புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
19 Posts - 3%
prajai
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_m10விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வு ஊட்டவா, வெறும் சடங்கா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:40 pm

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறு விளைவிக்கும் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகம் இருப்பது கட்டாயம் என்று மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. வாசகத்தை அச்சடித்துவிட்டால் வரும் அபாயம் எப்படி நீங்கும்? அபாயம் நீங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், கடனுக்குச் செயல்படுவதே அரசுகளின் தன்மையாக இருக்கிறது.

சிகரெட், பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்றவற்றை உடல் உழைப்புத் தொழிலாளர்களும் இளைஞர்களும்தான் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பொருள்களை உள்ளடக்கிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் உள்ளது. இத்துடன் அரசும் தனது கடமை முடிந்ததாக திருப்தியடைந்துவிடுகிறது. இது என்ன பேதமை? ஏன் இந்த அவலம்?

""குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடானது'' என்ற வாசகம் மதுப்புட்டிகளில் இடம்பெறுகின்றன. இவற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று குடிப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் எத்தனை பேர்? இதைப் படித்து உணர்ச்சிவசப்பட்டு திருந்திய குடிமகன்கள் எத்தனை ஆயிரம்?

அடுத்தது 40 மைக்ரான் அளவுக்குக் குறைந்த பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தினால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது அரசின் கவலை. இந்த பாலிதீன்கள் பல ஆண்டுகள் ஆனாலும் மக்காது, இவற்றால் நிலங்கள் பாழ்படும், இதைத் தின்னும் பிராணிகள் உயிரிழக்கக்கூட நேரிடும் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் இவற்றின் உற்பத்தியை முற்றாகத் தடை செய்யாமல் மனிதச் சங்கிலி, விழிப்புணர்வுப் பேரணி நடத்துகின்றனர். இவற்றுக்குப் பெரும்பாலும் பள்ளிக்கூடச் சிறார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கையால் பிளாஸ்டிக் பொருள்கள், பாலிதீன்களின் பயன்பாடு அடியோடு நின்றுவிட்டதா அல்லது குறைந்துவிட்டதா? 40 மைக்ரான் அளவுக்கும் குறைந்தவற்றுக்குத் தடை விதித்திருப்பதால் 41 மைக்ரான்களிலிருந்து விற்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா? ஏன் இந்த பம்மாத்து?

சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருள்கள், மதுபானங்கள், பாலிதீன் பைகள் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றால் அவற்றின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், கையிருப்பு என்று எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும். ஆனால் அரசு அப்படித் தடை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை; ஏன், இதைத் தயாரிப்பவர்கள் அரசுக்கு வேண்டியவர்கள். அவர்கள் தரும் பணம் தேவைப்படுகிறது. எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி இந்த நச்சுகளைத் தயாரிக்க அனுமதிக்கின்றனர். அதன் பிறகு பிரசாரம், கண்டிப்பு எல்லாம் வெறும் நாடகம்தான்.

அடுத்த நாடகம் "எம்.ஆர்.பி.' என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச விற்பனை விலையைப் பற்றியது. அரசு அறிவிப்பின்படி நுகர்வோர் நலனுக்காக அனைத்து விற்பனைப் பண்டங்களின் மீதும் அதன் குறைந்தபட்ச விலை அச்சிடப்படுகிறது. அந்தப் பொருளின் உற்பத்தி விலை, பேக் செய்த விலை, போக்குவரத்து, லாபம், தரகு என்று எல்லாமும் சேர்ந்ததுதான் அந்த விலை. இந்த விலை நாடு பூராவுக்கும் ஒன்றுதான் என்றாலும் ஒரே ஊரில் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு விலை, தெருக்கோடிக் கடையில் ஒரு விலை, கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு விலை என்று விற்கப்படுகிறது. சில சமயங்களில் கூட்டுறவுச் சங்கக் கடையின் விலையைவிட தனியார் வியாபாரி விலை குறைத்துத் தருகிறார். எம்.ஆர்.பி.யைவிட எப்படிக் குறைக்கிறார் என்று "மகிழ்ச்சியான குழப்பத்தோடு' வீடு திரும்ப நேர்கிறது.

ஆனால் உண்மையில் இந்த மகிழ்ச்சி நியாயமானதோ சரியானதோ அல்ல. காரணம், இந்த மூலப்பொருளின் விலை என்ன, அதற்குப் பிறகு அதை பக்குவப்படுத்தி பொட்டலம் கட்ட ஆகும் செலவு என்ன, லாப விகிதம் என்ன, போக்குவரத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்பதெல்லாம் அரசின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. அவரவர்களாக நிர்ணயித்துக்கொள்வதுதான் இந்த விலையெல்லாம். எனவே இதில் சில கடைகளில் எம்.ஆர்.பி.யைவிடக் குறைவாக விற்றாலும் அவர்கள் நஷ்டமடைவதில்லை. அவர்கள் மொத்த வியாபாரிக்கான விலையில் பெறுவதால் லாபத்தில் சிறிதளவை விட்டுக்கொடுக்கிறார்கள், அவ்வளவே. அத்துடன் சரக்கு விரைவாக விற்றுத்தீர்வதால் அவர்களுக்கு வேறொரு வகையில் லாபமே.

இந்த நிலையில் சில்லறை விலையை அச்சிடுவது எந்த வகையில் நுகர்வோர் நலனுக்கு பாதுகாப்பானது? வெறும் கண்துடைப்புதான் இது.

கடுமையான புயல், மழைக்குப் பிறகு மெழுகுவர்த்தி வாங்கப் போனால் 2 ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்தியின் விலை 5 ரூபாயாகவோ, 10 ரூபாயாகவோ உயர்த்தி விற்கப்படுகிறது. இது தெரிந்த பிறகும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. கையிருப்பு இருக்கும்வரை ஏற்கெனவே விற்ற விலையில் கொடுத்தாலே கடைக்காரருக்கு லாபம்தான். இருந்தும் நெருக்கடியான அந்த நேரத்திலும் அதிக லாபம் சம்பாதிக்க முனைகிறார்.

உற்பத்தி விலையைவிட அதிக விலைக்கு விற்பது, அச்சடித்த எடையைவிடக் குறைவான எடையில் பொருள்களை நிரப்புவது, தரம் குறைந்த சரக்கை விற்பனைக்குக் கொண்டு வருவது, மட்டமான பொருளை நல்ல பொருளுடன் கலந்து விற்பது என்று பலவிதங்களில் நுகர்வோர் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

விலைவாசியைக் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டிய துறையினர் (அப்படி யாராவது உண்டா?) ஆள் பற்றாக்குறை காரணமாகவும் வழக்கமாக உள்ள அசிரத்தை காரணமாகவும் அங்கும் இங்கும் பெயருக்குச் சோதனை நடத்துகின்றனர். தண்டனையோ நடவடிக்கைகளோ யாரையும் அச்சுறுத்துவதாக இல்லை. எனவே அரசின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளே வெறும் சடங்காகத் தெரிந்தால் அது நம்முடைய குற்றமா?

(நன்றி-தினமணி-கோ. பிச்சை, இராயம்பேட்டை)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக