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் "பஞ்ச கல்யாணி' என்றொரு நடன மங்கை இருந்தாள். அவள் பேரழகியாகவும் நடனத்தில் சிறந்தவளாகவும் விளங்கினாள். அவளை அபகரித்துச் செல்லப் பல நாட்டு மன்னர்கள் முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. மன்னர் தனது அரண்மனையில் அவளுக்கு ஒரு பகுதியை அளித்து அங்கு தங்க வைத்திருந்தார். அங்கு பலத்த காவலும் போடப்பட்டிருந்தது.

இவ்வீரர்கள் பேசியதைக் கேட்ட அப்பணிப்பெண் இவ்விஷயத்தை யாரிடமாவது கூறவேண்டும் எனத் துடித்தாள். அரண்மனையில் நடைபெறும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என கட்டளையிட்டிருந்தார் மன்னர். பணிப்பெண்களின் தலைவியிடம் கூறினால், அவள் இதை நம்பமாட்டாள். மேலும் சரியான ஆதாரம் இல்லாமல் இத்தகைய தகவல்களை வெளியில் சொல்லவும் முடியாது.

இவ்வாறு சிந்தனை வயப்பட்டவளாய் நடந்து செல்லும் வழியில் பூ விற்கும் பெண்மணியைக் கண்டாள். அவளிடம் விரைந்து சென்று, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, "உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். யாரிடமும் சொல்லிவிடாதே... இன்றிரவு ஆட்டக்காரி பஞ்ச கல்யாணியை ஒரு வீரன் அழைத்துச் செல்ல இருக்கிறான்!' என்றாள்.

இதைக் கேட்ட அந்தப் பூக்காரிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமாவது இத்தகவலைப்
பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அந்த நேரம் பார்த்து அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட தயிர் விற்கும் பெண்மணி அங்கு வந்தாள். உடனே அவளிடம் ஓடிச்சென்று, ""கேட்டாயா... இந்த அநியாயத்தை! ஆட்டக்காரி பஞ்ச கல்யாணிக்கும் படைவீரன் ஒருவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இன்றிரவு அவர்கள் அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை ஒருவரிடமும சொல்லிவிடாதே...'' என்றாள்.
இதைக் கேட்ட அந்த தயிர்க்காரி ""சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்!'' என்று கூறி அங்கிருந்து அகன்றாள். அவள் ஊருக்குள் சென்று தயிர் விற்கும் பொழுதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனம் இத்தகவலையே நினைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட பூங்கொடி என்ற பெண், ""என்னம்மா? என்னவோ போல் இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?'' என்று கேட்டாள்.

தயிர் விற்கும் பெண்மணி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, ""உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். நீ அதை யாரிடமும் கூறக்
கூடாது. அரண்மனையில் இருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி இன்று இரவு ஒரு வீரனுடன் தப்பித்துச் செல்லப் போகிறாள்! அவள் பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று நம் நாட்டைப் பற்றிய ரகசியங்களைச் சொல்லிவிடுவாள் என நினைக்கிறேன்..'' என்று தனது யூகத்தையும் கலந்து கூறினாள்.

அவள் அங்கிருந்து சென்றவுடன் பூங்கொடி நேரடியாகத் தன் எஜமானியாகிய அமைச்சரின் மனைவியிடம் ஓடிச் சென்று தான் கேள்விப்பட்ட எல்லா விஷயத்தையும் அப்படியே கூறினாள். அமைச்சரின் மனைவி உடனே அமைச்சரிடம் இத்தகவலைக் கூறினாள்.

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக மன்னரிடம் ஓடிச்சென்று, ""மன்னா.. நமது அரண்மனையில் தங்கியிருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி, வேற்று நாட்டு மன்னனால் அனுப்பப்பட்ட உளவாளி போலும்! அவள் இங்கு நடன மங்கை போல் தங்கியிருந்து நம் நாட்டு ராணுவ ரகசியங்களை சேகரித்து இருக்கிறாள். நம் படை வீரர்களுள் யாரோ ஒருவன் அவளுக்கு உதவி செய்கிறான். இன்று இரவு அவளும் அப்படை வீரனும் இங்கிருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால், வேற்று நாட்டு மன்னன் நம்மை எளிதாக முற்றுகையிட்டு விடுவான். எனவே அவ்விருவரையும் தாங்கள்தான் தண்டிக்க வேண்டும்!'' என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், ""உங்களுக்கு இத்தகவலைக் கூறியது யாரென்று கூறும்! தீர விசாரிக்காமல் என்னால் ஒருவரையும் தண்டிக்க முடியாது!'' என்றார்.

அமைச்சர் தனது மனைவி என்று கூற அவரது மனைவியோ தன் வீட்டுப் பணிப்பெண் பூங்கொடி கூறிய தகவல் என்றாள். பூங்கொடியை அழைத்து விசாரித்ததில், அவள் தயிர்க்காரி கூறிய தகவல் என்றாள். தயிர்க்காரி, பூக்காரிதான் இவ்விஷயத்தைக் கூறினாள் என்றாள். பூக்காரி அரண்மனையில் வேலை செய்யும் பணிப்பெண் கூறியது என்றாள். இதனால் அவள் மன்னர் முன் நிறுத்தப்பட்டாள். அவள் உடல் நடுங்கியபடியே மன்னரிடம், ""மன்னா! எனக்கு அப்படை வீரனின் முகம் தெரியாது! அவன் பேசிய குரலை மட்டுமே கேட்டேன்...'' என்றாள்.

அவள் குரல் கேட்ட நேரத்தில் பணியில் இருந்தவர்களை விசாரித்ததில் அவ்வாறு பேசியவன், வீரசிம்மன் என்னும் குதிரைப்படை வீரன் என்பது தெரிந்தது. அவன் உடனே மன்னரிடம் அழைத்துவரப்பட்டான்.

"மன்னா... எனக்கும் நடன மங்கை பஞ்ச கல்யாணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! நம் குதிரைப் படையில் உள்ள குதிரைகளுக்கு அடையாளத்திற்காக நாங்கள் செல்லப் பெயர் வைப்போம். அப்படி மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்த குதிரைக்குப் "பஞ்சகல்யாணி' என்று பெயரிட்டோம்.

நான் குதிரையில் ஏறி வேகமாக ஓட்டுவதற்கும் அதை அடக்குவதற்கும் பயிற்சி செய்துவருகிறேன். எனக்குள்ள பணி நேரத்தில் எல்லா குதிரைகளையும் என்னால் பயிற்றுவிக்க இயலவில்லை!

எனவே இன்றிரவு "பஞ்சகல்யாணி' குதிரையைக் காட்டுக்கு அருகில் உள்ள திடலுக்கு ஓட்டிச் சென்று பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அப்படிக் குதிரையை வெளியே ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால் தங்களின் முன் அனுமதி தேவை. எனவே தங்களுக்குத் தெரியாமல் அவ்வாறு செய்ய விரும்பினேன். ஆனால் எப்படியோ தங்களுக்குத் தெரிந்துவிட்டது! தயவு செய்து என்னை மன்னியுங்கள்!'' என்றான்.

இதைக் கேட்ட மன்னர், அமைச்சர் மற்றும் அங்கு கூடியுள்ளோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஆம்! கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீரவிசாரிப்பதே மெய்! ஏனெனில் வதந்தி காட்டுத் தீயை விட மிக வேகமாகப் பரவும்!

சிறுவர் மணி




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 9 Jan 2013 - 2:59

கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 9 Jan 2013 - 22:48

யினியவன் wrote:கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.

சூப்பருங்க




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 9 Jan 2013 - 22:54

கதை அருமை .நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu 10 Jan 2013 - 0:31

நல்ல கதை. இதன் கருத்தை நாம் மனதில் வைத்து நம் வாழ்வில் ஒவ்வொரு வதந்தியையும்/விஷயத்தையும் தீர விசாரித்து முடிவுக்கு வரவேண்டும்.



வதந் "தீ' 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக