ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைப்பதால் பயனில்லை!

Go down

குறைப்பதால் பயனில்லை! Empty குறைப்பதால் பயனில்லை!

Post by Powenraj Wed Jan 09, 2013 11:30 am

புதுதில்லியில் நான்கு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில், வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், சிறார் வயதை 18-லிருந்து 16ஆகக் குறைக்கலாம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
:-
இதற்குக் காரணம், தில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான உடலியங்கியல் மாணவியின் வழக்கில் தொடர்புடைய 6 பேரில் ஒருவருக்கு வயது 17. ஆகவே அவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீதான வழக்கும் சிறார் நீதிமன்றத்திலேயே நடைபெற இருக்கிறது. சிறார் நீதிமன்றம் கடுமையான தண்டனைகள் விதிக்காது. ஆகவே, இந்தக் குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்துதப்பித்துவிடுவார் என்று கூறி, பல்வேறு மகளிர் அமைப்புகள் நடத்திவரும் போராட்டத்தின் நெருக்கடியால் இத்தகைய கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
:-
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் சின்ன வயதிலேயே எல்லாமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்தி, சிறார் என்பதற்காக வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைத்துவிடலாம் என்பதே பொதுக்கருத்து. இந்தக் கருத்து சரியானதுதான். ஆனால், இன்றைய சூழ்நிலையில்உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் போக்குதான் காணப்படுகிறது. உண்மையில் தேவைப்படுவது அறிவுபூர்வமான விவாதம்தான்.
:-
சிறார் வயதை 16 ஆகக் குறைப்பதா? அல்லது குற்றம் செய்தவர்கள் சிறார்களாக இருந்தாலும், அவர்களது குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிப்பதா? அப்படியானால், அத்தகைய குற்றங்கள் எவையெவை? இவைதான் விவாதிக்கப்பட வேண்டும்.
:-
16 வயது பூர்த்தியடைந்தவர் சிறார் இல்லை என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், பல இளவயது திருமணங்கள் நடைபெறும். ஒருபெண் 18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை கேலிக்குரியதாக மாற்றும்.
:-
18 வயது நிரம்பியவருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் தற்போது வழங்கப்படுகிறது. 16 வயது நிரம்பியவர் சிறார்அல்ல என்று முடிவானால், 16 வயதிலேயே 100 சிசி வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு உரிமம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவர். இதுபோல, நிறைய சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
:-
குற்றம் செய்தவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர் செய்த குற்றத்தைப் பொருத்து அவரை வழக்கமான நீதிமன்றத்தில் எல்லாரையும் போல விசாரிக்கலாம் என்று, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றம் செய்வதும், அத்தகையகுற்றங்கள் எவையெவை என்று பட்டியலிடுவதும்தான் தற்போதைக்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
:-
தேசிய குற்ற வழக்குப் பதிவுஅலுவலகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, 2011-ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளில் 64% குற்றவாளிகள் 16 முதல் 18 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்களில் 57% மிகமிக ஏழ்மையானவர்கள். 56% பேர் பள்ளி செல்லாத, அல்லது தொடக்கக் கல்வியை முடிக்காதவர்கள். நாட்டில் பதிவாகியிருக்கும் வல்லுறவு வழக்குகளில் 50% குற்றவாளிகள் இந்த இளம் வயதினராக இருக்கிறார்கள்.
:-
அமெரிக்காவில் சில மாகாணங்களில், வல்லுறவு வழக்குகளைப் பொருத்தவரை, இத்தகைய குற்றவாளி 18 வயதுக்கு உள்பட்டவராக இருப்பினும்கூட, அவரை இளைஞனாகக் கருதி, சிறார் நீதிமன்றத்துக்கு வெளியே, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்; அவரை சிறுவனாகக் கருதத் தேவையில்லை என்று தெளிவான சட்ட வரையறை இருக்கிறது. வல்லுறவு மட்டுமல்ல, உரிமம்இல்லாமல் வாகன விபத்தில் சிக்குதல், கூட்டுச்சதியில் ஈடுபட்டு கொலை செய்தல், உரிமம் இல்லாமல் துப்பாக்கியுடன் திரிதல், பலமுறை தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்காகவும் இத்தகைய இளம்வயதினரை வயதுக்கு வந்தவர்களாகக் கருதி, அதற்கான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்கிற விதிவிலக்குகள் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. இதுபோன்ற திருத்தம்தான் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.
:-
ஒட்டுமொத்தமாக, சிறார் வயதுவரம்பை 18-லிருந்து 16 ஆகக்குறைத்துவிட்டால், இளம்வயதில் செய்யக்கூடிய சிறுதிருட்டு, அடுத்தவரைத் தாக்கி காயப்படுத்துதல், கல்லூரிப் போராட்டத்தில் பொதுச் சொத்தை சேதம் செய்தல், விபத்து ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு பொதுஅமைதிக்கு ஊறு செய்தல் என சாதாரண குற்றங்களுக்கும்கூட, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோர் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர். வளரும் இளம்பருவத்தினர் இதனால் அடையும் மனஉளைச்சல், தண்டனையில் பெறும் அவமானம் அவரை இந்தச் சமூகத்தில் வாழ்நாள் முழுவதும் ஒரு குற்றவாளியாகவே நீடிக்கும்நிலையை உருவாக்கிவிடும்.
:-
இந்தியாவில், ஒரு பட்டம் பெறும் வயதுவரை, அதாவது 22 வயதுவரை தாய் தந்தையரின் வருமானத்தில்தான் இளைஞர்கள் வாழ்கிறார்கள். பிறகுதான் வேலை தேடுகிறார்கள். சிறார் வயதை16 ஆகக் குறைப்பதன் மூலம், குடும்பத்தின் நிழலில் வாழும் இளைஞர்களை பெரிய குற்றவாளிகளாகச் சித்திரித்து, அவ்வாறே அவர்கள் ஆகிவிடும் சூழலும் ஏற்படும். இது சமூகத்துக்கேபாதிப்பைத் தரக்கூடியது.
:-
அவசரப்பட்டும் ஆத்திரப்பட்டும் சட்டம் இயற்றிவிட முடியாது, கூடாது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், சமுதாயத் தாக்கத்தையும் ஆராய்ந்து செயல்படுவதுதான்புத்திசாலித்தனம். தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம், மேலைநாடுகளை முன்னோடியாகக்கொள்ளும் நாம், இதுபோன்ற பிரச்னைகளிலும் உலகளாவிய மாற்றங்களையும், சட்டங்களையும் ஆராய்ந்து செயல்படுதல் அவசியம். ஆகவே, வயது வரம்பை 16 ஆகக் குறைப்பதைக் காட்டிலும், எத்தகைய குற்றங்கள் சிறார் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவை என்று வகைப்படுத்துவதுதான் இன்றைய தேவை.
:-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum