புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_m10உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:50 am

புனிதத் திருத்தலமான அலகாபாத்- திரிவேணி சங்கமத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மிகமிகப் பிரசித்தம் பெற்றதாகும்.

பூரண கும்பமேளா எனப்படும் இவ்விழா, இவ்வாண்டு 15-1-2013 முதல் 25-2-2013 வரை சுமார் 40 நாட்கள் நடைபெறும். என்றாலும் தை மாதப் பௌர்ணமி நாள் பிரயாகையில் நீராட மிகச் சிறந்த நாள் என்பதால், 27-1-2013 முதல் இங்கே லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வர். மாசி மாத பௌர்ணமி வரை இது தொடரும்.

லட்சக்கணக்கான பக்தர்கள்- துறவிகள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் நிர்வாண சாமியார்களும் பைராகிகளும் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமமாகும் திரிவேணித் தீர்த்தம் மிகவும் புனிதமானது என்று வேத காலத்திலிருந்தே புகழப்பட்டி ருக்கிறது.

இந்தப் புனிதத்தலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மதேவன் ஒரு பெரும் வேள்வியை மேற்கொண்டிருக்கிறார். தான் படைத்த மக்களின் கருமத்தோடு, அவர்களைப் படைத்த தன்னுடைய கர்மமும் நீங்க வேள்வி செய்தாராம். அவற்றின் சிகரமாக அசுவமேத யாகமும் செய்தாராம். பிரம்மனைத் தொடர்ந்து அங்கு வேள்வி செய்த சந்திரன் திரிவேணிக்கு அருகில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அந்த லிங்கம் சோமேஸ்வரநாதர் என்று புகழ்பெற்றுத் திகழ்கிறது. பிரம்மதேவனையும் சந்திரனையும் தொடர்ந்து பல ரிஷிகளும் முனிவர்களும் உலக நன்மைக்காக யாகங்கள் செய்த புண்ணிய பூமி திரிவேணித் திருத்தலம்.

பகீரதனின் கடும் தவத்தால் வானிலிருந்து இறங்கி வந்த கங்கை, அவன் முன்னோர்கள் பாவம் போக்க நதிரூபமாக ஓடிவரும்போது பிரயாகையில் சற்று நிற்க வேண்டிவந்தது. ஏன்?

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Kum-me10

""கங்கையே, சற்று நில். நானும் உன்னுடன் வருகிறேன்'' என்ற குரல் கேட்டது. குரல் கொடுத்தவள் யமுனை.

""நிற்பதென்பது இனி எனக் கில்லை. பகீரதன் பலகாலம் தவமிருந்து என்னை பூமிக்கு வரவழைத்திருக்கிறான். அவன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்; சகர புத்திரர்களைக் கரையேற்ற வேண்டும்.''

""கங்கையே, உன் புனிதமான சேவைக்கு மகிழ்ச்சி. நானும் உன்னைப்போல் வானுலகத்தைச் சேர்ந்தவள்தான். சூரியனின் மகள். உன்னை அழைத்தது போல் யாரும் என்னை அழைக்க வில்லை. என்றாலும் உலக மக்களின் நலனை உத்தேசித்து இறங்கி வந்திருக்கிறேன். நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் மக்களின் பிறவிப் பிணி தீரும். நம் பிறவிப்பயனும் உலகம் உள்ளவரை புகழப்படும்'' என்றாள் யமுனை.

யமுனையின் சுயநலமில்லாத தியாக மனப்பான்மையில் மகிழ்ந்த கங்கை, ""அக்கா'' என்றழைத்து யமுனையைத் தழுவிக் கொண்டாள். அப்பொழுது அவ்விருவரும் குளிர்ச்சியான ஒரு உணர்ச்சி பரவுவதை உணர்ந்தார்கள். மூன்றாவது நபர் யாரோ தங்களிடம் கலப்பதை அறிந்தார்கள். யார் அது? "அந்தர்வாகினி'யாக- உள்ளோட்டமாகப் பிரவேசித்தாள் சரஸ்வதி.

""உங்கள் இருவரிடமும் பாசப்பிணைப்பை உருவாக்கியவள் நான். என்னையும் நீங்கள் சேர்த்துக்கொண்டால்தான் நீங்கள் திரிவேணியாக முடியும். உலகம் உள்ளவரை போற்றப் படுவீர்கள்'' என்றாள்.

கங்கை, ஸ்படிக வெள்ளை நிறம் கொண்டவள். களங்கமில்லாத உருவம் படைத்தவள். யமுனை, சூரிய நிழல் படுவதால் சற்று கறுப்பு நிறம் கொண்டவள். வெள்ளை மனம் கொண்டவள் சரஸ்வதி. கம்பீரம் மிக்கவள். என்ன நிறமென்று கூறமுடியாதவள். இந்த மூவரும்கூடி பிரயாகையைப் புனிதப்படுத்தினார்கள். தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் "திரிவேணி' என்று பாராட்டிப் போற்றினார்கள்.



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:50 am

இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறக் காரணம் என்ன?

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ் பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும்கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது.

அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.

தேவர்களின் ஒருநாள் மனிதர்களுக்கு ஒருவருடம். அந்தக் கணக்குப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கூறிய திருத்தலங்களில் கும்பமேளா நடைபெறுகிறது.

பிரயாகையில் கிழக்குக்கரைப் பகுதியிலுள்ள அட்சயவடம் என்னும் வானுலக ஆலமரமும்; கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமமும் பிரயாகையின் புகழை மேன்மேலும் உயர்த்துகின்றன.

திரிவேணி என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் என்று சொல்லப்பட்டாலும், இங்கு இரண்டு நதிகள் (கங்கை, யமுனை) மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். இதற்கு ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது.

"ஒரு பெண்ணின் கூந்தலில் சடை பின்னும்போது, மூன்று கால்களாக (பகுதியாக) பிரிப்பார்கள். மூன்று கால்களையும் இணைத்துப் பின்னும்போது "சடை' அழகாக உருவாகும். ஆனால் பார்ப்பதற்கு இரண்டு கால்கள் உள்ளது போல் தெரியும். மூன்றாவது கால் தெரியாது. அது போல்தான், பிரயாகையில் கங்கை, யமுனையுடன் சரஸ்வதி கூடியிருந்தாலும் கண்களுக்குத் தெரியாமலிருக்கிறாள்' என்பதே அது.

பிரயாகையின் கிழக்குக் கரைப்பகுதியில் செங்கோட்டை உள்ளது. அக்பர் காலத்தில் கட்டப் பட்டது. இக்கோட்டைக் குள் அட்சயவடம் என்னும் புனிதமான ஆலமரம் உள்ளது. இதன் வேர்ப்பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலும், நுனிப்பகுதி கயையிலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்கிறார் கள்.

வங்கக் கலவரத்தை அடக்குவதற்கு வந்த அக்பர் பிரயாகையில் முகாமிட்டார். கங்கை, யமுனை சங்கமத்தைக் கண்டு வியந்தார். அங்கே ஒரு அரண்மனையை உருவாக்க திட்டமிட்டு பெரிய கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டையின் எல்லைக்குள் அட்சய வடம் என்னும் ஆலமரம் அகப்பட்டுக் கொண்டது.

பிரயாகையைத் தலைநகரமாக மாற்ற விருப்பம் கொண்ட அக்பர் "அல்லாஹ்- ஆபாத்', "இலாஹி- ஆபாத்' என்று பெயர் சூட்டினார். அப்பெயரில் இறையாண்மை மிகுந்திருந்தது. "ஆண்டவன் குடிகொண்ட இடம், ஆண்டவன் குடியேறிய இடம்' என்று பிரயாகையின் புனிதத்துக்கு பங்கம் ஏற்படாமல் பெயர் சூட்டினார். அதுவே அலகாபாத் என்று பெயர் பெற்றது.

அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள், கோட்டைக்குள் இருந்த ஆலமரத்தை வெட்டி வீழ்த்தினார்கள். அது அழிந்துவிட்டது என்று நினைத்தபோது மீண்டும் துளிர்விட்டு வளர்ந்தது. பெரிய இரும்புச் சட்டத்தை நெருப்பில் காய்ச்சி, அதை வெட்டப்பட்ட இடத்தில் வைத்து மரம் கருகும்படி செய்தார் கள். வெந்நீரை வேர்ப்பகுதியில் ஊற்றினார்கள். சில நாட்கள் பட்டுப்போனதுபோல் காட்சி தந்தாலும், ஒரு மழை பெய்ததும் மீண்டும் துளிர்த்தது. இவ்வாறு அழியாமல் செழுமையாக வளர்ந்து, இன்று கோட்டைக்கு வெளியே படர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறது.

இந்த அட்சயவடம் உள்ள கோட்டைப் பகுதிக்குள் சிறு கோவில்களும் உள்ளன.

அட்சயவடம் ஆலமரத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பு வளையம் போடப் பட்டிருப்பதுடன், காவலுக்கு பாதுகாப்பு வீரர்களும் உள்ளார்கள்.

திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு படகில் வரும்போது பெரிய கோட்டையையும், கோட்டைக்குள்ளிருந்து வெளியே படர்ந்திருக்கும் ஆலமரத்தையும் காணலாம். இந்த மரத்தைத்தான் பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி வனவாசத்தின்போது சீதாதேவி பூஜித்தாள் என்று புராணம் கூறுகிறது.

கோட்டைக்குள்ளிருக்கும் அட்சயவடத்தை தரிசித்தபின் ஐந்து நிமிடம் நடந்தால், ஓரிடத்தில் சயனகோல அனுமனையும், மற்றொரு இடத்தில் நின்ற கோல அனுமனையும், இரட்டை அனுமன் சந்நிதியையும், ஸ்ரீராமர், சீதை, ஸ்ரீலட்சுமணன் எழுந்தருளி யுள்ள கோவிலையும் தரிசிக்கலாம்.

சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அனுமன், பதினைந்து அடி நீளத்தில், பத்தடி ஆழத்தில் மல்லாந்து படுத்த நிலையில் அருள்புரிகிறார். அவரது தோளில் ஸ்ரீராம- லட்சுமணர் உள்ளனர். இந்த அனுமனை முழுமையாக தரிசிக்க முடியாமல் செந்தூரம் பூசப்பட்டு, அவர்மேல் மலர்களைக் குவியலா கத் தூவியிருக்கிறார்கள். மலர் குவியலுக்குள் காட்சி தரும் அனுமனது பிரம்மாண்டமான உருவத்தின் தலை வடக்கு திசையிலும், கால் தெற்கு திசையிலும் உள்ளன. அவரது இடது காலின் கீழ் காமதாதேவியும், வலது காலுக்குக்கீழே அஹிராவணனும் அழுத்தப் பட்டுக் கிடக்கிறார்கள். அதுபோல் வலது தோளின் கீழே மகரத்வஜனும், இடது தோளில் கதையும் உள்ளன. இடது கையால் ராம- லட்சுமணர்களைத் தாங்கிப் பிடித்துள்ளார்.

இங்கு பண்டிட் ராமலோசன் என்பவர் பிரதிஷ்டை செய்த அனுமன் பிரம்மச்சாரியாக வெண்ணிற ஆடை அலங்காரத்தில் திகழ்கிறார்.

மூன்றாவது அனுமன் கோவில் "ராம்பாக்' என்ற இடத்தில் உள்ளது.

இக்கோவிலுக்கு அருகில் வேணிமாதவன் கோவிலும், சந்திரன் வழிபட்ட சோமேஸ்வர் மகாதேவர் கோவிலும் உள்ளன. இதற்கு சற்று தூரத்தில் அலகாபாத்தில் குடிகொண்டுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான லலிதாதேவி ஆலயம் உள்ளது.

திரிவேணிக்கரை அருகிலுள்ள ஸ்ரீசங்கரமடம் மூன்று அடுக்குக் கோவிலாகும். முதல் அடுக்கு, ஸ்ரீகாஞ்சி காமாட்சியை நடுநாயகமாக எழுந்தருளச் செய்து, ஐம்பத்தோரு சக்தி பீடங்களையும் நினைவில் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தர, பல பெண் தெய்வங்கள், அவர் பாடிய வடிவம் எடுத்து நிற்பதையும் காணலாம்.

இரண்டாவது அடுக்கில் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி அருள்புரிகிறார்.

மூன்றாவது அடுக்கில் ஸ்ரீசகஸ்ரலிங்கர் எழுந்தருளியுள்ளார். அதன் கருவறை ருத்ராட்சங்களில் வேயப்பட்டது. வலம் வரும் போது நூற்றியெட்டு சிவத்தலங்களின் சிவலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

அலகாபாத் நகரில் காணவேண்டிய பல இடங்கள் உள்ளன. தகுந்த வழிகாட்டியின் உதவியுடன் காண்பது நலம் தரும். பிரயாகையில் நடைபெறவிருக்கும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரிவேணி சங்கமத்தில் நீராடி புனிதம் பெறும் பக்தர்கள், பிரயாகைக் கரையோரமுள்ள புனிதக் கோவில்களில் அருள்புரியும் தெய்வங்களையும் தரிசித்து மேன்மேலும் புனிதம் பெறலாம்.



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:51 am

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-13510

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கும்பமேளா நடைபெறுகிறது. இதுதான் உலகிலேயே அதிக அளவிலான பக்தர்களை ஈர்க்கும் மத விழாவாகும்



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:52 am

10 கோடி பக்தர்கள்

அலகாபாத் கும்பமேளாவுக்கு கிட்டத்தட்ட 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கேற்ற வகையில் விரிவான பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291685-2



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:52 am

நாகா சாதுக்கள்

பிரபலமான நாகா சாதுக்கள் உள்பட பல்வேறு வகையான சாதுக்களை கும்பமேளாவில் பார்க்க முடியும். இந்தியாவின் விதம் விதமான சாதுக்கள் கூட்டத்தையும் இங்கு ஒருசேர பார்க்கலாம். வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமான பேர் வருவார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291706-3



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:53 am

ஜனவரி 14ல் மகர சங்கராந்தி

கும்பமேளாளவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஜனவரி 14ம் தேதி நடைபெறும் மகர சங்கராந்தி விழா. அன்றைய தினம் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் புனித நீராடுவது வழக்கம். கும்பமேளாவையொட்டி அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291725-4



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:53 am

ஜனவரி 27 பவுஸ் பூர்ணிமா

பெளர்ணமி தினமான ஜனவரி 27ம் தேதியன்று சாதுக்களும், லட்சக்கணக்கான பயணிகளும் புனித நீராடுவர்.

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291744-5



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:54 am

மெளனி அமாவாசை ஸ்னான்

பிப்ரவரி 10ம் தேதி, மெளனி அமாவாசை ஸ்னான் எனப்படும் புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதிலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291765-6



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:54 am

உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா 04-1357291802-7

தட்ஸ்தமிழ் & நக்கீரன்!



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 11:55 am

மேலும் கும்பமேளா பற்றிய தகவல்களுக்கு: http://kumbhmelaallahabad.gov.in/english/index.html



உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா - கும்பமேளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக